Contact us at: sooddram@gmail.com

 

கெரியின் வருகை இலங்கை அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம்

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இராஜாங்க செய லாளர் ஜொன் கெரி இன்று சனிக்கிழமை இலங்கை வருகிறார். இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு நாடகளுக்குள்ளும் இவர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க் கட்சி தலைவர், தமிழ் தேசி யக் கூட்டமைப்பினர், சிவில் சமூக உறுப்பினர்கள், வர்த்தகப் பிரதிநிதி கள், தன்னாய்வு தொண்டு நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நடப்பு, பாதுகா ப்பு, வர்த்தகம் உள்ளடங்கலான பொதுவான விடயங்கள் குறித்து இவர் உரையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் இலங்கைக்கு வந்து போவதென்பதொன் றும் புதிதான விடயமல்லாத போதும் அமெரிக்காவின் இராஜாங்க செய லாளர் ஒருவர் இலங்கைக்கு நேரில் வருவது சர்வதேச உறவுகளில் முக்கி யத்துவம் பெறுவதற்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான உண்மை களே காரணமாகும்.

அதிலும் 2004 ஆம் ஆண்டு கொலின்பவலின் வருகைக்குப் பின்னர் அமெ ரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஒருவர் இலங்கைக்கு வருவதென்பது இதுவே முதற்தடவையாகும். அந்த வகையில் எந்தவொரு அரசாங்கமும் முன்னொருபோதும் எடுத்திராத முயற்சிக்கு கிடைத்த பிரதிபலனென்றே ஜோன் கெரியின் இலங்கை விஜயத்தை கருதவேண்டும். அதேபோன்று கெரியின் வருகை இலங்கை - அமெரிக்க உறவின் புதிய பரி மாணமாக அமைந்துள்ளதென்றும் கூறலாம்.

வல்லரசு என்ற வகையில் அமெரிக்கா ஆரம்பகாலம் முதலே இலங்கையின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்துள்ள அதேநேரம் நாட்டின் இறைமை ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றுமை, இனங்களிடையிலான நல்லிணக்கம், ஜனநாய கம், சமூக ஒருமைப்பாடு சமூக, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற் றில் பெரும் அக்கறை கொண்டுள்ளது.

இலங்கை சுநத்திரமடைந்த 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் அமெரிக்க அரசு இலங்கையின் வீடமைப்பு, வேலையில்லாப் பிரச்சினை க்கு தீர்வு, கொழும்பு பங்குச் சந்தை அபிவிருத்தியென பொருளாதார ரீதி யாக 02 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான நிதியுதவியை செய்துள்ளது.

இவ்வாறாக, மிகவும் சுமுகமான முறையில் தொடர்ந்து வந்த இலங்கை - அமெரிக்க உறவு 2009 ஆம் ஆண்டு வடக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கையுடன் ஆட்டம் கண்டுவிட்டது.

வரையறுக்கப்பட்டுள்ள யுத்தக் கட்டமைப்பினையும் மீறி மனித உரிமை மீறல் கள் இடம்பெற்றுள்ளது என்பதே அமெரிக்காவின் இலங்கை மீதான குற் றச்சாட்டாகும்.

இதன் விளைவாக அமெரிக்காவின் கழுகுப் பார்வைக்கு இலங்கை இலக்கா னது. சிதறடிக்கப்பட்ட ஜனநாயக விழுமியங்களை மீண்டும் கட்டியெழு ப்ப அமெரிக்கா திட்டமிட்டது.

இதற்குரிய ஆயுதமாக அமெரிக்கா, ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விலுள்ள தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கையில் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் திசை திருப்பப்பட்டிருந்த மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் கோர ஆரம்பித்தது.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதிகரிக்க, இலங்கை - அமெரிக்கா உறவிலும் விரிசல் அதிக ரித்துக் கொண்டே சென்றது.

அமெரிக்காவின் செயற்பாட்டில் அதிருப்தி கொண்ட அப்போதைய ஜனாதி பதி ராஜபக்ஷ அரசாங்கம், அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதும் அமெரிக்கா புறக்க ணிக்கப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மீது சர்வதேச விசாரணையை நடத் தும் தனது குறியிலிருந்து அமெரிக்கா இம்மியளவும் பிசகாமல் உறுதியாக விருந்தது.

இலங்கையின் இயற்கை வளங்களை அபகரிக்க அமெரிக்கா எடுக்கும் முயற் சிக்கு ராஜபக்ஷ அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதனாலேயே மனித உரிமை மீறல் என்னும் பெயரில் வீணான அழுத்தமும் அச்சுறுத்தலும் விடுக்கப்படுவதாக ராஜபக்ஷ சார்பான அரசியல்வாதிகள் ஆத்திரத்துடன் பிரசாரம் செய்து வந்தனர்.

அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்களை எதிர்த்து கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதோடு ஒபாமாவின் கொடும்பாவிகளையும் எரித்தனர்.

அமெரிக்கா என்றாலே ஒரு எதிரி நாடு என்ற நிலையை இலங்கையின் முன் னாள் அரசாங்கம் உருவாக்கியிருந்தது. உண்மையில் இது இலங்கையின் சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட ஒரு பின்னடைவாகும்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் வந்தது. இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டுமென நினைத்த நாடுகளுள் அமெரிக்காவும் ஒன்றாகும். ஏற் கனவே மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஜானதிபதியாக்கும் முய ற்சியில் தோல்வி கண்டிருந்த அமெரிக்கா, சிறிதும் சளைக்காது ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலை மையிலான அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சிகளை தொடர்ந்தது.

கொழும்பிலிருந்த சில வெளிநாட்டு தூதரகங்கள் தீட்டிய சூட்சுமமான திட்டத் தினாலேயே தான் தோற்கடிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எது எப்படியான போதும் ஜனவரி 08 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்திக் கொடுத்ததென்றே கூறலாம்.

இலங்கை அரசியலில் ஏற்பட்ட இந்த மாற்றம் புதியதோர் அரசியல் கலாசார த்தை இலங்கையில் ஏற்படுத்தியதோடு, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக் கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான கூட்டாட்சி உருவானது.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எந்தவொரு நாடும் எமக்கு எதிரி நாடல்ல, அனைத்து நாடுகளுடனும் சமனான வெளிவிவகார கொள் கையை பின்பற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தனது பணிகளை முன் னெடுத்து வருகிறார்.

அந்த வகையில், இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளு க்கு ஜனாதிபதி நேரில் சென்று நட்பு ரீதியான பேச்சுவார்த்தையை ஆர ம்பித்து வைத்ததுடன் அந்நாட்டு தலைவர்களை இலங்கை வருமாறும் அழைத்திருந்தார்.

இந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வோஷிங்டன் சென்றிருந்தபோது செயலாளர் ஜோன் கெரியை சந்தித்து இலங்கை யுத் தக் குற்றச்சாட்டு தொடர்பில் உள்ளக விசாரணையை நடத்துவதற்கு ஏது வாக, இலங்கை மீதான ஐ.நா. அறிக்கையை ஒத்திவைக்குமாறு முன் வைத்த கோரிக்கைக்கு கெரி சாதகமான முடிவை பெற்றுத்தந்தமை நல் லாட்சிக்கு கிடைத்த வெகுமதியாகும்.

புதிய அரசாங்கத்தின் நோக்கம், பார்வை, செயற்பாடுகளை கெளரவிக்கும் வகையிலேயே அமைச்சர் சமரவீரவின் அழைப்பினையேற்று செயலாளர் கெரி இலங்கைக்கு விஜயம் செய்வதாக இராஜாங்க செயலகம் அறிவித் துள்ளது. ஜோன் கெரியின் வருகையை இலங்கையின் சர்வதேச உறவி னால் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றத்தின் எதிரொலியாகவே பார்க்க முடிகிறது.

கடந்த 10 ஆண்டு காலமாக கசந்து போயிருந்த இலங்கை - அமெரிக்க உறவை மீள் கட்டியெழுப்புவதில் கெரி, அரசியலுக்கும் அப்பால் ஒரு தனிநபராக முக்கிய பங்கு வகிப்பாரென்பது இன்று அனைவரதும் எதிர்பார்ப்பாகியுள்ளது.

இருந்த போதும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி திருப்தி கண் டுள்ள அமெரிக்கா, இம் மக்களுக்கு இனி எவ்வாறான வழியில் நியாய த்தை பெற்றுத் தரப் போகிறது என்பதே தமிழ் பேசும் மக்களின் தற்போ தைய கேள்வியாகும்.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களுக்காக அமெரிக்கா இதுவரை முன்னெடுத்து வந்த முயற்சிகள் யாவும் ஆடு நனைகிறதென்று ஒநாய் அழுத கதையாகி விடாமல் இருந்தால் நல்லது.
(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com