Contact us at: sooddram@gmail.com

 

பெண்கள் மீதான ஊடக வன்முறை

(அனிச்சா)

பெண்கள் ஓரளவுக்காவது முன்னேறியிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் இந்த இருபத்தியோறாம் நூற்றாண்டிலும் பெண்கள் மீது ஊடகங்கள் செலுத்தி வரும் வன்முறை குறைந்திருப்பதாகத் தெரியவில்லை. பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களை சுரண்டுவதன் மூலமே லாபத்தையும் நுகர்வோரின் ஆதரவையும் பெற முடியும் என்று நம்புகின்றன. ஊடகத்தின் பெரும்பாலான நடவடிக்கைகளும் இந்த அவல நம்பிக்கை பொருந்தும். பொது புத்தியிலிருந்து விலகி பெண்களை மதிக்கக் கூடிய ஊடகங்கள் இருந்தாலும் அவை சிறுபான்மை எண்ணிக்கையிலேயே இருப்பதால் எந்தப் பெரிய பாதிப்பையும் அவை ஏற்படுத்துவதில்லை. பெண்களின் மீது மிகப்பெரிய வன்முறையை மிக நீண்டகாலமாக செலுத்திவரும் மிக முக்கியமான ஊடகம் திரைப்படங்கள். தமிழில் வெளியாகும் பல திரைப்படங்களை எடுப்பவர்கள் தங்களை தாங்களே கலாசாரக் காவலர்களாக நியமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று நேற்றல்ல. பல வருடங்களாக பெண்களுக்கு எப்படி நடந்து கொள்வது என்ற பாடம் எடுக்கும் வாத்தியார்களாக இயக்குநர்களும் பெரும்பாலான படங்களின் ஹீரோக்களும் தங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை கவர்ந்திருக்கும் எம். ஜி. ஆர். இப்படியொரு ஆசிரியர். இந்தப் போக்கின் முன்னோடி என்று கூட அவரைச் சொல்லலாம்.

அவருடைய பெரும்பாலான படங்களில் கதாநாயகிகள் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்கள். கதாநாயகன் எம். ஜி. ஆர். அவர்களைத்திருத்தி, நல்வழிப்படுத்திபெண்ணாக மாற்றுவார். இதில் வேடிக்கை என்னவென்றால் திமிர் பிடத்தவளாக இருக்கும் பெண் பெரும்பாலும் படித்த பெண்ணாக, தான் நினைத்ததைச் செய்பவளாக, சொந்தக்காலில் நிற்க விரும்புபவளாக இருப்பாள்.

சுருக்கமாகச் சொன்னால் தன்னம்பிக்கை கொண்ட பெண் ஆனால் அப்படியொரு பெண்ணை தமிழ்ச் சமூகம் குறைந்தபட்சம் தமிழ் சினிமா என்றுமே ஏற்றுக்கொள்ளாது. அந்த அடிப்படையில்தான் எம். ஜி. ஆர். போன்ற ஹீரோக்கள் தங்களை பெண்களின் பாதுகாவலர்களாகவும், அவர்களைத் திருத்துபவர்களாகவும் முன்னிறுத்துக் கொள்கிறார்கள்.

எம். ஜி. ஆரின் இதே பெண்களை மட்டம் தட்டும் பாணி அடியொற்றி மிகப் பெரிய வெற்றி பெற்ற இன்னொரு ஹீரோ ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் பெண்களுக்கான அறிவுரைகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.

இப்போது ரஜினியின் வழி நடப்பவர் விஜய். என்னதான் போலீசா இருந்தாலும் முதல்ல நீ ஒரு பொம்பள. அத ஞாபகத்தில் வச்சிக்க என்று ஒரு படத்தில் விஜய் ஒரு பெண் காவல்துறை அதிகாரியைப் பார்த்து சொல்வார். முற்போக்குவாதி என்று நாம் நம்பும் கமலஹாசனே கூட வேட்டையாடு விளையாட்டில் கதாநாயகி ஜோதிகாவை தனது சொத்து என்று உரிமை கொண்டாடுகிறார்.

பெண்களை போகத்துக்கான பண்டமாகப் பார்ப்பதன் நீட்சிதான் அவர்களை சொத்து என்று கொண்டாடுவதும். தான் போகிக்கும் ஒருபொருள்பாதுகாக்கப்பட வேண்டியது என்பதாலேயே அதை சொத்து என்று சொல்லி உரிமை கொண்டாடத் துடிக்கும் ஆதிக்க மனதின் வெளிப்பாடுதான் இப்படிப்பட்ட வசனங்கள்.

பெண்கள் தங்கள் எல்லைகளை என்னதான் விரித்துக் கொண்டு போனாலும் அடுப்பூதுவதுதான் அவர்களது அடிப்படையான அடையாளம் என்று பல ஹீரோக்கள் இன்னமும் திடமாக நம்புகிறார்களோ என்று தோன்றுகிறது. அறிவுரைகள் சொல்லி வழி நடத்தப்பட வேண்டியவர்களாகவும் உரிமை செலுத்தப்பட வேண்டியவர்களாகவும்தான் பெண்களை தமிழ் சினிமா சித்திரித்திருக்கிறது.

பெண்களுக்கான சுயம் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கான ஒரு வெளி என்பதே தமிழ் சினிமாவில் இல்லை என்பது அருவருப்பூட்டும் விஷயம். பெண்களை அவமானப்படுத்தி அதன் மூலம் பல நூற்றாண்டு காலமாக புரையோடிப் போன ஆணாதிக்க உணர்வு மண்டிக் கிடக்கும் ரசிகனின் மனதில் இடம் பெறுவதுதான் இந்த இயக்குனர்களின் வியாபார நோக்கமாக இருக்க முடியும்.

இந்த நோக்கம் வாழையடி வாழையாக தமிழ் சினிமாவில் தலைமுறைகள் தாண்டி தழைத்து வருவது பார்க்கும் போது பயமாக இருக்கிறது. ஒரு பெண் தொடர்ந்து அவளது வாழ்வில் வரும் ஆண்களை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும் என்கிற அபத்தமான கோட்பாட்டிலிருந்து இன்னும் இந்த சமூகம் முழுமையாக மீளவில்லையோ என்கிற அச்சத்தையும் சந்தேகத்தையும்தான் இப்படிப்பட்ட கதாநாயகர்களின் வெற்றி தோற்றுவித்தது.

பெரிய திரைக்கு நேர்மாறான பிம்பங்களை, பெண்களைப் பற்றி ஏற்படுத்தி வருவது சின்னத்திரை. ஆனால் அவையும் கூட பெண்களின் உண்மையான பிம்பம் இல்லை. சமீபகாலங்களில் சின்னத்திரையில் வரும் தொடர் நாடகங்கள் பெற்றிருக்கும் வெற்றி பிரமிப்பை ஏற்படுத்துபவை.

இந்த நாடகங்களின் பெரும்பாலான முக்கியமான கதாபாத்திரங்கள் பெண்களின் கதாபாத்திரங்கள் அதில் வரும். பெண்களாவது நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்கிறார்களா என்றால் இல்லை நாயகிகளாக வரும் பெண்கள் கிட்டத்தட்ட சூப்பர்மேன் ரேஞ்சுக்கு சித்திரிக்கப்படுகிறார்கள்.

அவர்களால் செய்ய முடியாத விஷயம் என்று ஒன்று இருக்கவே இருக்காது. அவர்களது இன்னொரு முக்கிய குணாதிசயம், பொறமையும் தியாக மனப்பான்மையும்தான். தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்காக எதையும் பொறுப்பார்கள். என்ன தியாகமும் செய்வார்கள். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் சீusலீuசீ spலீணீiசீலீn அந்த அளவுக்கு அபூர்வமானவர்கள். கதாநாயகிகள்தான்.

இப்படித்தான் என்றால் விலலிகளாக வரும் பெண்களும் இயல்பு மீறி சித்திரிக்கப்படுகிறார்கள். எந்த குடும்பப் பெண் இன்னொரு குடும்பத்தை சிதைக்கும் அளவுக்கு, அதற்காக கொலை செய்யும் அளவுக்கு போகிறார் என்பது இயக்குநர்களுக்கே வெளிச்சம். ஆனால் தொடர் நாடகங்களில் வரும் பெரும்பாலான வில்லிகள் கைகளில் ஆசிட் பாட்டில்களுடனும் கத்திகளுடனும் அலையும் குடும்பப் பெண்கள்.

ஒப்பீட்டளவில் பெரிய திரையைவிடப் பெண்கள் சின்னத்திரையில்தான் மோசமான சித்திரிப்புக்குள்ளாகின்றார்கள். விளம்பரங்களிலும் பெண்கள் மிக மோசமாகவே காட்டப்படுகிறார்கள். சோபா செட்டிலிருந்து ஷேவிங் லோஷன் வரை ஆண்கள் உபயோகிக்கும் அத்தனை பொருட்களையும் அரைகுறை ஆடைகள் அணிந்த பெண்கள்தான் விற்க வேண்டியிருக்கிறது.

இல்லாவிட்டால், பாவம் ஆண்கள் வாங்கமாட்டார்கள். பெண்ணின் உடல், அவளது பிரக்ஞை இல்லாமலேயே இது போன்று திரைப்பட இயக்குனர்களாலும் விளம்பர இயக்குநர்களாலும் தொடர்ந்து சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது.

காட்சி ஊடகத்தில் மட்டுமல்ல, பத்திரிகைத் துறையிலும் பெண்களின் மீதான வன்முறை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பத்திரிகைகள் செலுத்தும் வன்முறை சொல்லி மாளாதது. பாலியல் வல்லுறவுக்குப் பெண்கள் ஆளாக்கப்படும் செய்தி கிடைத்துவிட்டால் பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்தான். பாதிக்கப்பட்ட பெண்கள் மீது இந்த பத்திரிகைகளுக்கு கடுகளவு கருணை கூட கிடையாது.

அவர்களது புகைப்படங்களை வெளியிடுவது தொடங்கி பல வன்முறைகளை அந்தப் பெண்ணிண் மீது செலுத்துகின்றன பத்திரிகைகள். கற்பழிப்பு என்ற வார்த்தையை பிரயோகிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியாக்கும் முயற்சியில்தான் பத்திரிகைகள் தொடர்ந்து ஈடுபடுகின்றன. கற்பழிப்பு என்கிற வார்த்தை பிரயோகத்துக்கு எதிராகப் பல மகளிர் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்தாலும் இந்த நிலைதான் நீடிக்கிறது.

விபசாரத்தில் ஈடுபடுவதால் கைதாகும் பெண்கள் விஷயத்திலும் இதே அணுகுமுறையைத்தான் பத்திரிகைகள் கடைப்பிடிக்கின்றன. அழகி கைது என்கிற தலைப்போடு அவர்களது புகைப்படங்களை வெளியிடுவது மகளிர் ஆணையம் தடையுத்தரவு பிறப்பிக்கும் வரை பத்திரிகைகளுக்கு அத்தியாவசியமாக இருந்தது.

இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆண்களுக்கு இதுவரை எந்தப் பத்திரிகையும் முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரியவில்லை. காரணம், அவர்களுக்கு பெண்களை போல அவர்களுக்கு வியாபாரத் தன்மை Saleability இல்லை.

பிரச்சினையை சரியான அணுகுமுறையில் பார்ப்பதை விடுத்து ஒரு கிளுகிளுப்புத்தன்மைக்காகவே Sensationalisation இந்தச் செய்திகளை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றன மீடியாக்கள்.

சமூகத்தில் இன்றும் புரையோடியிருக்கும் ஆணாதிக்க மனப்பான்மைக்கும் பெண்களுக்கு அவர்கள் சுயத்தையும் வெளியையும் மறுக்கும் தன்மைக்கும் ஊடகங்களின் இந்த பொறுப்பற்ற அணுகுமுறை நிச்சயம் ஒரு காணரம் என்று சொல்லலாம். பெண்களுக்கு எதிராக நடக்கும் பல குற்றங்கள் இன்று ஊடகங்களாலேயே தூண்டிவிடப்படுகின்றன. அதிகார மையங்கள் எதையும் சாராத எந்தப் பெண்ணும் தனது சுதந்திரத்தை ஓரளவுக்காவது ஸ்திரப்படுத்திக் கொள்ள முயலும் போது அவள் ஊடகங்களின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகின்றாள். அந்த தாக்குதல்களையும் தாண்டி ஒரு பெண் தண்டனையும் தன் சுதந்திரத்தையும் நிலை நிறுத்திக் கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

தான் கேட்ட மதுபானத்தை இல்லை என்று சொன்னதற்காக பிரபலமான ஹோட்டலில் பல நூறு பேர் முன்னிலையில் ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் சுட்டுக் கொன்றவரிடம் நிச்சயம் ஊடகத்தின் பாதிப்பு இருக்கக் கூடும் ஒரு பெண் கோவிலுக்குள் நுழைந்ததால்தான் அந்த கோவில் அசுத்தமானதாக சொன்னவருக்கு ஊடகங்களில் கிடைத்த கவனம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிகை தொடர்ந்து அந்த பெண்ணையே குற்றவாளியாக சித்திரித்து எழுதி வந்தது.

ஒரு பக்கம் ஊடகங்களே நேரடியாக பெண்களை சுரண்டுவது, இன்னொரு பக்கம் சமூகத்தில் பெண் சமத்துவத்துக்கு எதிரான ஒரு தாக்கத்தை மறைமுகமாக ஏற்படுத்துவது என்ற இருமுனை தாக்குதல்களை நடத்தி வருகிறது ஊடகத்துறை.

ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பெண்களைச் சுரண்டுவதையும் அவர்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதல்களையும் நடத்துவதை நிறுத்தாதவரை பெண் விடுதலை என்பது பூரணத்துவம் பெறாது இப்போதைய அவசியத் தேவை. பெண்களை பெண்களாக மட்டுமே பார்க்கும் பொறுப்பான ஊடகத்துறை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com