Contact us at: sooddram@gmail.com

 

LTTE இப்பொழுது இல்லை. நாங்கள் உண்மை நிலமையை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.

எனது அன்பார்ந்த தமிழ் தலைவர்களுக்கும், தமிழ் சமுதாய அங்கத்தவர்களுக்கும், எங்கள் எல்லா சமுதாய அங்கத் தவர்களுக்கும், அகில உலகரீதியாக உள்ள தமிழ் இளைஞர்பேரவை நிறைவேற்றும் அங்கத்தவர்களுக்கும் இத்தால  ிக மகிழ்ச்சியுடன் எழுதிக் கொள்வதாவது, நான் தமிழ் இளைஞர் அமைப்பில் 2003 தொடக்கம் 2005ம் ஆண்டு வரையும் தலைவராக இருந்தேன். நான் TYO (தமிழ் இளைஞர் அமைப்பில்) ஸ்தாபக் அங்கத்தவர்களில் ஒருவனாக இருந்தேன். மேல் குறிப்பிட்ட காலத்திலே ரொறன்ரோ பகுதிக்கு தலைவர் பதவி வகுத்தேன்.

நான் தற்போது நியூயோர்க்கில் உள்ள தடுப்பு நிலையத்திலே பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் 25 வருட சிறைவாசத் தண்டனையில் ஜந்தாவது வருடத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்.  நான் இத்தால் இக் கடிதத்தை எனது சக இளைஞர், சகோதர், சகோதரி அங்கத்தவர்களுக்கு எழுதிக  ொள்வதாவது அதே பாதையில் நடந்து சென்ற காரணத்தால் காலக் கட்டத்தில், என்னை நியூயோர்க் சிறைவாசத்தை அனுபவிக்க வைத்தது.

நான் இன்று வேதனைப்படுகின்றேன். எனது குடும்பத்தவர்கள் வேதனைப்படுகின்றார்கள். துன்பம் ஒருவரை பாதிக்கும் பொழுது அது அவரை சுற்றி இருப்பவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. நான் வேதனைப் படுவதனால் என்னைச் சார்ந்தோரும், வேதனைப்படுகின்றார்கள். நான் உடல்ரீதியாகவும்,உளரீதியாகவும் நிதி நிலமைகாரணமாகவும் மருத்துவரீதியாகவும் நல்ஒழுக்ரீதியாகவும் வருந்துகின்றேன் நான் அனுபவிக்கின்ற கஸ்டங்களை பலபக்கங்களில் எழுதி விபரிக்கலாம். வாசிப்பவர்களுக்கு கூடிய சுமையைக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் எனது கடந்த கால செயல்பாட்டின் விளைவாலே நான் இவற்றை அனுபவிக்கின்றேன். இதற்கு மேலாக நான் எனது சக, சகோதர சகோதரிகளுடன் சிலவற்றை பகிர்ந்து கொள்ளும் உணர்வு, கடமைப்பாடு உள்ளவனாய் இருக்கின்றேன்.

நான் எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளுவதால், நீங்கள் உங்களுடைய அடுத்த செயல்பாடுகளில் புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பீர்களாக. நான் LTTE (தமிழீழ விடுதலைப் புலிகள்) அங்கமான கனடாப் பகுதியின் (தமிழ்இளைஞர் அமைப்பின் TYO   தலைவராக இருந்த பொழுது ஒரு உச்சத் துடிப்பான சுறுசுறுப்பான, உணர்ச்சி வசமான இளைஞனாக இருந்தேன். இந்தக் காலங்களில் நான், சமுதாய நலன் பேணுவோர் என்று அழைக்கப்படுபவர்களினால் பிழையான பாதையில் வழி நடத்தப்பட்டேன்.  மேற் சொல்லப்பட்ட

தலைவர்களினால் ஒரு போதும், ஒரு பொதுவான விளக்கம் இன்மையால் சரியான தீர்வு காணமுடியாமல் இருந்தது. நான் பல கூட்டங்களில் பங்கு பற்றியுள்ளேன். இளைஞர்களுடைய உண்மையான பார்வை, நிலைப்பாடு பற்றியும், உணர்ச்சிகள் பற்றியும், நலன் பேணுவோர் எங்களது அடுத்த நடவடிக்கைகள் பற்றியும் கவனம் எடுக்கவில்லை. எனது சமுதாய பல அங்கத்தவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நான் பங்குபற்றினேன். அங்கே, நலன் பேணுவோர் நீடிக்கக்கூடிய தீர்வுகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் பின் நோக்கிப் பார்க்கும் போது, சிறீலங்கா பிரசைகளில்மேல் கோபமும், வெறுப்பும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல சச்சரவுக்குரிய கூட்டங்கள் நடந்துள்ளன. நடத்திய அதே போன்ற கூட்டங்களுக்கு கருத்தரங்குகளுக்கும் நீங்கள் சமூகம் கொடுத்திருப்பீர்கள் என்று நிச்சயமாக நம்புகின்றேன். நான் எனது தனிப்பட்ட அனுபவஙக்ளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆம், சில தனிப்பட்ட நபர்கள் வன்செயல் அற்ற விடயங்களை தேசீயரீதியாக போதிக்க முயற்சித்தனர்.

ஆனால் நலன் பேணுவோர் என்ற போர்வையில் விடுதலையானது அண்மித்துவிட்டது என்று கூறி மற்றவர்களுடைய அறைகூவலை எப்படியோ அடக்கிவிட்டார்கள். நான் எனது மறியல் கூட்டில் இருந்து இக்கடிதத்தை எழுதுகின்றேன்.  நான் கேட்பது ஒன்றே ஒன்று என்னவென்றால் இவர்கள் மட்டில் நீங்கள் விழிப்பாயிருங்கள். நான் உங்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் வன்முறையை தூண்டக்கூடிய பாதைகளை தெரிவு செய்யாதீர்கள். தயவு செய்து வன் செயலையோ, வெறுப்பையோ தூண்டக்கூடியவராக ஊக்குவிப்பவராக இருத்தல் கூடாது. LTTE இப்பொழுது இல்லை. நாங்கள் உண்மை நிலமையை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும். LTTE இன் இலட்சியத்தை தவிர்க்க வேண்டும் என்று சகோதர, சகோதரிகளையும் கேட்டுக் கொள்கிறேன். உங்களை நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான பகுதி மக்களுக்கு உதவும் படி கேட்டுக் கொள்ளுகின்றேன். எமது பகுதி மக்களுக்கு உதவும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.

நீங்கள் அவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக இருங்கள். அவர்களை நிர்கதியாக்கி விடாதீர்கள். தயவு செய்து, இனியும் நலன் கருதுவோர் என்று அழைக்கப்படுபவர்கள் மேலும், அழிவுப் பாதைக்கு உங்களை வழி நடத்த தயவு செய்து அனுமதிக்க வேண்டாம். அதற்கு மாறாக, உங்களது சொந்த இலக்கை அடுத்த நடவடிக்கைக்கு ஏற்றதாக பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் மக்களுக்கு உங்களுடைய உதவி தேவை. உங்களுடைய நோக்கில் எங்கள் மக்களிடையே ஒருமைப் பாட்டை வளர்திடவேண்டும்.

நான் ஒத்துக் கொள்ள வேண்டியது நான் தலைவர் (TYO) பதவி வகித்த காலத்தில் வெறுப் புணர்வு கூடுதலாக ஊட்டப்பட்டது. தமிழராகிய நாங்கள் வன்செயலை கட்டாயமாக நிராகரித்து தமிழராகிய நாங்கள் வன்செயலைகட்டாயமாக நிராகரித்து சமாதனாத்தை பேணவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும்ஆற, அமர தனித்து உட்கார்ந்து சிந்தித்து எவ்வளவு வெறுப்புணர் உங்களுக்கு ஊட்டப்பட்டது என்று அறிந்து, நீங்கள் அந்த வெறுப்புணர்வில் இருந்து விடுதலையடைவீர்கள். இந்த நேரத்திலே, நீங்கள் உணர்வீர்கள் மக்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது என்று நீங்கள் தயாராக இருங்கள். நான் உங்களை மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்வது சுதந்திரமாக சிந்தியுங்கள் தயவு செய்து. நான் உங்களை மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்வது தீவிரமான இலட்சியங்களுக்கு அகப்பட்டுக்கொள்ளாதீர்கள். ஒரு முறை, தயவு செய்து ஆற அமர இதைப்பற்றி யோசியுங்கள். உண்மையான மனித சுபாவம் மற்றவரை வெறுப்பது அல்ல, அவர் எவராயினும் உதவி தேவை ஏற்படும் பொழுது உதவி செய்வதேயாகும்.

கடந்த 5 வருட காலமாக நியூயோர்க்கில் மற்ற சக இளைஞர்களுடன் சிறை வாசம் அனுபவிக்கின்றேன். சில சட்டப்பிரிவுகளுக்கு அமைவாக என்னை சிறையில் பார்ப்பதற்கு எனது குடும்பத்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினால், அவர்கள் வேதனை அடைகின்றார்கள். கடந்த 3 வருடங்களாக எனது பெற்றோரையோ, எனது குடும்ப அங்கத்தவர்களையோ, பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கடந்த 3 வருடங்களாக என்னை எந்தவித பார்வையாளரும் பார்க்கவில்லை. நான் எழுதுவதாவது நான் தெரிவு செய்த பாதையினால் எவ்வளவு வேதனைப்படுகிறேன் என்பதை விளங்கப்படுத்துகிறேன். எனது கடந்த கால நடவடிக்கைகளை நினைத்து கவலைப்படுகின்றேன். எனக்கும் எனது சக மற்ற மாணவர்களுக்கும், கூட்டத்தின் பின் கூட்டம், பிரச்சாரத்தின் பின் பிரச்சாரம் இவற்றினால் வெறுப்புணர்வு ஊட்டப்பட்டது.

நான் மனப்பூர்வமாக உங்கள் யாபேரையும் கேட்பது ஒன்றே ஒன்றைத்தான . அதாவது நீங்கள் எங்கள் கஷ்ரப்படும் மக்களுக்கு சுதந்திரமாக உதவி செய்ய முன் வாருங்கள். எங்கள் மக்கள் போதுமான அளவு கஷ்ரப்பட்டு விட்டார்கள். உலகத்தில் இந்த விதமான வேதனையும், இழப்பும் வேறு எவரும் அனுபவிக்கக்கூடாது. வேதனை மேல் வேதனை எங்கள் மக்கள் போதிய அளவு அனுபவித்துவிட்டார்கள். எங்கள் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழக்கடமைப்பட்டுள்ளார்கள். நான் உங்களை கேட்பதாவது, அவர்கள் மேம்பாட்டிற்கு நீங்கள் சுதந்திரமாக முன்வந்து மக்கள் அனுபவித்த மோசமான கஷ்ரங்களிலிருந்து விடுவிப்பதற்கு ஏதுவாக அவர்களுடைய நலன்கருதி செல்படுங்கள். தயவு செய்து அவர்களை வாழவிடுங்கள். என்னால் சிறீலங்காவில் வசிக்கும் எமது மக்களுக்கு வாழ்க்கை வளம் பெற உதவ முடியாமல் இருக்கிறேன். வாழ்க்கை வளம் பெற உதவ முடியாமல் இருக்கிறேன் இங்கு இருப்பதனால். தமிழ் இளைஞர் அமைப்பின் (TYO) சகோதரசகோதரிகளிடமிருந்து எதிர்பார்ப்பது அவர்கள் முன்வந்து ஏதாவதொரு வழியில் மீண்டும் மீள் சமாதானத்தையும் சிறீலங்காவில் நிறைவேற்றுவார்களென முழுமையாக நம்புகின்றேன். முன்னைநாள் TYO தலைவர் என்ற ரீதியிலும் உங்களைப் போன்று மனிதாபிமான முறையில் அதே பாதையில் வழி நடந்தவன் என்றரீதியிலும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் உங்களுடைய நடைமுறையை மாற்றி அமைத்து மக்களுக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களது சகோதரன் என்ற ரீதியில் இதை உங்கள் முன் வைக்கின்றேன்.

நன்றி.

கடவுள் உங்களையும் எங்கள் மக்களையும் ஆசிர்வதிப்பாராக.

சதா

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com