Contact us at: sooddram@gmail.com

 

பொன்விழா காணும் யாழ். ஒஸ்மானியா கல்லூரி தோற்றம் பெற்ற வரலாறு

யாழ். மக்கள் கல்வியில் மேலோங்கிக் காணப்பட்டார்கள். முஸ்லிம் மாணவருக்கு 8ம் வகுப்பு வரை கல்வி புகட்டும் பணியில் யாழ். மஸ்ற உத்தீன் பாடசாலை (புதுப்பள்ளி), முஹம்மதியா கலவன் பாடசாலை (அல்லா பிச்சை மாமா பள்ளி), வண/ மேற்கு முஸ்லிம் கலவன் பாடசாலை (மன்ப-உல் உலூம் மத்ரஸா) நற்சேவை புரிந்தன. இப்படியான கனிஷ்ட பாடசாலை களில் கல்வி கற்ற மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர்வதற்காக யாழ். வைத்தீஸ்வரா, யாழ். மத்திய கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்குச் சென்றனர். எனினும் அக்காலத்தில் வசதி குறைந் தவர்கள் கனிஷ்ட பாடசாலைகளில் இருந்து மேற்படிப்பைத் தொடர முடியாமல் படிப்பை விட்டு விட்டு வேறு தொழில்களை நாடுபவர்களாக இருந்தனர். இது முஸ்லிம் சமு தாயத்திற்கு கவலைக்குரிய விடயமாக இருந்தது.

இக்கால கட்டத்தில் இலங்கையின் தேசிய வீரரும் சிறந்த கல்விமானும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபருமாகிய கலாநிதி டி. பி. ஜாயா அவர்கள் தலைமையிலான குழு 1938 ஆம் ஆண்டிலும் 1942 ஆம் ஆண்டிலும், யாழ். விஜயம் செய் தது. யாழ். முஸ்லிம் வட்டாரத்தில் மேற்படிப்பைத் தொடர்வதற்கான ஒரு பாடசாலையை உருவாக்க வேண்டும் என்பதை இக் குழுவினர் மக்கள் மத்தியில் வலியுறுத்தினர். யாழ். முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் தலைசிறந்து விளங்க வேண்டுமென்பதே டி. பி. ஜாயா அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தி யில் பணம் திரட்டப்பட்டது. அப்போ தைய யாழ்ப்பாணத் தொகுதி பாரா ளுமன்ற உறுப்பினர் ஜீ. ஜீ. பொன் னம்பலம் கியூ. ஸி. அரசாங்கம் வாயி லாக ஒரு பெருந் தொகைப் பணத்தை ஒதுக்கிக் கொடுத்திருந்தார். இவ்வாறாக திரட்டப்பட்ட நிதியில் இருந்து யாழ். நகரத்து முஸ்லிம் வட்டாரத்தில் அமைந்த 'ராப்ஸ்' வீதியில் காணித் துண்டொன்றை வாங்கினார்கள். (ஜின்னா மைதானத்திற்கு முன்பாக)

1959 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி டி. பி. ஜாயா அத்திவாரக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து வி. எம். எம். அபூசாலியின் முயற்சியினால் 'ராப்ஸ்' வீதி என்று நாமம் பூண்டிருந்த நேரிய சாலை மாநகராட்சி மன் றத்தினரால் 'முஸ்லிம் கல்லூரி வீதி' என்ற புதிய பெயரைப் பெற்றது.

ஒஸ்மானியாக் கல்லூரிக்கு ஆரம்பத்தில் 'ஸாஹிராக் கல்லூரி' என்ற பெயரே இருந்து வந்தது. 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே 6 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களை ஸாஹிராக் கல்லூரியில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி யாழ். முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நன்னாள். அந்த நாள் அன்று தான் டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் ஸாஹிராக் கல்லூரி என்று நாமம் பூண்டிருந்த இக்கல்லூரியை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தார். அவருடன் வர்த்தக அமை ச்சராக பதவி வகித்த இலங்கரத்ன அவர்களும் வந்து திறப்பு விழாவைச் சிறப்பித்தார்.

அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடை பெற்றது. அக்காலத்தில் யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அல்பிரட் தங்கராஜா துரையப்பாவும் இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார். இவர் கல்லூரி மீது நல்லெண்ணம் வைத்து அதன் வளர்ச்சிக்கு ஒரு உந்து சக்தியாக விளங்கினார். விழா வைபவத்தன்று இவரது தந்தை காலமாகி விட்டபோதும் கூட கல்லூரியின் நலன் கருதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்புச் செய்தார்.

அதன் பிறகு ஒஸ்மானியா கல்லூரி படிப்படியாக வளர்ந்தது. கல்லூரியின் விஸ்தரிப்பிற்காக அதன் சுற்று வட் டாரத்திலுள்ள காணிகளும் தென்னந் தோப்புகளும் பயன்படுத்தப்பட்டன. அந்த வகையில் எனது தாயாரின் (பரீத் றkனா) தென்னந்தோப்புக் காணியும் வீடும் கூட கல்லூரியின் விஸ்தரிப்பிற் காகப் பயன்படுத்தப்பட்டன. நான் பிறந்து வளர்ந்த (10 வயது வரை) மண்ணில்தான் இன்று ஒஸ்மானியாக் கல்லூரி அமைந்துள்ளது.

யூஸ¤ப் அதிபரின் நற்சேவைகளைத் தொடர்ந்து அவர் மாற்றலாகிச் சென்ற பின்னர் 01.02.1967 முதல் எம். எம். அப்துல் குத்தூஸ் அதிபர் பதவி வகித்தார். அதிபர் குத்தூஸ் கல்வி யியல் டிப்ளோமா படிப்பிற்காக சென்றிருந்த இடைக்காலத்தில் ஆசிரியர் என். எம். ஏ. கபூர் 11.10.1967 முதல் 18.08.1968 வரை பதிலதிபராகப் பணி புரிந்தார்.

1970ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் பதியுத்தீன் மஹ்மூத்தை மீண்டும் கல்வியமைச்சராக்கியது. இச்சந்தர்ப்பம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு மீண்டும் ஒரு பொற்காலமாகத் திகழ் ந்தது. தனிப்பட்ட முறையில் கல் லூரியின் மீது அக்கறை செலுத்திய அமைச்சர் கல்லூரிக்காக நிறைய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண் டார். ஒஸ்மானியாக் கல்லூரியை அபிவிருத்தி செய்வதில் பெரும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

எமது கல்லூரியின் மண்டபத்திற்கு 'அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் மண்டபம்' என்று நாமம் சூட்டப்பட்டது. 1972 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அமைச்சரின் கரங்களாலேயே இம்மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவின் போது பல கலைநிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.

அதிபர் குத்தூஸ் முயற்சியால் கல் லூரியில் தொலைபேசி இணைப்பு நிரந்தரமாக்கப்பட்டது. இவரின் பதவிக் காலத்தில் பல கட்டட நிர்மா ணங்கள் மேற்கொள்ளப்பட்டன. வர் த்தக கல்வி அறைகளும் இக்காலத்தில் தான் நிர்மாணிக்கப்பட்டன. பொது விஞ்ஞான ஆய்வுக் கூடமும் சிறப்புற பூர்த்தியடைந்து இரசாயனப் பொருட்க ளும் உபகரணங்களும் நிரம்பி வழிந்தன.

அதிபர் குத்தூஸ் அவர்களை தொடர்ந்து 30.06.1974 இல் ஏ. எச். ஹாமீம் அதிபர் பதவியை ஏற்றார். இவர் கல்லூரியில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதில் அரும்பாடு பட்டார். இவரது காலத்தில் உதை பந்தாட்டக் குழு தேர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது மட்டுமல்லா மல் கல்லூரியின் முற்றமும் வளாகமும் சீரமைக்கப்பட்டன. பசு மரங்களும், மலர்ச்செடிகளும், பயன்தரு பயிர்களும் நாட்டப்பட்டு இயற்கையான குளிர்ச்சி யான சூழலை உருவாக்கிய பெருமை ஏ. எச். ஹாமீம் அதிபருக்கே உரித்தா கும். அத்துடன் இவரது காலத்திலேயே கல்லூரியில் இரட்டை அலகு விஞ் ஞான ஆய்வுகூட கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.

03.08.1979 ஆம் ஆண்டில் ஏ. எச். ஹாமீம் அதிபர் இடமாற்றம் பெற்ற தையடுத்து எம். கே. எம். ஹனீபா பதிலதிபராக கடமையாற்றினார். அதன் பின்னர் 03.04.1980ல் எம். ஏ. ஆர். ஏ. றஹீம் அதிபர் பதவியேற்றார். அவர் விடுமுறை பெற்றிருந்த காலத்தில் 07.08.1981 முதல் 27.12.1981 வரை கே. எம். ஹம்தூன் பதிற்கடமை புரிந்தார்.

30.06.1982ல் மீண்டும் ஏ. எச். ஹாமீம் அதிபர் பதவியேற்று கல்லூரி யின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகி த்தார். 1986 ஆம் ஆண்டில் ஏ. எச். ஹாமீம் அதிபரின் பெரும் முயற்றியால் 'பழைய மாணவர் சங்கம்' உருவாக் கப்பட்டு அச்சங்கத்தினரால் கல்லூரியின் மைதானத்தை சுற்றியுள்ள எல்லைச் சுவர் யாவும் பூரணமாக்கப்பட்டன.

1990 முதல் 2003 ஆம் ஆண்டு வரை நாட்டின் அசாதாரண நிலைமை காரணமாக ஒஸ்மானியாக் கல்லூரி மூடப்பட்டிருந்தது. இது கவலைக்குரிய விடயமாகும்.

ஏ-9 பாதை திறந்து நாட்டில் சமாதானச் சூழல் நிலவிய சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒஸ்மானியாக் கல்லூரியை மீள் எழுச்சி செய்ய முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், யாழ். முஸ்லிம் நலன் விரும்பிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அரும்பாடுபட்டார்கள். இவர்களின் பெரும் முயற்சியால் 2003 ஆம் ஆண்டு ஒஸ்மானியாக் கல்லூரி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

22.09.2003 ஆம் ஆண்டில் முபாரக் மெளலவி அதிபர் பதவியேற்றார். மீள் எழுச்சி பெற்ற கல்லூரியின் வளர்ச் சிக்காகப் பல அபிவிருத்தித் திட்ட ங்களை மேற்கொண்ட இவரை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது. அன்றிலிருந்து இன்று வரை இவரது நற்சேவைகள் தொடர்ந்த வண்ணமாக இருக்கின்றன.

இந்த ஆண்டு ஒஸ்மானியாக் கல்லூரியின் பொன்விழா ஆண்டாகும். பொன்விழாவை வெகுவிமர்சையாகக் கொண்டாட அதிபர் முபாரக் மெளலவி முயற்சி செய்கின்றார். முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் ஆலோசனைகளை வழங்கி பொன்விழாவைச் சிறப்பிக்கு மாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

பொன்விழா காணும் எமது ஒஸ் மானியாக் கல்லூரி மென்மேலும் வளர்ந்து முஸ்லிம் சமுதாயத்தில் தலை சிறந்த கல்லூரியாகத் திகழ்ந்து வைரவிழா நூற்றாண்டு விழா போன்ற பல விழாக்களைக் கொண்டாட வேண்டும் என்று மனதார வாழ்த்துகி றோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com