Contact us at: sooddram@gmail.com

 

தேசியப் போராட்டத்தின் அடிப்படையும் இன்றைய நிலையும்

(சபா நாவலன்)

மனிதர்கள் ஆதிகாலத்தில் உண்பதற்காக மட்டுமே உழைத்தார்கள். அவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவர்கள் கூட்டாக உழைத்தார்கள். மனித குலத்தின் இந்த உற்பத்தியானது அவர்களின் தேவைக்கும் அதிகமாக எஞ்சிய போது இந்த எஞ்சிய பகுதி யாருக்கு உரிமையானது என்ற போட்டி உருவாகிறது. இந்தப் போட்டியின் விளைவாக மனித குலம் வர்க்கங்களாகப் பிளவுறுகிறது. காடுகளில் சுய நலமற்றவர்களாக அலைந்து திரிந்த மனிதக் கூட்டம் இறுதியில் ஒரு குறித்த இடத்தில் நிரந்தரமாகக் குடியேறுகின்ற நிலை உருவாகிறது. எஞ்சிய சொத்துக்களைப் பாதுகாக்க வாரிசு ஒன்று தேவைப்படுகின்ற போது குடும்பத்தின் தேவை உருவாகிறது. மனித குலம் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றிற்கான சொத்துரிமை நிரந்தரமானதாக்கப்படுகின்றது.

மனித குலத்தின் சிறு பான்மை சொத்துக்களை உரிமையாக வைத்துக்கொள்ள அதன் பெரும்பான்மை சிறுபான்மைக்காக உழைக்கின்ற நிலை உருவாகிறது. மனித குல வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் பெரும்பான்மை சிறுபான்மைக்கு எதிராகப் போராடி வெற்று பெற்றிருக்கின்றது. இவ்வாறு வெற்றி பெறுகின்ற ஒவ்வொடு கட்டத்திலும் புதிய சமூக அமைப்புக்கள் உருவாகின்றது. இவ்வாறான போராட்டங்களின் விளைவாக நில உடமையாளர்கள் அதிகாரம் செலுத்திய சமூக அமைப்பிற்கு எதிராக உருவானதே நாம் வாழுகின்ற முதலாளித்துவ சமூகத்தின் ஆரம்பம்.

ஒவ்வோர் தடவையும் முதலாளித்துவ சமூகங்கள் நிலைகொள்ள முடியாமல் போகின்ற போது அது மறு சீரமைக்கப்படுகின்றது. மறு ஒழுங்கமைக்கப்படுகின்றது. இவ்வாறு ஒவ்வோர் தடைவையும் ஒழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறையானது இன்று மீள முடியாத நெருக்கடிக்குள் வந்து சேர்ந்திருக்கின்றது.இனிமேல் புதிய உலக ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்த முடியாத அளவிற்கு அது அழிவுகளையும் அவ நம்பிக்கைகளையும் மனித குலத்தின் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.

முதலாளித்துவம் முதலில் முளைவிட்ட நாடுகளில் பல ஏக போக அரசுகளாக மாற்றமடைந்தன. வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாடுகளை ஆக்கிரமித்து அவற்றின் மூலவளங்களைச் சுரண்டி அவற்றில் வளர்ச்சியையும் சமூக மாற்றங்களையும் அழித்துச் சிதைத்தன.

நாடுகளைத் தொடர்ச்சியாகச் சுரண்டுவதற்காகவும் அவற்றைத் தமது தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பிளவுகளை உருவக்கின.

இவ்வாறு தம்மிடையே மோதிக்கொண்ட சுரண்டப்பட்ட வறிய நாடுகளின் மக்கள் தமது முதன்மையான எதிரியான ஏகாதிபத்தியங்கள்ளை மறந்து விட்டு தம்மைத் தாமே அழித்துக் கொண்டனர்.

உதாரணமாக இலங்கையைச் சுரண்டும் நோக்கோடு அங்கிருந்த மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தியது பிரித்தானிய ஏகாதிபத்தியம். பாளி மொழியில் ஆங்காங்கே காணப்பட்ட மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகளை பிரித்தானி அரசாங்கம் சிங்களத்தில் மொழிபெயர்த்தது. அவ்வாறு மொழிபெயர்ப்பதற்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த இரண்டு பௌத்த மதகுருக்களை நியமித்தது. மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகள் சிங்களப் பகுதியிலிருந்த விகாரைகளுக்கு விநியோகம் செய்யபட்டது.

இதே வேளை ஹெலேனா பிளவாற்ஸ்கி போன்ற மனித விரோத நிறவாதச் சிந்தனை கொண்டவர்களூடாக சிங்கள பௌத்த சிந்தனை வளர்க்கப்பட்டது. சிங்கள பௌத்ததின் தேசியத் தந்தை என அழைக்கப்படும் அனகாரிக தர்மபால என்பவர் பிளவாற்ஸ்சி உருவாக்கிய தியோசோபிகல் அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டார். தமிழ் நாட்டில் அடையாறில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற பின்னர் இலங்கை சென்ற அனகாரிக அங்கே முதலில் தமிழர்களுக்கு எதிராகவும் குறிப்பாகத் தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் தனது இனவாத நஞ்சைப் பரப்ப ஆரம்பித்தார். பௌத்தம், ஆரியத் தூய்மைவாதம், சிங்களம் என்ற சுலோகங்களின் அடிப்படையில் சிங்கள -பௌத்த பெருந்தேசிய வாதத்தை கட்டியெழுப்ப ஆரம்பித்தார்.

தாம் ஒன்று சேராவிட்டால் சிறுபான்மைத் தமிழ்ப் பேசும் மக்களால் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற பய உணர்வைச் சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இன்று வரைக்கும் இதுவே இலங்கை அரசியலில் சிங்கள மக்களின் அரசிற்கு எதிரான போராட்டங்களை சிதைக்கும் ஆயுதமாகவும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகவும் பயன்படுகின்றது.

மறுபுறத்தில் ஆறுமுக நாவலர் போன்ற சாதி வெறிகொண்டவர்களின் ஊடாக தமிழ் இனவாதம் உருவாக்கப்பட்டது. இனவாதம் ஒரு புறத்திலும் பெருந்தேசியவாதம் மறுபுறத்திலுமாக ஒன்றை மற்றொன்று வளர்க்க அதன் அழிவில் உலகின் அதிகார மையங்கள் அனைத்தும் இலங்கையைச் சிதைத்துச் சீரழித்துக்கொண்டிருகின்றன.

இவ்வாறு ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்திய முரண்பாடுகள் இன்று வரை அவர்களது நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்காக குறித்த நாடு ஒன்று திட்டமிட்டுச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் போது, அந்த நாட்டில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான தேசிய உணர்வு உருவாகிறது. இவ்வாறான உணர்வைச் சிதைப்பதற்காக ஏகாதிபத்தியங்கள் பெருந்தேசிய இனத்தைச் சிறுபான்மை இனங்களுக்கு எதிராகத் திசை திருப்பி மோதலை உருவாக்குகின்ற போக்கு காலனி ஆதிக்கத்தின் பின்னான காலப்பகுதி முழுவதும் ஏகாதிபத்தியங்களின் தந்திரோபாயமாக அமைந்திருக்கின்றது.

அன்னியத் தலையீடற்ற நாடுகளில் தேசிய இனங்களிடையே மோதல் என்பது இருக்காது என்பது மட்டுமல்ல தேசிய இனங்கள் காலப்போக்கில் ஒருங்கிணைந்து ஒரே தேசிய இனமாக உருவாகிவிடுகின்றது. பிரான்சில் 50 வீதமானவர்கள் மட்டுமே உபயோகப்படுத்திய கோலுவா என்ற மொழியும் பிரஞ்சு மொழியாக மாற்றமடைந்து பிரான்ச் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட நாடாக மாற்றமடைந்ததும் இவ்வாறே. பொதுவாக அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இவ்வாறே ஒரு தேசிய இனத்தைக் கொண்ட நாடுகளாக மாற்றமடைந்தன. இவ்வாறான நாடுகளில் சுரண்டும் சிறுபான்மையினருக்கும் சுரண்டப்படும் பெரும்பான்மையினருக்கும் இடையேயான முரண்பாடே பிரதான முரண்பாடாக இருந்து வந்திருக்கின்றது.

வறிய நாடுகளான மூன்றாம் உலக நாடுகளில் வர்க்கங்களிடையேயான முரண்பாடு உருவாகிப் உள்னாட்டு ஆதிக்க அரசுகளுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியங்களுகு எதிராகவும் மாற்றமடைந்த வேளையில் தான் தேசிய இனங்களிடையேயான முரண்பாடு திட்டமிட்டு உருவாக்கபட்டது. வர்க்க முரண்பாடு மழுங்கடிக்கப்பட்டது. அனைத்துத் தேசிய இனங்களிடையேயும் தேசிய உணர்வு உருவானது. தேசிய உணர்வானது அடிப்படையில் வர்க்க உணர்வை மழுங்கச் செய்ய்யும். தேசிய முரண்பாட்டையும் அதனூடாகத் தேசிய உணர்வையும் உருவாக்கிய அதிகார வர்க்கம் அதனூடாக வர்க்கப் போராட்டத்தைச் சிதைத்தது. அதிகார வர்க்கம் அடிப்படையில் தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது.

ஒரு குறித்த பிரதேசத்தைச் சார்ந்த மக்கள் தமக்குக் குறிப்பான அடையாளத்தைத் திட்டமிட்டு அழிக்க முற்படுகின்ற அதிகாரத்திற்கு எதிராக ஒன்றிணைகின்ற போதே தேசியம் என்ற கருத்து மூன்றாம் உலக நாடுகளில் வலுப்பெறுகிறது.

அதே வேளை பெருந்தேசிய ஒடுக்கு முறையையும் தேசிய உனர்வையும் வர்க்க உணர்வை மழுங்கடித்துத் தமக்கு ஏற்ற ஆட்சியை உருவாக்குவதற்கு உரிய கருவியாக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன என்ற அடிப்படை உண்மையை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் உணரும் போது மட்டுமே ஒடுக்கு முறைக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சரியான பாதையில் திட்டமிட முடியும். தவறின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியங்கள் சுரண்டலுக்கான கருவியாகப் பயன்பட்டு இறுதியில் அழிந்துவிடும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியங்களின் கபட நாடகங்களைப் புரிந்துகொள்ளாத ஒரு பிரிவும் அதனைப் புரிந்தே கொண்டே சமூக விரோதக் கருத்துக்கள் ஊடாக மக்களை நச்சூட்டுகின்ற இன்னொரு பிரிவும் தமது எதிரிகளிடமே தமது தலைவிதியை ஒப்படைக்கின்ற துயரம் சூழந்த சூழலைக் காண்கின்றோம்.

இந்தியா,சீனா,ஐரோப்பா, அமரிகா என்ற இனவழிப்பின் பின்னணியில் செயற்படுகின்ற ஒவ்வோர் அரசுகளதும் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்வது போராட்டத்தை வெற்றிகொள்வதற்கான முதல் அடிப்படையாகும்.

சுவீடன் தொழிலாளர்களின் அரசிற்கு எதிரான போராட்டமே நோர்வே சுவீடனிலிருந்து பிரிந்து செல்வதை விரைபடுத்தியது.
அறுபது வருடங்களுக்கு மேலாக ஏகாதிபத்தியங்களாலும் அதன்
உள்ளூர்

அடிவருடிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும் இலங்கையின் சிங்கள மக்களின் பெரும்பகுதி, தமிழ் மக்களைப் போன்றே தம்மீதான ஒடுக்கு முறையின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொண்டதில்லை. ஏகாதிபத்தியங்களே அவர்களின் பிரதான எதிரி என்பதை உணர்த்துவதற்கு முப்பது வருடப் போராட்ட அனுபவத்தை உள்வாங்கிக் கொண்ட தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருக்கும் முன்னணி சக்திகளுக்கு மலையை கிளப்பும் வேலையல்ல.

வன்னிப் படுகொலைகளைத் தொடர்ந்து இலங்கையில் திட்டமிட்டு நடைபெற்றுவரும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை போன்றன சிங்கள மக்களையும் ஒடுக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும் நிலையை உருவாக்குவது மக்கள் பற்றுள்ளவர்கள் உடனடி வேலைத் திட்டமாக முன்னெடுக்க வேண்டும்.
பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக இனவாதத்தை விதைக்கும் செயற்பாடானது ஏகாதிபத்தியங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் எம்மை உள்நுளைத்துக் கொள்வது போன்றதாகும். அவர்களைத் திருப்திப்படுத்துவதாகும். அவர்களின் சுரண்டலுக்கான வெளியை மேலும் விரிவடையச் செய்வதாகும். இவை அனைத்திற்கு அப்பால் ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்க்தும் திறன்கொண்ட அனைத்து இலங்கை மக்களையும் இணைத்து தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலையைப் போரை புதிய வழிகளில் முன்னெடுப்பது இன்றைய எமது அவசரத் தேவையாகும். இதன்
மறுபக்கம் உலகம் முழுவதுமுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் இணைவிலிருந்து ஆரம்பமாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com