Contact us at: sooddram@gmail.com

 

லிபியாவில் நேட்டோ படைகளின் இனப்படுகொலைகடாபி கொல்லப்பட்டது எப்போத ? (பகுதி 3)

(சபா நாவலன்)

அய்ரோப்பியப் பெருமுதலாளிகளின் அகண்ட சாம்ராஜ்யக் கனவுகளோடும் திமிரோரும் பல நீண்ட திட்டங்களின் அடிப்படையில் கட்டியமைகப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பு கேள்விக்குரியதாகியுள்ளது. ஜேர்மனியும் பிரான்சும் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தைக் காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் மக்கள் போராட்டங்களின் முன்பு துகள்களாகிப் போயின. கிரேக்க மக்கள் பல போராட்டங்களூடாக வென்றெடுத்த அனைத்துச் சமூக நல உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அந்த நாட்டின் அரசாங்கத்தையே ஐ.எம்.எப் உம் அதன் பின்புலத்தில் தொழிற்படும் பெரு நிறுவனங்களின் பல் தேசிய முதலாளிகளும் விலைக்கு வாங்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக கிரேக்க மக்கள் மட்டுமல்ல ஐரோப்பா எங்கும் மக்கள் போராடத் துணிந்துவிட்டார்கள்.

அழிவுகளிலிருந்து பல்தேசிய கொள்ளைகாரர்களின் மேற்கு அரசுகள் தம்மை மீட்டெடுக்க போரையும், படுகொலைகளையும் உலகம் முழுவதும் கட்டவிழ்ழ்து விட்டுள்ளனர். இவ்வாறான படுகொலைகளில் அதிர்ச்சிதரும் அண்மைய இனப்படுகொலை தான் லிபிய மக்கள் மீது அமரிக்காவின் வழிகாட்டலில் நேட்டோ நாடுகள் நடத்திய பேரழிவு. இலங்கையில் ராஜபக்ச அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது நடத்திய வன்னிப் படுகொலைகளுக்கும் மேற்கு நாடுகள் லிபியாவில் நடத்திய படுகொலைகளுக்கும் பல ஒற்றுமைகளைக் காணலாம்.

-இரண்டுமே சாட்சியின்றி நடத்தப்பட்ட படுகொலைகள்.

-இரண்டிலுமே சாட்சிகளின் ஒரு பகுதி படுகொலைகளின் சூத்திரதாரிகளால் உள்வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டனர்.

-இரண்டிலுமே சாட்சியாக மாறவல்ல அனைத்துத் தடையங்களும்மனிதர்கள் ஈறாக- அழிக்கப்பட்டன.

-இனப்படுகொலையயும் போர்க்குற்றங்களையும் தமது எஜமானர்களுக்காக நிறைவேற்றியவர்களையே ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி அவர்களைத் தண்டிக்கப் போவதாக மிரட்டி தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்வது இரண்டிலுமே போதுவானதாக அமைகிறது.

லண்டனிலிருந்து புதிய திசைகள் என்ற அமைப்பு வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றில் இனிமேல் நடபெறப்போகும் இனப்படுகொலைகளுக்கு வன்னிப்படுகொலைகள் பரிசோதனைக் கூடமா எனக் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. லிபியாவில் மேற்கு நடத்திய இனப்படுகொலை அதற்கு மறுக்க முடியாத சாட்சி.

இப் படுகொலைகள் கூட இலங்கையில் நடைபெற்றது போன்றே மிகவும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ஒரு படிமுறையின் ஊடாக அவதானமாகத் திட்டமிடப்பட்டது.

முதலில் கடாபியின் காடைத்தனங்கள் அத்தனையியும் கடந்து லிபியாவிற்கு தாம் உதவுவதான விம்பம் மேற்கு நாடுகளின் மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டது. எழுபது தன்னார்வ நிறுவனங்கள் திட்டமிட்டு லிபியாவிற்குள் லிபிய அரசின் அனுமதியோடு அனுப்பி வைக்கப்பட்டன.

இவற்றுள் மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட மனித உரிமை அமைப்புக்களும் அடங்கும். இவை அனைத்தும் இரண்டு வருடங்களுக்கு மேலாக போருக்கான தயாரிப்புக்களை மேற்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் கடாபி அரசோடு இணைந்தே இத் தன்னார்வ நிறுவனங்கள் செயற்பட்டன. நேட்டோவின் ஆக்கிரமிப்பு யுத்தம் ஆரம்பமாவத்ற்குச் சற்று முன்பதாக 70 தன்னார்வ நிறுவனங்களும் மேற்கு ஆதரவு ஜனநாயக அமைப்புக்களும் இணைந்து 85 நிறுவனங்கள் அமரிக்காவையும் ஏனைய நாடுகளையும் லிபியாவில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தன.

அக்கோரிக்கையின் முழு வடிவத்தையும் இங்கே காணலாம்:

http://www.unwatch.org/site/apps/nlnet/content2.aspx?c=bdKKISNqEmG&b=1330815&ct=9135143

கடாபி மக்கள் மீது விமானக் குண்டுகள் வீசி கொல்கிறார் என்ற செய்தி மேற்கு ஊடகங்களிலும் அவற்றின் அடிமைகளான ஏனைய ஊடகங்களிலும் தன்னார்வ நிறுவனங்களாலும் பரப்பப்பட்ட அதே வேளை ரஷ்ய இராணுவக் கண்கானிப்பகம் ஆதரங்களின் அடிப்படையில் செய்தி ஒன்றை வெளியிட்டது.

 எழுச்சிகள் உருவான காலப்பகுதியிலிருந்தே லிபியப் பகுதிகளை செய்மதி ஊடாகக் கண்காணித்து வருவதாகவும் கடாபி அரசின் விமானத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.

தன்னார்வ நிறுவனனக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பெப்ரவரி 25ம் திகதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனிதி உரிமைகள் ஆணையம் லிபியாவிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுகின்றது. எந்த வாக்களிப்பும் இன்றியே இத் தீர்மானம் நிறைவேற்றப்ப்படுகின்றது. மனித உரிமைகள் ஆணையம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பிரிவைத் தலையிடக் கோரும் தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாகவே சட்டப் பிரிவுகள் 1970 மற்றும் 1973 ஆகியவற்றின் அடிப்படையில்லிபிய மக்களைப் பாதுகாக்கவெனவிமான சூனியப் பிரதேசமாக லிபியாவின் பகுதிகள் அறிவிக்கப்படுகின்றன.

இத் தீர்மானத்திற்கு லிபிய மக்களின் பாதுகாப்பிற்கும் எந்த குறைந்தபட்சத் தொடர்பும் இருக்கவில்லை. ஆதாரமற்ற வெற்றுக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் திருட்டு நோக்கம் உடனடியாகவே வெளிச்சத்திற்கு வருகிறது. நேட்டோ நாடுகள் லிபியாவின் மீது குண்டுமழை பொழிய ஆரம்பிக்கின்றன.

அமரிக்க, பிரஞ்சு, பிரித்தானிய விமானங்கள் லிபிய மக்கள் குடியிருப்புகள் மீதும் தாம் சந்தேகிக்கும் இடங்கள் மீதும் விமானக் குண்டுகளைப் பொழிகின்றன.

மேற்கின் அத்தனை ஊடகங்களும் இவற்றைத் திட்டமிட்டு மறைக்கின்றன.

மக்கள் குடியிருப்புக்களை எவ்வாறு நேட்ட்டோ படைகள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின. இதனை நேரடியகப் பார்வையிட்ட அமரிக்க காங்கிரஸ் பெண் ஒருவரின் சாட்சி:

இவை அனைத்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. பல்தேசிய நிறுவனங்களின் ஊடகங்கள் வேறு செய்திகளைக் கூறின.

நேட்டோ படைகளின் மக்கள் குடியிருப்புக்கள் மீதான தாக்குதல்களை செய்தியாக்க மறுக்கும் வியாபார ஊடகவியலாளன்:

அடுத பகுதி விரைவில் ….

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com