Contact us at: sooddram@gmail.com

 

நான் தங்கதுரையின் மகன்!

(பாரதி தம்பி)

ங்கதுரை, குட்டிமணி, ஜெகன்... ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் இந்த மூன்று பெயர்களையும் யாரால் மறக்க முடியும்? சிங்கள இனவெறியின் கோர அடையாளங்களாக மூன்று உயிர்களும் வரலாற்றில் பதிந்துவிட்டன. மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட, தங்க துரையின் குடும்பம் தமிழ்நாட்டில் வசித்தது. அந்த தங்கதுரையின் மகன் கரிகாலனுக்குக் கடந்த வாரம் சென்னையில் திருமணம்!

வெலிக்கடை சிறைக் கலவரத்தில் மோசமான சித்ரவதையால் தங்கதுரை கொல்லப்பட்ட பிறகு, அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., தங்கதுரையின் குடும்பத்துக்கு அரசு சார்பாக நந்தனத்தில் வீடு வழங்கி ஆதரவு அளித்தார். தங்கதுரையின் மனைவி நவமணி, தனது ஒரே மக னைப் படிக்கவைத்துக்கொண்டு இங்கேயே இருந்தார். தமிழகத்திலும், இலங்கையிலும், லண்டனிலும் படித்த தங்கதுரையின் மகன் கரிகாலன், இப்போது லண்டனில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தர்சனா என்ற லண்டனில் வசிக்கும் ஈழத் தமிழ்ப் பெண்ணுக்கும் கரிகாலனுக்குமான திருமண விழா வில் எங்கும் ஈழத் தமிழ் வாசம். பல்வேறு நாடுகளில் இருந்தும் குவிந்திருந்த உறவினர்கள், உறவுகளைச் சந்தித்து உணர்வுகளைப் பறிமாறிக்கொண்டனர்.

பார்க் ஹோட்டலில் தங்கி இருந்த கரிகாலனை அடுத்த நாள் சந்தித்தபோது அமைதியாகப் பேசத் தொடங்கினார். "எங்களுக்குச் சொந்த ஊர் வல்வெட்டித்துறை. கடல் வணிகம்தான் தொழில். எங்க அம்மாவின் குடும்பத்தினர் மூன்று தலை முறைகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டனர். இந்தியக் குடியுரிமையுடன் இங்கு வசித்த அம்மாவை, அப்பா தமிழ்நாட்டில்தான் சந்தித்திருக்கிறார். போராட்ட நோக்கங்களுக்காக தமிழ்நாட்டுக்கு வந்து போனபோது அம்மாவுடன் பழக்கமாகி, இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், என் அம்மாவுடன் அப்பா சேர்ந்து குடும்பம் நடத்தியது வெறும் 10 மாதங்கள்தான். நான் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அப்பா மறுபடியும் இலங்கைக்குப் போய்விட்டார். நான் ஒரே ஓர் இரவுகூட அப்பாவுடன் சேர்ந்து உறங்கியது இல்லை.

எனக்கு இரண்டரை வயது இருக்கும்போதுதான் அப்பாவைக் கைது செய்து வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்திருந்தனர். கம்பியின் அந்தப் பக்கம் அப்பாவும், இந்தப் பக்கம் என்னை வைத் தபடி அம்மாவும் நின்று இருந்ததாக அம்மா சொல்லக் கேட்டு இருக்கிறேன். பிறகு, கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டு இருந்தபோது, அப்பா போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவ ரைப் பார்த்து நான் கதறி அழுதேன். என்னைத் தூக்கிக் கொஞ்சுவதற்கு அப்பாவுக்கு அனுமதி அளித்தார் நீதிபதி. பிறகு, அப்பா என்னைக் கண்ணீருடன் தூக்கிக்கொண்டார். இவை எல்லாம் மசமசப்பான நினைவுகளாக இருக்கின்றன. இவ்வளவுதான் அப்பாவுக்கும் எனக்குமான தொடர்பு. அதன் பிறகு கொஞ்ச நாட்களிலேயே அப்பா, மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுவிட்டார்.

நான் பள்ளிக்கூடம் படித்தது முழுக்க முழுக்க சென்னையில்தான். கல்லூரி படிப்பதற்கு 99, 2000 ஆகிய இரண்டு ஆண்டுகள் கொழும்பில் தங்கிஇருந்தேன். நான் இந்தியக் குடியுரிமை வைத்து இருந்ததால், தங்கதுரையின் மகன் என்ற அடை யாளமே தெரியாமல், படித்து முடித்தேன். பிறகு, லண்டனுக்கு படிக்கப் போனேன். இப்போது கல்யாணம். இதுவரையிலான, என் அமைதியான வாழ்க்கைக்கு ஆதரவளித்த தமிழகத் தலைவர்களுக்கு நன்றி!" என்கிற கரிகாலனுக்கு சிறையில் இருந்தபடியே அந்தப் பெயரை வைத்தவர் தங்கதுரைதான்.

"லண்டனில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளில் ஓர் அங்கத்தினனாக இணைந்து செயல்படுகிறேன். என் தந்தையின் உயிர்த் தியாகத்துக்குக் காரணமான ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்தப் போராட்டத்தின் மீது எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். பலர் விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டதாகச் சொல்வார்கள். அப்படிக் கட்டாயத்தின் பேரில் இணைக்கப்பட்டு இருந்தால், நான் அதை ஆதரிக்கவில்லை. ஆனால், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆதரவால்தான் இலங்கையில் போராட்டம் நடந்தது என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. அவர்கள் பணம் கொடுக்கலாம். ஆதரவாக இருக்கலாம். ஆனால், அவை எதுவுமே இல்லை என்றாலும், அங்கு போராட்டம் நடந்திருக்கும். அதற்கான தேவை அங்கு இருந்தது. தவிரவும், கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கப்படும் புலம்பெயர் தமிழர்களின் பணத்தைக் காட்டிலும் வன்னியில் சாகும் தமிழர்களின் உயிர் முக்கியமானது.

நான் கடைசியாக சமாதான காலத்தின் முடிவில் இலங்கைக்குப் போனேன். அதன் பிறகு போகவில்லை. இப்போது இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்காத நிலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சாப்பிட உணவும், வசிக்க ஒரு கூடாரமும், உடலை மறைப்பதற்குத் துணியும், தொடர்ச்சியான வருமானத்துக்கான தொழிலும்தான் அந்த மக்களுக்கான உடனடித் தேவைகள். ஈழத் தமிழர் பிரச்னையில், பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ள அமைப்புகள் ஒன்றிணைந்து இன்னும் உண்மையாக, நியாயமாக உழைக்க வேண்டும். இலங்கையில் இன்னொரு ஆயுதப் போராட்டம் சாத்தியமா என்று கேட்டால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், விதவிதமான துப்பாக்கிகள் மட்டுமே ஆயுதங்கள் இல்லை. அடிக்க வருபவரை நோக்கி கல் எடுத்து வீசுவதும் ஆயுதப் போராட்டம்தான். அப்படி ஓர் உரிமைப் போராட்டத்தை நான் வரவேற்கிறேன்... ஆதரிக்கிறேன்!"

(நன்றி: விகடன்)

கேள்விகள் சில.......

மக்களை நேசிக்கும் மனித நேயத்தால்

(சாகரன்)

(ஆனந்த விகடனில் வந்த செய்திக் கட்டுரையை வாசித்த போது ஏற்பட்ட உந்துதலால் எழுதப்பட்ட கட்டுரை)

1983 ம் ஆண்டு வெலிகடையில் முக்கிய போராளிகள் அடைக்கப்பட்டிருந்த காலம். ஜேஆர் அரசின் இனவாதம் உச்சத்தில் நின்று கூத்தாடிக்கொண்டிருந்த நேரம். போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்என்று சமாதானத்தை இழுத்து போர் முரசு கொட்டிய காலம். சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் தமிழ் போராளிகளை என்னவும் செய்யலாம் சர்வதேசத்திற்கு எதுவும் தெரியாமல் மறைக்கப்படக் கூடிய காலம். சிறைச்சாலைகளுக்குள் கொலைகளை நிகழ்த்தி இன அழிவுச்சங்காரத்தை ஏற்படுத்தும் அனுமதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியிருந்த காலம். இதற்கான எழுதப்படாத அதிகாரங்களை வழங்கியிருந்த காலம்.

இவ்வாறான கோரப்பிடியில் சிக்கியிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஜெயக்காந்தனின் கூற்றுப் போல்சிறைகள் பூட்டப்படுவன மட்டுமல்ல அவை திறக்கப்படவும் வேண்டும் அன்றேல் தகற்கப்பட்டுவிடும்என்பதற்கேற்ப வெலிக்கடை சிறையுடைப்பை நிகழ்த்த ஆயத்தங்கள் மேற்கொள்பட்டிருந்த நேரம். இவ்வாறான கோரப்பிடியில் சிக்கியிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஜெயக்காந்தனின் கூற்றுப் போல்சிறைகள் பூட்டப்படுவன மட்டுமல்ல அவை திறக்கப்படவும் வேண்டும் அன்றேல் தகற்கப்பட்டுவிடும்என்பதற்கேற்ப வெலிக்கடை சிறையுடைப்பை நிகழ்த்த ஆயத்தங்கள் மேற்கொள்பட்டிருந்த நேரம்.

இலங்கையின் எப்பாகத்திலும் இலங்கை இரா ணுவ வீரன் ஒருவருக்கு தமிழ் மக்களால்நகக் கீறல்ஏற்பட்டாலும் இதனைக் காரணம் காட்டி சிறைக் கைதிகளை கொல்ல காத்திருந்த நேரம். இப்படியான வேளைகளில் அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தவிர்கப்ப ட்டிருந்தல் வேண்டும். இதனையாரும் அறிவுறுத்தாமலும் செய்திருக்க வேண்டும். இவற்றிற்கு மேலாக தாக்குதல்களை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த வேளை. திருநெல்வேலியில் கண்ணிவெடித்தாக்குதலால் 13 இராணுவத்தை கொல்லும  அவசியம், அவசரம் ஏன் ஏற்பட்டிருந்தது.

இலங்கை இராணுவத்தினால் மிகத் தீவிரமாக தேடப்பட்ட நிலையில் பாதுகாப்பு தேடி இந்தியாவிற்கு படகு மூலம் தப்பிச் செல்ல மணற்காட்டில் படகுக்கு தங்கத்துரை, குடடிமணி போன்றோர் காதிருப்பது தம்பிக்கு மட்டுமே தெரியும். இவரைத் தவிர வேறுயார் அரசபடைகளுக்கு தகவல் கொடுத்திருக்க முடியும். தனது ஏகபோகத்தை நிலைநாட்  ஆரம்ப காலத்தில் பிரபாகரன் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் ஒன்றான காட்டிக் கொடுப்பு இது. இவ்விடயம் தங்கத்துரை, குட்டிமணி போன்றோருக்கு தெரிந்துவிட்டது. சிறையிலிருந்து இவர்கள் மீண்டால் தனது கதி அதோ கதிதான் என்பதால் சிறைக்குள் வைத்து கொன்ற நிகழ்வுகளே 13 இராணுவத்தை கொலை செய்து வெலிகடைப் படுகொலைகளை தூண்டிய சம்பவம் ஆகும்.

மட்டக்களப்பு சிறையுடைப்பு நிகழ்வு மூலம் 50 இற்கு மேற்பட்ட போராளிகள் காப்பாற்றப்பட முடியுமானால், தனி ஒருவனாக பனாகொடை மகேஷ்வரன் பனாகொடை முகாமிலிருந்து தப்ப முடியுமானால் இந்த இரு சிறைச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முந்தைய பாதுகாப்பு குறைவான நிலையிலிருந்த வெலிக்கடை சிறைக் கைதிகள் மீட்பு சாத்தியமாக்கப்பட்டிருக்கலாம். தங்கத்துரை அன்று சிறை மீட்கப்பட்டிருந்தால் பிரபாகரன் என்ற மனிதகுல விரோதி 1980 களின் நடுப்பகுதியிவேயே முடமாக்கப்பட்டு நடைபிணமாக்கப்ப ட்டிருப்பான். 25 வருடங்கள் களித்து முள்ளிவாய்காலில் தன்னை காப்பாற்ற கவசமாக்கப்பட்ட பொதுமக்கள் என்ற மனித வளையம் தவிர்க்கப்பட்டிருக்கும். இறுதி சண்டையில் அநியாயமாக பலியாக்கப்பட்ட பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றபட்டிருக்கலாம். 13 இராணுவத்தின் மரணம் பல ஆயிரம் உயிர்களின் மரணத்தை உறுதிப்படுத்த ஏதுவாக இருந்த பிரபாகரனே முதன்மையான போர்க்குற்றவாளி. சாகாவரம் பெற்றிருக்கும் அவனை இழுத்துவாருங்கள். அவனுக்கு மக்கள் முன்னே மக்களே தண்டனை வழங்கட்டும்.

மே 2009 அன்று முள்ளிவாய்காலில் முழந்தாள் இடும் நிகழ்வு 26 வருடங்களுக்கு பின்பு ஏற்படும் என்று பிரபாகரன் எதிர்பார்த்து இருக்க மாட்டான். கிட்லரும் இதே போல் மனித குலத்தை அழித்துகொண்டிருந்த போது எண்ணியிருக்கவில்லை. தனக்கு சாவு வரும் என்று. கிட்லரின் முடிவே இன்று பிரபாகரனுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

எவை எப்படியிருப்பினும் வெலிக்கடைப் படுகொலை என்ன சூழ்நிலையால் தூண்டப்பட்டு எப்படி நிகழ்த்தப்பட்டிருந்தாலும் இது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இப்படுகொலைகளுக்கு அன்றைய இலங்கை அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். இது முள்ளிவாய்காலில் இடம் பெற்ற பொது மக்கள் மரணத்திற்கும் பொருந்தும்.

(சாகரன்) (புரட்டாதி 08, 2010)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com