Contact us at: sooddram@gmail.com

 

விடுதலைப் போராட்டம் அழிவுப் பாதையில் செல்லத் தொடங்கிய வேளையில் அரியதோர் வாய்ப்பாக அமைந்த இந்தியஇலங்கை உடன்படிக்கை

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் அரசியலுரிமை குறித்த தெளிவான சிந்தனைகளை கொண்டிருந்தவர்கள் இருந்த போதிலும் அதற்கான ஒரு ஒன்றுபட்ட ஆயுதப் போராட்டத்தை இணைந்து நடத்துவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து போதிய அளவில் எவரும் முன்வந்திருக்கவில்லை.

இதன் காரணமாகவே அன்றைய சூழலில் நாம் சிங்கள முற்போக்கு சக்திகளோடு உறவுகளை வைத்துக்கொண்டிருந்தாலும் தனியான ஆயுதப் போராட்டத்தையே நடத்த தொடங்கியிருந்தோம்.

ஆனாலும், ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாக ஒன்றுபட்டு நிற்பதை மறுத்து போராட்டக் களத்தில் அர்ப்பண உணர்வுகளோடு நின்றிருந்த ஆயிரக்கணக்கான சக இயக்க போராளிகளையும், சக இயக்கத் தலைவர்களையும் புலிகளின் தலைமை தெருத்தெருவாக கொன்றொழித்தபோதுதான் எமது போராட்டம் செல்ல வேண்டிய பாதையை விட்டு விலகி திசை மாறிச் செல்லச் தொடங்கியது.

தமக்கு எதிராக போராடுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கொண்டு வந்திருந்ததை போலவே புலிகளின் தலைமையும் அன்றைய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சகல விடுதலை அமைப்புகள் மீதான தடையினை விதித்திருந்தது.

புலிகளின் தலைமை ஏற்படுத்தியிருந்த இந்தத் தடையானது அன்றைய அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மிக மோசமாகவே தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஏனெனில், எமது தமிழ்த் தலைவர்கள் எவரையும் அரச படைகள் கொன்றொழித்திருக்கவில்லை. மாறாக சக இயக்கங்கள் மீதான தடைகளை உருவாக்கிய புலிகளின் தலைமையே தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் அழித்தொழித்தது.

இலங்கை அரசுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் போராடுவதற்கான சுதந்திரம் என்பது இலங்கை அரசினால் கூட அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயக வழியில் குரல் கொடுத்து வந்த தமிழ்த் தலைமைகள் கூட புலிகளின் தலைமையால் அழித்தொழிக்கப்பட்டன.

இந்தச் சூழலில் எமது போராட்டம் எதை நோக்கிச் செல்கிறது என்பது பற்றி அப்பொழுது சிந்தித்தோம். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் பிரதான எதிரிகள் உண்மையாகவே இலங்கையின் ஆட்சியாளர்களா? அல்லது புலிகளின் தலைமையா என்று எங்களைச் சிந்திக்க வைத்தது.

ஏனைய விடுதலை இயக்கங்களை புலிகளின் தலைமை தடை செய்து, அதன் உறுப்பினர்களை தெருத்தெருவாக கொன்றொழித்து, தனித்தலைமை அதிகாரத்தை கையிலெடுத்திருந்தபோது புலிகளின் தலைமையை நோக்கி ஏன் என்று கேள்வி கேட்டு தவறுகளை சுட்டிக்காட்ட யாருக்கும் அந்த ஜனநாயக உரிமை இருந்திருக்கவில்லை.

ஒத்துப்போக மறுத்த சொந்த இன மக்களையே புலிகளின் தலைமை கொன்றொழித்தபோது ஏன் என்று கேட்கும் பலத்தோடு யாரும் இருந்திருக்கவில்லை. அப்பாவிச் சிங்கள முஸ்லிம் மக்களை புலிகளின் தலைமை கொன்றொழித்த போது அதையும் ஏன் என்று கேட்கும் பலத்தோடு யாருமிருந்திருக்கவில்லை.

அழிவு யுத்தத்தை நிறுத்தி, அரசியல் தீர்வு நோக்கிச் செல்லுங்கள் என்று புலிகளின் தலைமையிடம் கேட்பதற்குக் கூட யாரும் அப்போது பலமாக இருந்திருக்கவில்லை.

தவறுகளை சுட்டிக்காட்டி சரியான திசை வழி நோக்கி அழைத்துச் செல்ல முடிந்த உண்மையான விடுதலை அமைப்புகள் சகலவற்றையும் அடித்து நொருக்கி, சிதைத்து மனித குலத்திற்கு சவாலாகவே புலிகளின் தலைமை செயற்பட்டுக்கொண்டிருந்தது.

இழந்துபோன உரிமைகளை பெறுவதற்கு மாறாக இருக்கின்ற உரிமைகளும் இழந்து போகும் ஆபத்தையும் அழிவையும் நோக்கி எமது போராட்டம் செல்ல தொடங்கியிருந்த போதுதான் நான் முன்னெச்சரிக்கையாக சில விடயங்களை சொல்லியிருந்தேன்.

விடுதலைக்கான போராட்டத்தை அழிவு யுத்தமாக மாற்றி, எடுத்த முயற்சிகள் யாவற்றையும் எங்கோ ஓரிடத்தில் கொண்டு சென்று சரித்து கொட்டிவிடப்போகின்றார்கள் என்று அன்றே நான் தொலை தூர நோக்கோடு சகல தரப்பினர் மத்தியிலும் எடுத்து விளக்கியிருந்தேன்.

ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சமத்துவ உரிமையும் கூடிய அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்திருந்த எம் கனவுகளை மெய்ப்படுத்த தமிழ் மக்கள் அழிவுகளை மட்டும் சந்திக்க தொடங்கியிருந்த ஒரு காலச்சூழலில் விடுதலைக்கான போராட்டம் என்பது இருந்த உரிமைகளையும் இழந்து போவதற்கான அழிவுப்பாதையை நோக்கிச் செல்ல தொடங்கியிருந்த வேளையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது உருவாக்கப்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ஒரு பொன்னான வாய்ப்பு, அரியதொரு சந்தர்ப்பம்.

எமது ஜனநாயக சுதந்திரத்தை மறுத்து எம் மீது கொலைக்கரங்களை நீட்டிக்கொண்டிருந்த புலிகளின் தலைமையின் மீதான விரோதங்களைக் கூட நாம் கருத்தில் எடுத்திருக்கவில்லை.

ஆனாலும், யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற வகையில் புலிகளின் தலைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு எமது மக்களின் அரசியலுரிமையை நோக்கி செல்லாமல் அந்த சந்தர்ப்பத்தை தட்டிக் கழித்து விட்டார்களே என்ற தீராத கவலையே எமக்கு உண்டு.

இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைகளில் ஈ.பி.டி.பி.யினராகிய எமக்கு பங்கெடுப்பதற்கான ஜனநாயக உரிமை என்பது மறுக்கப்பட்டிருந்தமை குறித்த ஆட்சேபனையை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனாலும், எங்களது உரிமையை மறுத்து, அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பத்தை கையில் எடுத்துக்கொண்டவர்கள் அதை சரிவரப் பயன்படுத்தியிருக்காமல் துஷ்பிரயோகம் செய்துவிட்டார்களே என்ற மனத்துயரங்களே எமக்கு இப்போதும் உண்டு!

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது முழுமையான அரசியல் ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனங்கள் குறித்து நாம் சிந்தித்திருந்தாலும் அது குறித்து நாம் கவலை கொண்டிருக்கவில்லை.

ஆனாலும், கிடைத்த உரிமைகளை எடுத்துக்கொண்டு இன்னமும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக அதை ஒரு ஆரம்ப முயற்சியாக எடுத்துக்கொண்டு முன்னோக்கி சென்றிருக்கவில்லையே என்ற ஆதங்கமே நமக்கிருக்கிறது.

தமது விருப்பங்களுக்கு மாறாக அவசர அவசரமாக இலங்கையும், இந்தியாவும் தங்களது நலன்களுக்காக செய்து கொண்ட ஒப்பந்தமே இதுவாகும் என்று புலிகளின் தலைமை கிளப்பியிருந்த சுய கௌரவப் பிரச்சினை குறித்து நாம் அக்கறை செலுத்தவில்லை.

அரசியல் தீர்வின்றி அழிவுகள் மட்டும் சூழ்ந்த துயரச் சமுத்திரத்தில் மூழ்கி திசை தெரியாது திக்குமுக்காடிக்கொண்டிருந்த தமிழ் மக்களை கரை நோக்கி அழைத்துச் செல்ல முடிந்த தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதே இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற உறுதியான கருத்தே இன்னமும் எம்மிடம் உண்டு. இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது மயிலே! மயிலே! இறகு போடு என்று நாங்கள் இரந்து கேட்டு பெற்றுக்கொண்ட யாசகம் அல்ல.

அது அன்றைய எமது அனைத்து விடுதலை இயக்கங்களினதும் நீதியான போராட்டமும், அர்ப்பணங்களும் பெற்றுத் தந்த மாபெரும் வரப்பிரசாதம் ஆகும்.

அந்த வகையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய நீதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கும் இலங்கை இந்திய ஒப்பந்த உருவாக்கத்தில் நியாயமான பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானதில் கணிசமான பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை நான் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஏற்றுக் கொள்கின்றேன்.

ஆனாலும், அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, தமிழ் மக்களை தொடர்ந்தும் அழிவு யுத்தப்பாதைக்கு இழுத்துச் சென்று எமது மக்களையும், அழியவைத்து, தனது இயக்க உறுப்பினர்களையும் அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்து....

இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தவிர, எதையுமே தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காமல், பெற்றுக் கொள்வதற்கு மாறாக, இருந்தவைகளையும் துடைத்து அழித்து தொலைத்து, அழிவுகளை மட்டும் தமிழ் மக்கள் மீது அவலங்களாக சுமத்தி விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் தானும் அழிந்து போன நிகழ்வானது தனக்குத் தானே அவர் தோண்டிய படுகுழி என்பதே உண்மையாகும்.

உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. அவைகள் ஒவ்வொன்றும் உனக்கு நீயே என்றோ ஒரு நாள் தூவி விட்டவைகள். இதைத்தான் இந்த இடத்தில் என்னால் கூற முடியும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்த தவறியிருந்த புலிகளின் தலைமை அதன் பின்னரும் கனிந்து வந்திருந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருந்தது.

பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை....

சந்திரிகா குமாரதுங்க அரசுடனான பேச்சுவார்த்தை...

ரணில் விக்கிரமசிங்க அரசுடனான பேச்சுவார்த்தை....

இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசுடனான பேச்சுவார்த்தை.....

இவ்வாறு தொடர்ச்சியாக சர்வதேச மத்தியஸ்தளங்களோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது அர்த்தமற்ற நிபந்தனைகளை விதிப்பதைத் தவிர்த்து, சாத்தியமான வழிமுறையில் புலிகளின் தலைமை அரசியல் தீர்வொன்றிற்கு உடன்பட்டிருந்தால் தமிழ் மக்கள் அழிவுகளைச் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.

பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் என்பன உருவாக்கப்பட்ட போது அந்த ஒப்பந்தங்களை கிழித்தெறிந்து அதை தடுத்து நிறுத்தியிருந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மையினம் சார்ந்த அன்றைய அரசியல் தலைமைகளே என்பதில் எந்தவித மறு பேச்சுக்கும் இங்கு இடமில்லை. ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல், அதற்கு பின்னரான அனைத்து முயற்சிகளும் தவறவிடப்பட்டமைக்கான தவறுகளை தமிழ்த் தலைமைகளே ஏற்க வேண்டும்.

கிடைத்ததை எடுத்துக்கொண்டு மேலும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக கட்டம் கட்டமாக முயன்று பெற்றுக்கொள்ளாமல் கிடைத்தவைகள் அனைத்தையும் அரை குறை தீர்வு என்று தட்டிக்கழித்து வந்த அனைத்து தலைமைகளுமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஆகவே தமிழ் மக்கள் இன்றுவரை தாங்கி வந்துள்ள துயரங்களுக்கும், அவலங்களுக்குமான பொறுப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மட்டும் சுமத்தி விட்டு சம்பந்தப்பட்ட ஏனைய தமிழ் தலைமைகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது.

சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்கவேண்டும். ஆயுதப் போராட்டத்தை ஆரம்பங்களில் வழி நடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப் பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்கின்றேன்.

எதையுமே பெற்றுத்தராமல் வெறும் அவலங்களை மட்டுமே எம் மக்கள் மீது சுமத்தி வந்த அழிவு யுத்தத்தை நிறுத்துமாறு நாம் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் பல தடவைகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

புலிகளின் தலைமையை அரசியல் தீர்வு நோக்கி கொண்டுவருமாறு நாம் சர்வதேச சமூகத்திடமும் பல தடவைகள் வலியுறுத்தியும், எடுத்து விளக்கியும் கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றோம். இது போலவே புலிகளின் தலைமையை ஆதரித்து, உறவு கொண்டிருந்த சகல தமிழ் கட்சிகளின் தலைமைகளிடமும் புலிகள் தலைமையை அரசியல் தீர்வு நோக்கி அழைத்து வாருங்கள் என்று பல தடவைகள் கூறி வந்திருக்கின்றோம்.

ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும் சம உரிமையும் கிடைக்க முடிந்த ஒரு அரசியல் தீர்விற்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வருவாரேயானால், நான் போட்டி அரசியல் நடத்திக்கொண்டிருக்க மாட்டேன். அரசியலில் இருந்து விலகி நின்று நல்லவைகள் நடக்கின்றனவா என்று வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பேன் என்று பல தடவைகள் நான் பகிரங்கமாக சொல்லியிருக்கின்றேன். ஆனாலும், இறுதி வரை இந்த வழி முறை நோக்கி பிரபாகரன் வந்திருக்கவில்லை.

(தினக்குரல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com