Contact us at: sooddram@gmail.com

 

ஆபத்தான அரசியம் ஆட்டம்!

(டி.அருள் எழிலன்)

சாதி எல்லைகளைக் கடந்த அரசியல் பண்பாடு தமிழ்நாட்டில் கோலோச்சியது ஒரு காலம். இன்றோ, சாதிகளின் ஓட்டு வங்கிகளை நம்பியே நடக்கிறது அரசியல்! சாதி அரசியலை உயர்த்திப் பிடிக்கிறார் டாக்டர் ராமதாஸ் பிடிவாதமாக. கடந்த வாரம்,  ாட்டாளி மக்கள் கட்சி நடத்திய 'சித்திரை முழு நிலவுப் பெருவிழாஐந்து பேருந்துகளை எரித்து, 11 குடிசைகளைக் கொளுத்தி, சில இளைஞர்களின் உயிர்ப் பலிகளோடு ஓய்ந்திருக்கிறது. 'கலவரத்துக்குக் காரணம் யார்?’ என்ற பட்டிமன்றங்களுக்கு அப்பால் சித்திரை விழாவில் காடுவெட்டி குருவின் பேச்சு... வழக்கம்போல வன்முறை நெருப்பு.

தர்மபுரி தலித் கிராமங்கள் எரிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கே இன்னும் முழுமையாக ஜாமின் கிடைக்காத நிலையில், இப்போது மரக்காணம் கலவர வழக்கில் 1,500 பேரை அடையாளம் காண முடியாத குற்றவாளிகளாக அறிவித்து, ஏழு தனிப் படைகள் துரத்திக்கொண்டிருக்கின்றன. கிழக்குக் கடற்கரைச் சாலை தொடங்கி, வட மாவட்டங்கள் முழுக்க எரியக் காத்திருக்கிறது நெருப்பு.

சித்திரை முழு நிலவு விழாவுக்கு வன்னியர் சங்கம் தயாரான உடனேயே, 'வருஷா வருஷம் வன்முறையை விதைக்கிறார் காடுவெட்டி குரு. ஆகவே, இந்த விழாவைத் தடை செய்ய வேண்டும்என்று உயர் நீதிமன்றப் படி ஏறினார்கள். மனுவை விசாரித்த நீதிமன்றம் முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்க, காவல் துறை 18 விதிமுறைகளோடு மாநாடு நடத்த அனுமதி வழங்கியது. மாநாட்டில் பேசிய காடுவெட்டி குரு... தொழிலின் அடிப்படையிலும், பிறப்பின் அடிப்படையிலும் பேசிய பேச்சு அச்சில் ஏற்ற முடியாத அசிங்க வார்த்தைகள்.

இது தொடர்பாக தலித் முரசு ஆசிரியர் புனிதப் பாண்டியனிடம் பேசியபோது, ''தர்மபுரி தலித் கிராமங்கள் எரிக்கப்பட்டு, அது பெரிய அளவில் ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்த பின்னர், பல அரசியல் கட்சித் தலைவர்களும் அதைக் கண்டித்தனர். நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏழரைக் கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆக, அரசு நிர்வாகம் அதை சாதி வன்முறையாக அங்கீகரித்துவிட்டது. இத்தனைக்குப் பிறகும் அதே விதமான சாதி வெறித் தாக்குதல் இந்த வருடமும் நடைபெறுகிறது என்றால், அரசு இயந்திரம் செயலற்று வேடிக்கை பார்க்கிறது என்றுதானே பொருள்? 'விஸ்வரூபம்திரைப்படம் வன்முறையைத் தூண்டும் என்று வெளிவரும் முன்பே தடை விதிக்கும் அரசு, வருஷா வருஷம் வன்முறையை விதைக்கும் வன்னியர் சங்க சித்திரை விழாகுறித்து எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும்.

அமலில் இருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தலித் மக்களைச் சாதிக் கொடுமைகளில் இருந்து காப்பாற்றவில்லை. அழிவுக்குப் பின் நிவாரணம் பெற்றுத்தரத்தான் அது உதவுகிறது. அந்தச் சட்டத்தையும் நீக்க வேண்டும் என்பதுதான் இப்போது ராமதாஸின் முக்கியக் கோரிக்கை. ஆனால், அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதுகூட இவர்களின் கைகளில் இல்லை என்பதே யதார்த்தம். இந்த நேரத்தில் சமூக நீதிக்காகப் போராடுவதாகச் சொல்லும் இயக்கங்கள், ஊருக்கு ஊர் காதல் கலப்புத் திருமணங்களை மக்களைக் கூட்டி நடத்த வேண்டும். இதுதான் ராமதாஸுக்கு மட்டுமின்றி... சாதி வெறியர்கள் அனைவருக்குமான சரியான பதிலாக இருக்கும்'' என்கிறார்.

சாதி மோதல்களும் தேர்தல் கூட்டணி அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துகிடக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தல் ராமதாஸுக்குக் கடும் கசப்பு மருந்தைக் கொடுத்தது. வன்னியர்களின் செல்வாக்குப் பகுதியில்கூட பா.ம.க-வால் வெற்றிபெற முடியவில்லை. 'இதேநிலை தொடர்ந்தால் பா.ம.க-வுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போகலாம்என்ற நிலையில் தீவிர சாதி அரசியலைக் கையில் எடுத்திருக்கிறது. பா.ம.க-வுக்கு இது பலன் அளிக்குமா? 'தமிழக வாழ்வுரிமைக் கட்சி’யின் நிறுவனர் வேல்முருகனிடம்  ேசியபோது...  

''மரக்காணம் வன்முறைகளைப் பொறுத்தவரை இரு தரப்பிலும் தவறுகள் இருக்கின்றன. போலீஸார் முன்னெச்சரிக்கையுடன் மாற்றுப் பாதைகளை உருவாக்கிக் கொடுத்திருக்க வேண்டும். விழா ஏற்பாட்டாளர்கள் வன்முறையை விரும்பாதவர்கள் என்றால், அவர்களே அந்தப் பாதையைத் தவிர்த்திருக்கலாம்.

வன்னியர்களின் மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் டாக்டர் ராமதாஸ், பதவியில் இருந்த இத்தனை ஆண்டுகளில் வன்னிய மக்களுக்காக என்ன செய்தார்? இப்போது ராமதாஸ் ஓட்டுக்காக 'மாவீரன் வீரப்பன்என்கிறார். ஆனால், வீரப்பன் உயிரோடு இருந்தவரையில் வாய் திறக்க மறுத்தார். வீரப்பனின் மனைவியும் மகள்களும் வாழ வழியின்றி உதவி கேட்டு தைலாபுரம் தோட்டத்துக்கு நடையாய் நடந்தபோது துரத்திவிட்டவர்தான் இந்த அய்யா.

இட ஒதுக்கீட்டுப் போரில் இறந்த 21 தியாகிகளின் குடும்பங்களும் இன்று வறுமையில் வாழ்கின்றன. அந்த நெருப்பில் இருந்து உருவான ராமதாஸும் அவருடைய குடும்பத்தினரும் செல்வச் செழிப்பில் திளைக்கிறார்கள். சித்திரைத் திருவிழாவில் இத்தனை ஆயிரம் இளைஞர் களைத் திரட்டி வீர வசனம் பேசும் இவர், இதே கூட்டத்தை ஈழ மக்களுக்காகவோ, மீனவர்களுக்காகவோ, காவிரி, தென்பெண்ணை ஆற்று உரிமைகளுக்காகவோ என்றாவது திரட்டியிருப்பாரா? அதற்கெல்லாம் அறிக்கையோடு நிறுத்திக்கொள்கிற ராமதாஸ், வருஷா வருஷம் வன்னியர் திருவிழா என்னும் பெயரில் ஆயிரக்கணக்கான  இளைஞர்களின் வாழ்வைப் பாழாக்கும் விதமாக சிறைக்கு அனுப்புகிறார். வருஷம்தோறும் இந்தச் சாதி அரசியலால் பல்லாயிரம் வன்னியப் பெண்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதைவிடப் பெரிதாக என்ன செய்துவிட்டார் இவர்? தன் வாரிசு அரசியல் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளக் கடைசியாக ராமதாஸ் எடுத்திருக்கும் அஸ்திரம்தான் வன்னியப் பாசம். இதை நான் சொல்லவில்லை, வன்னிய மக்களே புரிந்துகொள்ளத் துவங்கிவிட்டார்கள்'' என்கிறார்.

சித்திரை வன்னியப் பெருவிழா, அதையட்டிய கலவரங்கள் தொடர்பாக பா.ம.க-வின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் கே.பாலுவிடம் பேசினோம்.

''எல்லோரும் தர்மபுரியில் குடிசைகள் எரிக்கப்பட்டதுகுறித்தும் தலித்துகள் பாதிக்கப்பட்டதுகுறித்தும் பேசுகிறார்கள். ஆனால், எவருமே தர்மபுரி திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது தொடர்பாகவோ, அந்த வன்முறையின் வேர்கள் எங்கிருந்து துவங்குகின்றன என்பதுகுறித்தோ பேசவில்லை. எல்லோரும் சாதிக்கு எதிரானவர்களைப் போல நாடகமாடுகின்றனர். தலித்துகள் நஷ்டஈடு வாங்க சேதங்களைக் கூட்டிக் காட்டுகிறார்கள். அவர்களுக்குப் பேச மனித உரிமை ஆணையங்களும் சட்டங்களும் உள்ளன. ஆனால், எங்கள் பாதிப்புகளைப் பேச எந்த அமைப்புகளும் இல்லை. இந்த இடத்தில்தான் மருத்துவர் அய்யா வின் பணியைப் பார்க்க வேண்டும். காடுவெட்டி குரு வன்முறையாகப் பேசுகிறார் என்கிறார்கள். சொல்கிற விதத்தில் மாறுபாடு இருக்கலாம் ஆனால், சொல்லும் கருத்தில் பிழை இல்லை. அவர் இன்று நேற்று பேசவில்லை. வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது எல்லாம் வன்முறை வெடித்ததா? மாநாட்டுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கலவரத்தைத் தூண்டிவிட்டு இப்போது வன்னியர் கள் கலவரம் செய்வதாகப் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். நாங்கள் பிற சமூகங்களோடு இணக்கமாக வாழவே விரும்புகிறோம். திராவிட இயக்கங்களை அகற்றிவிட்டு, தமிழர்களின் அரசை அமைக்க முயல்கிறோம். அதைப் பொறுக்க முடியாதவர்கள் எங்களைச் சாதி வெறியர்கள் என்கிறார்கள்'' என்று கொந்தளிக்கிறார்.

திராவிட அரசோ, ஆரிய அரசோ, தமிழ் அரசோ... சாதி வெறியூட்டி அதைவைத்து அரசியல் செய்வது ஆபத்தானது. சாதி வெறி என்னும் நெருப்பு, ஊர் ஊருக்குக் குடிசைகளைக் கொளுத்தி உயிர்களைப் பலியெடுக்கும். அதில் வெந்து மடிவது எல்லா சாதிகளையும் சேர்ந்த ஏழை மக்கள்தான். இது ராமதாஸுக்கு மட்டுமல்ல... சாதியை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் அனைவருக்கும் பொருந்தும்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com