Contact us at: sooddram@gmail.com

 

அன்பும் அறிவும் ஊட்டி வளர்த்த பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது துரோகம்

உலக முதியோர் தினம் இன்று அனுஷ்டிப்பு

ஒரு தனிமனிதனின் வாழ்க்கை முதல்நிலையில் குழந்தைப் பருவம், இடைநிலையில் இளமைப் பருவம், நிறைவாக முதுமைப் பருவம் என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதியவர்கள் அல்லது ஒரு நாட்டின் மூத்த குடிமக்கள் என்று வரையறுக்கப்படுகின்றனர். முதியோர் என்பவர்களை ஒரு தலைமுறையின் விழுது என்று கூட சொல்லலாம். எமது நாட்டைப் பொறுத்தவரையிலும் அறுபது வயதைத் தாண்டியவர்களையே முதியர்கள் என அழைக்கும் வழக்கம் காணப்படுகின்றது. மனிதனது வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவ காலகட்டங்களும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் முதுமைப் பருவமும் முக்கியமான பருவமாக காணப்படுவதனை நாம் மறுக்க முடியாது.

முதுமை என்பதனை பல்வேறு அறிஞர்களும் பலவாறாக வரைவிலக்கணப்படுத்தி இருப்பதனை நாம் காணலாம். பொதுவாக முதுமை எனும் போது ஒருவரின் உடலிலுள்ள கலங்களிலும் தொகுதிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு அவரது தொழிற்பாடுகளில் ஒரு படிப்படியான தேய்வு ஏற்படுகின்ற நிலை என விளங்கிக் கொள்ளலாம்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒக்டோபர் 1 ஆம் திகதியை முதியோர்களுக்கான சர்வதேச தினமாக 1990 டிசம்பர் 14 ஆம் திகதி பிரகடனப்படுத்தியது. சர்வதேச முதியோர் தினம் முதன்முதலாக 1991 ஒக்டோபர் 1 ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. மேலும் முதியோர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைப்பிரகடனத்தை 1991 இல் பொதுச் சபை அங்கீகரித்தது.

உலக முதியோர் தினத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்காகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமன்றி சமூக, கலாசார, அரசியல் ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

இளையோருக்கு மட்டும்தான் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்றில்லை. வயதான மூத்த குடிமக்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். பாதுகாப்பு குறித்த அச்சம் இருக்கும். வயதானவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிமைகளையும் சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலேயே அக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக அளவில் 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிவிக் கப்படுகிறது.

சமூக நலன்புரி புள்ளி விபரங்களின் படி இலங்கையில் வயோதிபர்களின் தொகை துரிதமாக அதிகரித்துக் கொண்டு வருவதுடன் கிட்டத்தட்ட 10 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

2050 இல் சனத்தொகையில் அரைவாசிப்பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் மேலை நாடுகளின் கலாசாரத் தாக்கத்தால் இயந்திர வாழ்க்கையில் சிக்குண்ட மனிதன் தன் பெற்றோருடனும் முதியோருடனும் பேசும் நேரத்தைக்கூட குறைத்துக் கொண்டே வருகின்றான். பொருளாதார ரீதியிலான தன்னிறைவுக்கு அவன் தன்னை ஆட்படுத்துவதிலேயே தன் ஆயுளைக் கழிக்கிறான்.

கடந்த காலங்களில் உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்கள், சரித்திரப் புகழ் சாதனையாளர்கள் அனைவரும் முதியோரின் வழிகாட்டுதலிலும், அவர்களின் பராமரிப்பிலும் வளர்ந்தவர்களாகவே இருப்பார்கள். குறிப்பாக பாட்டிக் கதை சொல்வதற்கு ஒவ்வொரு வீட்டிலும் முன்பெல்லாம் தாத்தா, பாட்டி இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை அனுபவத்தை கதைகளாகத் தன் பேரன், பேத்திகளுக்கு கதைகளாக சொல்வார்கள்.

சிறு வயது முதலே இதுபோன்று கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைக்கு சிந்திக்கும் திறனும் ஆக்கத்திறனும் கூடும்.

வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்போமேயானால் ஒவ்வொரு சாதனையாளரின் ஆணி வேரில் அவர்கள் வீட்டுத் தாத்தா, பாட்டிகளுக்கு மாபெரும் பங்குண்டு. அதேபோல ஒரு குடும்ப அளவில் வழி நடத்தும் நல்வழிமுறைகளை தங்கள் அனுபவ ரீதியில் தன் குடும்பத்தாருக்கு போதித்து அந்தத் தலைமுறையை செழிக்க செய்வார்கள்.

ஆனால் இக்காலகட்டத்தில் குடும்ப வளர்ச்சிக்கு தூணாக இருந்தவர்களை அதாவது ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் தன் சக்தி, ஆற்றல், திறன் அனைத்தையும் பிரயோகித்த அம் முதியோர்களை தன் பிள்ளைகளே முதியோர் இல்லத்தில் சேர்ப்பது தான் வேதனையான விடயம். பத்துத் திங்கள் சுமந்து பாலூட்டி சீராட்டி வளர்த்த அன்னையையும், அன்பையும் அறிவையும் ஊட்டி வளர்த்த தந்தையையும் முதுமை என்ற பருவ நிலையைக் காரணம் காட்டி தங்கள் வாழ்வில் புறக்கணிப்பது ஒரு வகையில் துரோகமே. அது தங்கள் பிள்ளைகளின் எதிர்கால சாதனை வாழ்க்கைக்கு வைக்கும் கொள்ளி.

‘வீட்டின் பெயரோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்’ என்பதற்கேற்ப சமூகம் இயங்குகிறது. இந்நிலை முழமையாக ஒழிக்கப்பட வேண்டும். தன்னை கருவாக்கிய, உருவாக்கிய பெற்றோரைப் பேணிக் காத்து மனித வாழ்வின் புனிதத்தை அழியாது செய்ய வேண்டும்.

‘அம்மிக் கல்லுக்கு குழவி எவ்வளவு அவசியமோ அதுபோல வீட்டிற்கு ஒரு கிழவி அவசியம்’ என்பார்கள். ஏனெனில் வயதானவர்களின் அனுபவங்கள் இளைய தலைமுறையினருக்கு அவசியமானவை. ஆனால் எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கின்றனர்.

பெற்றோர்களையும் வயதானவர்களையும் பாரம் என்று கருதி முதியோர் இல்லங்களுக்கு கொண்டு போய் விட்டு விட்டு வந்து விடுகின்றனர். இதனால் தனிமையும் வெறுமையுமே மிஞ்சுகின்றன. பாதுகாப்பின்மை காரணமாக வயதானவர்களுக்கு மன அழுத்தமும் விரக்தியும் அதிகரிக்கின்றன.

எனவே வயதானவர்களையும் குழந்தைகளைப் போல பாவித்து அவர்களுக்குரிய சுதந்திரத்தையும் மதிப்பையும் அளிக்க வேண்டும்.

பெரியார்களைப் பேணுவது தொடர்பாக அல் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பலவாறாக கூறப்பட்டுள்ளன.

‘தாய் - தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவரோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்று கூடக் கூறாதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாக பேசுவீராக’ (திருக்குர் ஆன் 17 : 23)

‘எனக்கும் (அதாவது அல்லாஹ்வுக்கும்) உன்னுடைய தாய் தந்தையருக்கும் நன்றி செலுத்தி வருவாயாக’ (திருக்குர் ஆன் 31 : 1)

‘நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி அறிவுறுத்திக் கட்டளையிட்டுள்ளோம்’ (திருக்குர் ஆன் 31 : 14)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ‘சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவனும் பெரியோருக்கு மரியாதை செய்யாதவனும் என்னைச் சார்ந்தவனல்ல’ என்று கூறியுள்ளார்கள்.

மூத்தோருக்கு மரியாதை செய்தல் எனும் பண்பு நம் மத்தியில் தற்போது நலிவடைந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு முன்னால் அமர்வதற்கே இளம் வயதினர் தயக்கம் காட்டுவார்கள். இப்போதைய உயர் தொழிநுட்ப யுகம் மரியாதையைத் தூக்கி வெளியே வீசிவிட்டதோ எனும் கவலை எழுகிறது.

பிறருக்கு மரியாதை நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து தொடங்க வேண்டும். வெற்று வார்த்தைகளால் வரும் மரியாதைப் பூக்கள் தொட்டாச் சிணுங்கியைப் போன்றவை. சட்டென வாடிவிடும். உள்ளத்தில் வேர்விடும் மரியாதை விழிகளில் பூக்கும் போது இதயத்தையே வசீகரிக்கும் ஒரு புன்னகையில் இருந்தும் தொடங்கலாம் பிறருக்கான நமது மரியாதையை.

முதியோர்களின் நலன்களைப் பேணும் வகையில் இலங்கையில் சமூக சேவைகள் அமைச்சினால் முதியோர்களுக்கான தேசிய சபையும் மற்றும் செயலகமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொனிப் பொருட்களாக சுதந்திரம், பராமரிப்பு, பங்குபற்றுதல், தன்னிறைவு, கெளரவம் என்பன கொள்ளப்படுகின்றன.

இதன் பணிக்கூற்றானது முதியோர்களின் நலன்களை மேம்படுத்துதல். உரிமைகளைப் பாதுகாத்தல் என்பவற்றினூடாக அவர்கள் கெளரவமாகவும் கண்ணியமாகவும் சுதந்திரமாகவும் வாழ வழி அமைத்தல். சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் முதியோர்களுக்கான பங்களிப்பின் தேவையினை உணர்த்துதல் மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்தலாகும்.

முதியோர்களுக்கான தேசிய சபையும் மற்றும் செயலகமும் 2000 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க முதியோர்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் சட்டமூலத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தெற்காசியப் பிராந்தியத்தில் முதியோர் சனத்தொகை துரிதகதியில் அதிகரிக்கும் ஒரு நாடாக இலங்கை விளங்குகிறது. எனவே இச்செயலகமானது எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள முதியோர் சனத்தொகையினைக் கருத்திற் கொண்டு அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதனை நோக்காகக் கொண்டும் நிறுவப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி நிரம்பிய ஆரோக்கியமான முதுமையை இச் செயல்திட்டம் கொண்டுவர முனைகிறது.

உலக முதியோர் சனத்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் இலங்கையில் முதியோர் சனத்தொகை துரிதகதியில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. 2000 ஆம் ஆண்டில் 9.3% ஆக இருந்த முதியோர் சனத் தொகையானது 2050 ஆம் ஆண்டளவில் 27.6% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டி ருக்கின்றது.

முதியோர்கள் மிகுந்த அறிவு மற்றும் அனுபவம் நிறைந்தவர்களாக உள்ளனர். அபிவிருத்தி முன்னெடுப்பின் பகுதியாக அவர்களின் அறிவு மற்றும் திறமைகளை பரிமாறுவதனூடாக நாட்டின் அபிவிருத்திக்காக முதியோர் பங்களிப்பி னைப் பெற்றுக் கொள்வதனை நோக்காகக் கொண்டு இச் செயலகமானது நாடு பூராகவுமுள்ள முதியோர் சங்கங்களின் வலையமைப்பினை கட்டியெழுப்பியுள்ளது.

முதியோர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதை நாம் அவதானிக்கலாம். நீண்ட ஆயுள் ஒரு வகையில் வரப்பிரசாதமாக அமைந்தாலும் அவ்வாழ்க்கையானது அவர் சுகதேகியாக அநாவசிய அழுத்தங்கள் மற்றும் சமூக பொருளாதார தாக்கங்கள் அற்று வாழும் போது நீண்ட ஆயுள் ஓர் ஆசீர்வாதமாக அமைகிறது. இவ்வாறான நிலைமை எல்லோருக்கும் கைகூடுவதில்லை. ஏனெனில் 65 வயதிற்குள் இறப்போரை நோக்கும் போது அவர்கள் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, கொலஸ்ட்ரோல் அதிகரிப்பு போன்ற நோய்களினால் தாக்குண்டு இறப்பவர்களே அதிக மாயுள்ளனர்.

இத்தகைய கட்டத்தினை தாண்டி 65 வயதிற்கு மேல் வாழ்பவர்கள் இத்தகைய நோய்களின் வேறு தாக்கங்களை எதிர்நோக்குகின்றனர். பாரிசவாதம் இதற்கு நல்ல உதாரணமாகும். மேலும் புற்று நோய் போன்றவையும் ஏனைய நீண்ட நாள் நோய்களான நீரிழிவு, தொய்வு போன்றவற்றாலும் தாக்கமுறுகின்றனர்.

வைத்தியசாலைகளில் விசேட கிளினிக்குகளில் சிகிச்சை பெற வரும் நோயாளரில் காணப்படும் வயதானோரின் எண்ணிக்கைகளைக் கொண்டே இதனை மதிப்பிடலாம். அத்துடன் உடலின் மூளை நரம்பு மண்டலத் தேய்மானங்களால் ஏற்படும் நோய் நிலைகள் (உதாரணமாக PARKINSON’S SYNDROME, DEMENTIA) மற்றும் என்பு மூட்டு தேய்மானங்களால் உடல் இயக்கம் குறைவதனால் ஏற்படும் பாதிப்புகள் வயதானோரை தாக்குகின்றன.

இவற்றினை உற்று நோக்குமிடத்து வயதானோரில் சிலர் திடகாத்திரமான வர்களாக இருப்பினும் பெரும்பாலானோர் பாரிசவாதம், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் இயக்கக் குறைவினாலும் உடல் தொகுதிகளின் தேய்மானங்களினாலும் ஏற்படும் தாக்கங்களின் பாதிப்பு போன்றவற்றால் அவதியுறுகின்றனர்.

மேலும் தங்களை அறியாமலே மலம்மற்றும் சிறுநீர் கழிக்கும் நிலை, பெண்களில் கருப்பை கீழிறக்கம், உணர்வு உட்கொள்ளலில் மந்த நிலை ஆகியவற்றாலும் பாதிப்படைகின்றனர்.

எனவே நாளை நமது நிலையும் இதுதான் என்று நினைத்து முதியோர்களைப் பேணுவோம்.

அவர்களை என்றும் மதித்து நடப்போம். முடிந்தளவு உதவிடுவோமாக! நம் தலைமுறைகளின் விழுதுகளை தந்த ஆலமரங்களை தலை தாழ்த்தி வணங்குவோமாக!

அத்தோடு மட்டுமல்லாது ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்பும் ஆதரவும் தந்து அவர்களை ஆராதித்து மனிதம் காப்போம். இந்த நாளில் அதை உளமாற உறுதி மொழியாய் ஏற்போம்!

(நன்றி: தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com