Contact us at: sooddram@gmail.com

 

யாழில் பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு! தமிழ்க் கட்சிகள் மௌனம்?

வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. நாளாந்தம் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் இதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ஏன் இந்த நிலைமை என்பது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், மற்றும் அவசரத் தேவையாக உள்ளது. யாழிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இது தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றது. அத்துடன் அச்சம் அவப்பெயர் காரணமாக பல பெண்கள் இந்த எல்லை மீறும் வன்முறை தொடர்பாக வெளியே சொல்வதில்லை. அவை பதியப்படாத முறைப்பாடுகளாக உள்ளன. யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஏ-9 பாதையூடாக பயணப் போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இந்தக் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்தன.

முன்னர் தென்பகுதியுடனான தொடர்புகள் ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்தபோது யாழ். சமூகம் வெளியாருடனான தொடர்புகளை அதிகம் கொண்டிருக்கவில்லை. அந்நேரம் ஒருவித கட்டுப்பாடு, ஒழுக்க நெறி விதிமுறைகளுக்கு அமைவாகக் காணப்பட்டது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தது போன்று விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் பெண்கள் மீதான வன்முறை மிகக் குறைந்ததாகவே காணப்பட்டது. அதற்கு அவர்களது தண்டனை உடனடியாகவும் கடுமையாகவும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். உண்மைதான். பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது அவசியம். குற்றமிழைப்பவருக்கு வழங்கப்படும் தண்டனை பிறரை அக்குற்றத்தை மீண்டும் செய்யத்தூண்டாதவாறு அமைய வேண்டும். ஆனால் இங்கோ அப்படி எதுவுமில்லை. அத்துடன் யாழ். அரச அதிபர் தெரிவித்த இன்னுமொரு சம்பவத்தையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது பொதுவான வன்முறை அல்லது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண்கள் அது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றால் அங்கு அவர்கள் பொலிஸாரால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே அதுவாகும். வேலியே பயிரை மேயும் இந்த உண்மைச் சம்பவங்களை பறைசாற்றுவது அவசியம்.

முறைப்பாடு செய்யச் செல்லும் பெண்களிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்பதும், பிறகு வீட்டிற்கு வருகிறேன் என்பதுவும் இரட்டை அர்த்தத்தில் கதைப்பதும் என்று பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனை அப்பெண்கள் எங்கே சென்று முறையிடுவது?

யாழ். அரச அதிபர் இமெல்டா ஒரு பெண்ணாக அதுவும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் பெண்ணாக இருப்பதனால் அவரிடம் அணுகிச் சில பெண்கள் இந்த முறைபாடுகளைக் கூறிவருகின்றனர். அவர் தமிழ்ச் சமூகத்தில் அக்கறை கொண்டிருப்பதால் பயமின்றி அதனை ஊடகங்களுக்கும் தெரிவித்து வருகிறார். தற்போது யாழ்ப்பாண மாவட்டச் செயலகமான தனது அலுவலகத்தில் இப்பிரச்சினை தொடர்பாகப் பாதிக்கப்படும் பெண்கள் வந்து நேரடியாகவே முறைப்பாடுகளைச் செய்யும் வகையில் ஒரு குறைகேள் அதிகாரியை நியமித்து முறைப்பாடுகளை ஏற்று வருகிறார். உண்மையில் இதுவொரு பாராட்டக்கூடிய விடயம். இதனைத் துணிந்து செய்த அரச அதிபரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

வடக்கில் ஏனைய மாவட்ட மக்களின் வருகை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற இடங்களில் மூலைக்கு மூலை விடுதிகள் என முளைத்துள்ளன. வெளிநாடுகளுக்குச் சென்று எமது கலாசாரத்தை மறந்து மேலைத்தேயத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் போன்று இன்று இங்கு வந்து குடித்துக் கும்மாளமடிக்கும் நம்மவர்களாலும் கலாசாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது. பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவிகளுடன் சில இளைஞர்கள் தெரு வீதிகளில் நடந்துகொள்ளும் முறைகேடான செயற்பாடுகள் இது யாழ்ப்பாணமா? என எண்ணத் தோன்றுகிறது. இவற்றைப் பார்த்தும் பார்க்காதது போன்று நடந்துகொள்ளும் பொலிஸாரின் நடவடிக்கைகள் பலருக்கு அரச அதிபர் இமெல்டா தெரிவித்தது போன்று புலிகளின் காலத்தையே நினைவு கூருகிறது.

எனவே வன்முறைக் கலாசாரத்தை, பெண்கள் மீதான எல்லை மீறல்களை நாமாக உணர்ந்து நிறுத்திக்கொள்ள வேண்டும். மீறுவோரைச் சட்டத்தின் காவலர்கள் பார்வையாளர்களாக இராது கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதன் மூலம் மற்றவர்கள் பயப்பட வேண்டும். அதைவிடுத்து செய்பவர்களை ரசிப்பதும், நாமும் அதையே செயபவர்களாகவும் பொலிஸார் ஒருபோதும் இருக்கக் கூடாது.

பெண்கள் மீதான முறைகேடுகளும், வன்முறைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்ற போதிலும் இது தொடர்பாக தமிழ்க்கட்சிகள் எதுவுமே வாய் திறக்காது மெளனம் சாதித்து வருவது குறித்துப் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அமைப்புக்கள் பலவும் தமிழ் அரசியல் கட்சிகளின் மெளனம் குறித்துத் தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளன.

தமிழ் ஊடகங்களில் தினம் தினம் வெளிவரும் செய்திகளைப் படித்தாவது இதற்கு ஒரு கண்டன அறிக்கை விடுவதற்குக் கூட தமிழ்க்கட்சிகள் முன்வராமை ஏன் என்பது புரியாத ஒரு புதிராகவே உள்ளது. யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் பெண்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை உணர முடிகிறது.

கலாசார பண்பாட்டு விழுமியங்களுடன் வாழ்ந்து வந்த வடபகுதி மக்களின் கலாசாரத்தில் கீறல் விழுந்ததைப் போன்று இந்த வன்முறை இடம்பெற்று வருகிறது. அரசியல் தீர்வு பற்றி மட்டுமே சிந்தித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற தமிழ்க்கட்சிகள் தமிழ் மக்களின் இத்தகைய சமூகப்பிரச்சினைகள் குறித்துச் சிந்தித்துச் செயற்படாமலிருப்பது வருத்தம் தருவதாக உள்ளது.

வடக்கில் இடம்பெற்றுவரும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பாகப் பல பெண்கள் சார்பு அமைப்புக்கள் குரல் கொடுத்து வருகின்றன. அத்துடன் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருக்கும் திருமதி இமெல்டா சுகுமாரும் இவ்விடயம் தொடர்பாகக் குரல் கொடுத்து வருகிறார். எனினும் அவை ஒரு அரசியல் கட்சி கொடுக்கும் குரலுக்குச் சமனானதாக இல்லாமலே உள்ளது.

அதனாலேயே வடபகுதியில் புற்றுநோயாக உருவெடுத்துள்ள இவ்விடயத்தில் பலமுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்துச் செயற்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த மக்களின் எதிர்பார்ப்பில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

தம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது பிரச்சினையில் அக்கறையெடுத்துச் செயற்பட வேண்டுமென அம்மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் மக்கள் பிரதிநிதிகளோ இது தொடர்பாகக் கண்டுகொள்வதாக இல்லை. அவர்கள் எல்லோருமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தினசரிகள் மற்றும் யாழ். மண் தொடர்பான இணையத்தளங்களைப் பார்வையிட்டால் வடக்கில் பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறைகளின் கோரத்தன்மை நன்கு புலனாகும். யாழ்ப்பாணத்தில் முன்னெப்போதுமே இல்லாதவொரு மோசமான கலாசாரம் தற்போது தாண்டவமாடி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துவது அவசியம்.

இதற்கு சட்டத்தைக் காப்பாற்றவென நியமிக்கப்பட்டுள்ளோர் அதிக கவனமெடுக்க வேண்டும். ஆனால் பொலிஸாரோ இவ்விடயத்தில் முழுமையான அக்கறையெடுத்துச் செயற்படுவதாகத் தெரியவில்லை. அண்மையில் யாழ். அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்தது போன்று பாதிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப் பொலிஸ் நிலையம் செல்லும் பெண்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லாமலுள்ளது.

இந்நிலையில் இவ்விடயத்தில் சக்தியுள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைமைகளே ஏதாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விடயத்தைக் கொண்டுவந்து பொலிஸ் மா அதிபரூடாக பொலிஸாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப் பணிப்புரை விடுக்கலாம். பாராளுமன்றத்தில் இப்பிரச்சினை தொடர்பாக ஒரு விவாதத்தை நடத்த கால அவகாசத்தைக் கோரலாம்.

இவ்வாறு தமிழ்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சினையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். இதனையே வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இவை எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாத தமிழ்க் கட்சிகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல தமது தீர்வுத் திட்டப் பிரச்சினையிலேயே குறியாக நிற்கின்றன.

இவ்விடயத்தில் சிறிது கவனமெடுத்துச் செயற்படாவிட்டால் பாரிய சமூகச் சீரழிவை விரைவில் காண வேண்டிய நிலை உருவாகும். சில திட்டமிட்ட தீய சக்திகள் வடக்கில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனவோ எனும் பொதுவானதொரு சந்தேகமும் பலர் மத்தியிலும் காணப்படுகிறது.

எனவே இனியும் காலம் தாழ்த்தாது தமிழ்க் கட்சிகள் விழிப்புடன் செயற்பட்டு தமிழர் பிரதேசம் கலாசார கட்டுக்கோப்புடன் திகழ ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் பல சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் உங்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்தமைக்கான பலாபலனை அவர்களால் அனுபவிக்க முடியும்.

க.சிவராஜா

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com