Contact us at: sooddram@gmail.com

 

சித்த வைத்தியத்தில் சிறப்புறும் வலிகாமம் வடக்கு பிரதேசம
(
எஸ். ரி. குமரன் )

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்போர் ஆன்றோர்கள். தமிழர்க்கென மரபு வழி வைத்தியம் ஆனது சிறப்புற்று வளர்ந்துவந்துள்ளது. இவ் வைத்தியக் கலையானது சித்தர்களால் வளர்க்கப்பட்டு வந்தமையினால் சித்த வைத்தியம் என்று பெயர் வழங்கி வரலாயிற்று. இத்தகு சித்த வைத்தியத் துறையில் சிறப்புற்ற விளங்கிய சீர்மையாளனாக சித்த வைத்திய கலாநிதி கோ.சின்னத்தம்பி விளங்குகிறார்.

சித்த வைத்தியம் சிறப்புற்று எழில்பெற்ற இடமாக வலிவடக்கு விளங்குகின்றது. வலி வடக்கில் சிறப்பு மிகும் சிறிய பிரதேசமாக பளை என்னும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இத்தகு சிறப்பு மிகுந்த புகழ்பூத்த மண்ணில் 1908ஆம் ஆண்டு பங்குனி மாதம் 30 ஆம் திகதி கோவிந்தர் மாதி தம்பதிகளுக்கு இளைய மகனாக சித்த வைத்தியர் சின்னத்தம்பி வந்துதித்தார். 32 வயதிலேயே தாய் தந்தையரை இழந்தார். ஆயினும் சிறிய சகோதரியினதும் அரவணைப்பில் வளர்ந்தார். இவருடன் 2 சகோதரர்களும் 3 சகோதரிகளும் பிறந்தார்கள்.

இவருடைய குடும்பம் பாரம்பரியமாகவே வைத்தியத்தொழில் செய்துவந்தது. இவரது தந்தையார் வைத்தியர். இவரது தாயார் சகோதரிகள் போன்றோர் எமது பாரம்பரிய முறைப்படி மருத்துவிச்சிகளாக விளங்கி வைத்தியத்துறைக்கு பங்காற்றினார்கள்.

வைத்தியர் ஆரம்பக் கல்வியை சைவத்தமிழ் வித்தியாசாலையில் கற்றார். கல்வியின் சிறப்பால் அநுராதபுரத்தில் இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் உயர் பதவி வகித்தார். ஆனாலும் இவரது மனம் வைத்தியத் தொழில் மீது கொண்ட பற்றும் மண் மீது கொண்ட பற்றும் காரணமாக அத்தொழிலை விட்டு தனது ஊர் திரும்பி சித்தவைத்தியர் பரீட்சையில் சித்தியெய்தி பதிவு செய்யப்பட்ட சித்த வைத்தியராக தன் பணியினை தொடர்ந்தார்.

வைத்தியத்துறையில் சிறுபிள்ளை வைத்தியம், வாத ரோக வைத்தியம், கட்டு வைத்தியம், கர்ப்பிணி வைத்தியம், விஷகடி வைத்தியம் போன்ற சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்.

எண்ணெய் காய்ச்சுவது மருந்துக் குளிகைகள், சூரணங்கள் தயாரிப்பது போன்றவற்றில் சிறந்து விளங்கியவர், சிறு குழந்தைப் பிள்ளைகளுக்கும், வாத ரோகிகட்கும் தலைமுடி உதிர்வோருக்கும், புண் குணமாவதற்கும், மனநோய் நீங்குவதற்கும் எண்ணெய் வழங்குவதில் புகழ்பெற்ற வைத்தியராக விளங்கினார்.

சைவ சமய உத்தமராக வாழ்ந்த தரும சிந்தனையாளர். பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் வந்து நோய் தீர்க்கப் பெறுவார்கள். அன்னையவள் பராசக்தி மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக ஆலயம் அமைத்து பரிபாலித்ததோடு அதன் பிரதான பூசகராக விளங்கினார். அன்னை மீது கொண்ட பற்றினால் அன்னையின் பெயரிலேயே தனது வைத்திய மனையை நடாத்திப் புகழ் பெற்றவர்.

சித்த வைத்தியத்துடன் மாந்திரீகத் தையும், சோதிடக் கலையிலும், மனையடி சாஸ்திரத்திலும் சிறப்புற்று விளங்கியவர். இதற்கு அன்னையின் பேரருள் காரணம் என்பார். பராசக்தியின் அருளால் வேளை (நூற்கட்டுதல்) போடுதல் பணியின் மூலமும் நோய்தீர்க்கும் வைத்தியராக செயற்பட்டார்.

வசதிவாய்ப்பற்ற வறியவர்கள் சித்த வைத்தியரிடமே நாடி வருவார்கள். பரோபகாரியாகப் பெயர்போன வைத்தியராக விளங்கிய சின்னத்தம்பி அவர்கள் ஏழைகள் பலருக்கு இல வசமாகவே தன் பணியை செய்தவர். தன்னை நாடிவரும் நோயாளிகளிடம் மருத்துவக் கூலியாக பணத்தை விலைபேசி வேண்டுவதில்லை. அவர்கள் கொடுக்கும் தொகையை ஏற்கும் பண்பாளனாக விளங்கினார்.

சித்த வைத்தியத்தின் உயிர் நாடி நாடி சாஸ்திரமாகும். இச் சாஸ்திரத்தினை மதிநுட்பமாகத் துல்லியமாக உணரும் திறமை ஆற்றல் படைத்தவராவர். இதனை அவரது வாழ்வில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றினூடாக விபரிக்கலாம்.

இவரது வாடிக்கைக் கிராமத்தில் இருந்து ஒரு கர்ப்பிணித்தாய் இணுவில் வைத்தியசாலைக்கு மனப்பேற்றிற்கு சென்றிருந்த சம்பவம் அது. புகழ் வாய்ந்த இந்திய மகப்பேற்று வைத்தியர் கெங்கம்மா அங்கு பணியாற்றினார். குறைமாத பிரசவ மாகையால் குழந்தை அழிந்த நிலையில் வைத்தியம் பார்த்து விட்டு திரும்பினர். தொடர் வயிற்றுவலி வந்தபோது இவரிடம் வந்து காண்பித்தார்கள். நாடி சாஸ்திர நுட்பத்தால் நஞ்சுக் கொடி இருப்பதாக கூறினார். சம்பந்தப்பட்டதாயோ நஞ்சுக் கொடி எல்லாம் வைத்தியசாலையில் அகற்றிவிட்டார்கள் எனக் கூறி வைத்தியருடைய கூற்றை நம்ப மறுத்தார்.

மீண்டும் இணுவில் வைத்தியசாலை க்கு சென்று சித்த வைத்தியருடைய கூற்றை கெங்கம்மாவக்கு கூறினார். அப்போது மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு நஞ்சுக் கொடி அகற்றப்பட்டது. குறைப்பிரசவமாகையால் குழந்தைகள் இருவர் என்பது புலனாகவில்லை. கெங்கம்மா ஆச்சரியப்பட்டார். சித்த வைத்தியரை பார்க்க ஆசைப்பட்டார். அழைத்துப் பாராட்டினார். நாடி சாஸ்திரத்தின் நுட்பத்தை உணர்ந்து உவகை கொண்டார் என அறியமுடிகின்றது.

வைத்தியரை அகத்தியர் பண்டிதன் என்கிறார். புராதன ஏட்டுச் சுவடிகளில் தீராத நோய் தீர்க்கும் ஓளடதபாகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. இக்கூற்றுக்கு இலக்கணமாக தமிழ்ப் புலமையில் சித்த வைத்தியர் அவர்கள் சிறப்புற்று விளங்கினார்.

யுத்தம் காரணமாக வலி வடக்கை விட்டு இடம்பெயர்ந்த வேளையில் மல்லாகம், உடுவில், கொடிகாமம் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த போதும் அங்கெல்லாம் தனது பணிமூலம் சிறந்துவிளங்கியவர். தனது 9ஆவது வயதிலும் தளர்வின்றி வைத்தியப் பணியாற்றிய பேராளனாக விளங்கினார்.

வைத்தியரைத் தொடர்ந்து இவரது 5ஆவது மகன் தங்கரட்ணம் வைத்தியப் பணியினை பரம்பரையாக திறம்பட நடாத்தி வருகின்றார். இன்றைய நவீன விஞ்ஞான உலகின் சவாலிலும் வளர்ச்சிப் போக்கிலும் சித்த வைத்திய பாரம்பரியத்தை வளர்க்க வேண்டும் சந்ததியை இடையறாது தொடர வேண்டும் என்ற நோக்கில் இவரது பேர்த்தி த. உமாலங்கா சித்த ஆயுள் வேத மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியை கற்றுவருகின்றார்.

சித்த வைத்தியத்துறையில் மண் வாசனையோடு பரம்பரையாக செல்வாக்கு செலுத்திய சித்தவைத்தியர் கோ. சின்னத்தம்பியின் சேவையை பாராட்டி வலி வடக்கு பிரதேச செயலகமானது வைத்தியகலாசூரி என்ற சிறப்பு கெளரவ பட்டத்தை பரிந்துரை செய்தமை வலி வடக்கு மண்ணுக்கும் மக்களுக்கும் சித்த வைத்தியத்துறைக்கும் அவர் ஆற்றிய உயர் சேவையின் வெளிப்பாடேயாகும்.

சித்தவைத்தியர் 2000.11.04 இல் இறையடி சேர்ந்தார். இவருடைய பணிகள் சிறப்புகள் இவரது 11ஆவது ஆண்டு நினைவுதினத்தில் நினைவு கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். இத்தகு சான்றோனின் அயராத பணியினால் எமது வலி வடக்கு மண்ணானது பெருமை பெறுகின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com