Contact us at: sooddram@gmail.com

 

யுத்தத்தின் பின்னர்

இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான சேவைகளை ஏற்படுத்தி அரசாங்கம் அவர்களின் வாழ்வை வளமாக்கியுள்ளது

அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான செயற்பாடுகள் குறிப்பாக வடமாகாணத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாட்டை இங்கு நாம் பிரசுரிக்கிறோம். மூன்று தசாப்த காலத்திற்கும் கூடுதலான காலம் இலங்கையில் இடம்பெற்று வந்த பயங்கரவாத வன்முறை 2009ம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையின் பாதுகாப்பு படையினரால் தமிbழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை படுதோல்வியடையச் செய்ததன் மூலம் நிறைவுபெற்றது. 1980ம் ஆண்டு தசாப்த ஆரம்பத்தில் இலங்கையில் உருவாகிய தமிழ் போராளிக் குழுக்களின் வன்முறை காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால் மக்கள் உள்ளூரில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர ஆரம்பித்தனர்.

ஆயினும் இந்தக் காலகட்டத்தில் சில ஆயுதக்குழுக்கள் தங்கள் வன்முறையை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் காலப்போக்கில் சங்கமித்தன. ஆயினும் எல்.ரி.ரி.ஈ.யினர் தொடர்ந்தும் தங்கள் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக வன்முறையில் ஈடுபட்டனர்.

1983ம் ஆண்டில் எல்.ரி.ரி.ஈயினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலினால் 13 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, தலைநகரமான கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல நாட்களாக கலவரங்கள் தொடர்ந்தும் நடந்தன. இதனால் பல தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களின் வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன.

இந்த வன்முறைகள் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் மீண்டும் இடம்பெறாத போதிலும், இதன் தாக்கத்தினால் தமிழ் மக்கள் தங்கள் நிலையான இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்வதற்கு வழிவகுத்தது. இவர்களில் சிலர் இலங்கையை விட்டு வெளிநாடு சென்று அங்கு வாழ ஆரம்பித்தனர்.

1990ம் ஆண்டு ஒக்டோபர் மாத பிற்பகுதியில் எல்.ரி.ரி.ஈ. யாழ்ப்பாணம், மன்னார் பிரதேசங்களில் இருந்து 48 மணிநேர முன் அறிவித்தலை விடுத்து 75ஆயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்களை அங்கிருந்து இடம்பெயரச் செய்தனர். பொதுமக்களை இலக்காக வைத்து துப்பாக்கிப் பிரயோகம், தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் ஆகிவற்றின் மூலம் எல்.ரி.ரி.ஈ. பொதுமக்களை படுகொலை செய்யும் படலத்தை ஆரம்பித்தது.

யதார்த்தமாக சிந்தித்து செயற்படக்கூடிய பல முக்கிய தமிழ் தலைவர்கள் எல்.ரி.ரி.ஈ.யினால் படுகொலை செய்யப்பட்டனர். எல்.ரி.ரி.ஈ.யினர் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் சூழ்நிலையை வலுவடையச் செய்யும் யுக்தியையும் கையாண்டனர். இதனால், யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த பிரதேசங்களில் இருந்து பெருமளவு பொதுமக்கள் வெளியேறி உள்ளூரில் குடிபெயர்ந்த மக்கள் என்ற பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

இவற்றுடன் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தம் 2004ல் ஏற்பட்டதனால் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இதனால் இலங்கை அரசாங்கம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி செய்வதற்காக பாரிய கட்டமைப்புகளை அமைத்து பணி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து மேற்கொண்டு, யுத்தத்தினால் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை முழுமையாக செயற்படுத்தியது.

தேவைக்கு ஏற்ப செயற்படும் நடைமுறை

2005ம் ஆண்டில் செயல் இழந்திருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவுற்றன. நாட்டில் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட பேரழிவுகள், எல்.ரி.ரி.ஈ.யினர் மேற்கொண்ட படுகொலைகள் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகிச்சென்று, வன்முறைகளை அதிகரித்தது போன்ற சூழ்நிலையிலும் அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை.

ஆயினும் முகமாலையில் உள்ள பாதுகாப்பு அரண்மீது தொடர்ந்தும் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தி யாழ்ப்பாண குடாநாட்டுக்கு செல்லும் வாயிலை ஒரு யுத்த களமாக மாற்றிய போது அரசாங்கப் படையினர் வேறு வழியின்றி பதில் தாக்குதலை பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆரம்பிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்த இலங்கை அரசாங்கம் 2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் ஒருவரை நியமித்தது. இவர் யாழ்ப்பாண குடாநாட்டுக்கும் வன்னியிலுள்ள அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படாத பிரதேசங்களுக்கும் சகல அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

2006ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமான உதவிக்கா ,ளி!:(யிlழிகீ என்ற அமைப்பை (விவிசிதி) ஏற்படுத்தி வன்முறையினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஒன்றிணைக்கப்பட்ட முறையில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து இலங்கைக்கு சமாதானத்தை ஏற்படுத்த உதவி செய்யும் அமைப்பின் இணைத்தலைமைத்துவம் வகிக்கும் நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நோர்வே ஆகியவை விடுத்த வேண்டுகோளை அடுத்து சமாதான நடைமுறைக்கான பிரதான கொள்கையை ஒன்றிணைப்பதற்கான செயற்பாடு 2006 ஒக்டோபர் மாதம் முதல் 28 தடவைகள் மேற்கொள்ளப்பட்டன.

விவிசிதி எமது அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் தேசத்தை கட்டியெழுப்பும் மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள், சுகாதாரம், கல்வி மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொண்டார்.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வடமாகாணத்தில் உள்ள சகல அரசாங்க அதிபர்களுடனும் அன்று இலங்கையில் அமெரிக்க தூதுவராக இருந்த ரொபட்பிளேக்குடன் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி உட்பட அதன் கிளை நிறுவனங்களின் தலைவர்கள் ஐ.சி.ஆர்.சி., ஈ.சி.எச்.ஒ ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி நெறியான முறையில் பணியாற்றினார்.

மக்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சகல சமூகங்களுக்கும் வடமாகாண மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் சிறப்பான முறையில் செய்து கொடுத்தார்கள். இதன் மூலம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நெறியான முறையில் உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன.

யுத்தம் நிறைவுபெற்று வந்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ. இயக்கம் ஒரு கிராமத்தில் சகல மக்களையும் அவர்களின் ஆயுதப் போராளிகளின் உதவியுடன் மக்களை பணயக்கைதிகளாக வைத்து, பொதுமக்களை பாதுகாப்பு கேடயங்களாகவும், தங்களுக்கும் இலங்கை ஆயுதப்படையினருக்கும் நடுவில் நிறுத்தி எல்.ரி.ரி.ஈ.யினர் அரசாங்கப் படைகள் மீது கடும் தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.

இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அடிப்படையிலான மனிதாபிமான செயற்பாட்டின் மூலம் மக்களை விடுவிக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த பொதுமக்களை விடுவிக்கும் அரசாங்கப் படைகளின் மனிதாபிமான பணி முடிவடைந்த போது எல்.ரி.ரி.ஈ. பிடியில் இருந்த 2 லட்சத்து 75 ஆயிரம் பொதுமக்கள் விடுவிக்கப்பட்ட இந்த மக்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும், தங்களின் அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்காகவும் அரசாங்கத்தின் உதவியை நாடினார்கள்.

இதையடுத்து ஜனாதிபதியின் பணிப்படையொன்று ஏற்படுத்தப்பட்டு வடமாகாணத்தில் மீள்குடியேற்றம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளுதல், பாதுகாப்புக்கு உத்தரவாதமளித்தல் போன்ற பொறுப்புகள் அதனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மக்களுக்கு கல்வியையும் வைத்திய சேவைகளையும் தங்கு தடையின்றி பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இந்தப் பிரதேசங்களில் பணி புரிந்த அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர்களுக்கும் எவ்வித காலதாமதமின்றி சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களை அரசாங்கத்தில் சேவைபுரிந்தவர்களுக்கும் இளைப்பாறியவர்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த மக்களுக்கு உள்ளுர், மாவட்ட, மாகாண ஆஸ்பத்திரிகளிலும் மற்றும் தேசிய ஆஸ்பத்திரிகளில் சிறந்த வைத்திய சேவைகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

யாழ்ப்பாண குடா நாட்டிலும் 2006ம் ஆண்டுக்குப் பின்னர் வன்னியில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலும், 2009 ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் எல்.ரி.ரி.ஈ.யிடம் இருந்து விடுவிக்கப்பட்ட, உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் மனிதாபிமான முறையில் பணிகளை ஆற்றி வந்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் 2006 ஓகஸ்ட் மாதத்தில் எல்.ரி.ரி.ஈ. முகமாலையில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பிரதான பாதையை மூடிவிடும் நோக்குடன் தாக்குதல்களை மேற்கொண்டது.

இதனால் யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள மக்களுக்கு கடல் மார்க்கமாகவும், விமானங்கள் மூலமும் அதிக பணத்தை செலவிட்டு உணவுப் பண்டங்களையும், அத்தியாவசியத் தேவைகளையும் அரசாங்கம் அனுப்பி வைத்தது. யாழ்ப்பாணத்து மக்கள் அங்குள்ள 5,000 தனியார் வர்த்தக நிலையங்களையும் மேலும் 523 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்களையும் மாத்திரமே நம்பியிருக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள்.

எல்.ரி.ரி.ஈ. அச்சுறுத்தல் காரணமாக தனியார் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்வதை கைவிட்டனர். எல்.ரி.ரி.ஈ. அச்சுறுத்தல் காரணமாகவும், கப்பல் கட்டணங்கள் அதிகரித்திருந்தமை காரணமாகவும் கப்பல் உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லவும் தயக்கம் காட்டினார்கள்.

2007ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எல்.ரி.ரி.ஈ.யின் தற்கொலை வீரர்கள் இருந்த படகுகள் எம்.வி. லிவர் பூல் என்ற பொதுமக்களுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இந்தக் கப்பல் யாழ்ப்பாணத்தின், பருத்தித்துறை இறங்குதுறைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்தது.

இதனால் வடபகுதி மக்களுக்கு உணவுப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் படகுகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்ததுடன் அதற்கான 8t@x கட்டணமும் அதிகரிக்க ஆரம்பித்து. பயங்கரவாதிகளின் தாக்குதலில் தப்பித்துக்கொள்வதற்கு ஐ.சி.ஆர்சி., சர்வதேச செஞ்சிலுவைக் கொடியை ஏற்றிச் செல்வதற்கும் இவ்வமைப்புகள் மறுத்துவிட்டன.

இதனால் பொருட்களை கப்பல்களில் இருந்து இறக்குவது உட்பட சீரற்ற காலநிலையால் வடபகுதிக்கு பொருட்களை அனுப்பும் பணியும் முடங்கிக் கிடந்தது.

2009ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதியன்று வன்னிப் பிரதேசத்திற்கு தரைமார்க்கமாக பெருட்களை ஏற்றிச் செல்வதும் இடைநிறுத்தப்பட்டது. இதையடுத்து ஐ.சி.ஆர்.சி. சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கை கடற்படையினரும் கடல்மார்க்கமாக பொருட்களை வடபகுதிக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை எடுத்தனர். 2006ம் ஆண்டு எம்வி.

பாரா என்ற வணிகக் கப்பல் எல்.ரி.ரி.ஈ.யினர் அதனை கைப்பற்றியதை அடுத்து முல்லைத்தீவிற்கு அருகில் தரைதட்டி செயல் இழந்தது. எல்.ரி.ரி.ஈ.யின் கடற்படையினர் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருந்த போதிலும் இந்தக் கப்பலில் இருந்து பொருட்கள் தரையிறக்கப்பட்டன. இப்படியான சந்தர்ப்பத்தில் அழிவுகள் ஏற்பட்டாலும் அதற்கான நஷ்ட ஈட்டை கொடுப்பதற்கும் அரசாங்கம் தயார் நிலையில் இருந்தது. வன்னியிலுள்ள விடுவிக்கப்படாத பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவி கொடுக்கப்பட்டது.

இதன் மூலம் தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கும் எல்.ரி.ரி.ஈ. கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது. ஆயினும், அரசாங்கம் எவ்வித பிரச்சினையுமின்றி விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசங்களுக்கும் உதவிகளை வழங்கியது.

வடபகுதிக்கு எவ்வித கட்டுப்பாடுமின்றி லொறிகள் மூலம் பொருட்களை வழமைபோல் எடுத்துச் செல்வதற்கு அரசாங்க அதிபர்களின் அனுசரணையுடன் கிளிநொச்சியில் உள்ள லொறி உரிமையாளர்கள் சங்கத்தின் 300 லொறிகளை பயன்படுத்தியது.

இவை அப்பிரதேசத்தில் உள்ள சகல ஆஸ்பத்திரிகளுக்கும் மருந்துப் பொதிகளை ஏற்றிச் சென்றன. 2009ம் ஆண்டு எல்.ரி.ரி.ஈ. தாக்குதல் தீவிரமடையும் வரை இந்த லொறிகள் மூலம் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. 2009ம் ஆண்டு ஜனவரியில் கிளிநொச்சியில் உள்ள மக்களை எல்.ரி.ரி.ஈ.யினர் தங்கள் போராளிக் குழுக்களுடன் முல்லைத்தீவுக்கு இடம்பெயருமாறு வற்புறுத்தியது.

இதனால் கிளிநொச்சியில் இருந்த உணவுப் பொதிகள் முல்லைத்தீவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு அங்குள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்த உணவுப் பொதிகள் மூன்று மாதத்திற்கு தேவையான அளவில் இருந்ததாக அறிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு மே மாதத்தில் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த போது முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் அளவுக்கு அதிகமான நெல் களஞ்சிய சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

வன்முறைகள் அதிகரிக்க ஆரம்பிக்கப்பட்டதையடுத்து விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு உணவை அனுப்பும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com