Contact us at: sooddram@gmail.com

 

பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது பிள்ளைகள் இழைக்கும் பாவச் செயல்

எல்லோரும் சிறுவராக நீண்ட காலம் இருக்க முடியாது. அவர்களும் முதிய நிலையை அடையும் போது முதியவர்கள் ஆகின்றனர். இது இயற்கை. பனை மரத்தில் இருந்து காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது என்பார்கள். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? காய்ந்த ஓலை தனது பருவம் முடிந்ததும் மரத்தில் இருந்து கீழே விழும். அதனைப் பார்த்த குருத்து ஓலையின் நினைப்பு வியப்பானது. எப்போதும் அப்படியே மரத்தில் இருப்பேன் என்ற நினைப்பு அதற்கு. தானும் ஒருநாள் இதே ஓலைபோல் காய்ந்தவுடன் மரத்தில் இருந்து கீழே விழுவேன் என்று அதற்கு அப்போது புரியாது. இப்படித்தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள்.

உலகில் இன்று எத்தனையோ சிறுவர்கள் புத்தகம் ஏந்த வேண்டிய கைகளில் பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்றனர். பாடசாலை செல்ல வேண்டிய நேரத்தில் படிப்பைத் தொலைத்துவிட்டு பிச்சை ஏந்தி சாப்பிட்டுப் பிழைக்க வேண்டிய நிலைமையில் பலர் உள்ளனர். இன்று உலகளவில் சிறுவர்கள் பலர் சொல்லொணா துன்ப, துயரங்களை சந்திக்கின்றார்கள். பலர் பெற்றோரை இழந்தும், உண்ண உணவின்றி பட்டினியால் உருக்குலைந்தும் அநாதைகளாக வேறொருவருக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். குப்பைத் தொட்டிகளுக்குள் கொட்டும் உணவை எடுத்து சாப்பிட்டு பசியைப் போக்கிக் கொள்கிறார்கள்.

ஏன் இந்தக் கொடுமை? வசதி படைத்தவர்கள் இப்படியான சிறுவர்களுக்கு உதவலாம். அவர்களையும் தன் பிள்ளைகள் போல எல்லா வசதி, வாய்ப்புகளையும் செய்து கொடுக்கலாம்தானே! ஏன் இந்த அவலம்! அதே கொடுமை நிலைமை தான் வயது போனவர்களுக்கும் சில வேளையில் ஏற்படுகிறது. தமது தாய், தந்தை என்று பாராமல் பராமரிப்பு நிலையங்களில் பெற்றோரைக் கொண்டு போய் சேர்க்கிறார்கள். ஒருவர், இருவர் நல்லவர்களாக இருந்தால் பயன் இல்லை.

எல்லோரும் திருந்த வேண்டும். எல்லோரும் தமது பெற்றோர்களை அவர்களது இறுதிக்காலம் வரைக்கும் கவனமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு திறமையான உத்தியோகத்தில் இருக்கிaர்கள் என்றால் அதற்குக் காரணம் உங்கள் பெற்றோர் தான். அவர்கள் உங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்து, உங்களுக்காக உழைத்து இருப்பார்கள். அதனை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமை வரலாம்.

உங்களது பிள்ளைகள் உங்களையும் இந்த நிலைமைக்கு இட வேண்டுமா? காலம் பதில் சொல்லும் பொறுத்திரு மகனே என்று சில பெரியோர்கள் சொல்லும் போது தான் அதன் அர்த்தம் உங்களுக்கு சிறிது காலத்துக்குப் பிறகு விளங்கும். ஊருக்கு உபதேசம் செய்து விட்டு நாம் நமது பெற்றோரை வயோதிபர் இல்லத்தில் விடலாமா? அப்படியும் செய்கிறார்கள். தனக்கு ஒரு நியாயம். ஊருக்கு ஒரு நியாயம்.

சிறுவர்களாக இருக்கும் போது கவலைகள் இல்லாமல், பெற்றோர் அரவணைப்பில் சந்தோசமாக பொழுதைக் கழிக்க வேண்டிய தருணம்.  அது ஒரு வசந்த காலம். முதியவர்கள் ஆனதும் தமது பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை பார்த்து சந்தோசமாக, கவலைகள் எல்லாவற்றையும் மறந்து, பழைய ஞாபக அலைகளை மீட்டிப் பார்த்து இருக்கும் பொற்காலம்.

சிறுவர்கள், முதியவர்களை அன்பாக, சந்தோசத்துடன், இன்முகத்துடன் கவனிக்க வேண்டும். அவர்களிடம் அன்பாகப் பேச வேண்டும். சந்தோசமாக எல்லோரும் இருக்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு மட்டும்தான் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்றில்லை. வயதான மூத்த குடிமக்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். பாதுகாப்பு குறித்த அச்சம் இருக்கும். வயதானவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும்.

இன்றைக்கு அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று இரு ந்த நிலை மாறியு ள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் நாட்டில் வயதா னவர்களின் எண்ணி க்கை குறிப் பிடத் தக்க அளவுக்கு உயர்ந் துள்ளது. உலக அளவில் 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது டையோர் எண்ணிக் கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாசார, அரசியல் ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும். 21 ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும், அனைத்து வயதினரையும் முன்னிலைப் படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

சுதந்திரமும் மதிப்பும்அம்மிக் கல்லுக்கு குழவி எவ்வளவு அவசியமோ அதுபோல வீட்டிற்கு ஒரு கிழவி அவசியம்என்பார்கள். ஏனெனில், வயதானவர்களின் அனுபவங்கள் இளைய தலைமுறையினருக்கு அவசியமானவை. ஆனால் எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கின்றனர். பெற்றோர்களையும், வயதானவர்களையும் பாரம் என்று கருதி முதியோர் இல்லங்களுக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.

இதனால் வயதானவர்களுக்கு தனிமையும், வெறுமையுமே மிஞ்சுகிறது. பாதுகாப்பின்மை காரணமாக வயதானவர்களுக்கு மன அழுத்தமும், விரக்தியும் அதிகரிக்கிறது. எனவே, வயதானவர்களையும் குழந்தைகளைப் போல பாவித்து அவர்களுக்குரிய சுதந்திரத்தையும், மதிப்பையும் அளிக்க வேண்டும். சத்தான உணவுகள் இல்லாவிடின் வயதானவர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்படுவது இயல்பானதுதான்.

எனவே குழந்தைகளுக்கு எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுப்போமோ அதேபோல வயதானவர்களுக்கும் ஆரோக்கியமான உணவுகளை செய்து தரவேண்டும். ஏனெனில், வயதாக வயதாக உடலில் உள்ள சக்தி குறைகிறது. எனவே சத்தான தானியங்கள், சோயா போன்றவை ஊட்டச்சத்துள்ள உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். முக்கியமாக வயதானவர்களுக்கு உணவில் ஆர்வம் குறைந்து ஜீரண உறுப்புகள் சற்றே செயலிழந்து விடும். ருசி உணர்வும் குறைந்துவிடும். எனவே அதற்கேற்ப சத்தான உணவுகளை சமைத்துத் தர வேண்டும்.

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம், நீரிழிவு, இதய நோய் போன்றவைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச் சத்துள்ள உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். கல்சியம், விட்டமின் மாத்திரைகளாக வாங்கிக் கொடுப்பதில் எந்த பயனும் இல்லை. நார்ச்சத் துள்ள, விட்டமின் சத்துள்ள காற்கறிகள், பழங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். மறதி நோய் ஏற்பட்டுள்ள வயதானவர்களை சிறப்பு கவனத்துடன் கையாள வேண்டும்.

குளிர்ச்சியான பொருட்களை இரவில் தவிர்த்துவிடுங்கள். அதேபோல் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை மட்டுமே அவர்களுக்கு உண்ணக் கொடுங்கள்.  முதியவர்களை நாம் நன்றாக கவனிக்கிறோம்.  அவர்களுக்கு மதிப்பளிக்கிறோம் என்று தெரிந்தாலே அவர்களிடம் இருந்து மன அழுத்தம் வெளியேறி மகிழ்ச்சி குடியேறும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com