Contact us at: sooddram@gmail.com

 

மூன்றாவது புலம்பெயர் அமைப்பினரது பின்துணையுடன் தேவிகன் - அப்பன் - கோபி ஆகிய மூவர் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்டம் முயற்சி எப்படி ஸ்ரீலங்காவினால் முறியடிக்கப்பட்டது. -- (2)

(டி.பி.எஸ்.ஜெயராஜ்)

திருகோணமலை

இதையடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு வித அச்ச நிலையை பிரதிபலித்தது. திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தீவிரதேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் மேறகொள்ளப்பட்டன. ஆண் மற்றும் பெண் ஆகிய இரு தரப்பையும் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளையோர்கள் கைது செய்யப்பட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் அனைவரும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் அவர்கள் சரணடைந்து மறுவாழ்வு பெற்றவர்கள். மறுவாழ்வு பெற்றிராத முன்னாள் போராளிகள் சிலரும் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின்போது கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்கள். அவர்கள் வெலிக்கடையில் உள்ள பாதுகாப்பு தங்குமிடம் மற்றும் புனர்வாழ்வு மையத்துக்குுனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சேகரித்த தகவல்கள் ஊடாக பாதுகாப்பு நிறுவனங்களில் எச்சரிக்கை சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. மேலதிக விசாரணைகள் மற்றும் புலனாய்வுகள் மூலமாக ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈயினை உயிர்பிப்பதற்கு உலகத் தமிழ் புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிகள் மறறும் புலி சார்பு சக்திகள் முயற்சிக்கின்றன எனும் தகவல் வெளிப்பட்டது. அதைப்பற்றி அறியப்படுவது என்னவென்றால் பிரான்சிலுள்ள கமலநாதன் சதீஷ்குமார் எனும் புலிச் செயற்பாட்டாளர் நவம்பர் 2011ல் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் தமிழ்நாட்டில் வாழும் சில முன்னாள் புலி உறுப்பினர்களை ஒன்று சேர்த்து, எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் அளிப்பது சம்பந்தமாக சில இரகசியக்கூட்டங்களை நடத்தினாராம். குமரன் என்கிற சதீஷ்குமார் இன்னமும் பிரான்சில் வாழ்ந்து கொண்டு வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயில் தலைமையக குழுவுக்கு தலைமையேற்றிருக்கும் விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தியின் தலைமையின் கீழ் பணியாற்றி வருகிறார்.

தமிழ் நாட்டில் குமரன் 15 அங்கத்தவர்களை ஆட்சேர்ப்பு செய்து, ஒவ்வொன்றும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மூன்று உப குழுக்களாக அவர்களைப் பிரித்தார். அத்தகைய உப குழு ஒன்றை சேர்ந்த உறுப்பினர்கள், 2012 மார்ச் 6 ல் திருகோணமலை மாவட்டத்துக்கு அனுப்பப் பட்டார்கள். அதன் நோக்கம் திருகோணமலை மாவட்டத்தில் கொலைகளை நடத்துவதே. மார்ச் 17ல் முத்து என்கிற ரகுநாதன் கொலை செய்யப்பட்டது இந்த திட்டத்தின் முதல் நடவடிக்கை. உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளின்படி தேவிகன் கூட இந்தச் சதியில் சம்பந்தப் பட்டிருக்கலாம்.

திரளான கைதுகள்

ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட அளவுக்கு மீறிய தேடுதல்வேட்டை காரணமாக ஆரம்பக் கட்டத்தில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்  திட்டம் கோணலாகிப் போனது. அந்த உப குழுவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டதும் ஏனையோர் இந்தியாவுக்கு தப்பியோடி விட்டனர். திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த பரவலான சுற்றிவளைப்பு மற்றும் திரளான கைது என்பன சமூகத்தினர் மத்தியில் அதிகளவு அச்சத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) இந்த பாரிய கைது நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தது. ரி.என்.ஏ யின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது சம்பந்தமாக பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை சந்தித்தார்கள். கோட்டபாயா என்ன நடந்தது என்பதை விளக்கியதுடன் புத்துயிர்ப்பு முயற்சிகள் பற்றி ரி.என்.ஏக்கு அறிவித்தார். ஸ்ரீலங்காவில் உள்ள சந்தேக நபர்களுக்கும் மற்றும் புலம்பெயர் சக்திகளுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின் பதிவையும் அவர்களுக்கு போட்டுக் காண்பித்தார். தொகையாக கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் ரி.என்.ஏ க்கு உறுதியளித்தார். ரி.என்.ஏ வெளிப்படையாக திருப்தியுடன் திரும்பினார்கள். சில நாட்களுக்குள் கைது செய்யப்பட்டவர்களில் சிறு தொகையினரை தவிர ஏனையோர் விடுவிக்கப்பட்டார்கள். இரண்டாவது எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பு முயற்சி டிசம்பர் 2012ல் கண்டுபிடிக்கப் பட்டது. கொழும்பில் வைத்து புனர்வாழ்வு வழங்கப்படாத ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் 2012 டிசம்பர் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் விளைவாக ஒரு குழப்பமான கண்டுபிடிப்பு கிடைத்தது. தமிழ்நாடு சென்னையில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ வலையமைப்பின் விபரங்கள், ஐரோப்பாவிலுள்ள புலி சக்திகளின் நிதி விபரங்கள் என்பன பூர்வாங்க விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்தன.

தமிழ்நாடு

மேலதிக விசாரணைகள்,  யாழ்ப்பாணத்தில் உள்ள மேலும் ஆறு வாலிபர்களைக் கைது செய்ய வழி வகுத்தது, தமிழ்நாட்டு புலி வலையமைப்புடன் அவர்கள் தொடர்பு கொண்டிருப்பதாகச் சந்தேகிக்கப் பட்டார்கள். இந்த ஆறு பேரில் இருவர் முன்னாள் பெண் புலிகளாவார்கள், அவர்கள் புனர்வாழ்வு பெற்றதின் பின்னர் விடுதலையானவர்கள். பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவரை தவிர ஏனையோர் விடுவிக்கப்பட்டு விட்டார்கள். காவலில் உள்ள சந்தேக நபர்களிடமிருந்து மேலும் அதிக தகவல்கள் பெறப்பட்டன. அவை அதிர்ச்சியை வெளிப்படுத்தின. தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த இளைஞர்கள் தெரிவித்ததின்படி. தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீலங்கா தமிழ் இளைஞர்களிடையே தமிழீழ அனுதாபிகளை ஆட்சேர்ப்பு செய்து, தீவிரதாத எல்.ரீ.ரீ.ஈ சித்தாந்தை அவர்களுக்கு போதிப்பதற்கான இரகசிய பிரச்சாரம் நடந்து வருகிறது. மின்னணு மற்றும் வெடிபொருட்களில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இறுதி இலக்காக தீவுக்கள் ஊடுருவி ஸ்ரீலங்காவிலுள்ள கேந்திர முக்கியம் வய்ந்த இடங்கள் மற்றும் முக்கியமான நபர்கள் மீது தாக்குதல் நடத்துவது. இந்த திட்டத்துக்காக  ஐரோப்பாவிலுள்ள புலி சக்திகள் நிதியுதவி அளித்துள்ளன.

ஸ்ரீலங்கா அதிகாரிகள் இந்த தகவலை மெதுவாக இந்தியாவிலுள்ள தங்கள் சகாக்களுக்கு அறிவித்தார்கள். தமிழ்நாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈக்கு சார்பான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த தகவல் கசிந்து விடாமல் இருப்பதை தவிர்க்க அதிகளவு கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு மாநில காவல்துறையை சேர்ந்த விசேட உளவுத்துறைப் பிரிவான கியு பகுதியை சேர்ந்து காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று, மூத்த காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் டிசம்பர்  19, இரவில் ஒரு திடீர் சோதனையை நடத்தியது. சென்னையை அடுத்துள்ள புறநகரான பல்லாவரத்தில் உள்ள பம்மல் பகுதியில் உள்ள நல்லதம்பி தெரு வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு காவல்துறை பட்டாளம் அதற்குள் புகுந்தது. அந்த வாடகை வீட்டில் குடியிருந்த நான்கு குடியிப்பாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள், எஸ்.சுரேஸ்குமார், டி.உதயதாஸ், ரி.மகேஸ்வரன் மற்றும் கே.கிருஸ்ணமூர்த்தி ஆவார்கள். அவர்களது வயது, முறையே 34,39,33,மற்றும் 29 ஆகும்.

டைம்ஸ் ஒப் இந்தியா

அப்பொழுது டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த செய்தியின்படி,  ஈழப்போரின்போது நடந்த ஒரு வெடிப்பில் சுரேஸ்குமார் தனது கால்களை இழந்திருப்பதாகவும் மற்றும் இப்போது சக்கரநாற்காலியிலேயே இயங்கி வருகிறார் என்றும். இவர்களில் இரண்டு பேர்கள் 2001 மற்றும் 2003ல் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்ததாகவும் ஏனையவர்கள் இறுதிக்கட்ட போரின்போது,2009ல் வந்தவர்கள் என்றும் ஒரு உளவுத்துறை அதிகாரி தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டிருந்தது. ஒரு மின்னணு நிபுணரான சுரேஸ்குமார் வெடிபொருட்களை தயாரி்கும் எல்.ரீ.ரீ.ஈ பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கியிருந்தார்.”அவர் மின்னணு சுற்றுக்களைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். அங்கிருந்து நாங்கள் இரண்டு மடிக்கணணிகள், குற்றம்சாட்டும் ஆவணங்கள்,கம்பிகள்,கேபிள்கள், மற்றம் மின்னணு சுற்றுப் பலகைகள் எனப் பல பொருட்களைக் கைப்பற்றியுள்ளோம்” என்று அந்த அதிகாரி கூறியதாக பிரசுரமாகியிருந்தது.

கிருஸ்ணமூர்த்தி அந்த சற்றுவட்டாரத்துக்கு தண்ணீர் கான்களை விநியோகித்து வந்துள்ளார், அவர் ஸ்ரீலங்கா தமிழர்களுடன் நட்பாக பழகி அவர்களை சுரேஸ்குமாரிடத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர், திடீரென வெடிக்கக்கூடிய வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு ரகமான குண்டுகளுக்குரிய மின்னணு சுற்றுக்கள் என்பனவற்றை தயாரிக்க பயிற்சி அளித்துள்ளார் என விசாரணையாளர்கள் தெரிவித்தார்கள். விசாரணையின்போது கைது செய்யப்பட்டவர்கள் பம்மலில் உள்ள வீட்டை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தாங்கள் வாடகைக்கு எடுத்தாகவும், தாஸ் ஒரு தச்சுச் தொழிலாளி, மகேஸ்வரன் ஒரு புகைப்படத் தணிக்கையாளர்,மற்றும் சுரேஸ்குமார் ஸ்ரீலங்கா தமிழர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களை அந்நாட்டுக்கு குண்டு தயாரிக்கும் பொருட்களுடன் அனுப்புவதாகவும்; தெரிவித்துள்ளார்கள். கைது செய்ப்பட்டவர்கள் தாம்பரத்தில் உள்ள நீதவான் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு,நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

உட்சதி

இந்த சம்பவத்தில் உள்ள ஒரு உட்சதியின் நோக்கம் வெளிப்படுத்துவது, இந்த விடயத்தில் தேவிகனின் தலையீடு இருப்பதை. அவர் இந்த குழுவுக்கு பின்துணை வழங்கியதுடன் ஐரோப்பாவிலிருந்து சுரேஸ்குமாருக்கு நேரடியாக பணம் அனுப்பி உள்ளார். சுரேஸ்குமாருடன் தொடர்பு கொள்ளும்போது அவர் நவநீதன் எனும் பெயரை பயன்படுத்தி வந்துள்ளார். தேவிகன்  நல்லதம்பி தெருவில் உள்ள வீட்டில் உறங்குவது வழக்கமாக இருந்தபோதும் கியு பிரிவினரின் சோதனை இடம்பெற்ற சமயத்தில் அவர் பம்மலில் இருக்கவில்லை. அந்தக் கைதுகளைப் பற்றிக்  கேள்விப்பட்டதுமே, தான் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக பாதுகாப்புக் கருதி அவர் தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலத்துக்கு நகர்ந்து விட்டார்.

ஸ்ரீலங்கா பாதுகாப்பு புலனாய்வாளர்கள், ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் அளிக்கும் இரண்டு வெ'வ்ேறு முயற்சிகளில் தமிழ்நாட்டுத் தொடர்பு பற்றிய விபரங்களை கண்டறிந்தபோதும், இந்திய வெளியக உளவுத்துறை முகவர்களான, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவினரின் (றோ) தீய நோக்கங்கள் பற்றிய சந்தேகமும் எழுந்திருந்தது. இந்த எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பு முயற்சிகளில் றோவுக்கும் பங்கிருக்குமோ என்கிற எண்ணம் தோன்றியிருந்தது. இந்தப் பின்னணியில் தோன்றியிருக்கும் அச்சுறுத்தல் பற்றி மிகையாக மதிப்பிடப்பட்டது. ஸ்ரீலங்காவில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளில், றோவின் ஆசியுடன் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான புலிகளுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பிரசுரமாகியிருந்தது. இது கடுமையாக மறுக்கப்பட்டது. ஸ்ரீலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளின் தொடர்ச்சியான இடையீடு காரணமாக இந்த விடயத்தில் றோ மீது எற்பட்ட சித்தக் குழப்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 2013ன் பெரும்பகுதி காலமும் தீவில் சாத்தியமான எல்.ரீ.ரீ.ஈயின் மறுமலர்ச்சி உள்ளதா என்று ஸ்ரீலங்கா அதிகாரிகள் தொடர்ச்சியான விழிப்புடன் இருந்தார்கள். அந்த திசையில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. எனினும் வட மாகாணசபை தேர்தல்கள் 2013 செப்ரம்பர் 21ல் நடைபெற்றபோது ரி.என்.ஏ, எல்.ரீ.ரீ.ஈயினை வெட்கமின்றி புகழுவதை காணக்கூடியதாக இருந்தது. தேர்தல் பிரச்சாரங்களில் திறந்து விடப்பட்ட அரசியல் இடைவெளி, புலிகள் மற்றும் புலிகள் சார்பு சக்திகளால் எல்.ரீ.ரீ.ஈ பரப்புரையை நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது.

விக்னேஸ்வரன்

ஆனந்தி சசிதரனை ஒரு வேட்பாளராக நிறுத்தும் அளவுக்கு ரி.என்.ஏ சென்றது. அவர் போரின்போது பல மிருகத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பாளியாக இருந்த மூத்த புலித்தலைவர் எழிலனின் மனைவி ஆவார். ரி.என்.ஏயின் முதலமைச்சர் வேட்பாளர் - முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சிவி.விக்னேஸ்வரன் - எல்.ரீ.ரீ.ஈயினை விடுதலைப் போராளிகள் என்றும் பிரபாகரனை மகா வீரன் என்றும் கூறி மலிவான அரசியலை நெறிப்படுத்தினார். ரி.என்.ஏக்குள் படர்ந்திருந்த இந்த புலிவாதம் காரணமாக மே 2009க்குப் பிறகு தனது மகிமையை இழந்திருந்த புலிகளின் தோற்றத்துக்கு திரும்பவும் ஒரு காந்தியை மீளப்பெறும் நிலை உருவாகியது. யாழ்ப்பாணத்தில் விருப்பு வாக்குளைப் பெறுவதில் விகனேஸ்வரனும் ஆனந்தியும் முறையே முதலாவதாகவும் இரண்டாவதாகவும வந்தார்கள்.

கடந்த காலங்களில் வருடாந்தம் நவம்பர் 27ல் புலிகளினால் மாவீரர் நாள் அனுட்டிக்கப்படுவது வழக்கம். மே 2009ல் முல்லைத்தீவு மாவட்டத்தில் எற்பட்ட தோல்விக்குப் பிறகு ஸ்ரீலங்காவில் அந்த நாளை பொதுமக்கள் அனுட்டிப்பது ஒரு முடிவுக்கு வந்தது. எனினும் சில மாவீரர் நாள் சுவரொட்டிகள் கடந்த வருடம் வடக்ு மற்றும் கிழக்கில் ஒட்டப்பட்டிருந்தன. எல்.ரீ.ரீ.ஈயினை காவல் தெயவங்கள்  என குறிப்பிட்டு தமிழீழத்தக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்களும் வடக்கு நகரங்களில் சில அறிமுகமில்லாத மனிதர்களால் இந்த வருட ஆரம்பத்தில் விநியோகிக்கப் பட்டன. ஐநா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் மார்ச்சில் நடத்த நாள் குறிப்பிடப்பட்டு இருந்ததால், பெப்ரவரி மாத கடைசி மற்றும் மார்ச் ஆரம்பத்தில் சில கையேடுகளும் வெளியாகி இருந்தன. இந்த துண்டுப் பிரசுரங்கள் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ பிரசன்னத்தை விமர்சித்ததுடன் ஜெனிவாவிலுள்ள ஐநா சபையில் ஸ்ரீலங்காவுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டதும் குறிப்பிடப்பட்டிருந்தது. டிசம்பர் 2013ல் ஜேர்மனி பிரேமனில் உள்ள நிரந்தர ஸ்ரீலங்கா மக்கள் தீர்ப்பாயத்தில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பையும் அது கவனத்தில் ஈர்த்திருந்தது. சர்வதேச ரீதியாக காலம் கனியும் போது தமிழ்மக்கள் அவர்களது பாதுகாவலர்கள் தலைமையில் ஒன்று திரளும்படியும் கோரப்பட்டிருந்தது. இந்த துண்டுப் பிரசுரங்கள் ஏ - 4 அளவு காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு வடக்கு நகரங்களில் இரவு நேரங்களில் ஒட்டப்பட்டிருந்தன.

பளையில் காணப்பட்ட சுவரொட்டிகள்.

இந்த சுவரொட்டிகளும் மற்றும் துண்டுப் பிரசுரங்களும் பாதுகாப்பு நிறுவனத்தினரை எரிச்சலடைய வைத்ததால், அதற்கு பொறுப்பானவர்களை தேடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன, ஆனால் இந்த விடயம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. சில கிறுக்குப்பிடித்த இளைஞர்களின் குழந்தைத்தன கோமாளி விளையாட்டு என்றே கருதப்பட்டது. இதற்கான திருப்புமுனை 2014 மார்ச் 6ல் ஏற்பட்டது. யாழ்ப்பாண குடாநாட்டின் பளை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபக்ஸ மற்றும் காமினி,தென்னக்கோன் மற்றும் ஜெயக்கொடி ஆகிய காவல்துறையினர் மற்றும் சாரதி பண்டார ஆகியோர் ஒரு வழக்கமான இரவு ரோந்துக்குப் போய்க்கொண்டிருந்த பொழுது, கையில் ஒட்டிய பசையுடன் நின்று கெண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்டார்கள். ஏன் உனது கையில் பசை ஒட்டியிருக்கிறது என்று காவல்துறையினர் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். சந்தேகம் எழுந்ததால் காவலதுறையினர் அவனை மேலும் கேள்விகள் கேட்டதனால், ஸ்ரீலங்காவுக்கு எதிரான தமிழ் ஈழத்துக்கு ஆதரவான சுவரொட்டிகள் வைத்திருந்த மற்றொரு இளைஞரை கண்டுபிடிக்க முடிந்தது. ஒரு பசை வாளியும் கண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு கூட்டிச்சென்று மேலும் விசாரணை நடத்தப்பட்டது. பளை காவல்துறைக்கு அவர்கள் தெரிவித்த தகவல் மிகவும் தீவிரமானது. காவல்துறை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு(ரி.ஐ.டி) இது பற்றி அறிவிக்கப்பட்டது.

ரி.ஐ.டி அதிகாரிகள் இந்த இரண்டு பேரையும் மேலும் விசாரித்ததில, மேலும் விபரங்கள் சேகரிக்க முடிந்தது. அவர்கள் இருவரும் எல்.ரீ.ரீ.ஈயை சேர்ந்தவர்கள் என்றும் ஆனால் சரணடையவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. அதனால் அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப் படவில்லை. அவர்களில் ஒருவர் 34 வயதான குமாரசிங்கம் குலசங்கர் என்கிற முகுந்தன். மற்றவர் 28 வயதான ஞாா என்கிற அகஸ்தீன் குணசீலன், குலசங்கரது சொந்த இடம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருநுவர, ஆனால் பளையில் மணமுடித்திருப்பதால் இத்தாவில்லில் தற்பொழுது வசிக்கிறார். குணசீலன் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்த சூரியபுரம் எனும் இடத்தை சேர்ந்தவர்.

விசாரணையில் அவர்கள் வெளிப்படுத்தியது ரி.ஐ.டி யினரை அதிர்ச்சியடைய வைத்தது. குலசங்கர் சொன்னது சுவிட்சலாந்தில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ வட்டாரங்களில் இருந்து துண்டுப் பிசுரங்களை ஒட்டுவதற்காக தனக்கு மாதாந்தம் 20,000 ரூபா கிடைக்கிறது என்று. குணசீலனும் அதேயளவு பணத்தை பெறுவதாகவும் கூடிய விரைவில் முச்சக்கர வண்டியொன்று அன்பளிப்பாக கிடைக்கவிருப்பதாகவும் சொன்னார். தவிரவும் ஸ்ரீலங்காவில் தாங்கள் தொடர்பு கொள்ளுபவர்களின் அடையாளங்களையும்  வெளிப்படுத்தினார்கள். பளையில் கைதான இருவரும் நாட்டில் திரும்பவும் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் வழங்குவதற்கான ஒரு திட்டம் இருப்பதாக ரி.ஐ.டி யிடம் தெரிவித்தார்கள். தாங்கள் இந்த வலையமைப்பின் ஒரு பகுதி என்பதையும் மற்றும் தாங்கள் காசியன் என்கிற கோபி மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் அவர்கள் ஒப்பக்கொண்டார்கள்.

(நன்றி: தேனி இணையம்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com