Contact us at: sooddram@gmail.com

 

புலிப்பினாமி ஊடகத்தினரின் பொய்யான செய்திகளை கொஞ்சம் பாரீர்!!

(கி.பாஸ்கரன்)

ஒவ்வொரு நாட்டு  மனிதனுக்கும்  ஓர் வரைவிலக்கணம் உண்டு.

முதலில்,  வரைவிலக்கணம்  என்றால் என்னவொன்று பார்ப்போம். வரைதல் + இலக்கணம் =  வரைவிலக்கணம். உதாரணமாக  ஒரு   மிருகத்தை    நாம் வரைகின்றபோது   நாலு கால்கள் அத்தோடு  ஒரு வாலுடன் வரைந்தால் தான்  அது  மிருகம். இதுதான் மிருகத்துக்குரிய வரைவிலக்கணம். இரண்டு காலுடன் ஒரு மிருகத்தை வரைந்தால் அது மிருகம் அல்ல.  ஒரு பறைவையை  நாம் வரைகின்றபோது  அதற்கு    இரண்டு கால்கள் இருக்கவேண்டும், அதோடு  இரண்டு  இரட்டைகள் இருக்கவேண்டும்.  அதுதான்  பறைவைக்குரிய இலக்கணம்.  அதேபோன்று தான்  ஊர்வன, மரங்கள், பறவைகள், ஆண்,பெண், கலை, இலக்கியம்,… என எல்லாவற்றுக்கு ஓர்  வரைவிலக்கணம் இருக்கு.

தமிழ் மொழிக்கு இலக்கணம் இருப்பது போன்று  தமிழனுக்கும் ஓர் வரைவிலக்கணம் உண்டு.

ஒரு இந்திய பெண்ணை  குறிப்பிட்டு காட்டவேண்டும் என்றால் அவளை சேலையுடனும் நெற்றியில்  பொட்டுடனும் தான்  வரைந்து  காட்டவேண்டும். ஒரு ஜரோப்பிய பெண்ணை குறிபிட்டு காட்டவேண்டும்  என்றால்  நவநாகரீக   உடுப்பு போட்டவளாக   வரைந்து  காட்டினால்    நாம்  அவளை   ஜரோப்பிய பெண்ணாக   நாம்  அடையாளம் காணலாம்.   இப்படியாக எல்லாவற்றுக்கும் வரைவிலக்கணம்  உண்டு.  அதேபோன்று  ஒவ்வொரு  உயிரினங்களுக்கும்   வரைவிலக்கணங்களும்   வரலாறுகளும் உண்டு.

அதேபோன்று  ஒவ்வொரு இன, மத, மொழி, நிறத்தால்  வேறுபட்ட  மனிதனுக்கும்  வெவ்வேறு   வரைவிலக்கணங்கள்   உண்டு.     ஒரு படித்தவனை, அல்லது  பணக்காரனை   பார்தாலே  தெரிந்துவிடும்  அவன்  யார்   என்று.

அதேபோல்  ஒரு பரதேசியை  நாம்  இலகுவாக  இனம்  கண்டுகொள்ளலாம்.    அதேபோன்று    ஒவ்வொரு   நாட்டு  மனிதர்களுக்கும்    ஓர் வரைவிலக்கணம் உண்டு. பொதுவாக  வெள்ளைகாரர்களை  பாருங்கள் அவர்கள்  நிறத்தால்   மட்டும்வெள்ளைக்காரர்கள்  அல்ல.    மாறாக மனசாலும் , அறிவாலும் வெள்ளைகாரர்கள் தான்.    உதாரணமாக  சுவிஸ்நாட்டு  மக்களை  பார்த்தோமேயானால் பொய்யே சொல்ல மாட்டார்கள்.  இன, மத, மொழி பேதம் பார்க்க மாட்டார்கள்.    அவர்களைபோல்  தான்  அவர்களின் நாடும்  அழகான நாடு.  குறிப்பாக சொல்லப்போனால் வஞ்சகம் அறியாத மக்கள்.   அதேபோன்று  குறிப்பாக  வசதியான  மேற்குலக  நாட்டு மக்கள் பொதுவாக இன, மத, மொழி,  பேதம்  பாராதவர்களாகவும், பொய்பேசாதவர்களாகவும்     நல்லவர்களாகவும்   இருக்கிறார்கள்.

நான் ஏன்  இவைகளை  கூறவருகிறேன்  என்றால் காரணம் உண்டு.

தமிழர்களை   எடுத்துப்பாருங்கள்: அவர்கள் எவ்காவது  றோட்டால்  நடந்து  வரும்போதே  நமக்கு தெரிந்துவிடும்  இது தமிழ்கள்தான்  வருகிறாகள் என்பதை…

தமிழனின் வரைவிலக்கணம் என்னவென்று தெரியுமா? அவன் ஒரு பொய்யன்.  அவனுடைய  உடல்,  உயிர்,  மூச்சு, பேச்சு.   குணம்,  நடை, உடை   எல்லாமே  பொய்தான்.   அடிப்படையாகவே   பொய்யால்   கட்டப்பட்டவன்  தமிழன்.  அவனுடைய   வரலாற்றை   புரட்டி பார்த்தால் அதில்   முக்கால்  வாசி   பொய்யாக தான்   இருக்கும்.  பிழைப்பதற்காய்   வெளிநாடுகளில்  அவன் சொல்லாத பொய்யே இல்லை.  ஒரு பொய்  சொன்னால்  உடம்பில்  ஒரு  ‘பொக்களம்’ (கட்டி) வரும்   என்று  ஒரு   நியதியிருந்தால்   வெளிநாடுகளில்  வாழும்   தமிழர்களின்   அனைவரின்   உடம்பு  முழுவதும்  பொக்களமாக தான்  இருக்கும்.

வெள்ளைகாரர்களுக்கு ‘பொய்யெது’   ‘மெய்யேது’ என்று   வஞ்சகம்    பிரித்து    பார்க்க  தெரியாத  மனசு   இருந்தபடியால் தான்,  தமிழன்  சொன்ன  அவ்வளவு  பொய்களையும்   உண்மையென  நம்பி  தமிழர்களை  அகதியாக ஏற்றுக்கொண்டு  தங்கள்  நாடுகளில் வாழவைத்துகொண்டிருக்கிறான்.     அதாவது   பொய்யை  மூலதனமாக்கி தான் தமிழன் பிழைப்பு  நடத்திக்கொண்டிருக்கிறான்.

கனடாவில் வாழும்   புலம்பெயர்  தமிழர்களில்  முக்கால்வாசிப்பேர் ஜரோப்பிய நாடுகளிலிருந்து போனவர்கள் தான்.   ஆனால்  அங்குபோய்  அகதியந்தஸ்து கோரியபோது   தாங்கள்   சிறிலங்காவிலிருந்து   நேரவருகிறோம் என்று சொல்லியிருப்பார்கள்.  அதைவிட,   சிறிலங்கா   இராணுவத்தால்  துன்பப்பட்டு ,    இலங்கையில்  வாழ  முடியாததால்   தாங்கள்  கனடாவுக்கு  வந்ததாக   இல்லாதபொல்லாத பொய்   சொல்லி   அகதியந்தஸ்த்து   கோரியிருப்பான்.

அப்படியானால்  ஜரோப்பாவில் சிறிலங்கா  இராணுவம் இருந்ததா?  தமிழர்கள் பொதுவாக பொய்யர்கள்.   அது  இரத்தத்துடன்  கலந்த விடயம்.

அதைவிட  நான் சொல்ல வந்தவிடயம்  மிகவும் முக்கியமானத . வெளிநாடுகளில்  உள்ள   புலிப்பினாமி    ஊடகங்களை   நடத்தும்  தமிழர்கள்  பொய்யிலயே  பெரிய  பொய்யனுகள்.  அவங்கள்  தாங்கள்  நடத்தும்  ஊடகங்கங்கள்  மூலம்  கடந்த   மூன்று  சாகாப்த  காலமாக  நஞ்சை  (பொய், இனவாதம் ) கக்கி கக்கி  ‘புலன்  மங்கிய  புலம்பெயர் தமிழர்களை’ மூளை  சலவை  செய்துவைத்திருக்கிறார்கள்.    மாடுகளுக்கு  புண்ணாக்கு  போட்டு   வளர்த்த   மாதிரி   நஞ்சை  ஊட்டி   ‘புலன்  மங்கிய  புலம்பெயர் தமிழர்களை’ வளர்த்து   வைத்திருக்கிறார்கள்.

அதுகளும் அந்த புல்லை  (நஞ்சு)  தின்று  வளர்ந்து  உடல் முழுவதும்  நஞ்சு  ஏறிவிட்டது.    அதுகள்  பொய்யனுகள்  போடுகிற (பிரசுரிக்கின்ற)  பொய்யை தான் தின்னுங்கள்.   உண்மையை  தின்னவெளிகிட்டால்  அவர்களுக்கு அலர்சியாகிவிடும்.

சரி விடயத்துக்கு வருகிறேன். புலிப்பினாமி  ஊடகம்  ஒன்றில்   ஒரு செய்தியொன்றை பார்த்தேன்.   அந்த  செய்தியை  பார்த்தால்   எதோ உண்மைபோல்தான்   முதலில்  தெரியும்.  ஆனால்  கொஞ்சம் சற்று உன்னித்து  கவனித்துப்பார்த்தால்  பொய்யனுகள் பொய்யாய்  போட்ட  நாடகங்கள் வெட்டவெளிச்சமாகும்.  சரி  நீங்களே கொஞ்சம் பாருங்கள்  பின்  இதில்   உள்ள பொய்யை  நீங்களே  புரிந்துகொள்வீர்கள்….

கீளே உள்ள  ஊடக அறிகையையும்  வாசியுங்கள்

முதலில் யாழ்பாணத்தில் இது எந்த இடம்?

மேலே   நீங்கள்  பார்த்த காணொளியில்   கிழவியின்  முகம்  உங்களுக்கு   தெரிகிறதா?  கிழவியின்   தலைவியில்  போட்டிருக்கும்   மஞ்சல் துண்டை    நீங்கள்   பார்த்த  காணொளியில்  எங்கேயாவது ஒரு மூலையிலாவது   பார்கக்கூடியதாக  இருக்கிறதா?   உண்மையாகவே   ஒரு வயதுபோன  பிள்ளைகளால்  கைவிடப்பட்ட   கிழவி  இப்படிபட்ட  வாழ்கை  வாழ்கின்றார்   என்றால் கிழவியின்  முகத்தை  மறைத்து   படம்  எடுப்பதன்  காரணம் என்ன?  அவாவின்  முகத்தை காட்டினால்  இராணுவம்   அவாவை  கைதுசெய்துவிடுவார்களா?

ஒன்றுக்கும்   வழியில்லாத,   பிள்ளைகளினால் கைவிடப்பட்ட  முதுமையான தாய் ஒருவர் யாழ்.தனியார் பஸ் நிலயத்திற்கு அருகில்   வசிகிறார் என்றால், படம்பிடித்து  காட்டும்   இவங்களுக்கு  என்ன அக்கறை? ஒன்றுக்கும்  வசதியில்லா  கிழவி போத்தில் தண்ணியா வாங்கி குடிப்பா?   கிழவி ஒன்றுமே கதைக்கவில்லை,….   அப்படியிருக்க    இவங்களுக்கு எப்படி தெரியும்   இவர்  பிள்ளைகளினால்  கைவிடப்பட்டவர் என்பது.

சரி அப்படிதான்  பிள்ளைகளால்  கைவிடபட்டவர்   என்றால்  கமறா கொண்டுபோய்  படமெடுப்பவர்கள்   அவாவுக்கு  ஒரு  குடிசையும்  போட்டுக் கொடுத்து   கொஞ்ச  சாசும்  கொடுத்து  உதவி செய்திருக்கலாமே?

‘ஆடு நனையுதென்று  ஓய் அழுத கதை உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டால்   தெரிந்தவர்கள்  யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதெல்லாம்  ஒன்றும்  தெரியாத  வெளிநாட்டுக்காரர்களுக்கு  படம்  காட்டுகிறவேலை தானே ஒழிய,  இதில் துளிகூட உண்மை  இல்லை.  இதெல்லாம்  இந்த  நஞ்சை கக்கிற   புலிப்பினாமி   ஊடகங்கள்   காட்ட முற்படுகின்ற சினிமா வேலை.

2009   ஆண்டு  மே 18 முதல்,    யாழ்பாணத்தையோ   அல்லது  யாழ்பாண   மக்களையோ  பற்றியோ   துளிகூட   அக்கறையில்லாமல்   இருந்த  புலிபினாமி   ஊடகங்கள், வன்னியை   தமிழீழம்   என்றும்  வன்னிகுள்  ஒளிந்திருந்த  பிரபாகரனை    ‘சூரியதேவன்’ என்றும்     படங்காட்டி   பிழைப்பு   நடத்திக்கொண்டிருந்தவங்கள்,    தமிழீழ   போராட்டம்  என்ற  பெயரில்  தறுதலைப்போராட்டம் நடத்தி  வன்னியையும் அழித்து   வன்னி   மக்களையும்   அழித்து   சின்னாபின்னமாக்கி,   வன்னி  பிரதேசத்துக்கு  விடுதலைவாங்கி  கொடுத்துவிட்டார்கள்.   

முள்ளுக்கம்பி  வேலிக்குள்  மூன்று லச்சம்  மக்கள்  முடங்கி கிடந்தபொழுது   மூக்கால   அழது   வடித்தவர்கள . அவர்களை  வெளியால விட்டாச்சு,  அதற்கு பிறகு  வன்னி  மக்களை பற்றியோ  வன்னி   மக்களின் வாழ்கை தரத்தை பற்றியோ  எதுவும்  பெரிசாக  எழுதுவதில்லை.     சரணடைந்த பொடியளையும்  புனர்வாழ்வு  அளித்து வெளிய விட்டாச்சு . அவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள்  வெளியில  விடசொல்லுங்கோ  என கொஞ்ச நாள்  புலிப்பினாமி  ஊடகங்கள்  அழுது வடித்தார்கள்.   இப்ப  மூக்கால கண்ணீர் விட்டு  வடிப்பதற்கு   விசேசம்  ஒன்றுமில்லை.

நஞ்சுகளின்    பார்வை  இப்போ  நல்லாயிருக்கிற   யாழ்பாண  மக்களின்  மீது  பாயவெளிகிட்டுது.   யாழ்பாண   மக்களின்  கலாச்சாரம்    சீரழிஞ்சு   போகுதாம்,  இளவயதுக்  கருத்தரிப்பு  நடக்குதாம், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்,  சட்டவிரோதமான குழந்தைப் பேறு,  குழந்தைகளைப் பெற்று விட்டு வீதியில் வீசுவது என அனைத்துக் கீழ்த்தரமான செயற்பாடுகளும் யாழ்ப்பாணத்தில்  அரங்கேற்றப்பட்டு   வருகின்றதாம்  என்று    புலியூடகங்கள்   இப்போ  அழுதுவடிக்கிறார்கள்.

அவங்களுக்கு  யாழ்பாணத்து  மக்கள்  மேல  சரியான  பாசம் வந்துவிட்டுது.   (முதலில்   இந்த  ஊடகங்கள்  நடத்துபவர்களின்  மனைவி, மகள்மார் பேஸ்புக்கில்  யாழ்பாணத்து   இளம்பொடியளுடன்     அரட்டையடித்துக்கொண்டிருக்கிறார்கள்   என்பது பற்றி   பார்க்கிறார்களே தெரியவில்லை.)

புலிகள்  யாழ்பாணத்து   சனத்துக்கு  உணவு   கிடைக்கவிடாமல்    தடுக்கும்போது  இவங்கள்  அழுதுவடிக்கவில்லை ஏனாம்?

முதலில்   கலாச்சாரம்  என்றால்  என்னவென்று விசுகோத்துக் கூட்டங்களுக்கு தெரியுமா தெரியவில்லை? காலம் +சாரம்   = கலாச்சாரம். காலத்தோடு  சார்ந்தது.  காலம்  சுழன்றுகொண்டிருக்கிறது.  (ஒவ்வொரு நிமிடமும்  தொழில் நுட்பம் மாறிக்கொண்டேயிருக்கிறது ) அதோடு   சேர்ந்து  மனிதனும் மாறிக்கொள்கிறான்.   அதேமாதிரிதான்   யாழ்பாணத்து   மக்களும்   மாறிவிட்டார்கள். நீங்கள்  30வருடத்துக்கு முன்பு யாழ்பாணத்தைவிட்டு   வந்திருப்பீர்கள்   அந்த  காலத்தை  நினைவில்  வைத்துக்கொண்டு   யாழ்பாணத்து  மக்களை எடைபோடாதீர்கள்.

உங்களுக்கு தெரியுமா? கடாபி  தப்பியோடிய  வாகன அணியை   அமெரிக்காவிலிருந்து  நேரடியாகவே  ஆளில்லா விமானம்  மூலம்  (11,000  கிலோ  மீற்றர்கள்) அங்கால  இருந்து  வந்து தாக்கி  புதியபோர் முறையை தாங்கள் நடத்தியதாக  சந்தோசப்படுகின்றான்.  இதுதான்  தொழில்  நுட்பத்தின்  வளர்ச்சி.  ஆனால் எனது சகலன்  சுவிஸிலிருந்து 12,000 கிலோ  மீற்றர்  பயணம்  செய்து சிறிலங்காவுக்கு    போய்வந்து எனக்கு ஒரு மிளகாய் போத்தில் பரிசாக  கொண்டு  வந்து தந்திருக்கிறார்.   எப்படி தமிழனின்  தொழில் நுட்ப வளர்ச்சி.  இவர்களை வைத்துக்கொண்டு நீங்க நாடு பிடிக்கப்போகிறீர்கள்?

வெளிநாட்டுக்கு  வந்த  தமிழர்கள்  தான்  இன்னமும்  மாறாமல்  பழைய மூளையுடன்  வாழ்கிறார்கள்.  சுவிஸில்  இருந்து  அண்மையில்  ஒருத்தி  யாழ்பாணத்துக்கு  (குப்பிளான்) போய்  35கிலோ மரக்கறி   (முருங்கைகாய், வெண்டிக்காய், பயத்தங்காய், புடலங்காய்…) வாங்கி கட்டிக்கொண்டு வந்தவாவாம். அவா  சுவிஸில்  25வருடமாக இருக்கிறா.  இந்தமாதிரியான  அறிவுகளை வைத்துக்கொண்டு உங்கட கலாச்சாரத்தை  கட்டிக்காப்பாற்றுங்கோ.   வெளிநாடுகளில்  சாமத்திய படுகின்ற பெட்டையலுக்கு கோழி முட்டை கொண்டுபோய் கொடுக்கிறார்கள். இதா உங்கட கலாச்சாரம்.

தயவு செய்து யாழ்பாணத்து சனத்தை  வாழவிடுங்கோ.

‘பொய் சொல்லுவார்க்கு பொரியும் கிடையாது’ என்பார்கள்.  அதுதான்  முற்றுமுழுதான உண்மை.

தியாகங்கள் பல செய்தும்,  எவ்வளவோ ஆயுதமிருந்தும்,  எவ்வளவோ பண  வசதியிருந்தும், ஆள் பலமிருந்தும், மேற்குல நாடுகளின்  பணம்படைத்தவர்களின் ஆதரவிருந்தும்   புலிகளுக்கு  ஒன்றுமே  கிடைக்கவில்லை என்றால் காரணம்  என்பதை  ஆராய்வதைவிட்டு  விட்டு …..

உலகத்தமிழனையே  ஏமாற்றி  பிழைத்தது,  பொய்,  புரளி,   நம்பிகை துரோகம், சதிவேலை,..  இவைகள் தான்   புலிகள்   தோற்றதற்கு  காரணம்.   மற்றவர்கள் மீது  ஏன் குற்றம் சுமத்துகிறார்கள் என்று புரியவில்லை?

இப்ப  ‘புலி  மேலேயே   இப்ப  புலி பாய வெளிகிட்டுது’

நாட்டில  புலிகள்  முழுமையாக  அழிந்துபோய்விட்டார்கள்.   அங்கு  இப்போ  ஆட்சி  அதிகாரத்தை  யார்   கைப்பற்றுவது  என்பதையிட்டு  சிங்கங்களும்  சிங்கங்களுக்கும் தான் சண்டை நடந்துகொண்டிருக்கு.  இடையில   எந்தவித    அதிகாரமும்   கிடையாத   தமிழர்கள்   தங்களுக்குள்ளேயே   தாங்களே   சும்மா  ‘நானா’   ‘நீ ’   என்று   அறிக்கை  போர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  பிள்ளையான் ஒரு அறிக்கை விட்டால்   அரியேந்திரன்  ஓர்  அறிக்கை  வெளியிடுகிறார்.

இப்ப  வெளிநாட்டில  சும்மா  பூச்சாண்டி காட்டிற  புலிகளுக்கு   இடையே  தான்   பயங்கரபோர்  நடக்குது. அவாகளுக்கு   இடையே  சில ஊடகங்கள்  (பிரான்சில் இயக்கும் வானொலி)  இரண்டு  பக்கமும்  எண்ணையை  ஊற்றிவிட்ட  வேடிக்கை காட்டுகிறார்கள்.

மற்றவர்களுக்கு  ‘துரோகி’ பட்டம்கொடுத்த  புலிகள்  இப்ப  தங்களுக்கு   தாங்களே  ஒருவருக்கு  ஒருவர்   துரோகி  பட்டம்  கொடுத்துக்கொள்கிறார்கள். வினையை  விதைத்தவர்களே   ‘வினையை’ அறுவடைசெய்துகொண்டு, தங்களுக்குள் நடகிற சண்டைக்கும்   இப்பவும்  சிங்களவன் தான் காரணமாம்  என்கிறார்கள்.

இவர்களின்  சண்டையை  சிங்களவர்கள்  யன்னலால்  வழியாக  பார்த்துச் சிரிக்கிறார்கள்  என்பது  இந்த  கோமாளிகளுக்கு   தெரியுமோ தெரியாது?

கி.பாஸ்கரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com