Contact us at: sooddram@gmail.com

 

வெளிநாட்டில் உள்ள வைத்தியர்கள் நாட்டுப்பற்றுடன் செயற்பட வேண்டும்

பயங்கரவாதிகள், போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகள், பாதாள உலகைச் சேர்ந்த கொலைகாரர்கள் ஆகி யோர் மாத்திரம் தேசத் துரோக குற்றச் செயல்களில் ஈடுபடுகி றார்கள் என்று நாம் சொல்ல முடியாது.

அவர்களைவிட ஏழை மக் கள் செலுத்தும் வரிப்பணத்தினால் படித்து பட்டம் பெற்று டாக்டர் களாகியவர்களில் பெரும்பாலானோர்கள் இன்னுமொரு வகையிலான தேசத்துக்கு துரோகம் இழைக்கும் வகையில் இப்போது சுயநலமாக நடந்து கொள்கிறார்கள்.

அரசாங்க ஊழியர்களாக இருந்த போது அரசாங்கத்தின் அனுசரணை யுடன் வெளிநாடுகளுக்கு புலமைப் பரிசிலில் சென்ற டாக்டர் களும் வேறு பல காரணங்களை முன்வைத்து தற்காலிகமாக வெளி நாடு சென்ற டாக்டர்களும் இன்று அந்நாடுகளில் கை நிறைய சம் பளம் எடுத்துக் கொண்டு நாடு திரும்பாமல் வெளிநாடுகளில் உள்ள சுகபோகங்களையும், வருமானத்தையும் அனுபவித்து வருகிறார்கள்.

இவ்விதம் வெளிநாடு சென்ற சுமார் 10 ஆயிரம் டாக்டர்கள் இல ங்கை திரும்பி நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். மக்களின் பணத்தில் இலவசமாக பெற்ற உயர் கல்வியின் மூலம் டாக்டர்களாக படித்து பட்டம் பெற்றவர்கள் நாடு திரும்பி மக்களுக்கு வைத்திய சிகிச்சை அளிக்க மறுப்பதை தேசத் துரோகம் என்று கூறுவதை விட வேறு என்ன சொல்ல முடியும்.

சுகாதார அமைச்சு சமீபத்தில் சேகரித்த புள்ளி விபரங்களின் படி பிரி ட்டனில் மாத்திரம் 2 ஆயிரத்து 500 பேரும், அவுஸ்திரேலியாவில் 3 ஆயிரத்து 500 பேரும், அமெரிக்காவில் ஆயிரத்து 500 பேரும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் மேலும் 2 ஆயிரத்து 500 மாண வர்கள் இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டாக்டர்கள் பணி புரிந்து கைநிறைய சம்பளம் வாங்கி செளகரியமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் நாம் புலமைப் பரிசில் மூலம் வைத் தியத்துறையில் நிபுணத்துவ பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் நாடு திரும்பி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டு காலமாவது மக்களு க்கு சேவை செய்வோம் என்று ஒப்பந்தம் செய்து கொண்ட போதும் அத்தகைய ஒப்பந்தங்களை துச்சமாக மதித்து இலங்கை திரும்ப முடியாது என்று சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதி காரிகளுக்கு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்.

இலங்கையின் தற்போதைய சனத்தொகை இரண்டு கோடி இலக்கை இப்போது தாண்டிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரும் தொகை மக்களுக்கு வைத்திய சேவை செய்வதற்கு இலங்கையில் 16 ஆயி ரம் டாக்டர்களே இருக்கிறார்கள். இதனை நாம் விகிதாசாரப்படி எடை போட்டு பார்த்தால் 12 ஆயிரம் மக்களுக்கு சேவை செய் வதற்கு ஒரு டாக்டரே இருக்கிறார் என்ற உண்மை தெரியவரும்.

12 ஆயிரம் பேருக்கு எவ்விதம் ஒரு டாக்டரால் பணி புரிய முடி யுமென்று நாம் சிந்தித்து பார்க்கக்கூட முடியாது. அந்தளவிற்கு எங்கள் நாட்டின் சுகாதார பராமரிப்புத் துறை இன்று வீழ்ச்சி யடைந்துள்ளது.

நிலைமையை சீரமைப்பதற்காக சுகாதார அமைச் சர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டில் பணிபுரிந்து இலங்கை க்கு திரும்பி மக்களுக்கு பணிபுரிவதற்கு தயக்கம் காட்டும் டாக்டர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், உங்களை டாக்டர் களாக கல்வி அறிவை பெறுவதற்கு தங்கள் கடுமையான உழைப் பின் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தி அப்பாவி மக்களுக்கு நீங்கள் பிரதி உபகாரம் செய்ய மறக்கலாகாது என்றும் உடனடியாக நாடு திரும்பி நம் நாட்டு மக்களுக்கு பணி புரிய வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது வரையில் இந்த சுயநல நோக்கத்துடன் செயற்படும் இந்த டாக் டர்களில் எவருமே இலங்கை திரும்பவில்லை. இந்த அவலம் காரணமாக எங்கள் நாட்டில் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக 47 வைத்தியசாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்கள் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த மக்கள் வைத்தியர் ஒருவரை சந்தித்து சிகிச்சை பெறுவதற்காக 50இற்கும் மேற்பட்ட கிலோமீற்றர் தூரத்திற்கு பிரயாணம் செய்ய வேண்டிய கஷ்ட நிலையில் இருக்கிறார்கள்.

புலமைப்பரிசில்கள் மூலம் உயர்கல்வி பெறுவதற்காக வெளிநாடு களுக்கு சென்றவர்கள் நாடு திரும்பாமல் இருப்பதனால் அவர் களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமை ச்சு எத்தனையோ தடவைகள் முயற்சிகள் எடுத்த போதும் அம் முயற்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை.

இந்த சுயநலவாத நோக்கத்துடன் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க் கையை அனுபவித்து தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் கல்வி கற்பிக்கும் வைத்தியர்கள் பலர் இருக்கின்ற போதிலும் நாட்டுக்காக நாட்டு பற்றுடன் உழைக்கும் தியாக உணர்வு படைத்த பல வைத்திய நிபுணர்கள் எங்கள் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுக்கும் அளவுக்கு தங்களுக்கு வெளிநாட்டில் கிடைக் கும் இலட்சக்கணக்கான சம்பளத்தையும், ஆடம்பர வாழ்க்கையை யும் தூக்கி எறிந்துள்ளார்கள்.

மக்களின் வரிப்பணத்தினால் உயர்கல்வி பெற்ற நாம் நம் நாட்டி லேயே ஆயுள் பூராவும் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத உணர்வுடன் பணியாற்றிக் கொண்டு வரும் வைத்தியர்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி கெளரவிக்க வேண்டும். இவர்களின் முன்மாதிரியை பார்த்துவிட்டாவது வெளி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்நாட்டைச் சேர்ந்த சுயநல வாத எண்ணம் கொண்ட டாக்டர்கள் நாடு திரும்ப வேண்டும்.

அவ்விதம் அவர்கள் நாடு திரும்பாமல் வெளிநாடுகளிலேயே தொடர் ந்தும் வாழ்ந்து கொண்டிருந்தால் நிச்சயம் இயற்கை நீதிக்கு அமைய அவர்களுக்கு எவ்விதத்திலும் ஒரு வகையான தண்டனை கிடைப் பதை எந்தவொரு சக்தியாலும் தவிர்த்து விட முடியாது என்ற உண்மையை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com