Contact us at: sooddram@gmail.com

 

முப்பதாவது நினைவுதினம் இன்று அனுஷ்டிப்பு

காலத்தால் அழியாத தமிழறிஞர் தவத்திரு தனிநாயகம் அடிகளார்

ழத்தில் தமிழ் மொழியை உண்மையாக வளர்த்தவர் களின் பெருமைகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்பவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ளவேண்டியது மிக முக்கியமானதொன்றாகும். இருக்கும் போது பெரியவர்களின் பெருமைகளை பாராட்டாமல் விட்டுவிட்டு அவர்கள் இல்லாத போது அவர்களின் இழப்புக்கள் உணரப்படும் சமுதாயமாக ஈழத்துச் சமுதாயம் உள்ளமை யாரும் மறுக்க முடியாத ஒரு உண்மையே. தமிழர்கள் என்றால் யார்? அவர்கள் எவ்வாறு தமிழர்கள் எனப்படுகின்றனர். தமிழ் மொழியின் சீரியங்கள் என்ன என்பவை குறித்து எப்போதோ வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. பல ஈழத்துபெரியவர்களும் இதைச் சர்வதேச ரீதியில் கொண்டுசென்று மற்ற மொழிக்காரர்களுக்கும் தமிழ் மொழியினை பற்றி ஆராய்ச்சிகளை சமர்ப்பித்து புரியவைத்து, ஏனைய மொழி அறிஞர்கள் தமிழ் மொழி, தமிழர்கள் ஆகிய விடயங்கள் பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு தமிழ் மொழியின் சீர்மைகளை தொகுத்து தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளனர்.

இந்த ஈழத்துத் தமிழ் அறிஞர்களில் தனிநாயகம் அடிகளார் மறந்துவிட முடியாத ஒருவர். கண்டதற்கெல்லாம் நினைவு விழா எடுக்கும் ஈழத்து தமிழ் மக்கள் இத்தகைய தமிழ் அறிஞர்களின் நினைவுகளை மறந்துபோயுள்ளது வேதனையானதே. இன்று செப்ரெம்பர் மாதம் முதலாம் நாள் தனிநாயகம் அடிகளாரின் 30ஆவது ஆண்டு நினைவு நாளாகும்.

நெடுந்தீவைச் சேர்ந்த நாகநாதன் கணபதிப்பிள்ளை ஹென்றி ஸ்ரெனிஸ்லெஸ், கரம்பொன் சிசில் இராசம்மா தம்பதிகளுக்கு 02.08.1913 இல் அடிகளார் பிறந்தார். சேவியர் என்ற திருமுழுக்கு பெயர்கொண்ட இவர் யாழ்ப்பாணத்திலுள்ள புனித அந்தோனியார் ஆங்கிலப் பாடசாலை, புனித சம்பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப கல்வியை கற்ற இவர் 1931 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருத்துவ கல்லூரியில் சேர்ந்து பின்னர் கொழும்பு புனித பேர்னாட் குருத்துவக் கல்லூரியிலும் குருத்துவக் கல்வியை கற்றார். பின் உரோம நகரத்து குருத்துவப் பல்கலைக்கழகத்தில் கற்று கலாநிதிப் பட்டம் பெற்றார்.

1938.03.19 இல் உரோமாபுரியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் தனது சேவியர் என்ற திருமுழுக்குப் பெயருடன் தனது தந்தையாரின் பரம்பரை மரபுப் பெயரான தனிநாயகம் என்பதை இணைத்துக்கொண்டார். பின் 1938.09.29 அன்று நெடுந்தீவில் புனித சவே ரியார் ஆலயத்தில் முதல் திருப்பலியை நிறை வேற்றினார்.

1940-1945 காலப்பகுதிகளில் தமிழ்நாடு வடக்கன்குளம் புனித குழந்தை யேசு திரேசம்மாள் உயர்தர பாடசாலையில் துணை அதிபராக கடமையாற்றிய இவர் தூத்துக்குடி திருமறை ஆயர் மேதகு கபிரியேல் பிரான்சிஸ் திபூர் சியூஸ் றோச் ஆண்டகையின் திருமறை மாவட்டத்திலும் பணியாற்றினார்.

1945-1947 இல் தமிழ்நாடு அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் பின்னர் அங்கேயே ஆராய்ச்சி புலமையாளராக கல்வி கற்றார். அக்காலப் பகுதியில் தூத் துக்குடி தமிழ் இலக்கிய கழகத்தை அமைத்து பல நூல்களை வெளியிட்ட இவர் 1949ம் ஆண்டு “Nature in Ancient Tamil Poetry” என்ற ஆராய்ச்சி கட்டுரையை எழுதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இலக்கிய முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பின் தமிழ்த் தூதின் முதற்படியாக வட, தென் அமெரிக்காவிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் சமூக சபைகளிலும் ஜப்பானிலும் தமிழ்மொழியினதும் தமிழினத்தினதும் பெருமைகளை எடுத்துக்கூறி விரிவுரைகள் நிகழ் த்தினார்.

சென்னைத் தமிழ்வளர்ச்சிக் கழகம் யாழ்ப்பாணத்தில் நடத்திய தமிழ் விழாவில்சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள்என்ற பொருளில் சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் தலைமையில் சொற்பொழிவாற்றிய இவர் 1952ம் ஆண்டு முதல் தமிழர் பண்பாடு Tamil Culture என்ற ஆங்கில சஞ்சிகையை தனது தூத்துக்குடி தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் ஆரம்பித்தார். இதனால் தொடர்பற்றிருந்த தமிழியல் அறிஞர்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும் கருத்துக்களை வெளியிடவும் நல்வாய்ப்பு ஏற்பட்டது.

தமிழர் பண்பாட்டின் பெருமையை உலகம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்துதொல் தமிழ் கவிதையின் இயற்கை, செவ்விய இலக்கிய காலத் தமிழர், மனித நேயம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

அதே காலப்பகுதியில்தமிழ்த்தூதுஎன்ற நூலையும் வெளியிட்ட இவர் கத்தோலிக்க தமிழ் எழுத்தாளர் சங்கம் நிறுவி விழா எடுத்தார். இவ்விழாவில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பற்றி எழுதும் நூலுக்கு ரூபா 1000 பரிசு வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகத்து கல்வித்துறை விரிவுரையாளர் பதவியை ஏற்ற இவர் கொழும்பில் தமிழர் பண்பாட்டுக்கழகத்தை உருவாக்கினார்.

1954-1955ம் ஆண்டுகளில் இங்கி லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுக ளிலும் தென் கிழக்காசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனே சியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் தமிழ்த் தூதையும் கல்விச் சுற்றுலாக்களையும் மேற்கொண்டார்.

1955-1957ம் ஆண்டுகளில் லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப் படிப்பு மேற்கொண்ட இவர் Ancient European and Indian Systems of Education Compared with Special Reference to Ancient Tamil Education என்ற ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதினார்.

பின் பல உலகநாடு களுக்கும் தமிழ்த்தூது சென்ற இவர் 1961ம் ஆண்டு மலேசியப் பல்க லைக்கழகத்தில் இந்திய கலைகள் பிரிவின் தலை வராகவும் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

1964 தைத்திங்களில் டில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை ஆய்வாளர் மாநாட்டில் தமிழகமும் தமிழ்மொழியும் புறக் கணிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் புண்பட்ட தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தாய்த்தமிழுக்கான உலகளாவிய கருத்தரங்கம் அல்லது மாநாடு ஏன் நடத்தக்கூடாதென விவாதித்ததன் விளைவாக அங்கிருந்த அறிஞர்களை ஒன்றுதிரட்டி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை முன்னின்று ஆரம்பித்தார்.

1961ம் ஆண்டு முதல் தமது இறுதி மூச்சுவரை அடிகளார் மன்றத்தின் செயலாளராகவே இருந்து மாண்புறச் செயற்பட்டார்.

1967 இல் நடைபெற்ற 27வது கீழ்த்திசை ஆய்வாளர் மாநாட்டின்போது இம்மன்றம் யுனெஸ்கோ ஆதரவுபெற்ற அமை ப்பாக மாற்றப்பட்டது.

1966ம் ஆண்டு சித்திரையில் அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றத்தின் முதலாவது மாநாடு மலேசிய நாட்டு அரசின் முழு ஒத்துழைப்போடு கோலாலம்பூரில் நடைபெற்றது. 1968 தையில் இரண்டாவது மாநாடு சென்னையிலும் 1970 இல் மூன்றாவது மாநாடு பாரிசிலும் நடைபெற்றது. பின் 1974ம் ஆண்டு அனைத்துலக தமிழாராய்ச்சியின் நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இறுதியாக வேலணையில் இடம் பெற்ற வான்புகழ் வள்ளுவர் விழா வில்கண்களில் ஒளி மங்குகின்றது. கைகளோ நடுக்கம் கொள்கிறது. ஆனால் என் நினைவெல்லாம் தமிழின் மீது தவழ்ந்துகொண்டிருக்கி றதுஎன்று தமிழின் மீது கொண் டிருந்த பற்றையும் பாசத்தையும் பறைசாற்றிய அடிகளார் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் உள்ள ஞான ஒடுக்க இல்லத்தில் 1980 செப்ரெம்பர் முதலாம் நாள் இறையடி சேர்ந்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com