Contact us at: sooddram@gmail.com

 

மூவர் தூக்கு தண்டனை

மோதிக் கொள்ளும் வைகோ,சீமான்

மரணத்திலும் கட்சி அரசியல் நடத்தும் தமிழக 'உணர்வாளர்கள்'

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டணை அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி யாரும் எதிர்பாராதது. தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே ஒரே அணியில் கைகோர்த்து போராடிய சில சம்பவங்களில் இதுவும் ஒன்று. கட்சிக்கு அப்பாற்பட்டு மனிதநேய அடிப்படையில் மக்கள் பெருமளவு இணைந்து போராடியதும் தமிழ் நாட்டில் இதுவே முதல்முறை. சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் தவிர, அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கருத்துதான் இருந்தது.

ஆனாலும் வைகோவும், சீமானும் இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டினர். இருந்தாலும் போராட்டம் தொடர்பான மேடைகளில் இருவரும் இணைந்து கலந்து கொள்ளாதது இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் இருப்பதை உணர்த்தியது. தற்போது இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக புலம்புகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரில், பேரறிவாளனுக்காக மட்டும் வைகோ பேசுவதாகவும், மற்ற இருவர் குறித்தும் அவர் மௌனமாக இருப்பதாகவும் சீமான் தரப்பில் வைகோ மீது குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு ஆதாரமாக வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தூக்கு தண்டனை ரத்து தொடர்பாக எழுதிய கடிதத்தையும் காட்டுகிறார்கள் சீமான் தரப்பினர்.

'மத்திய அரசு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவை நிராகரித்த உத்தரவை தமிழக அரசுக்கு அனுப்பியது. தமிழக அரசு அந்த விபரத்தை வேலூர் சிறையில் உள்ள மூவருக்கும் அனுப்பிய அன்றே இந்த விஷயத்தில  என்ன செய்வது என டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களோடு கலந்து பேசினோம்'. நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் தடா சந்திரசேகர் வேலூர் சிறைக்குச் சென்று மூவரையும் சந்தித்தார்.

'உங்களுக்கு இந்தியாவில் எந்த வழக்கறிஞர் வேண்டுமோ அந்த வழக்கறிஞரை உங்களுக்காக வாதாட அமர்த்துகிறோம்' என்று அவர் மூவரிடமும் வாக்குறுதி அளித்தார். அவர்களுக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை வைகோ பார்த்துக் கொள்ளட்டும்' என்று தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாகவே நீதிமன்ற நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தோம்.

'ஓருவேளை நாங்கள் தூக்கிலிடப்பட்டால் எங்கள் உடல்களை சீமானிடம் ஒப்படையுங்கள்:' என்று முருகனும், சாந்தனும் எழுதிக்கொடுத்துள்ளனர். 'இதில் இருந்தே சீமான் அவர்களுக்காக எப்படியெல்லாம் உழைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்' என்று உணர்ச்சி வசப்படுகிறார்கள் நாம  தமிழர் கட்சியினர்.

தி.மு.க அரசால் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலுர் சிறையில் அடைக்கப்பட்டபோதே முருகன், சாந்தன் உள்ளிட்டோர் தங்களின் வழக்கு குறித்து சீமானிடம் விவாதித்துள்ளனர். அதன் தொடாச்சியாகவே மூவர் தூக்கு தொடர்பாக நாம் தமிழர் இயக்கம் சார்பாக தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.

ஆனால், நாம் தமிழர் இயக்கமும், சீமானும் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை இருட்டடிப்புச் செய்தவண்ணம் வைகோ செயல்படுகிறார். வைகோவோடு இணைந்து செயல்படுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் வைகோதான் எங்களுடன் இணைந்து செயல்படுவதில் தயக்கம் காட்டுகிறார். இந்த விவகாரத்தில் எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் கிடையாது'.

ஆனால் வைகோ தரப்போ, இதை மறுத்து சீமான் மீது குற்றச்சாட்டு வைக்கிறது. 'சட்ட போராட்டங்களை நடத்தியது நாம  தமிழர் என்பதே பொய்யான  வாதம் உச்ச நீதிமனறத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை அழைத்து வந்ததே வைகோதான்'. 'நான் சென்னை வந்தது எனது நன்பர் வைகோவுக்காகத்தான்' என்று நீதிமன்ற வளாகத்திலே ஜெத்மலானி குறிப்பிட்டார்.

'மணதண்டனையை ரத்துச்செய்ய வேண்டும் என்று வைகோ தொடர்ந்து முயற்சிகள் எடுத்த வருகிறார். பேரறிவாளனுக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டால் மற்ற இருவருக்கும் ரத்து செய்யப்படும் என்ற அடிப்படையில்தான் அவர் பேசுகிறார். மரண தண்டனை ஒழிப்பு உடன்பாடு உள்ளவர்களோடு இணைந்து செயல்படுவதில் வைகோவுக்கு எந்த ஈகோவும் கிடையாது. ஆகஸ்ட் 2ம  ிகதி  சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மூவர் தூக்கை ரத்துச்செய்ய வலியுறுத்தி நடந்த கூட்டத்தில் அனைத்து அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள் சீமான் ஒருவர்தான் கலந்து கொள்ளவில்லை.

காஞ்சிபுரத்தில் தூக்கு தண்டனையை ரத்துச் செய்ய வலியுறுத்தி இறந்த செங்கொடியின் வீரவணக்க நிகழ்வில் கூட சீமான் கலந்து கொள்ளவில்லை. கட்சி ஆரம்பித்த சில மாதங்கிளிலேயே தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அவர் மூவர் தூக்கு தண்டனை வழக்கை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். இப்படி ஏதாவது செய்துதான் எங்கள் கட்சியை பிரபரப்படுத்த வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை' என்று பதிலுக்கு ஆவேசப்படகிறார்கள் ம.தி.மு.க வினர்.

தங்களின் மரண தண்டனை வழக்கை வைத்து வைகோ, சீமான் இருவரும் அரசியல் செய்வதாக சிறையில் இருக்கும் மூவரும் வருத்தப்படுகிறார்களாம்.'பேரறிவாளன் தூக்கு தண்டனையை மட்டும் ரத்துச் செய்யச் சொல்கிறீர்களே, நாங்கள் மட்டும் குற்றம் செய்தோம் என நம்புகிறீர்களா?' என்று முருகனும், சாந்தனும் வைகோ விடம் கேட்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

எங்கள் வழக்கு விசாரனை தொடர்பாக வைகோ தெளிவாகத்தான் முடிவெடுப்பார் என்ற  ேரறிவாளன் சீமானிடம் சொல்ல, அவர் கோபித்துக் கொண்டு வேலூர் சிறையை விட்டு வெளியேறிய சம்பவமும் நடந்திருக்கிறதாம். ஒரு வேளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் சீமானிடம் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என்றுதான் முருகனும், சாந்தனும் விண்ணப்பத்தில் எழுதி கொடுத்துள்ளனர். இதை நாம் தமிழர் அமைப்பினர் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க? இருவரையும் சீமானே கட்டாயப்படுத்தி கையெழுத்திடச் சொன்னதாக ம.தி.மு.க வினர் சொல்கிறார்கள்.

(நன்றி-ரிப்போட்டர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com