Contact us at: sooddram@gmail.com

 

கனடாவில் தீபாவளிக் கொண்டாட்டத்தை குழப்ப முனையும் புலிப் பினாமிகள்!

கனடிய அரசு இதனை அனுமதிக்குமா?

(இந்திரஜித்)

2010ம் ஆண்டு கனடாவில் இலங்கையர் சமூகத்தால் தீபாவளி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் - சிங்களமுஸ்லீம் சமூகங்களின் மக்கள், குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்துடன் கனடிய அரசின் பிரதிநிகளும் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு கௌரவமளித்தனர். அந்தத் தீபாவளி நிகழ்வுக்கு ஒரு சிறப்பான அர்த்தம் இருந்தது. அதாவது தீபாவளித் திருநாள் என்பது, மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை அழித்த நாளை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அதேபோல மக்களுக்கு சொல்லொணா கொடுமைகள் புரிந்து வந்த நவீன நரகாசுரர்களான புலிகளை, 2009 மே மாதத்தில் இலங்கை இராணுவம் அழித்தொழித்து மக்களைத் துன்பத்தினின்றும் மீட்டது. அதன் பின்னர் கொண்டாடப்பட்ட முதலாவது தீபாவளி என்றபடியினால், 2010 தீபாவளிக் கொண்டாட்டத்தில் அதிகளவு கனடிய இலங்கையர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் போலவே இவ்வருடமும் கனடாவில் அதே இடத்தில் (Korean Cultural Centre, 1133 Leslie Road, North York, Toronto) 2011 நவம்பர் 06ந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தீபாவளியைக் கொண்டாடுவதற்கு இலங்கையர்கள் இன மத மொழி வேறுபாடின்றி ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். கடந்த வருடத்தைவிட அதிகமானதும் சிறப்பானதுமான கலாச்சார நிகழ்ச்சிகள் ஏறபாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதிகளான மக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளித் தயாரிப்புகள் இவ்வாறு களைகட்டி வருகையில், இதைக்கண்டு பொறுக்கமுடியாத கனடாவிலுள்ள புலிப் பினாமிகள் இந்த மக்கள் கலாச்சார நிகழ்ச்சியைத் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக குழப்பும் சதி வேலைகளைத் திரை மறைவில் செய்து வருவதாகத் தகவல்கள் கசிந்து, அது பாதுகாப்புத்துறைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அமைதியானதொரு சமய கலாச்சார நிகழ்வைக் குரூர எண்ணத்துடன் குழப்ப முனையும் புலிகளின் செயற்பாடு, அனைத்து மக்களையும் வெறுப்பிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த சட்ட விரோத வன்முறை செயற்பாடு குறித்து, ஜனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடித்து வரும் கனடிய அரசு என்ன செய்யப் போகின்றது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கனடிய மண்ணிலும் புலிகளின் அராஜக செயற்பாடுகளை கனடிய அரசு அனுமதிக்கப் போகின்றதா என்பதே மக்களின் கேள்வி!

புலிகளின் குழப்ப வேலைக்கு அவர்கள் கூறும் காரணம், தீபாவளி தமிழர்களுக்குரிய நாள், அதை சிங்களவர்கள் கொண்டாடக்கூடாது என்பதே. இதுபோன்ற நகைப்புக்கிடமான கருத்துக்களால்தான் புலிகளும் சரி அவர்களது முன்னைய தமிழ் தலைமைகளும் சரி மக்களை முட்டாள்களாக்கி வந்துள்ளனர்.

முதலாவது தீபாவளி என்பது தமிழர்களின் திருநாளன்று. அது தமிழர்கள் மத்தியில் இடையில் செருகப்பட்ட ஒன்று. அது இந்துக்களின் திருநாள் என்பதால், அது உருவான இந்தியாவில் தமிழர்கள் மட்டுமின்றி, அனைத்து இனங்களையும் சேர்ந்த இந்துக்களும் அதைக் கொண்டாடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களைவிட, வட இந்திய இந்துக்களே தீபாவளியை அதிகம் கொண்டாடுகின்றனர். கனடாவிலும்கூட, இலங்கைத் தமிழர்களை விட, இந்திய இந்துக்களே தீபாவளியைச் சிறப்பாகவும் உரிய முறையிலும் கொண்டாடுகின்றனர். அவர்கள் கொண்டாடும் தீபாவளிக் கொண்டாட்டத்திலேயே வழமையாக கனடியப் பிரதமரும் அமைச்சர்களும் கலந்து கொள்வது வழமை.

இலங்கைத் தமிழர்கள் தீபாவளியைப் புரிந்து கொண்டது என்னவென்றால், அன்றைய தினத்தில் தலைமுழுகி புத்தாடை அணிவது, மது அருந்துவது, மாமிசம் சமைத்து உண்பது என்பவைதான். ஆனால் தீபாவளிக்கு உண்மையான உரித்தாளர்களான இந்திய இந்துக்களின் தீபாவளிக் கொண்டாட்ட முறைகள் வேறு விதமானவை. அதிகமான சமய புனிதத் தன்மை வாய்ந்தவை.

அதேநேரத்தில், தீபாவளி என்பது சமய நிகழ்வு என்பதற்கும் அப்பால், அது ஒரு அநீதியாளனை ஒழித்த நாளின் குறியீடு என்ற வகையில், அதை எந்த இனத்தவரும் மதத்தவரும் கொண்டாடுவதற்கு உரிமையுண்டு. அதிலும் இந்தியாவையே தமது தாய் மண்ணாகவும், இந்து மதத்துடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ள, இலங்கையின் பௌத்த சிங்கள மக்களுக்கு தீபாவளியை கொண்டாடுவதற்கு முற்றுமுழுதான உரிமையுண்டு. அதை எந்தவொரு புலிகளினாலோ அல்லது எலிகளினாலோ தடுத்து நிறுத்த முடியாது.

ஏற்கெனவே எமது தாய்த்திருநாடான இலங்கையில  தமிழ் மக்கள் தமது இல்லங்கள் தோறும் கொண்டாடும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் தமது அயலிலுள்ள சிங்களமுஸ்லீம் மக்களையும் அழைத்து அதை ஒரு இன ஐக்கிய நிகழ்வாகக் கொண்டாடுவதும், அதேபோல சிங்களமுஸ்லீம் மக்களும் தமது சமய கலாச்சார நிகழ்வுகளில் தமிழ் மக்களை அழைப்பதும், தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு நடைமுறையாகும். இந்த உண்மை, தாயகப் பண்புகளையும் கலாச்சாரங்களையும் புரிந்து கொள்ளாத கனடிய சருகு புலிகளுக்கு எங்கே புரியப்போகின்றது.

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செல்வாக்கு நாளுக்குநாள் அதல பாதாளத்தை நோக்கி சரிந்து வருகையில், தமது வசூல் நடவடிக்கைகளை மீண்டும் தட்டி நிமிர்த்துவதற்காகப் போடும் ஆர்ப்பாட்டங்களே இந்த வகையான தீபாவளி கொண்டாட்டத்தைக் குழப்புவது போன்ற நடவடிக்கைகளாகும். கனடியப  ுலிகளின் மக்கள் செல்வாக்கை, அவர்கள் அண்மையில் ரொறன்ரோவில் நடாத்தியபொங்கு தமிழ்நிகழ்வு நன்கு எடுத்துக் காட்டியது. பெரிதாக விளம்பரம் செய்யப்பட்ட அந்த நிகழ்வில் சுமார் 2500 மக்களை மட்டுமே புலிகளால் வாகனங்களால் ஏற்றி இறக்க முடிந்தது. இத்தொகை, கனடாவில் வாழும் சுமார் 3 லட்சம் மக்களில் ஒரு வீதம் கூட இல்லை என்பது குறிப்பித்தக்கது. அந்த தோல்வியின், அவமானத்தின் கடுப்பில்தான், கனடியப் புலிகள் இலங்கை மக்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தைக் குழப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக அங்கு வாழும் தமிழ் மக்களை மிரட்டும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2009ல் வன்னியில் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர் சோர்ந்து துவண்டு போயிருந்த கனடியப் புலிகள், மீண்டும் தமது அராஜக நடவடிக்கைகளை கனடிய மண்ணில் ஆரம்பித்துள்ளனர். அதற்கக் காரணம், அண்மைக்காலமாக கனடிய அரசாங்கம் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்ற தவறான கணிப்பில் எடுத்து வரும் நிலைப்பாடும், விடுத்து வரும் அறிக்கைகளுமே. கனடாவின் இந்த தவறான செயற்பாடுகளை, கனடிய புலிகள் கனடிய அரசின் தமக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு, பழையபடி தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் புலிகளின் அழிவுக்குப் பின்னர் கடந்த இரு வருடங்களாக சற்று நிம்மதியாக இருந்த கனடியத் தமிழ் மக்கள் மீண்டும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

எனவே கனடிய அரசுதான் தனது தவறான நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்து, கனடியப் புலிகளின் செயற்பாடுகளைக் கண்காணித்து, கனடிய தமிழ் மக்கின் அச்சத்தைப் போக்க வேண்டும்.

எது எப்படியிருந்த போதிலும், இம்முறை கனடாவில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில், கனடாவில் வாழ்கின்ற அனைத்து இலங்கையர்களும் இன மத மொழி வேறுபாடின்றிக் கலந்து கொள்வதன் மூலம், ‘நாம் இலங்கையர்கள்என்ற எமது உணர்வையும், எமது தேசியப் பெருமிதத்தையும் நிலநாட்ட வேண்டும்.

(நன்றி: தேனி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com