Contact us at: sooddram@gmail.com

 

தமிழக ஊடகங்களும் படைப்பாளிகளும் எதிர்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு

தமிழகத்தில் காமராஜர் தலைமையில் அகில இலங்கை காங்கிரஸ் இயங்கிய வேளையில் பிரசாரக் கூட்டத்தில் பேசுவதற்காக நடிகை நாட்டியப்பேரொளி பத்மினி மேடையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது மேடைக்கு வந்த காமராஜருக்கு யார் அந்தப் பெண் என்பது தெரியாது. காமராஜர் சினிமாப் படம் பார்ப்பதில்லை. சினிமா இதழ்களும் படிப்பதில்லை. அதனால் மேக்கப் அலங்காரங்களுடன் வந்திருந்த பத்மினி அவருக்கு ஆச்சரியமாக இருந்தார். அருகில் நின்றவரிடம் யார் அந்த அம்மா? எனக் கேட்டார்.  அவர்தான் பிரபலமான சினிமா நடிகை. காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பேசுவதற்கு அழைத்துவரப்பட்டுள்ளார் எனச் சொன்னதும் - காமராஜர் அந்த அம்மாவுக்கு இங்கே என்ன வேலை. அவர்களுக்கு ஸ்ரூடியோவில்தானே வேலை அவர்களை போகச் சொல் என்றார். பத்மினியும் இறங்கிப் போய்விட்டார்.

கடந்த மாதம் சனிக்கிழமை 27ஆம் திகதி ஜெயலலிதா சம்பந்தமான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவரது அனைத்திந்திய அண்ணா தி.மு.க ஆதரவாளர்கள் நடத்தத் தொடங்கியிருக்கும் அராஜகங்களும் வன்முறைகளும் காமராஜரை இச்சந்தர்ப்பத்தில் நினைக்கச் செய்கின்றன.

1967இல் நடந்த சட்ட சபைத் தேர்தலில் காமராஜர் அவரது சொந்தத் தொகுதியான விருது நகரில் தோற்கடிக்கப்பட்டு அண்ணாத்துரையின் தலைமையில் தி.மு.க தமிழகத்தில் ஆட்சிபீடமேறியது.

அண்ணாத்துரை - கருணாநிதி - எம்.ஜி.ஆர். - எஸ்.எஸ்.ஆர் - நடிகவேள் எம்.ஆர்.ராதா - சிவாஜிகணேசன் - முரசொலி மாறன் உட்பட பலர் தமிழ் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புவைத்துக்கொண்டே அரசியலில் பிரவேசித்தனர்.

இவர்களில் நடிகவேள் எம்.ஆர்.ராதா தந்தை பெரியாருடனே தனது அரசியலை மட்டுப்படுத்திக்கொண்டவர். அதனால் அவர் பெரியார் போன்றே தேர்தல்களில் சட்டசபையில் நம்பிக்கை வைக்கவில்லை.

ஆரம்பத்தில் காங்கிரஸிலிருந்து எம்.ஜி.ஆர். தி.மு.க வுக்கும் தி.மு.க விலிருந்து சிவாஜி காங்கிரஸ¤க்கும் சென்றார்கள். எம்.ஜி.ஆர். தமது படங்களில் உத்தமனாகவும் கொடைவள்ளலாகவும் தாய்க்குலத்தின் தலைமகனாகவும் தன்னைக் காண்பித்தே மக்கள் திலகமாகவும் புரட்சி நடிகராகவும் பெயர் வாங்கினார்.

1967இல் பறங்கி மலையில் தேர்தலில் அவர் நின்ற பொழுது பெற்றால்தான் பிள்ளையா படம் தொடர்பான விவகாரத்தில் ராதாவினால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருந்து கொண்டே தேர்தலில் வென்றவர் எம்.ஜி.ஆர். ராதா சிறை சென்றார்.

தி.மு.க, பிரசார மேடைகளுக்கு தாமதமாகவே வந்து மக்களின் கவனத்தை எம்.ஜி.ஆர். ஈர்த்த பொழுது கருணாநிதிக்கு அவரது செயல் அண்ணாத்துரை காலத்திலிருந்தே எரிச்சலையூட்டியது.

எனினும் தங்கள் முகங்களுக்கு மக்கள் சில வாக்குகள்தான் அளிப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் முகத்துக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் வாக்களிப்பார்கள் என்று கருணாநிதி உட்பட கழகக் கண்மணிகளுக்கு அண்ணாத்துரை பாடம் எடுத்தார்.

எம்.ஜி.ஆரை அண்ணாத்துரை தமது தி.மு.க வின் வாக்கு வங்கியைப் பெருக்குவதற்காகவே தன்னோடு வைத்துக்கொண்டார்.

அண்ணாத்துரை மறைந்தபொழுது முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர் நாவலர் நெடுஞ்செழியன். ஆனால் பொதுக்குழுவில் கருணாநிதியை முன்மொழிந்தவர் எம்.ஜி.ஆர்.

அதன் பின்னர் தி.மு.க.வின் மூத்த தலைவர்களான பேராசிரியர் அன்பழகன் - நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு முதல்வர் பதவி என்பது எட்டாத கனியாகியே விட்டது.

கருணாநிதி சாணக்கியசாலி. ஆனால் அவரது சாணக்கியம் சிவாஜி - எஸ்.எஸ்.ராஜேந்திரன் - கண்ணதாசன் - நாவலர் - அன்பழகன் ஆகியோரிடம் பலித்தது போன்று எம்.ஜி.ஆரிடம் பலிக்கவில்லை. இது விடயத்தில் அண்ணாத்துரையின் வாக்கே பலித்தது. அதுதான் அவர் வர்ணித்த எம்.ஜி.ஆரின் முகம்.

எம்.ஜி.ஆர். தி.மு.க வின் பொருளாளர் பதவியிலிருந்து கொண்டே கருணாநிதியிடம் கணக்குக் கேட்டார். அன்று தொடங்கிய கணக்கு - ஊழல் விவகாரம் கடந்த 17 ஆம் திகதி ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புவரையில் தமிழகத்தின் தொடர் கதையாகிவிட்டது. சாபமாகவும் தொடர்கிறது.

அதன் அடுத்த அத்தியாயம் கனிமொழி - ராசாவிலிருந்து மீண்டும் தொடங்கும்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், என்றும் நான் ஆணையிட்டால் எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான். தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப்பான். என்றெல்லாம் திரையில் டி.எம்.எஸ்.ஸின் பின்னணியில் பாடிப்பாடியே எம்.ஜி.ஆர் தனது வாக்கு வங்கியை திரையுலகில் இருந்து கொண்டே மேலும் மேலும் பெருக்கினார்.

பறங்கி மலையிலிருந்து ஆண்டிப்பட்டி வரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே அவரது அலை பேரோசையுடன் எழுந்தமைக்கு கருணாநிதிதான் காரணம்.

கணக்கு கேட்டவரை கட்சிக்குள்ளே வைத்திருந்து கணக்கைக் காண்பித்து காரியம் சாதிக்கத் தவறிய கருணாநிதி அவரை வெளியே தள்ளினார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கோடிக்கணக்கில் முடக்கிவிட்டு அதனை மீண்டும் பெறுவதற்காக பொறுமை காத்திருந்த எம்.ஜி.ஆர். அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்று பத்திரிகையாளர்கள் அவரைத் தேடியபொழுது அவர் தமது சத்தியா ஸ்ரூடியோவில் மறைந்திருந்து தமது அந்தரங்க உதவியாளர் ஆர்.எம்.வீரப்பனுடன் மந்திராலோசனை மேற்கொண்டவாறு உலகம் சுற்றும் வாலிபன் எடிட்டிங்கிலேயே முழுக்கவனமும் செலுத்தினார்.

அந்தப் படம் வெளிவராது என்றும் எம்.ஜி.ஆர் அதில் நடித்த லதா என்ற நடிகையுடன் வாழ்க்கை தொடங்கிவிட்டார் என்றும் கருணாநிதியின் ஆதரவாளர்களும் கருணாநிதி ஆதரவு ஏடுகளும் வதந்திகளை பரப்பினர்.

எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபனை திரையிட்டு விட்டு பத்திரிகையாளர் சந்தி ப்பை நடத்தி அண்ணா தி.மு.க. உதயம் என்று அறிவித்தார்.

அடுத்து நடைபெறவிருந்த திண்டுக்கல் இடைத் தேர்தலின் மாயத்தேவரை நிறுத்தி அறுதிப் பெரும்பான்மையுடன் கட்சிக்கு உயிரூட்டினார். அடுத்து அவரது கனவு தமிழக முதல்வர் ஆசனமாகவே இருந்தது.

தி.மு.க.வினர் தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும். மலையாளி வேண்டாம் என்றெல்லாம் பிரதேசவாதம் கக்கினர். இதனையெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தவர்தான் கருணாநிதி.

எம்.ஜி.ஆர். தமது அரசியல் பிரவேசத்தினா லும் தாம் ஏற்ற முதலமைச்சர் பதவியினாலும் மேலும் சில சினிமா நடிகர்களிடம் முதலமைச்சர் கனவை விதைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அதில் இதுவரையில் தேறியவர்கள் தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும் ஆந்திராவில் என்.ரி.ராமராவும் மாத்திரமே.

ஆனால் அந்தக்கனவில் தொடருபவர்கள் விஜயகாந்த் - சரத்குமார் ஆகியோர், நடிகர்கள் கார்த்திக், டி. ராஜேந்தர், ராமராஜன், பாக்கியராஜ் ஆகியோர் பாதிவழியில் நின்றுவிட்டனர்.

எம். ஜி. ஆர். காலத்துக்காலம் தனது கதாநாயகிகளை திரையில் மாற்றிக்கொண்டிருந்தவர்.

ஆரம்பத்தில் வி. என். ஜானகி, (இவர் கணபதிபட் என்ற நாடக திரைப்பட நடிகரின் முன்னாள் மனைவி) கணபதிபட்டை பிரிந்து வந்து எம். ஜி. ஆருடன் இணைந்துகொண்டார்.

மணிரத்தினத்தின் இருவர் படத்தில் எம். ஜி.ஆர். (மோகன்லால்), கருணாநிதி (பிரகாஷ் ராஜ்), ஐஸ்வர்யா ராய் (ஜெயலலிதா) கெளதமி (ஜானகி) மற்றும் கருணாநிதியின் இரண்டு தாரங்களாக இரு வேறு நடிகைகள் தி.மு.கவின் தோற்றம் அண்ணா தி.மு.க வின் உதயம் ஆகியன மிகவும் நுட்பமாக பதிவாகியிருக்கின்றன.

ஜானகி எம். ஜீ. ஆரின் துணைவியாக அறிவிக்கப்பட்டதும் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அதன் பின்னர் பானுமதி அவருக்குப்பின்னர் சரோஜாதேவி (சரோஜா தேவியுடன் எம். ஜி. ஆர். இணைந்து பல படங்களில் நடித்தபொழுது எங்கவீட்டுப்பிள்ளை இலங்கையிலும் தமிழகத்திலும் வெளியான ஒரே காலப்பகுதியில் எம்.ஜி.ஆர். தம்முடன் இலங்கைக்கு அழைத்து வந்தது சரோஜா தேவியைத்தான்.)

சரோஜாதேவிக்குப்பின்னர் பந்துலுவின் ஆயிரத்தில் ஒருவன் முதல் ஜெயலலிதா. அதன் பின்னர் மஞ்சுளா பின்னர் லதா என்று வருடாந்த ஒப்பந்த நடிகைகளாக மிளிர்ந்தனர்.

இவர்களில் ஜெயலலிதா மாத்திரமே தன்னை அரசியலில் வளர்த்துக்கொண்ட ஆளுமையுடைய பெண். அதற்கு அவரது ஆங்கில கல்வி பின்புலமும் பலமாக இருந்தது.

அவரது தாய் சந்தியா எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் நடிக்கும் காலத்தில் ஜெயலலிதா குழந்தை. தாயுடன் படப்பிடிப்பு தளங்களுக்கு வரும்பொழுது சிறுமியாக இருந்தவர் காலப்போக்கில் எம். ஜி. ஆர், சிவாஜியுடன் இணைந்து கதாநாயகி அந்தஸ்து பெற்று திரையுலகில் உயர்ந்தவர்.

மலையாள நடிகர் சோபன் பாபுவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டபொழுது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்தும் அவருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர். ஒரு கட்டத்தில் சோபன் பாபுவுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்ய முயன்றார். அவரை மருத்துவமனையில் பார்த்து தமது பாதுகாப்பிலேயே வைத்துக்கொண்டார். அன்று முதல் ஜெயலலிதாவின் இதய தெய்வமானார் எம்.ஜி. ஆர்.

அண்ணா தி.மு.கவில் தமது மனைவி ஜானகிக்கும் கூட வழங்கா விசேட அனுமதியை ஜெயலலிதாவுக்கு வழங்கி கொள்கை பரப்புச் செயலாளராக்கினார்.

எம்.ஜி.ஆர். முதல்வர் ஆசனத்தில் அமர்ந்தபொழுது அந்த நாற்காலியின் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்று தமது நன்றியுணர்வை வெளிப்படுத்தினார்.

அதுபோன்று ஜெயலலிதா முதலில் அமர்ந்த நாற்காலியின் நான்கு கால்களும் எம்.ஜி.ஆர். தான் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.

ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாகவிருந்தபோதிலும் அவருக்கு விசுவாசமாக அவர் நடந்தவரில்லை என்பதற்கும் பல சம்பவங்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவை விட்டுவிட்டு அவர் மஞ்சுளாவுடனும் லதாவுடனும் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பிற்காக ஜப்பானில் நடந்த எக்ஸ்போ 70 உலகக்கண்காட்சிக்கு சென்றபொழுது அதனை முறையிட கருணாநிதியை நாடியவர் ஜெயலலிதா. பின்னாளில் அண்ணா. தி.மு.க கொ.ப.செயலாளராக இருந்து கொண்டே ராஜிவ்கந்தியிடம் எம்.ஜி.ஆர். பற்றிய புகார்களை அடுக்கியவர்.

ஏற்கனவே ஆண்களினால் வஞ்சிக்கப்பட்ட ஜெயலலிதா தன்னிடம் ஆண்கள் நெருங்காமலிருக்க பார்த்துக்கொண்டார்.

ஆண்கள் அவர்கள் எந்தப்பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களை தன்னிடம் அண்டவிடாமல் பார்த்துக்கொண்ட அதே சமயம் அந்த ஆண்கள் தனது காலில் விழுந்து எழுவ தையும் அங்கீகரித்தவர்.

இலங்கை அரசியலிலும் இலங்கை இனப்பிரச்சினையிலும் புலிகள் விடயத்தில் அவருக்கு இரண்டு முகங்கள் அல்ல. பல முகங்கள். சமகாலத்தில், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளுக்கு தேறுதல் சொன்ன நாட்கள் பறந்து செல்வதற்கு முன்னர் தமது சொத்துகுவிப்பு வழக்கில் தோன்றும்பொழுது புலிகளினாலும் தமக்கு ஆபத்துவரலாம் என்று கூடுதல் பாதுகாப்பு கோரியவர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது அவரைச்சந்திக்க விரும்பிய வடமாகாண சபை முதல்வர் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு கடந்த 27ஆம் திகதிக்குப்பின்னர் புதிய ஞானம் பிறந்திருந்தால் அதில் ஆச்சரியமில்லை.

சுதாகரன் விவகாரம்

சிவாஜி கணேசன் சினிமாவிலும் அரசியலிலும் ஈடுபட்டிருந்த பொழுதிலும் தமது குடும்பத்தினரைப்பொறுத்தவரையில் அவர்களுக்கு திருமண சம்பந்தங்களை சினிமா பிரபலங்களுடனும் அரசியல் பிரமுகர்களுடனும் விரும்பவில்லை. அவரது தி.நகர் அன்னை இல்லம் கூட்டுக்குடும்ப அமைப்பில் வாழ்ந்தது.

ஜெயலலிதாவுடன் பல படங்களில் இணைந்து நடித்த சிவாஜிக்கு ஜெயலலிதா அரசியலில் ஆர்வம் இருந்ததில்லை. சினிமாவுடன் மாத்திரம் அவருடானன உறவை மட்டுப்படுத்திக் கொண்டவர்தான் சிவாஜி.

சசிகலாவின் உறவு முறைப்பையன் சுதாகரனையும் தனது பினாமிகளில் ஒருவனாக்கிக் கொண்ட ஜெயலலிதா அவனுக்கு சிவாஜி குடும்பத்திலேயே வரன் தேடினார்.

காலப்போக்கில் சசிகலா தோழியின் சகவாசத்தினால் ஜெயலலிதா மட்டுமல்ல எதிர்பாராதவிதமாக சிவாஜியின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர்.

சுதாகரன் தனது வளர்ப்பு மகன் எனச்சொல்லிக்கொண்டே சாந்தநாயகி, நாராயண சாமியுடன் திருமண பேச்சுக்களைத் தொடர்ந்தார் ஜெயலலிதா. அந்த பண பலம் அரசியல் பலத்திற்கு நடிகர் திலகம் மயங்காவிட்டாலும் அவரது மகளும் மருமகனும் அந்த வகையில் சிக்கினார்கள்.

சிவாஜி அந்த சம்பந்தத்தை விரும்பவில்லை. தமது பேத்திக்கு வேறிடத்தில் வரன் பார்க்கவே விரும்பினார். ஜெயலலிதாவின் இயல்புகளை நன்கு அறிந்தவர் சிவாஜி. ஆனால் தங்கள் குடும்பமும் உயரவேண்டும் தங்களையும் வெளியுலகம் விழியுயர்த்திப்பார்க்க வேண்டும் என்று சாந்த நாயகியும் நாராயணசாமியும் சிவாஜியுடன் வாதிட்டு அவரை சம்மதிக்க வைத்தனர்.

இறுதியில் அவரது மகளும் மருமகனும் விரும்பியவாறே அந்தத்திருமணம் கோடிக்கணக்கான செலவில் முழு இந்தியாவுமே வியக்கும் வண்ணம் நடந்தேறியது. ஜெயலலிதாவை தொடர்ந்து ஆதரிக்கும் துக்ளக் சோவும் அந்தத் திருமணத்தை சபிக்கப்பட்ட திருமண விழா என்றே வர்ணித்தார். இறுதியில் சபிக்கப்பட்ட வாழ்வாகிப்போனது சிவாஜியின் பேத்தியின் வாழ்வு.

சிவாஜி நோயுற்றார். சுதாகரனுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிணக்கு வந்தது. சுதாகரன் கைதானான். அவனது மனைவி சிவாஜியின் பேத்தி சிவாஜியின் காலில் விழுந்து கதறினாள்.

திரையில் தமது நடிப்பில் அத்தகைய வாழ்வை பல முறை கண்ட சிவாஜி தமது பேத்தியின் வடிவில் அப்படி ஓர் அதிர்ச்சி வரும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்.

இறுதியில் அந்த தீராத சோகத்துடனேயே சிம்மக்குரலோன் நிரந்தரமாக உலகைவிட்டு விடைபெற்றார்.

நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா?

ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்து அவர் சிறைக்குச் சென்றதும் அறிக்கைகள் விடும் வைக்கோ - ராமதாஸ் - விஜயகாந்த் ஆகியோர் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்ட குறிப்பிட்ட 18 வருட காலத்தில் எத்தனை முறை ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தேர்தல்களில் ஈடுபட்டனர் என்பதை குறிப்பிட்ட காலகட்ட பத்திரிகைகளையும் இதழ்களையும் தேடி எடுத்து புரட்டிப்பார்க்கலாம். அல்லது பாதுகாப்பாக இருக்கும் தொலைக்காட்சி செய்திகளின் தொகுப்புகளை தூசி தட்டி எடுத்துப்பார்க்கலாம்.

இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவுடன் கூட்டுவைத்துக் கொண்ட குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது தெரியவில்லையா?

தெரிந்திருப்பதனால் நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா....? சொல்லுங்கள் எனக் கேட்கத் தோன்றுகிறது.

2012 இல் பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி முதல் ஏனைய பிரதேசங்களிலும் நிகழ்த்திய வன்முறைகளில் சேதமாக்கப்பட்ட சொத்துக்களை மதிப்பிட்டு அதனை ராமதாஸ¤ம் அவரது மகன் அன்புமணியும் அவர்களின் அடியாள் காடுவெட்டி குரு உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் நட்டஈடு தரவேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. கடந்த 27 ஆம் திகதி தீர்ப்பின் பின்னர் ஜெயலலிதாவின் அண்ணா. தி.மு.க அடியாட்கள் மேற்கொண்டுள்ள வன்முறைகளையும் கணக்கில் எடுத்து அந்தக் கட்சியே அதற்கான நட்டஈட்டை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறல் வேண்டும் அல்லது அண்ணா தி.மு.க.வின் அசையும் அசையா சொத்துக்களை சீல்வைத்து முடக்க வேண்டும்.

அப்படிச் செய்தால்தான் வன்முறைகளில் ஈடுபடும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு புத்தி வரும். தாம் பயணித்த தமது குழந்தைகள் பயணிக்கும் பஸ் வண்டிகளை - பொதுமக்களின் தேவைக்காகவே இயங்கும் வர்த்தக நிலைங்களை தாக்குபவர்க ளுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

தி.மு.க பாட்டாளி மக்கள் கட்சி - அண்ணா தி.மு.க உட்பட பல தமிழக கட்சிகளின் அடியாட்கள் தமது ஆத்திரத்தை பொதுச் சொத்துக்களிலேயே காண்பித்து வருகின்றனர். இந்தக் கலாசாரத்திற்கு வித்திட்ட பெருமை தி.மு.கவையே சாரும்.

ஒருபுறம் தனிமனித - வழிபாடு மறுபுறம் கட்அவுட் கலாசாரம் சினிமாவையும் சீர்கெட்ட அரசியலையும் இணைத்துக்கொண்டு தொடரும் அராஜகங்கள் முதலானவற்றை தமிழகத்திலிருந்து முற்றாக ஒழிக்காதவரையில் தமிழகத்திற்கு விடிவே இல்லை.

தமிழக ஊடகங்கள் தமிழக மக்களுக்கு சிறந்த வழியை காண்பிக்க வேண்டும். இல்லையேல் காமராஜர் அன்றே சொன்னதுபோல் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது தமிழக அரசியல் வரலாற்றில் நிரந்தர அடையாளமாகிவிடும்.

யார் மீதும், ஆதாரம் இல்லாமல்,

நான் குற்றம் சுமத்துவதில்லை

- சுப்பிரமணிய சு.சாமி

யார் மீதும், ஆதாரம் இல்லாமல், நான் குற்றம் சுமத்துவதில்லை. வழக்கு போடுவதுமில்லை என்பது, ஜெயலலிதா மீது நான் தாக்கல் செய்த, சொத்துக் குவிப்பு வழக்கிலும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த தீர்ப்பை கண்டு யாரும் வருத்தப்படவோ, வேதனைப்படவோ தேவையில்லை. செய்த தவறுக்குத் தான், கோர்ட் தண்டனை விதித்து இருக்கிறது. இந்த வழக்கின் போக்கை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், தெளிவாக ஒரு விஷயம் புரியும். துவக்கத்திலேயே, இந்த வழக்கில் தனக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என ஜெயலலிதா புரிந்து கொண்டு விட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com