Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை

தீர்வின் திசை வேண்டி

(மதுக்கூர் இராமலிங்கம்)

'மதுக்கூர் இராமலிங்கம் இன்னும் தெரிய வேண்டும் தெளியவேண்டும் என்பதை அவரின் கட்டுரை எடுத்தியம்பி நிற்கின்றது.'

மாலத்தீவில் சார்க் நாடுகள் கூட் டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. மாலத்தீவு புறப்படும் அவசரத்தில் கூட பிரதமர் மன்மோகன் சிங் ஒரு விஷயத்தை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டுத்தான் புறப்பட்டார். அதாவது, உயர்த்தப்பட்ட பெட் ரோல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இட மில்லை. அதுமட்டுமல்ல, இனியும் உயர்த்தப் போவதில்லை என்ற உத்தரவாதத் தையும் வழங்க முடியாது என்பதுதான் அது.

அந்த அளவுக்கு செயல்திறனும் பொறுப் புணர்ச்சியும் மிக்கவர்தான் பிரதமர் மன் மோகன் சிங். ஆனால் இவ ரை சிலர் செயல் திறன் அற்றவர் என்று பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பதுதான் வேதனை.

சார்க் கூட்டமைப்பில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி ராஜபக்சேவும் மாலத்தீவு மாநாட்டில் பங்கேற்கிறார். இலங்கை தமிழர்கள் பிரச் சனை குறித்து, இந்தியா அளிக்கும் உதவி தமிழர்களுக்கு சரியான முறையில் சென்று சேருகிறதா என்பது குறித்து ராஜபக்சேவுடன் பேசுவேன் என்று ஒரு வார்த்தை கூட மன்மோகன் சிங் கூறவில்லை.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காமன் வெல்த் நாடுகளின் மாநாடு நடை பெற்றது. அந்த மாநாட்டிற்கும் ராஜபக்சே வருகை தந்தார். அவரை எதிர்த்து ஆஸ் திரேலியாவில் வாழும் இலங்கை தமிழர் கள் மட்டுமின்றி அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களும் கூட ஆர்ப்பாட் டம் நடத்தினர். அங்கே ராஜ பக்சேவை சந்தித்த போது, இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அவருடன் விவாதிக்கவில்லை.

இலங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சே, பத்தி ரிகைகளில் வருவதைப் பற்றி தமக்கு கவலை இல்லை என்றும் பல பத்திரிகைகள் குப்பை என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

எதைத்தான் மதித்தார் மகிந்த ராஜபக் சே? இலங்கையில் அப்பாவி தமிழ் மக்க ளுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை அமைத்த குழு வெளியிட்ட அறிக் கையை கூட குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி யில்லாமல் இருந்து வருகிறார் அவர். சித்ர வதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 47வது அமர்வு ஜெனிவாவில் 2011 நவம்பர் 8 அன்று நடைபெற்றது. இலங்கையிலும் வடக்குப்பகுதியி லும் ஏழு ரகசிய சித்ரவதை முகாம்கள் இயங்கி வருவதாகவும், அதில் 700க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் இளை ஞர்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வவு னியாவில் ஐந்து முகாம்களும், முல்லைத் தீவில் இரண்டு முகாம்களும் செயல்படு வதாக ஐ.நா. குழுவின் உதவித் தலைவர் பெரிஸ்கேர் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகில் அதிக அளவில் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், இவ்வாறு சட்டவிரோத முகாம்களில் அடைத்து வைக் கப்பட்டுள்ளோர் பெயர்ப் பட்டியலை ஐ.நா. சபை பலமுறை கோரியபோதும் இலங்கை இன்னமும் தரவில்லை என்று அவர் கூறி யுள்ளார்.

இலங்கையின் சார்பில் இந்த விசாரணை யில் பங்கேற்ற முன்னாள் சட்ட அமைச்சர் மொகான்பிரீஸ், ஐ.நா. சபையின் சித்ரவதைக்கு எதிரான உடன்பாட்டின் சில அம்சங்களில் இலங்கை கையெழுத்திடவில்லை என்று வாதிட்டுள்ளார். அதாவது சித்ரவதைக்கு எதிரான உடன்பாட்டில் நாங்கள் கையெழுத் திடவில்லை. எனவே அப்பாவி தமிழ் மக் களை சித்ரவதை செய்வதை ஐ.நா. தடுக்க முடியாது, விசாரிக்கக் கூட முடியாது என்பது அவரது வாதம். ஆனால் சித்ரவதைகளை சகிக்க முடியாது என்பதை 110 சதவீதம் ஒத்துக் கொள்வதாக அவர் வாய்ப்பந்தல் போட் டுள்ளார்.

இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. சபை அமைத்த குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விவரங் கள் கண்ணீரை வரவழைக்கிறது என்றால், லண்டனைச் சேர்ந்த சேனல் 4 வெளியிட்ட காணொளி காட்சிகள் இதயத்தில் உள்ள இரத் தத்தை முற்றாக வற்றிப்போகச் செய்கிறது.

இறுதிக்கட்டப்போரின்போது இலங்கை ராணுவத்தின் குண்டுமழையில் அப்பாவி தமிழ் மக்கள் 40 ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது ஐ.நா. குழு அளித்துள்ள விவரம். போர் நிறுத்தப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங் களை மட்டுமல்ல, செஞ்சிலுவைச் சங்க கட்டிடங்கள், மருத்துவமனைகள் எதையும் இலங்கை ராணுவம் விட்டு வைக்கவில்லை. நரவேட்டையாடியது என்பது ஐ.நா. குழு வெளியிட்டுள்ள அறிக்கை. இவர்களது கொலைவெறிக்கு பெண்கள், குழந்தைகள் கூட தப்பவில்லை. மிகக்கடுமையான முறை யில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பது ஐ.நா. குழுவின் குற்றச்சாட்டு. ஆனால் இதுகுறித்து முறையான எந்தவொரு விசாரணைக்கும் ராஜபக்சே அரசு தயாராக இல்லை.

மாறாக, சர்வதேச சதுரங்கக் களத்தில் சாதுர்யமாக காய் நகர்த்தி தன்னுடைய குற்றங் களை முற்றாக மறைத்துவிட, நியாயப்படுத்த ராஜபக்சே அரசு முயலுகிறது. இலங்கையில் காணாமல் போகிறவர் பட்டியலில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல. உண்மை யை பேசும் சிங்கள மொழி பத்திரிகையாளர் களும் உள்ளனர் என்பதுதான் கொடுமையி லும் கொடுமை. இத்தகைய கடத்தலும் காணா மல் போவதும் இன்னமும் தொடர்கதையாக நீடிக்கிறது.

சேனல் 4 காட்டிய காட்சிகள் உலக மனித சமூகத்தையே அதிர்ச்சியடைய வைத் தது. ஒரு காகம் இறந்தால் கூட சக காகங்கள் கூடி கூச்சலிட்டு தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும். ஆனால் குவியல் குவிய லாக குவித்து வைக்கப்பட்ட மனிதச் சதை களை காகங்கள் கொத்தித் தின்கிற காட்சியும் இதுவரை அவல இலக்கியங்களில் கூட சொல்லப்படாத அளவுக்கு பிணந்தின்னி கழுகுகள் வட்டமிட்டு, சதைகளை தூக்கிச் செல்லும் காட்சிகளும் மனித நாகரிகத் தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

இன்னமும் கூட முள்வேலி முகாம்க ளிலிருந்து தமிழ் மக்களுக்கு முற்றாக விடு தலை கிடைக்கவில்லை. கொஞ்சம் கொஞ் சமாக அவர்கள் மீள் குடியமர்த்தப்படுகிறார்கள் என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சாகடிக்கப் படுகிறார்கள் என்பதை பல்வேறு ஊடகங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன.

அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளவர்கள் மனச்சிதைவுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிக ளுக்கு எதிரான ராணுவத்தினரின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்கதையாக நீடிக்கிறது.

12வயது சிறுமி ஒருத்தியை ராணுவத் தினர் “விசாரணைக்காக” தூக்கிச்செல்ல முயன்றபோது அவளுக்கு அம்மை நோய் கண்டிருப்பதாகக் கூறி தற்காலிகமாக தனது மகளை தப்பவைத்தேன் என்று கூறியுள்ளார் ஒரு தந்தை.

குண்டுவீச்சில் தான் பலியானால் தனது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுமாறு கூறியுள்ளார் ஒரு பெண். தனது சடலத்தின் மீது ராணுவத்தினரின் கைகள் ஊர்வதை தான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் அந்தப்பெண்.

பிணங்களை லாரியில் ஏற்றிய போது தானும் பிணம்போலக்கிடந்து முகாமிலிருந்து தப்பித்ததாக கூறியுள்ளார் ஒரு இளைஞர். இவை ஒன்றிரண்டு நிகழ்ச்சிதான். மொத்த பயங்கரத்தையும் தொகுத்துப் பார்த்தால், இலங்கைத் தீவே கண்ணீரால் மூழ்கிவிடும்.

இலங்கை தமிழ் மக்களுக்கு அந்நாட்டு மத்திய அரசு மீது அதிருப்தி ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னமும் நீடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை.

மொழிவழி தேசிய இன மக்களான தமிழ் மக்களின் சம உரிமை மறுக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று தமிழ் தள்ளி வைக்கப்பட்டது. நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை என அவர்களது பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டது. மக்களாட்சியில் கூட அவர் களுக்கு உரிய உரிமை கிடைக்கக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்ற ஜனநாயக முறை அகற்றப்பட்டு, அதிபர் ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது.

யாழ்ப்பாணம் நூலக எரிப்பு உட்பட அவர்களது பண்பாட்டு அடையாளங்களும் அழிக்கப்பட்டன. இதனால்தான் கனன்று கொண்டுதான் இலங்கை தமிழர் பிரச்சனை 1983ல் பெரும் தீயாக உருவெடுத்தது.

போரில் வெற்றிபெற்றுவிட்டதாக கெக் கெலி கொட்டும் ராஜபக்சே அரசு, தனது நாட்டின் சொந்த குடிமக்களான தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தைக் கூட வழங்க முன்வரவில்லை.

முகாம்களில் அடைத்து வைக்கப்பட் டுள்ள எஞ்சிய தமிழ் மக்கள் தங்களது முந்தைய சொந்த வாழ்விடங்களில் மீள்குடி அமர்த்தப்படவில்லை. மாறாக அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் ராணுவத்தினர் மற்றும் பெரும்பான்மை இன மக்களை குடியமர்த்து வதாக தகவல்கள் வருகின்றன. போருக்குப் பிறகும் கூட தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கல்வி நிலையங்கள் முழுமையாக செயல் படவில்லை. மாறாக ராணுவ முகாம்கள் செயல்படுகின்றன.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தமிழ்மக்கள் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றது. ராஜபக்சே அரசை தமிழ் மக்கள் நம்ப வில்லை என்பதையே இந்த முடிவு உணர்த் தியது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை வர், ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் பொருளாதாரம், பண்பாட்டு செயல்பாடுகள் பேணப்பட வேண்டும் என்பதை இந்த முடிவு உணர்த் தியதாக குறிப்பிட்டார்.

தாங்கள் கோருவது மாநில சுயாட்சியே என்றும் இந்த அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் இந்த கூட்டமைப் பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிரந்தர அமைதி நிலவ வேண்டுமானால் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது அவ சியமாகும். இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து, கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி வழங்க வேண்டும்; தமிழ்மொழியும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்; தமிழ் மக்க ளுக்கு நாடாளுமன்றம் உட்பட அனைத்து நிலைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்; அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள் ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ் மக்க ளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் அரசியல் சாசனத்தின் அனைத்துப் பிரிவுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். அவர்களது பண்பாட்டு அடையா ளம் பாதுகாக்கப்பட வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவர்களது வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். நில உரிமை உள்ளிட்ட அவர்க ளது அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப் பட வேண்டும். சட்டவிரோத காவல் முகாம் களில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளாகும்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட, சுயேட்சையான விசாரணை நடத் தப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கையுடனான பொருளாதார, வர்த்தக உறவுகள் குறித்து இந்தியா கவலைப்படு கிறது. ஆனால் இந்தியாவின் சார்பில் வழங் கப்படும் உதவி தமிழ் மக்களுக்கு உரிய முறையில் சென்று சேருகிறதா என்பது குறித்து கவலைகொள்வதில்லை. இந்தக் குற்றச்சாட்டை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயே முன்i வத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதில் சார்க் அமைப் பின் அங்கம் என்ற முறையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ்நாட்டில் உணர்வுப்பூர்வ மான பிரச்சனையாக நீடிக்கிறது, அது நியா யமானது என்ற அடிப்படையிலும் இந்தியா உண்மையான அக்கறையுடன் தலையிட வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் தொடர்ச்சியாக, முன்பின் முரணின்றி போராடி வந்துள்ளது. உணர்ச்சி ஊட்டக் கூடிய முழக்கங்களை மட்டும் முன் வைக் காமல் காரியசாத்தியமான தீர்வை முன் வைத்து போராடி வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக் கத்தை நடத்தியது. விருதுநகரில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் முதல் தீர்மான மாக இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசி யல் தீர்வு காண வேண்டும்; அவர்களது கண் ணீர் துடைக்கப்பட வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளது.

இதயத்தில் ரத்தம் வடியச்செய்யும் இந்த பிரச்சனையில் மத்திய அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆர்ப்பாட்டத் திற்கும் விருதுநகர் மாநாடு அறை கூவல் விடுத்தது.

மத்திய அரசின் பிரதிநிதியாக விளங்கும் ஆளுநர் மாளிகை முன்பு நவம்பர் 12ந்தேதி தமுஎகச சார்பில் ஆர்ப்பாட்டமும், கையெழுத் துப் படிவங்களை வழங்கும் இயக்கமும் நடை பெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

எழுத்தாளர்கள், கலைஞர்கள் சமூகத்தின் மனசாட்சி. தமிழகத்தின் மனசாட்சியாக விளங்கும் தமுஎகச கேட்கிறது, மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

கட்டுரையாளர்,

மாநில துணைத்தலைவர், தமுஎகச

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com