Contact us at: sooddram@gmail.com

 

தோழர் சிவதாசன் அவர்களின் மறைவிற்கு கனடியத் தோழர்களின் அஞ்சலி!

நீண்டகால இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரும், தொழிற்சங்கத் தலைவருமான தோழர் எஸ்.சிவதாசன் அவர்கள், 2011 நவம்பர் 13ம் திகதி தமது 77வது வயதில் காலமான செய்தி கேட்டு, கனடாவில் வாழ்கின்ற இலங்கையைத் தாயகமாகக் கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளும் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளோம். தோழர் சிவதாசன் தனது மாணவப் பருவத்திலேயே இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் அந்த இயக்கத்தின் கொள்கைகளில் நிலை தழும்பாது நின்று வந்துள்ளார். தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்து, அது ஆயுதப்போராட்டமாகப் பரிணமித்த காலகட்டத்தில், அவர் சில முற்போக்குத் தமிழ் தேசியவாத இயக்கங்களுடன் தன்னை இணைத்து வேலை செய்தாராயினும், அங்கும் தமது இடதுசாரிக் கொள்கைகளின் அடிப்படையிலேயே செயற்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க இயக்கத்தில் அவர் ஆற்றிய பங்குபணி மகத்தானதாகும். திருகோணமலையில் அவர் தொழிற்சங்கப் பிரதிநிதியாக இருந்த காலத்தில், அங்கு துறைமுகத் தொழிலாளர்களை அமைப்புரீதியாகத் திரட்டுவதிலும், அவர்களது கோரிக்கைகளை வென்றெடுப்பதிலும் முக்கியமான பங்களிப்பை வழங்கினார். அக்காலகட்டத்தில், அங்கு கட்சி மற்றும் சமூகப் பணிகளையும் முன்னெடுத்தார். குறிப்பாக, அங்குள்ள அரச ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த ஒருவராகத் திகழ்ந்தார்.

அதன்பின்னர், அவர் 1960களின் நடுக்கூறில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தொழிற்சங்கப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பின்னர், வட பிராந்திய இலங்கைப் போக்குவரத்துச்சபை, காங்கேசன் சீமெந்துத் தொழிற்சாலை, வல்லை நெசவாலை, ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலை போன்ற இடங்களில் செயற்பட்டுக் கொண்டிருந்த கட்சியின் தொழிற்சங்க அமைப்புகளை மேலும் பலப்படுத்தியதுடன், அங்கு நடைபெற்ற வெற்றிகரமான தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு சிறப்பான முறையில் தலைமைத்துவமும் வழங்கினார். தொழிலாளர்களின் பிரச்சினைகளின் பொருட்டு தொழில் நீதிமன்றங்களிலும் சிறப்பாக வாதிட்டார்.

அத்துடன் நின்றுவிடாது, அக்காலகட்டத்தில் கட்சியால் வட பகுதியெங்கும் பரந்த அளவிலும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்ட தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார். விவசாயப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். இந்தக் காலகட்டங்களில் சில சந்தர்ப்பங்களில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களின் தாக்குதலுக்கும் உள்ளானார். சில சந்தர்ப்பங்களில் தலைமறைவாகவும் வாழ்ந்தார்.

தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் ஆரம்பமான பின்னர், தன்னை முற்போக்குத் தேசிய இயக்கங்களுடன் இணைத்துக் கொண்டார். அதன் காரணமாக வலதுசாரி புலிகள் இயக்கத்தால் கைதுசெய்யப்பட்டு பல மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டார். அதன் பின்னரும் அவர் பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்த காலத்தில், அவர் பயணித்த வாகனத்தில் புலிகள் வைத்த குண்டு வெடித்ததால், பலத்து காயங்களுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர்தப்பிப் பிழைத்தார்.

தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் என மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த தோழர் சிவதாசன், கட்சிப் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் என்பனவற்றில் சிறந்த சமகால மொழிபெயர்ப்பாளராச் செயலாற்றியுள்ளார். சில வருடங்கள் இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது, அங்கும் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றினார்.

இனப்பிரச்சினை கூர்மையடைந்த காலத்தில், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றிய தோழர் சிவதாசன், வட கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய தோழர் கதிரவேலு அவர்களின் புதல்வர் டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.டி.பி கட்சியை உருவாக்கிய போது தன்னை அதனுடன் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் சார்பாக இரு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் தலைவராகவும் கடமையாற்றி பனை வளம் பெருக உழைத்தார்.

ஆழமான தோழமை உணர்வு காரணமாக, தோழர் கதிரவேலு அவர்களின் சகோதரி முறையானவரையே தனது வாழ்க்கைத் துணைவியாகவும் வரித்துக் கொண்டார். சில வருடங்களுக்கு முன்னர் மனைவியையும் இழந்துவிட்ட தோழர் சிவதாசன், பிள்ளைகளும் இல்லாதபடியால், இறுதிக் காலத்தைத் தனது அரசியல் தோழர்களின் துணையுடனேயே யாழ்ப்பாணத்தில  கழித்தார்.

தோழர் சிவதாசன் தான் மரணிக்கும்வரை, தனது அரசியல் வாழ்வின் ஆரம்பத்தில் வரித்துக்கொண்ட இடதுசாரிமுற்போக்குக் கொள்கையையே இறுதிவரை உறுதியுடன் கடைப்பிடித்தார். எப்பொழுதும் கட்சித் தோழர்களுடனும், சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தார். அவரது மறைவு அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும், உழகை;கும் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.

தோழர் சிவதாசன் அவர்களின் மறைவால் வாடும் அவரது உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் கனடா வாழ் இலங்கைத் தோழர்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், தோழர் சிவதாசனுக்கு எமது இறுதி அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கனடா வாழ் தோழர்களின் சார்பாக,

சி.தர்மராசன்

வட பிராந்திய முன்னாள் தலைவர்,

இலங்கை மோட்டார் தொழிலாளர் (இ.போ.ச) சங்கம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com