Contact us at: sooddram@gmail.com

 

தமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்

நெடுங்காலமாக பனிப்போராக இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூ:ட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையேயான உட்கட்சிப் பூசல் தற்போது சந்தி சிரிக்கும் வகையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் பதவிகளுக்கு ஆசைப்படாதவர்கள், கொள்கைகளிலிருந்து ஒருபோதும் விலகாதவர் கள், பணத்திற்குச் சோரம் போகாதவர்கள் என்று ஏனைய கட்சித் தலைவர்களாலும், நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களாலும் உதாரணம் காட்டிப் பேசப்பட்டவர்கள். ஆனால் இன்று அந்நிலை கேள்விக்குரிய தொன்றாகிவிட்டது.

வடக்கு, கிழக்கில் இன்றுள்ள நிலையில் தமக்குரிய ஒரே பலம் தமிழ்க் கூட்டமைப்பே என நினைத்திருக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கையில் சம்பந்தன் - சுரேஷ் பிரேமச்சந்திரன் முறுகல் மண் அள்ளிப் போடுவ தாக அமைந்துள்ளது. தமக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய உட்கட்சி விடயங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்து தாமும் மற்றைய கட்சிகளின் அரசியல்வாதிகள் போலவே என்பதை மக்களுக்குக் காட்டிவிட்டனர். இவ்வளவு காலமும் இவர்கள் இந்த நினைப்புடன்தான் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்துள்ளனர் என்பதை இப்போது விளங்கிக் கொள்ள முடிகிறது.

புலிகள் தமது காலத்தில் ஆயுதத்தால் இவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தமையே உண்மை. இன்று புலிகள் இல்லை என்றதும் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் இப்போது தமது ஆயுதமேந்திப் போராடிய காலத்தில் இருந்த காட்டுத் தர்பார் பாணியைக் காட்டத் தலைப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் புலிகளிடம் பயந்து நடுங்கியதை சுரேஷ் பிரேமச்சந்திரன் நேரடியாகவே கண்டவர். அந்த பயத்தை இப்போது தான் ஏற்படுத்தி காரியத்தைச் சாதிக்க முற்படுவதே உண்மை. ஆனால் இதற்கு மக்கள் சம்மதிக்க வேண்டுமே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும், கணக்கு வழக்குகள் முறையாகப் பேணப்பட வேண்டும், கூட்டுக் கட்சிகளுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று சில குற்றச்சாட்டுக்களை சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்தாலும் அவரது குறிக்கோள் தமிழர சுக் கட்சியினால் புதிதாக உள்வாங்கப்படும் படித்த அல்லது பழுத்த அரசியல்வாதிகள் எவரும் தானிருக்கும்வரை தலைமைக்கு குறிவைக்கக் கூடாது என்பதே ஆகும்.

சரி அவ்வாறே சம்பந்தன் அவர்கள் சுரேஷின் ஆதங்கத்தைப் போக்க அவரது வேண்டுகோளை நிறைவேற்றி தமிழ்க் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்தால் இப்போது சேறடிக்கும் பிரேமச்சந்திரன் அதற்குப் பின்னர் சேறடிக்க மாட்டார், தூற்றமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட நீண்ட அறிக் கைக்கு சம்பந்தர் எதுவாக இருந்தாலும் கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையோடு சொன்னார். அதுதான் எமது கருத்தும். சுரேஷ் பிரேமச்சந்திரன்கூட்டமைப்பிற்கு ஒரு சரியான யாப்போ, அன்றி அதற்கான ஒருவடிவமோ இதுவரை இல்லை. அது மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு பொதுச்சின்னமோ கொடியோ எதுவும் கிடையாதுஎன்கிறார். பின்பு எப்படி தன்னை மட்டும் அதன் உத்தியோகப் பேச்சாளர் என்று ஓயாது சொல்லிக் கொண்டிருக்கிறார்?

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளுக்கு 4 இடத்தில் வெற்றி என்கிறார். ஆனால் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் வென்றால் மக்கள் தமிழரசுக் கட்சிக்குப் போடவில்லை. த.தே.கூட்டமைப்புக்குப் போட்டார்கள் என்று குழந்தைப் பிள்ளை போன்று பேச்சை மாற்றுகிறார்!

தமிழரசுக் கட்சிதான் தமிழ்க் கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சி. அப்படியிருந்தும் கடந்த தேர்தலில் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு 11 இடங்களை ஒதுக்கிக் கொடுத்தது. அதாவது நாலில் ஒன்று. ஆனால் பிரேமச்சந்திரன் “13 வேட்பாளர்களை நியமிக்க வேண் டிய திருமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 10 இடங்களும், ஏனைய நான்கு கட்சிகளுக்கு 3 இடங்களும் கொடுக்கப்பட்டன. 14 வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 9 இடங்களும் ஏனைய நான்கு கட்சிகளுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டன. அதேபோன்றுதான் அம்பாறை மாவட்டத்திலும் நடைபெற்றது. இவ்வாறான ஒரு சர்வாதிகார தேர்தல் கூட்டைத்தான் சம்பந்தன் விரும்புகிறார்போல் தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் இருப்பதன் மூலம் சம் பந்தன் பேசுவதையும் செய்வதையும் ஏனையோர் கேட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தமிழரசுக் கட்சி விரும்புகின்றதுஎனப் புலம்புகிறார்.

திருமலை மாவட்டத்தில் வெற்றியீட்டியவர்களும் தமிழரசுக் கட்சியைக் சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்றே வெற்றியடைந்தவர்கள். இவ்வாறே அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளனர். எனவே மக்கள் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கு வாக்களித்தார்களே தவிர, தமிழரசுக்கட்சிக்கல்ல என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஆக தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் அவர்கள் த.தே.கூ என்ற காரணத்தினால் வெற்றி பெற்றார்கள். ஐந்து கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அது அந்த கட்சிகளின் செல்வாக்கால் வெற்றி பெற்றார்கள் என்கிறார். இது என்ன நியாயம்? தலை விழுந்தால் எனக்கு வெற்றி. பூ விழுந்தால் உனக்குத் தோல்வி என்கிறார் பிரேமச்சந்திரன்.

தமிழரசுக் கட்சி 11 இடங்களை ஒதுக்கிக் கொடுத்ததே பெரிய காரியம். கூட்டு வைத்துள்ள ஐந்து கட்சிகளுக்கும் வேட்பாளர்கள் சமமாகப் பிரிக்க வேண்டும் என்று கேட்டு, பின்னர் 50:50 கேட்டு அதுவும் கிடைக்கவில்லை என்ற பின்னர்தான் 11 இடங்களை ஏற்றுக் கொண்டார்கள். வேட்பாளர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒன்று கேட்பது, பின்னர் பாதி கேட்பது என்ன அடிப்படையில் நியாயம்? அப்படிக் கொடுத்த இடங்கள் போதாதென்றால் தனித்துப் போட்டியிட்டிருக்க லாமே? ஏன் செய்யவில்லை? அரசியல் தற்கொலைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் தயார் இல்லை என்பதுதானே காரணம்?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்துக் கேட்ட ஆனந்தசங்கரி யாரின் லெட்டர் பாட் கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்த வாக்குகள் வெறுமனே 4,424 தான்! திருகோணமலை மற்றும் அம்பாறையில் அந்தக் கட்சி போட்டியிடவே இல்லை! ஆக மொத்தம் 44 வேட்பாளர்களில் ஆனந்தசங்கரியின் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பிரேமசந்திரன் நினைக்கிறாரா? அப்படி நினைத்தால் அது புத்திசாலித்தனமா?

த.தே.கூயை உள்ளிருந்து கொண்டு குடைச்சல் கொடுக்கிற, அதனைச் சிதைக்கிற பிரேமச்சந்திரன் த.தே.கூ. பதிவு செய்யப்பட்ட பின்னர் குடைச்சல் கொடுக்க மாட்டார், சிதைக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஜெனிவாவுக்கு போவதில்லை என்று கூடிப் பேசி முடிவு எடுத்து பின்னரும் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி அந்து முடிவுக்கு எதிராகப் பேசியது எந்தவகை உட்கட்சி ஜனநாயகம்?

ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்றியது போல பிரேமச்சந்திரன் த.தே.கூ கடிதத் தலைப்போடு நடையைக் கட்ட திட்டமிடுகிறாரா? ததேகூ இல் இருக்கும் ஏனைய கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் எதுவும் விடவில்லை. இவர் மாத்திரம் ஏன் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக் கிறார்? ஏனைய கட்சிகள் சார்பாக பேசும் பிரேமச்சந்திரன் அந்தக் கட்சிகளைக் கேட்டுவிட்டா? அவர்களோடு பேசிவிட்டா? இப்படியான அறிக்கைகளை செய்தித்தாள்களுக்கு விடுக்கிறார்?

த.தே.கூ. பதிவு செய்வதாக வைத்துக் கொள்வோம். அதன்பின் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைக் கலைக்க பிரேமச்சந்திரன் சம்மமதமா? ஐந்து கட்சிகளும் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தால் ஒருவர்மீது ஒருவர் சேறடிக்க முயற்சிப்பார்களா அல்லது ஒற்றுமையுடன் செயற்படுவார்களா? என்று பிரேமச்சந்திரன் ஒரு பாமரத்தன்மையான கேள்வியைக் கேட்கிறார். இப்போது சேறடிக்கும் பிரேமச்சந்திரன் ததேகூ பதிவு செய்து விட்டால் மாத்திரம் சேறடிக்க மாட்டார், தூற்ற மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? திரு சம்பந்தனை பெயர் சொல்லி ஒருமையில் பேசுகிறவர் அப்புறம் அஃறிணையில் பேச மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு த.தே.கூட்டமைப்போடும் பாரதூரமான கருத்து வேற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் முதன்மை வகிபாகம் பற்றி கருத்து முரண்பாடு இருக்கிறது. கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையை தமிழரசுக் கட்சியும் அதனை வழிநடத்தும் தலைவர்களும்தான் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இன்று உலகறிந்த உண்மைஎன மனதார நம்புகிறார். இவையெல்லாம் சரியென்றால் அவருக்கு ஒரு வழி இருக்கிறது. அவருக்கு ஒரு மாற்றுவழி இருக்கிறது.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போல இவரும் ததேகூ விட்டு வெளியேறி இன்னொரு கட்சியைத் தொடக்கலாம். அல்லது இருக்கிற கட்சியைப் பலப்படுத்தலாம். தேர்தலில் போட்டியிட்டு கட்டுக்காசையும் இழக்கலாம். இதில் எது அவருக்கு வசதியோ அதனை அவர் செய்ய லாம். அதுதான் அரசியல் அறம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com