Contact us at: sooddram@gmail.com

 

அரசாங்கத்தின் பலமும் எதிர்த்தரப்பின் பலவீனமும்

18 ஆவது அரசியல் திருத்தம் எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 3 இல் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுள்ள நிலையில், அது தங்கு தடையின்றி நிறைவேற்றப்பட்டு விடும் என அரசாங்கத் தரப்பு உறுதியாக நம்புகிறது.

அரசாங்கத்துக்கு 3 இல் 2 பெரும்பான்மை தேவை என்ற காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல சிறுபான்மைக் கட்சிகளின் முக்கியத்துவம் மிளிர்ந்து காணப்பட்டது. எனினும், இந்த நிலைமையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடைத்தெறிந்து விட்டது.

திடீரென கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடம் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள 18 ஆவது அரசியல் சீர்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதாகத் தீர்மானம் வெளியிட்டது. இதனையடுத்துப் பாராளுமன்றத்தில் 3 இல் 2 பெரும்பான்மை ஆதரவைப் பெறுவது உறுதியான நிலையில் அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளைக் கண்டுகொள்ளாத நிலை ஏற்படலாம் என அரசியல் ஆய்வுத்தரப்பில் எதிர்வு கூறப்பட்டது.

பெரும்பான்மைப் பலம் எட்டப்பட்டுள்ள நிலையில , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தேவை அரசாங்கத்துக்கு எந்த அளவில் என்பதே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமன்றி, ஏனைய பல சிறுபான்மைக் கட்சிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டன. ரணில் விக்கிரமசிங்கவும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தாலும் ஏற்கனவே ஐக்கிய தேசிய முன்னணியுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் பாராளுமன்றச் செயற்பாடுகளில் தனித்து இயங்க அதில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கு உரிமை இருக்கிறது.

இதன் அடிப்படையிலேயே தமது தீர்மானம் அமைந்ததாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அடுத்தடுத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் அமைப்புக்கு ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

கட்சியின் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதரின் வழியைத் தொடர்ந்து அவர்கள் அரசாங்க சார்பாகச் சென்று கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அப்துல் காதர் கருத்துத் தெரிவிக்கும்போது, அரசாங்கத்தின் அரசியலமைப்பு சிறுபான்மை மக்களுக்கு சாதகத்தன்மையைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது, முன்வைக்கப்படவுள்ள அரசியல் அமைப்புக் குறித்த நீங்கள் முன்னதாக அறிந்துகொண்டதன் பின்னரா அதற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தீர்கள் எனக் கேட்கப்பட்டது. எனினும், இதற்குப் பதில் வழங்க மறுத்த அவர், தற்போது அதற்கான பதிலைக் கூற முடியாது என விலகிக் கொண்டார்.

இது அவர் 18 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பிலான விடயங்களை அறியாமலேயே அதற்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை அப்துல்காதர் மேற்கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். சிலர் இன்றும் அது குறித்துத் தீர்மானம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இவ்வாறு அரசியல் அமைப்புக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அறிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களைக் கட்சியில் விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைமேல் வெள்ளம் போன நிலையில், சானையும் முழத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி பிடித்துக் கொண்டுள்ளதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அரசியல் திருத்தத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, ஜனாதிபதியின் பதவிக்காலம் போன்றவற்றையே முன்னிலைப்படுத்துகிறது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் சிறுபான்மை மக்களுக்குக் கிடைக்கின்ற தீர்வு அடிப்படையிலேயே தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தமது இறுதித் தீர்மானத்தை அறிவிக்காத நிலையில், அதன் தீர்மானம் இதுவென உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. எனினும், இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இது குறித்து புதிதாகத் தீர்மானிக்க ஒன்றும் இல்லை எனவும் அதனை எதிர்ப்பதாக ஏற்கனவே தீர்மானமாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் 18 ஆம் அரசியல் திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்கும் என நம்பலாம். எனினும், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான தமிழ்க் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது தொடர்பில் இலகுவாக தீர்மானத்துக்கு வந்துவிட முடியாது என்பதே உண்மை. அரசியல் அமைப்பை எதிர்ப்பினும் அதற்கு ஆதரவளிப்பினும் இந்த இரண்டு செயற்பாடுகளுக்கும் தகுந்த விளக்கம் தரவேண்டிய நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது.

அரசாங்கத்துக்குப் பெரும்பான்மைப் பலம் கிடைத்துள்ள நிலையிலும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கட்டம்கட்டமாக அரசியல் யாப்புக்கு ஆதரவை வெளிப்படுத்துகின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகரான மற்றுமொரு பிரதான சிறுபான்மைக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் யாப்பை ஆதரிக்கின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இது தொடர்பிலான தீர்மானத்தை சர்வதேசம் எதிர்பார்க்கிறது.

இதன் அடிப்படையில் கூட்டமைப்பின் தீர்மான வெளியீடு என்பது அரசாங்கம் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பாரிய தாக்கம் ஏற்படுத்தாது எனக் கருதப்பட்டாலும் காரம் குறையாதிருக்கிறது.

அரசியல் திருத்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வெளிப்படுத்தும் நிலையில், அது தமிழ் சமூகம் தொடர்பில் அரசாங்கத்துக்குத் திருப்தியை ஏற்படுத்தும் எனினும் அது தமிழ் சமூகத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திவிடும். எனவே, கூட்டமைப்புத் தீர்மானம் எடுப்பதில் பாரிய ஆலோசனைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னெடுப்பு என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதன் பின்னர் கூட்டமைப்பு அரசாங்கம் ஓரங்கட்டுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்து வருகிறது.

இந்த நிலையில், எவ்வாறான சூழ்நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இல்லாத அல்லது இணைத்துக்கொள்ளப்படாத அரசியல் தீர்வு ஒன்றை அரசாங்கத்தினால் முன்வைக்க முடியாது. அவ்வாறு முன்வைக்கப்பட்டாலும் அதனை சர்வதேசம் குறிப்பாக இந்தியா ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் இன்றி தனியான ஒரு தீர்மானத்தை எடுத்து இதுதான் அரசியல் தீர்வு என்று அரசாங்கம் முன்வைக்குமாக இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை காணப்படாது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னெடுப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நிலையான அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படத் தயார் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தியா செல்லும் எந்தவொரு இலங்கை அரசியல் தலைவரினதும் கருத்து அதுவாகவே இருந்து வருகிறது. இது, ஏறத்தாழ அரசியல் திருத்த விடயத்தில் தோற்றுப்போன நிலையில், எதிர்காலத்தில் அரசியல் தீர்வு விடயத்தில் இணைந்து செயற்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பாக இருக்குமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

எவ்வாறாயினும , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சிங்கள பெரும்பான்மைக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காது எனக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி எதிர்க்கட்சிக்கும் பொருந்தும் என்ற நிலைப்பாட்டை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எந்தவொரு சிங்களக் கட்சியுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டணி அமைக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அரசியல் திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருக்கின்ற போதும் அதனுடனான தமது பேச்சுவார்த்தைகளில் சிக்கல் இருக்காது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சுமந்திரனின் தகவல்படி ஏற்கனவே இரண்டு கட்சிகளுக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலும் அவசர தீர்மானம் ஒன்றுக்கு வந்துவிட்டோமோ? என்ற கருத்து நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படலாம் என்ற எதிர்பார்ப்பைத் தோற்றுவிக்கிறது. இந்த நிலையில், தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது.

அரங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் பேச்சுவார்த்தை தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளவில்லை. அதற்கான அழைப்பு கிடைக்கவில்லை எனக் கூட்டமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே அதற்கான அழைப்பிதழை நேரில் சென்று வழங்கவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மீதான நம்பிக்கையீனமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதன் கூட்டங்களில் பங்கேற்கத் தயங்கச் செய்கிறது எனக் கூறலாம். அரங்கத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளும் உள்ள நிலையில், இது அரசாங்கத்தின் சூழ்ச்சியாக இருக்கலாம் என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது.

இந்தச் சந்தேகம் தீருவதற்குக் கொள்கை ரீதியாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் இணைந்து செயற்படும் நிலைமை மிகவும் குறைவாகவே காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து எதிர்க்கட்சியாகச் செயற்படலாம் என்ற நிலை காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(தினக்குரல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com