Contact us at: sooddram@gmail.com

 

பொதுநலவாய மாநாடு இலங்கைக்கு வெற்றியா?

'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்ற கதையாகத்தான் இன்றைய இலங்கை அரசாங்கத்தின் நிலை இருக்கின்றது. ஆம், போர்க்குற்றச்சாட்டுக்கள் அல்ல எந்தவொரு குற்றச்சாட்டுக்கள் எம்மீது சுமத்தப்பட்டாலும் கூட நாம் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடிபணியப் போவதில்லை என்பதனையே ஆளுந்தலைமை உட்பட அரசாங்க அமைச்சர்கள் அனைவரினதும் கருத்தாக இருக்கின்றது.

அவுஸ்திரேலியாவில் பேர்த் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று பெருமிதம் அடைந்துள்ளார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாம் பொதுநலவாய மாநாட்டை சமாளித்து வந்து விட்டோம் என்பதாகத் தான் இவரது கருத்து அமைந்துள்ளது.

பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கையிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு அவுஸ்திரேலியா சென்றபோது, இலங்கைக்கு எதிராக பல நகர்வுகள் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தும் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட நகர்வுகளாகவே இருந்தன.

இதில் முக்கியமான விடயங்களாக,

01.ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட போர்க் குற்ற வழக்கு.

02.அடுத்த பொதுநலவாய மாநாட்டை 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்கு எதிராக கனடா மேற்கொண்ட முயற்சிகள்.

03. ஜனாதிபதிக்கும் இலங்கைக்கும் எதிராக புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம்.

இவை தொடர்பில் பொதுநலவாய மாநாடு நடப்பதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகள் வெளிக் கிளம்பின. இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அதனை தடுப்பதற்கு முற்பட்டாலும் இலங்கை அதிலிருந்த எவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பொதுநலவாய மாநாட்டுக்கு மகிந்த ராஜபக்ஷ இலங்கையிலிருந்து செல்லும் முன்பே அவுஸ்தி ரேலியா குடியுரிமைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் மெல்போர்ன் நீதிமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கொன்றை தாக்கல் செய்தார். இதனால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தாம் பங்கு கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் அரச தரப்பில் பல்வேறு தடுமாற்றங்கள் காணப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி மஹிந்தவின் அவுஸ்திரேலியா விஜயம் பல்வேறு நாடுகளின் அவதானத்திற்கும் உட்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இந்நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற ஜனாதிபதி, அந்நாட்டு பிரதமர்,வெளிவிவகார அமைச்சர், மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டார்.

எனினும், மெல்போர்ன் நீதிமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க வேண்டுமாயின் அதற்கு அந்நாட்டு சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட வேண்டும். எனினும் அவுஸ்திரேலியா சட்டமா அதிபர் வழக்கை விசாரிக்க அனுமதியளிக்க முடியா தெனவும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலிய அரசுக்கு உள்ள பொறுப்பு களையும், உள்நாட்டுச் சட்டங்களையும் மீறும் வகையில் வழக்கு இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அந்நாட்டு சட்டமா அதிபர் திணக்களம் அறிவித்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் ஆதரவில் அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட இந்நடவடிக்கைக்கு இலங்கை தரப்பிலிருந்து பலத்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இதில் முக்கியமான அம்சமொன்றை குறிப்பிட்டாக வேண்டும். அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை பெரும் அச்சத்துடன் பங்கேற்றது. பல நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இலங்கை பங்குபற்றியிருந்ததுடன், இக்கூட்டத்தொடரின் போது பல்வேறு சவால்களையும் எதிர்நோக்கியது என்பதையும் மறுக்க முடியாது.

இந்த கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில் கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு இலங் கைக்கு திரும்பிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க சர்வதேசம் எம்மை ஒன்றும் செய்து விடாது நாம் ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோலதான் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. நாம் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடிபணியப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா சட்டமா அதிபர் திணைக்களம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடியாதென மேற்கொண்ட தீர்மானமானது சர்வதேச ரீதியில் இலங்கை ஜனாதி பதிக்கு மிகப்பெரும் பாதுகாப்பை அளித்துள்ளதையும் நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.

 



சர்வதேச ரீதியாக தம்மீது வழக்குத் தாக்கல் செய்ய முடியாதென்ற செய்தியை எதிர்காலத்தில் இலங்கை தரப்பு தமது பிரச்சாரத்திற்கு அதிகளவு பயன்படுத்தவும் இது உதவலாம். அதேநேரம் இந்த பொதுநலவாய மாநாடானது மற்றுமொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. 2013 ஆம் ஆண்டில் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் கனடா போன்ற நாடுகள் இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றுள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறியதுடன், இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், அவ்வாறு தமது எதிர்ப்பையும் மீறி இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுமாயின் அதில் தாம் பங்குகொள்ளப் போவதில்லையெனவும் அறிவித்திருந்தது. இதனால், இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங் கையில் நடத்த அனுமதியளிக்கப்படுமா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்திருந்தது.

இருப்பினும் சில மேற்குலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், இந்தியாவின் பலமான ஆதரவின் துணையுடன் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'பல்வேறு எதிரப்புகளுக்கு மத்தியில் பொதுநலவாய மாநாட்டில் நாம் கலந்துகொண்டோம். இதில் மூன்று முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.பொதுநலவாய மாநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை பிரச்சினைகள் தொடர்பில் பிரசாரம் செய்வதற்கு முற்பட்ட போதும் அதற்கு 15 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஜனாதிபதிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் விசாரணை மேற்கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானம் பின்வாங்கப்பட்டமை, 2013 ஆண்டு இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு அங்கத்துவ நாடுகள் அனைத்தும் இணக்கம் தெரிவித்தமை போன்ற முக்கிய பிரதான காரணங்கள் இலங்கைக்குப் பெரும் வெற்றியைத் தந்துள்ளன.

பொதுநலவாய மாநாட்டில் இலங்கை பங்குபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நாம் அதில் கலந்துகொண்டு பெரும் வெற்றி கண்டுள்ளோம்" என்று கூறியுள்ளார் அமைச்சர் பீரிஸ்

இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமைகள் மீறல் தொடர்பில் எந்த ஆதாரத்தை காட்டியும் குற்றம் சுமத்தப்பட்டாலும் அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கைத் தரப்பினர் முற்றாக மறுத்து வருவதே வழமையாக உள்ளது. இந்நிலையில், உள்நாட்டு போருக்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்கததை கட்டியழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதன் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவுஸ்திரேலியத் தலைவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் காத்திருந்த ஆபத்திலிருந்து தாம் தப்பித்து வந்துவிட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொண்டாலும், ஜனாதிபதி செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும், வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இந்த மாநாடு உணர்த்தியிருக்கின்றது.

அத்துடன், 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஜனாதிபதியின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் நடைபெறும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், கனடா போன்ற நாடுகள் எதிர்காலத்தில் இதற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் இல்லை எனவும் கூறிவிட முடியாது. போர்க் குற்றச்சாட்டு உயிர்ப்புடன் இருக்கும் நிலையில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் தொடரத்தான் செய்யும்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com