Contact us at: sooddram@gmail.com

 

விக்னேஸ்வரன் தெற்கில் ஏற்படுத்தும் தாக்கம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தென் பகுதி அரசியல்வாதிகள் விக்னேஸ்வரனிடமும் சம்பந்தனிடமும் சுமந்திரனிடமும் அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெற்கில் பலர் தனிப்பட்ட சந்திப்புக்களின் போது 'கஷுவலாக' கூறுகிறார்கள். கடும் போக்குள்ள பேரினவாதிகளையும் அரசாங்கத்தை சார்ந்தவர்களையும் தவிர்ந்த தெற்கில் பலர் வட மாகாண சபையின் தற்போதைய போக்கை முதிர்ந்த அரசியல் என்றே வர்ணிக்கிறார்கள். வட மாகாண சபையில் நடைபெறும் விடயங்களில் தெற்கில் சில கடும் போக்காளர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இது வரை பிடி கொடுக்கவே இல்லை. அவர்களுக்கு கூச்சலிட இது வரை ஒரே ஓரு சந்தர்ப்பம் தான் கிடைத்தது. அது தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்த கூட்டத்தின் போது தேசிய கொடி ஏற்றாமல் இருந்த சம்பவம்.

அதன் பின்னர் வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு நடைபெற்ற பல வைபவங்களின் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தமையினால் அந்த விமர்சனமும் தெற்கில் அவ்வளவாக எடுபடவில்லை. இலங்கை கடலுக்குள் அத்து மீறி வரும் தென் இந்திய மீனவர்களை தாம் எதிரிகளாக கருதவில்லை என்று வட மாகாண கடற்றோழில் அமைச்சர் கூறியதாக வெளியான செய்தியொன்றை பெரிதுபடுத்த விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மத் முஸம்மில் எடுத்த முயற்சியும் பிசுபிசுத்துப் போய்விட்டது.

ஆனால், வடக்கில் சகலதும் சுமுகமாகவும் பரிபூரணமாகவும் நடைபெறவில்லை என்பதையும் தெற்கில் மக்கள் அறிந்துள்ளனர். வடக்கில் கடும் போக்காளர்களுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே தீவிர முறுகல் நிலை இருப்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்களில் இனவாத போக்குள்ள சிலர் இந்த முறுகல் வளர வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்கள். விந்தை என்னவென்றால் இந்த முறுகலின் போது தீவிரவாதிகளின் கை ஓங்க வேண்டும் என்றே அவர்கள் நினைக்கிறார்கள் ஏனெனில் அப்போது தான் அவர்களுக்கு பிழைப்புக்கான தீனி கிடைக்கும்.

சம்பந்தனுக்கு வேண்டும் என்றால் ஏ-9 வீதியினு10டாக வந்து தெற்கிலுள்ள மக்களுடன் சுமுகமாக வாழலாம் அல்லது புதுமாத்தளன் ஊடாக பிரபாகரன் சென்ற பாதையிலும் செல்லலாம் என அண்மையில் தொழிலநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார்.

அனேகமாக சந்பந்தன் புதுமாத்தளன் ஊடான வழியை தேர்வு செய்வதையே அவர் விரும்பியிருக்கலாம். ஆனால் இது வரை இடம்பெற்ற சம்;பவங்களால் அவரும் ஏமாற்றமடைந்திருப்பார்.

இருந்த போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை கடும் போக்காளர்களினதும் வடக்கின் யதார்த்தத்திற்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. முதலமைச்சர் வேட்பாளரை தெரிவுசெய்தல், முதலமைச்சின் சத்தியப்பிரமாணம், மாகாண அமைச்சரவையை தெரிவு செய்தல், மாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் போன்ற விடயங்களின் போது ஏற்பட்ட நிலைமைகள் இந்த கடும் போக்கு- மிதவாத மோதலையே எடுத்துக் காட்டுகிறது.

முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனை நியமித்ததோடு வட மாகாண சபையின் போக்கே மாறியது எனலாம். சிங்கள சமூகத்தை அறிந்த அச் சமூகத்தோடு பழகிய ஒருவர் என்ற முறையில் அவர் அப் பதவியை ஏற்றமை வட மாகாண சபை மத்திய அரசாங்கத்தோடு கடமையாற்றுவதற்கு வசதியாக அமையும் என்று ஊகிக்கலாம். மரபு ரீதியான தமிழ் தலைவர் ஒருவர் அப் பதவியை ஏற்றிருந்தால் இப்போதே மத்திய அரசாங்கத்தோடு முரண்பாடுகளும் மோதல்களும் தோன்றியிருக்லாம்.

வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தமை தெற்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வட பகுதி அரசியல்வாதிகள் எடுத்தற்கெல்லாம் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவதும் செயற்படுவதும் வழமையாகிவிட்ட நிலையில் விக்னேஸ்வரன் தமது கட்சித் தலைவர் முன்னிலையில் அல்லது ஜனாதிபதி அல்லாத வேறு ஒருவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செயவார் என்றே தெற்கில் பலர் நினைத்தனர்.

போனஸ் ஊறுப்பினர்கள் இருவரை நிமிக்கும் போது தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் நியமிக்கப்படுவார் என் பலர் நினைத்தனர். ஏனெனில் தெற்கில் அவ்வாறு தான் அரசியல் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அனேகமாக தேர்தலில் தோல்வியடைந்தாலும் பெயர் உள்ளவர்களுக்கு அரசியலில் இடம் கிடைக்கும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த மரபையும் மீறியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பெரும் சர்சசையை ஏற்படுத்திய வட மாகாண அமைச்சரவையை நியமித்த போதும் தெற்கில் பலருக்கு அது நம்ப முடியாத விடயமாகியது. ஒரு கூட்டணி ஆட்சி அமைத்தால் அனேகமாக கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே அமைச்சர் பதவிகள் வழங்கப்படும். அதேவேளை சிவாஜிலிங்கம், சித்தார்த்தன் மற்றும் ஆனந்தி போன்ற பிரபலமானவர்களே பதவிகளை பெற்றுக்கொள்ளக் கூடும்.

ஆனால் திறமையானவர்களே அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படுவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியதாக செய்திகள் கூறின. அது உண்மையா என்பது காலம் போகப் போகத் தான் தெரிய வரும். மத்திய அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுக்கள் வழங்கப்படும் போது பல சந்தர்ப்பங்களில் ஒரே துறை பல பிரிவுகளாக பிரித்து பல அமைச்சர்களுக்கு வழங்கப்படும். சில சந்தர்ப்பங்களில் காணி அமைச்சராக ஒருவரும் காணி அபிவிருத்தி அமைச்சராக மற்றொருவரும் நியமிக்கப்பட்டதும் உண்டு.

ஒரு முறை கல்வி அமைச்சராக ஒருவரும் உயர் கல்வி அமைச்சராக மற்றொருவரும் கல்விச் சேவைகள் அமைச்சராக ஒருவருமாக மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த குழப்ப நிலையும் வட மாகாண அமைச்சரவையில் அவ்வளவாக காண்பதற்கில்லை.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமக்குரிய அமைச்சுக்களை பொறுப்புபேற்கும் போதும் ஜனாதிபதியன் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்தார்.

வட மாகாண சபை தமக்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக நிதியினை பெற்றுக் கொள்ள நிதி ஆணைக்குழுவுடன பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கடந்த வெள்ளிக் கிழமை செய்தியொன்று வெளியாகியிருந்தது. தெற்கில் வழமையாக நடப்பது என்னவென்றால் பதவிக்கு வரும் மாகாண முதலமைச்சர்கள் அரசாங்கம் தமக்கு வழங்கும் நிதியைக் கொண்டு மத்திய அரசாங்கம் சொல்வதை செய்வதே. அந்த விடயத்திலும் வட மாகாண சபை வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளது.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாகாண சபை முறையைப் பற்றியும் மாகாண சபை அதிகாரங்களைப் பற்றியும் செயலமர்வொன்றை நடத்த வேண்டும் என்று வட மாகாண சபை தமது ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெற்கில் எந்தவொரு மாகாண சபையும் இது போன்றதோர் கோரிக்கையை இது கால வரையும் விடுத்ததில்லையென்றும் நிதி ஆணைக்குழுவின் தலைவர் ஆரியரத்ன ஹேவகே கூறியிருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் புலிகள் மறுபிறவி பெற்றிருக்கிறார்கள் என்றும் ஆயுத பலத்தினால் பெற முடியாது போன தமிழீழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக் கொள்வதற்காகவே தமிழ் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகிறது என்றெல்லாம் கூறிய தென் பகுதி அரசியல்;வாதிகள் வட மாகாண சபை தமக்குரிய அதிகாரங்களைப் பற்றி விளக்குமாறு மத்திய அரசாங்கத்தின் நிதி ஆணைக்குழுவிடமே கோரியதை எவ்வாறு விளங்கிக் கொள்வார்கள்?

இவ்வாறு வட மாகாண சபையின் புதிய நிர்வாகம் தென் பகுதி அரசியல் மீது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி வந்த போதிலும் தமிழ் அரசியலில் காணப்படும் தீவிரவாதத்தின் கை ஓங்கினால் இந்த நிலைமை மாறும் என்பதும் தென் பகுதி அரசியல்வாதிகளுக்குத் தெரியும். உண்மையிலேயே வடக்கில் தற்போது காணப்படும் அரசியல் பக்குவம் திவீரவாதத்தின் கை ஓங்கினால் காணாமற் போய்விடும் தான். அந்த நிலைமையை உருவாக்க தென் பகுதி அரசியல்வாதிகள் மாகாண சபை நிர்வாகத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் வகையில் செயற்படவும் கூடும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com