Contact us at: sooddram@gmail.com

 

சுரண்டலற்ற உன்னத சமூகத்தை நோக்கி...

(ஏ.கே.பத்மநாபன்)

94 ஆண்டுகளுக்கு முன்பு, 1917 நவம்பர் 7ம் தேதி (அப்போதைய காலண் டரின்படி அக்டோபர் 17ம் தேதி) நடை பெற்ற மகத்தான அக்டோபர் புரட்சி, உல கம் முழுவதிலும் உழைக்கும் வர்க்க மக் களுக்கு ஒரு புதிய பாதையைத் திறந்தது. இதனால் ஏற்பட்ட மாற்றங்கள் உண்மை யிலேயே இந்த உலகினை உலுக்கியது. நமது இயக்கத்தின் நிறுவனத் தலை வரான தோழர் பி.டி.ரணதிவே கூறினார்: “நவம்பர் 7ம் தேதி என்பது, முதலாளித் துவ அமைப்பு முறைக்கு எதிராக தொழி லாளி வர்க்கம் பெற்ற முதல் வெற்றியை குறிக்கிறது; தொழிலாளி வர்க்கத்தையும், துன்ப துயரத்தில் உழன்று கொண்டிருக் கிற மக்களையும் சுரண்டுகிற கொடுமை யை உடைத்தெறிய உறுதி பூணுகிறது”.

1917ம் ஆண்டு இந்த நாளில், தொழி லாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப் பட்ட ஒரு புதிய அரசு பிறந்தது. மனித னை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவுகட்டுவோம் எனப் பிரகடனம் செய்தது. ரஷ்யாவில் சுரண்டல் அமைப்பு முறை தூக்கி எறியப்பட்ட இந்த மகத் தான நிகழ்வு, காரல்மார்க்சாலும், பிரடெ ரிக் ஏங்கெல்சாலும் நமக்கு போதிக்கப் பட்ட விஞ்ஞானப்பூர்வ சோசலிசத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது. ரஷ்யா வின் தொழிலாளி வர்க்கம், தோழர் லெனி னால் தலைமை தாங்கப்பட்ட போல்ஷ் விக் கட்சியின் தலைமையின் கீழ் முத லாளித்துவ சக்திகள் மற்றும் நிலப்பிரபுக் களின் ஆட்சியை தகர்த்தெறிந்தது.

இந்த மகத்தான புரட்சி வெற்றி பெற்ற தைத் தொடர்ந்து, அடுத்த சில ஆண்டுக ளில் ரஷ்யாவில் புதிய அமைப்பு முறை வளர்ந்தது. சோவியத் சோசலிஸ்ட் குடி யரசுகளின் ஒன்றியம் (யூஎஸ்எஸ்ஆர்) மலர்ந்தது. புதிதாகப் பிறந்த இந்த மிகப் பெரும் சவாலை முளையிலேயே நசுக்கி எறிய உலகின் அனைத்து வல்லமையும் படைத்த பிற்போக்கு சக்திகள் முயற்சி மேற்கொண்டபோதிலும், அந்த மாபெரும் தேசத்தின் மக்கள் ஆற்றிய அளப்பரிய தியாகங்களும், அந்நாட்டை வழிநடத்திச் சென்ற மேன்மை பொருந்திய தத்துவத் தின் பிடிமானமும், சோவியத் சோசலிஸ்ட் குடியரசு ஒன்றியத்தை பொருளாதார ரீதி யாகவும், சமூக ரீதியாகவும், ராணுவ ரீதி யாகவும் ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுக்க அம்மக்களுக்கு உதவின.

இந்த புதிய அமைப்பு முறையின் உறுதி, எத்தகைய சவாலையும் எதிர் கொள்வதற்கு தயாராக இருக்கிறது என் பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

1945ம் ஆண்டில் பாசிச சக்திகளை முற்றிலும் வீழ்த்திய அந்த மகத்தான தேச பக்தப் போரில் சோவியத் ஒன்றியத்தின் வெற்றியை உலகம் கண்டது. பாசிசத் தின் மீதான இந்த வெற்றி மிகப்பெரும் போரில் பெறப்பட்டது என்பதை நினைவு கூரும்போதே, சோவியத் மக்களின் ஈடுஇணையற்ற தியாகமும் இதற்குள் அடங்கியிருக்கிறது என்பதை மறக்கக் கூடாது. அவர்கள் அமைதிக்கொடியை மேலே மேலே உயர்த்திப்பிடித்தனர். அங்கு நடந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தது. இந்த வளர்ச்சி, அந்நாட்டின் உழைக் கும் மக்களது வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத் தியது. தொழிலாளி வர்க்கத்தின் சாதனை களும் சோசலிசத்தை நோக்கிய முன் னேற்றமும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள உழைக்கும் வர்க்க மக்களை சோச லிசம் என்ற அடிப்படைத் தத்துவத்தின் பால் ஈர்த்தது.

இதே தருணத்தில் இதர நாடுகளில் உழைக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக புதிய முழக்கங் கள் எழுப்பப்பட்டன. சுரண்டலின் முழு வடிவங்களாக இருக்கும் ஏகபோக முத லாளிகள், உழைக்கும் மக்களுக்கு நலத் திட்டங்களையும் சமூக பாதுகாப்பு திட் டங்களையும் உறுதி செய்வதாக முன்வந் தனர். இவை அனைத்தும் உலகின் தொழிலாளிவர்க்க வரலாற்றில் மறுக்க முடியாத நிகழ்வுகளாக பதிவாகி இருக் கின்றன.

ஆனால்,1990களின் துவக்கத்தில் சோவியத் ஒன்றியம் பின்னடைவைச் சந்தித்தது; கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிதறின. இது, உலகம் முழுவதிலும் உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்கு தலின் ஒரு புதிய கட்டமாக மாறியது. தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தத்து வார்த்த அடித்தளத்தை தகர்ப்பதற்கான திட்டமிட்ட முயற்சிகள் துவங்கின. பல்வேறு சக்திகளால் மேற்கொள்ளப் பட்டுவரும் இந்த முயற்சிகள், சோசலி சத்தின் காலம் முடிந்துவிட்டது என்று கூறின. முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லை என்றும், ஏகாதிபத்தியமும், அதன் உதவியோடு நவீன தாராளமயமும் அமலாக்கப்படுவதைத் தவிர வேறுவழி யில்லை என்றும் கோஷங்கள் எதிரொ லிக்கின்றன. ஆனால், இன்றைக்கு நடை முறையில் நாம் காணும் அனைத்து முத லாளித்துவ நெருக்கடிகளும், அவற்றின் அனுபவங்களும் முதலாளித்துவ அமைப்பு முறையின் மேன்மை தொடர்பாக கட்ட விழ்த்துவிடப்பட்ட மாயைகளையெல் லாம் தகர்த்துக்கொண்டிருக்கின்றன.

சோசலிசத் தத்துவத்தின் மீதான தாக்குதல், நாம் பார்த்துக்கொண்டிருப் பதைப்போல, நமது வர்க்க எதிரிகளிட மிருந்து மட்டும் வரவில்லை. நமது சொந் தத் தோழர்களை குழப்பிவிடுவதன் மூல மும் அந்த தாக்குதல் நடக்கிறது. இந்த குழப்பமும் அதன் விளைவாக ஏற்பட்ட பிளவுகளும் உலகம் முழுவதிலும் தொழிற்சங்க இயக்கத்தை பாதித்தது. இது,உழைக்கும் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், வர்க்க சேர்மானத்தை உறுதிப்படுத்தவும் 1945ல் நிறுவப்பட்ட உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் மீது மிகப்பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பல்வேறு நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவின் வளர்ச்சியடைந்த முதலா ளித்துவ நாடுகளில் இருந்த வர்க்க அடிப் படையிலான அரசியல் கட்சிகளிடையே கூட இந்த காலகட்டத்தில் ஒற்றுமை யின்மையும் பிளவுவாதமும் தலைதூக்கியது.

இத்தகைய பின்னணியில், வர்க்கப் போராட்டம் என்ற பதாகையை உயர்த்திப் பிடிப்பது உழைக்கும் மக்களிடையே வர்க்க உணர்வு மிக்க தொழிலாளர்களின் கடமையாகும். நமது மாபெரும் ஆசான் கள் கூறியதைப்போல, வர்க்கப் போராட் டம் என்ற பாதையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.

இன்றைய நிலையில் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் ஆழமாகிக்கொண்டிருக்கிறது; மேலும் மேலும் அதிகமான மக்கள் பிரிவினர் அதன் கடுமையான தாக்குதலுக்கு உள் ளாகிவருகின்றனர். ஏதென்ஸ் மாநகரில் கூடிய உலக தொழிற்சங்க சம்மேளனத் தின் 16வது மாநாடு விடுத்த அழைப்பின் பேரில் 2011 அக்டோபர் 3ம் தேதி நடை பெற்ற சர்வதேச போராட்ட தினத்தன்று, இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் லட்சோபலட்சம் தொழிலாளர்கள் பங் கேற்ற பிரச்சாரமும் போராட்டமும் நடை பெற்றன. உலகத் தொழிற்சங்க சம்மேளன மும் அதனோடு இணைந்த தொழிற்சங் கங்களும் மட்டும் இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கவில்லை. போராட்டங் களை நடத்தக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்த அமைப்புகள் கூட இன் றைக்கு உலகின் பல பகுதிகளில் வேலை நிறுத்தங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்தப்போராட்டங்கள் பல நாடுகளில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக் கள் அணிதிரள்கிற விதத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. வரலாறு காணாத அளவிற்கு தங்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் தீவிரமடைவதால் போராட் டக்களங்களும் வரலாறு காணாத அள விற்கு மக்களை ஈர்த்துள்ளன. முன்பு நடத்திய போராட்டங்களாலும் அதனைத் தொடர்ந்து மக்கள் நல அரசுகள் என்ற நடைமுறையாலும் வென்றெடுக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் பலன்கள் எல்லாம் பறிக்கப்பட்டு வருகின்றன. இன் றைய நிலைமையில் ஐரோப்பிய அர சாங்கங்களின் நிதிக்கொள்கைகளைப் பற்றி விவரிக்கிற பேராசிரியர் பிரபாத் பட் நாயக் சொல்கிறார்: “கடுமையான நெருக் கடிகளுக்குப் பின்னால் முதலாளித்துவ உலகில் பின்பற்றப்பட்டுவரும் நிதிக் கொள்கைகள் உழைக்கும் வர்க்க மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகவும் கொடூரமானதாக உள்ளன. இந்த அரசுகள் வலியுறுத்தும் நிதிப்பற்றாக்குறை என்பது நிதி மூலதனத்திற்கு உதவி எனும் பொருள் கொண்டதே; மக்கள் நலத்திட் டங்களுக்கான செலவினங்களை வெட் டுவதே அதன் அடிப்படையாக இருக் கிறது. வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், மக்கள் நல அரசு என்ற கோட்பாடு தியாகம் செய்யப்படுகிறது; தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது; நிதி மூல தனத்தின் நலனை பாதுகாப்பதற்காக இந்த விலை கொடுக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்கு மரியாதை கொடுக்கிற பொருளாதாரக் கொள்கை இனி கற்பனை செய்யமுடியா தது என்ற அளவிற்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இத்தகைய கொடிய சுரண்டலுக்கு எதிரான ஐரோப் பிய தொழிலாளி வர்க்கங்களின் போராட் டம், இந்த ஒட்டுமொத்த தாக்குதலுக் கான அடிப்படை ஏற்பாட்டை எதிர்ப்ப தாக இல்லை; அல்லது ஒரு ஒட்டு மொத்த மாற்றை முன்வைப்பதற்கான மன்றமாக இல்லை; இப்போதைக்கு தங்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவது, இருக்கிற கட்டமைப்பிற் குள்ளேயே மக்கள் நல அரசு என்ற கோட்பாட்டின் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துவது என்ற அளவில் மட்டுமே நிற்கிறது.”

எனவே இந்த வர்க்க அரசியலின் கண்ணோட்டத்தின் அடிப்படையில், நமது வர்க்கத்தின் மீதான தாக்குதல் வெறுமனே பொருளாதார ரீதியான தாக்குதல் மட்டுமல்ல, மாறாக, அடிப்ப டையில் அரசியல் ரீதியான தாக்குதல் என்பதை கவனிக்கவேண்டும்.

உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் உண்மை யிலேயே உற்சாகம் தருவதாக உள்ளன. குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் ஏகா திபத்திய எதிர்ப்பு சக்திகளும், ஜனநாயக சக்திகளும் முன்னேற்றம் அடைந்து வருவது மிகவும் முக்கியத்துவம் பெறு கிறது. தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளையும், ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும் சின்னஞ்சிறு கியூபா எதிர்த்து நின்று உறுதியாகப் போராடு வதும், தங்களது இயற்கை வளத்தினை பயன்படுத்தி சொந்த அனுபவங்களோடு விடாப்பிடியுடன் முன்னேறுவதும் கிட் டத்தட்ட அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளது மக்களையும் ஈர்த்துள்ளது; தங்கள் நாட்டு தேர்தல்களில் இடதுசாரி சக்திகளிடம் செல்லும் அளவிற்கு மக் களை ஆகர்ஷித்துள்ளது. ஏகாதிபத்தியத் தின் சதிகளும், கலகங்களும், சீர்குலைவு முயற்சிகளும் தொடரும்போதிலும் இடது சாரிகளின் வெற்றிகள் தொடர்கின்றன.

கடந்த ஓராண்டு காலத்தில் மத்திய கிழக்குப் பிரதேசமும் வட ஆப்பிரிக்க நாடுகளும் மிகப்பெரும் மக்கள் கிளர்ச்சி களைக் கண்டுள்ளன. எகிப்திலும் துனீசி யாவிலும் எதேச்சதிகார ஆட்சியாளர் களை மகத்தான மக்கள் எழுச்சி தூக்கி எறிந்துள்ளது. இது உழைக்கும் மக்களின் போராட்டம். வேலை கேட்டு, உணவு கேட்டு, ஜனநாயகம் கேட்டு நடந்த இந் தப் போராட்டங்கள் ஒரு வலுவான அடித் தளத்தை இந்த நாடுகளில் எல்லாம் ஏற்படுத்தியுள்ளன. இதர பல நாடுகளி லும், ஜனநாயகத்திற்காகவும் தங்களது உரிமைகளுக்காகவும் உழைக்கும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பகுதிகள் முழுவதிலும் அமெ ரிக்க ஏகாதிபத்தியமும், இதர ஏகாதிபத் திய சக்திகளும் சீர்குலைவு நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளன; இப்பகுதிகளில் உள்ள நாடுகளில் தங்களது பிடியை வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்புகளை பயன்படுத்த முயற்சிக்கின்றன என்பதை யும் கவனிக்கவேண்டும்.

முன்பு இருந்த காலகட்டத்தைப் போல இன்றைக்கு வலுவான சோவியத் ஒன்றியம் இல்லாததால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை தற்போது உணர்கிறோம். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதன் ஆதரவு சக்திகளுக்கு எதிராகவும் இன் றைக்கு நடந்துவருகிற போராட்டங்களை வலுப்படுத்துவதே உலகின் எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு முற்போக்கு இயக் கமும் மேற்கொள்ள வேண்டிய முக்கியக் கடமையாக இருக்கிறது.

எனவே இன்றைக்கு தொழிற்சங்க இயக்கத்தின் இலக்கு என்பது, நமது போராட்டத்தை மேலும் மேலும் வலுப் படுத்துவதே ஆகும். அந்தப் போராட்டத் தை வர்க்க சார்புடையதாக, அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாக நடத்துவது அவசி யம். நவம்பர் 7ம் தேதி, நமக்கு இந்த அர சியல் இலக்குகளை நினைவூட்டுகிறது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐ டியு) இலக்குகளும் நோக்கங்களும் இவ் வாறு கூறுகிறது: “ தொழிலாளி வர்க்கத் தின் மீதான சுரண்டலை சோசலிசத் தால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியும் என சிஐடியு உறுதிபட நம்புகிறது. அனைத்துவிதமான உற்பத்தி சக்திக ளையும், பகிர்மானத்தையும், பரிவர்த் தனைகளையும் பொதுவுடைமை ஆக்கி ஒரு சோசலிச அரசை நிர்மாணிப்பதன் மூலமே சுரண்டலுக்கு முடிவுகட்ட முடி யும். சோசலிசத்தின் தத்துவார்த்த மாண் புகளை உறுதியுடன் பற்றி, இந்தச் சமூகத் தை அனைத்துவிதமான சுரண்டலில் இருந்தும் முழுவிடுதலை பெறச்செய்வ தில் சிஐடியு உறுதிபடப் பணியாற்றும்”

சுரண்டலற்ற சமூகத்தை படைப்பது என்ற அந்த உன்னதமான இலக்கினை புரட்சிகரமான போராட்டங்களின் மூலம் அடைய, நமது பணியை மேலும் மேலும் முன்னெடுத்துச்செல்வோம்!.

கட்டுரையாளர், அகில இந்தியத்

தலைவர் (சிஐடியு)

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com