Contact us at: sooddram@gmail.com

 

இரண்டு பேர்... இரண்டு கொலைகள்!

திலுக்குப பதில் என்று சொல்வதைப்போல நடந்துள்ளன அந்த இரண்டு மரணங்கள்

23 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் இருந்த சரப்ஜித்சிங் அங்கேயே தாக்கப்பட்டு பிணமாகத்தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். பதிலுக்கு காஷ்மீரின் கோட் பால்வால் சிறையில் பாகிஸ்தானியர் சனாவுல்லா ரஞ்சய் என்னும் கைதி தாக்கப்பட்டு பிணமாக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் கொடூரம் தலைதூக்குவது இந்தியா, பாகிஸ்தான்  ாடுகளைச் சேர்ந்த மனித உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 52 வயதாகும் சனாவுல்லா, பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியைச் சேர்ந்தவர். 1999-ல் காஷ்மீர் பகுதியில் தீவீரவாத நடவடிக்கைகளுக்காக கைதுசெய்யப்பட்ட சனாவுல்லா, தடா வழக்கின் கீழ் தண்டனைக்குள்ளாகி, காஷ்மீர் சிறையில் இருந்தார். காஷ்மீர் சிறையில் பைப் பேக் இசைக் கலைஞராகவும், புல்லாங்குழல் இசைப்பவராகவும், மற்ற நேரங்களில் பட்டம் செய்துவிடுபவராகவும் சிறையில் அனைவருக்கும் பிடித்தவராக வாழ்ந்தவர் சனாவுல்லா. லாகூர் சிறையில் சரப்ஜித்சிங் இரண்டு கைதிகளால் செங்கற்களால் தாக்கப்பட்டு மூளைச் சாவு ஏற்பட்ட செய்தி இந்தியச் சிறைகளில் பரவியபோது, சனாவுல்லாவும் சரப்ஜித்சிங்கைப்போலவே தலை சிதைக்கப்பட்டார். உடனடியாக சண்டிகரில் இருக்கும் ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சனாவுல்லாவும் மூளைச் சாவு ஏற்பட்டு இறந்துபோனார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, சனாவுல்லாவை பாகிஸ்தான் அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். சனாவுல்லாவை சிகிச்சைக்காக பாகிஸ்தான் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி ஆனது. இந்த நிலையில்தான் சனாவுல்லா உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து  ிழித்துக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கைதிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. பொதுவாக வெளிநாடுகளைச் சேர்ந்த அதிக அளவிலான கைதிகள் எல்லையோர மாநிலங்களின் எல்லாச் சிறைகளிலும் உள்ளனர். உலகெங்கிலும் உள்ள பல நாட்டுச் சிறைகளிலும் இந்தியாவைச் சேர்ந்த 6,569 கைதிகள் உள்ளனர்.  

''சுமார் 270 இந்தியக் கைதிகள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர். இவர்களில் 215 பேர் கடல் எல்லை அறியாமல் காற்றோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு சர்வதேச கடல் எல்லையிலோ, பாகிஸ்தான் கடல் எல்லையிலோ பிடிபட்டவர்கள். பஞ்சாப், வங்கத்தையட்டிய பாகிஸ்தான் எல்லையில் ஆடு, மாடுகளை மேய்க்கும்போது, அறியாமல் எல்லை கடந்து சிக்கிக்கொள்கிறவர்களும் உண்டு. அதுபோல இந்தியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த 220 கைதிகள் அடைபட்டுள்ளனர். பரஸ்பரம் நடந்துவிட்ட சரப்ஜித்சிங், சனாவுல்லா மரணங்களைத் தொடர்ந்து... இரு நாடுகளிலும் அடைபட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்குள் மரண பயம் பரவியுள்ளது. இரு நாடுகளுமே வெளிநாட்டுக் கைதிகளைப் பாதுகாப்பாக சிறைகளில் அடைத்து தற்காலிகமாக பாதுகாத்தாலும் எல்லை கடந்து கைதுசெய்யப்படும் சிறைக் கைதிகளின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார்கள் மனித உரிமையாளர்கள்

சரப்ஜித்சிங் 1990-ம் ஆண்டு காணாமல் போய், ஒன்பது ஆண்டுகள் கழித்துதான் பாகிஸ்தான் அரசால் அவர் கைதுசெய்யப்பட்டது அவரது குடும்பத்துக்குத் தெரியும். அதுபோலத்தான் சனாவுல்லாவும். ஆனால், சரப்ஜித்சிங்கை மீட்க அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தபோது, அதை மத்திய அரசோ, பஞ்சாப் அரசோ கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவர் மரணமடைந்த பின்னர் பஞ்சாப் அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் அரசு வேலையும் மூன்று நாள் அரசு முறை துக்கமும் அனுஷ்டிக்கிறது. மத்திய காங்கிரஸ் அரசோ, ராகுலை அதிரடியாக அனுப்பியதோடு 25 லட்ச ரூபாய் உதவி அறிவிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் சரப்ஜித்சிங் தியாகியாக அறிவிக்கப்படாலும் ஆச்சர்யம் இல்லை.

கிட்டத்தட்ட சரப்ஜித்சிங், சனாவுல்லா ஆகிய இருவரின் மரணங்களுமே அரசியல்ரீதியாக ஒரே மாதிரி நிகழ்த்தப்பட்ட மரணங்கள். இரு தரப்பையும் பழி சொல்ல முடியாதபடி, சரிக்கு சமமாய் வைத்து பேசக்கூடிய நியாயமான மரணங்கள் என்பதாக தோற்றம் பெறக்கூடியவை. இனி... இதுவரை பாகிஸ்தான் அரசால் கண்டுகொள்ளப்படாத சனாவுல்லாவை, அந்த நாட்டு அரசும் தியாகியாக அறிவிக்கலாம். சியால்கோட்டில் சனாவுல்லாவுக்கு சிலை வைக்கலாம். சில லட்சங்களை அவரது குடும்பத்தினருக்கும் கொடுக்கலாம்.

ஆனால், இரு நாட்டுக் கைதிகளுக்கும் நடந்ததைப்போல இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்திய, பாகிஸ்தான் அரசுகளுக்கு உண்டு. அந்த வகையில் சிறைக் கைதிகள் பரஸ்பரம் உயிர்க் கொலையில் ஈடுபடுவதற்குப் பெயர் தேசப்பற்றல்ல... தேசிய வெறி!

- டி.அருள் எழிலன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com