Contact us at: sooddram@gmail.com

 

மு.கா மீது தாக்குதல் நடத்தும் தமிழ் கூட்டமைப்பும், ஊடகங்களும்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்து இப்போது அதன் அமர்வுகளும் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அது சார்பான தமிழ் ஊடகங்களும் இன்னமும் முஸ்லிம் காங்கிரஸ் மீது தமது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கிழக்கு மாகாண சபையில் இணைந்து ஆட்சியமைக்க மு.கா வரவில்லை என்பதே இவ்விரு தரப்பினரதும் இக் காழ்ப்புணர்விற்குக் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இருந்தாலும் அதனைத் தொடர்ந்தும் செய்துவருவது அநாகரிகமாகவே தென்படுகிறது.

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அதன் தலைவர்கள் பலரும் மு.காவைத் தமது அறிக்கைகளில் இஷ்டத்திற்கு திட்டித் தீர்த்து வருகின்றனர். அதனை அப்படியே பிரசுரிக்கும் அவர்களுக்குச் சார்பான கொழும்பு, யாழ் தமிழ் ஊடகங்கள் மற்றும் இணையத் தளங்கள் இது போதாதென்று தாமும் தமது உப்புச் சப்பில்லாத கருத்துக்களையும் முன்வைக்கின்றன. அதனை நியா யப்படுத்தும் வகையில் ஆசிரியர் தலையங்கங்கள், புனை பெயர்களில் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன.

தமது கூட்டணிக்குள் கிளம்பியுள்ள உட்கட்சி மோதலைத் திசை திருப்புவதற்காக தமிழ்க் கூட்டமைப்பு இவ்விடயத்தைப் பெரிது படுத்த முனைவதாகவே சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இது தமிழ் - முஸ்லிம் மக்களின் எதிர்கால நல்லுறவிற்கு ஆரோக்கியமானதாகத் தென்படவில்லை. கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் பெரும் பான்மையான முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸே விளங்குகிறது. அது அண்மைய கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உட்பட நடைபெற்றுவரும் அனைத்துத் தேர்தல்களிலும் நன்கு புலனாகி வருகிறது.

இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதையும், அம்மக்களிடமிருந்து மு.காவை அந்நியப்படுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதையும் இனியும் முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் அனுமதிக் கமாட்டார்கள். கடந்த தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்கள் ஒருவேளை வாக்களித் திருப்பார்கள். அதனை வைத்துக்கொண்டு முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாகவும் தாமே இருப்போம் என்று சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கும் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று.

முதலில் தமிழ்க் கூட்டமைப்பு தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப செயற்பட முன்வர வேண்டும். தமிழுணர்வு விதைக்கப்பட்டதாலேயே தமிழ்க் கூட்டமைப்பிற்கு வாக்குகள் கிடைத்தன. அந்த உணர்வு மூலம் தமிழ் மக்களது எதிர் பார்ப்பு என்ன என்பதை கூட்டமைப்பினர் அறிய முற்பட வேண்டும். அதனை விடுத்து வாக்களித்த மக்களைப் புறந்தள்ளிவிட்டு வாக்களிக்காத, தமக்கென்று கட்சிகளை வைத்திருக்கும் முஸ்லிம் மக்களின் நலனைப் பேண முற்படுவது சகல தரப்பையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே கருத இடமுண்டு.

தேர்தல் காலத்தில் மு.கா அரசை விமர்சித்து பிரசாரம் செய்தபோதும் அவர்கள், அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணியே வந்தனர். அமைச்சரவையில் அதன் தலைவர் முக்கியமான அமை ச்சுப் பதவியை வகித்து வருகிறார். தேர்தலின் பின்னர் அரசாங் கத்துடன் சேர்வோம் என்பதை அவர்கள் நாசூக்காக தமது மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டே செயற்பட்டு வந்தனர். அத் துடன் மு.கா தலைவர் தனது தேர்தல் மேடைகளில் தமிழ்க் கூட்டமைப்புடன் சேருவதில் பாரிய சிக்கல்கள் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். தமிழர் பிரச்சினை வேறு, முஸ்லிம் மக்களது பிரச்சினை வேறு என்பதை மு.கா தலைவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

உண்மையில் அதுதான் உண்மை. தமிழ் - முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை ஒன்றாக ஒரு தரப்பினரால் தீர்த்து வைக்க முடியும் என்ற காலம் எப்போதோ மலையேறி விட்டது. இப்போதுள்ள சூழலில் தமிழர் தரப்பு தனியாகத் தமது பிரச்சினைகளையும், முஸ்லிம் தலைமைகள் தமது மக்களது பிரச்சினைகளைத் தனித் தரப்பாகவும் அரசாங்கத்துடன் பேசித் தீர்வுகளைக் காணும் நிலையே இன்றுள்ளது. தமக்குள் இவ்விரு தரப்பினரும் பேசி ஒரு நிலைப் பாட்டிற்கு வர முடியுமே தவிர தமிழருக்காக முஸ்லிம் தலை வர்களோ அல்லது முஸ்லிம்களுக்காக தமிழ்த் தலைவர்களோ இனப்பிரச்சினை சார்பாக பேச முடியாது.

இந்நிலைமையை ஏற்படுத்தியமைக்கு இருதரப்பினருமே காரணம் எனினும் தமிழ்த் தரப்பு மீது இவ்விடயத்தில் அதிக குற்றச்சாட்டைச் சுமத்த முடியும். இன்று முஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க் கூட்டமைப்பு புலிகளின் காலத்தில் இந்த அக்கறையைக் காட்டாது வாய் மூடிகளாக இருந்தமையை முஸ்லிம் மக்களால் மறந்துவிட முடியாது. அவ்வேளைகளில் முஸ்லிம் தனித்தரப்பு விடயத்தை ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தமையையும் அம்மக்களின் தலைமைகள் ஞாபகப்படுத்துகின்றன.

எனவே இப்போது எல்லாமே காலம் கடந்த விடயங்களாகி விட்டன. இந்நேரத்தில் தமிழ்க் கூட்டமைப்பு தமது தேவைக ளுக்காக, முஸ்லிம்களைத் துணைக்கு இழுப்பதற்காக அம்மக்களில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மு.கா வை விமர் சிக்காது முதலில் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து செயற்பட வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பு, மு.கா வை பல பல கோணங்களில் விமர்சித்த போதிலும் மு.காவின் தலைவரோ, உயர்பீட உறுப்பினரோ அல்லது சிறு தொண்டனோ அல்லது அக்கட்சிக்கு வாக்களித்த எந்தவொரு குடிமகனோ இதுவரை வாயே திறக்கவில்லை.

தலைமையின் சாணக்கியத்தால் கட்டுண்டுள்ள தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் நீண்ட காலத்திற்கு அடக்கி வைத்திருக்க முடியாது. எனவே தமிழ்க் கூட்டமைப்பினரும், அவர்களது அறிக்கைகளை வெளியிடுவதற்காகக் காத்துக் கிடக்கும் தமிழ் ஊடகங்களும் இனியாவது தமது மக்களின் தேவைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் தமது தேவைகளுக்கு முஸ்லிம் தலைமைகளின் உதவியை நாட வேண்டிய நிலையே ஏற்படும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com