Contact us at: sooddram@gmail.com

 

உயர்கல்வித்துறையில் கேரளத்தின் சாதனைகள்

(கி. இலக்குவன்)

உயர்கல்வித்துறையில் முரண் பாடற்றதும் பல விதங்களிலும் வெற்றி பெற்றுள்ளதுமான ஒரு உயர்கல்விக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஒரே மாநிலமாக இந்திய மாநிலங்கள் அனைத்திலும் கேரளமாநிலமே திகழ் கிறது. அம்மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் யுவதிகளில் 18 சதம் பேருக்கு அது உயர்கல்வியை அளித்து வருகி றது. இது தேசிய சராசரியைப்போல இரண்டு மடங்காகும். நூறு விழுக் காடு எழுத்தறிவின்மையைப்பெற்ற மாநிலமும் இதுவே. கேரள மாதிரி என்று அழைக்கத்தக்கஅதன் உயர் கல்விக் கொள்கையானது வேறு மாநி லங்களுக்கு எந்த அளவு பொருந்தக் கூடியது என்பதைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

இந்திய சூழலில் உயர்கல்வி குறித்த கேரள அணுகுமுறை தனிச்சிறப்பு வாய்ந்தது. மாநிலத்தின் உயர்கல்வி அமைப்புக்கான முழுசெலவும் மேற் பார்வையும் ஒருகட்டத்தில் மாநில அரசாலேயே செய்யப்பட்டு வந்தது. கடந்த பத்தாண்டுகளில் குறிப்பாக இதில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நிதித்தட்டுப்பாடும், ஆண்டு வரவு-செலவில் ஏற்பட்ட இடையூறுகளும் பல்கலைக்கழகங்களின் முன்னுரி மைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி யுள்ளன. இத்துறையில் மத்திய அர சாங்கம் விதிவிலக்கான சில அம்சங் களைத்தவிர கேரளத்தை புறக்க ணித்தே வந்துள்ளது. ஆனால் ஒவ் வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய பல் கலைக்கழகத்தை அமைப்போம் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழிக் கேற்ப மாநிலத்தின் வடபகுதியில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த இடம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது உயர்கல்வித்துறை வல்லுநர் களுக்கு புரியாத புதிராக உள்ளது. கல்வி மற்றும் நகர்ப்புற மையங்களிலிருந்து வெகு தொலைவிலுள்ள இந்த நிறுவனம் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இல்லை.

தான் கடைப்பிடித்துவரும் சமத்துவக்கோட்பாட்டுக்கு ஏற்ப அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சமமான ஆதரவையே கேரள அரசு அளித்துவருகிறது என்பதுடன் எந்த வொருபல்கலைக்கழகத்தையும் முன் மாதிரி பல்கலைக்கழகமாக அது அடையாளம் காட்டவில்லை. இதன் காரணமாக தேசிய அளவிலோ அல்லது சர்வதேசஅளவிலோ புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக எந்த பல்க லைக்கழகமும் அறியப்படவில்லை. இதில் கொச்சியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தை ஒரு விதிவிலக்காகக் குறிப்பிடலாம். இதனை ஒரு மிகச்சிறந்த நிறுவனமாக ஏற்றுக்கொண்ட மத்திய மனித வளத்துறை இதனை ஒரு இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் (ஐஐடி)அந்தஸ்துக்கு உயர்த்த ஒப்புக் கொண்டது. ஆனால் இதனை அவ்வாறு மாற்றுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து நடத்தப்பட்ட இயக்கம் காரணமாக அந்த ஆலோசனையை கிடப்பில் போடும் முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்துவிட்டனர். மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கழகம் மத்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீசித்திரைத் திரு நாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கழகம் மற்றொரு விதி விலக்காகும். பல்கலைக்கழக அந் தஸ்தைக்கொண்ட இப்பல்கலைக் கழகம் சிறப்பு மருத்துவ பிரிவுகளில் முனைவர் பட்ட மேற்படிப்பு, முனை வர்பட்டம் மற்றும் பட்டமேற்படிப்பு பட் டயம் போன்றவற்றை வழங்கி வரு கிறது. இது இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2008ம் ஆண்டில் திருவனந்த புரத் தில் அமைக்கப்பட்ட இந்திய அறிவி யல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத் தை தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக எடுத்துக் கொள் ளலாம். இது மத்திய அரசாங்கத்தின் மனித வளர்ச்சித் துறையுடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி நிறு வனமாக இயங்கி வருகிறது. உயர்ந்த தரத்தைக் கொண்ட அந்நிறுவனங் களுக்குள் நெருக்கமான பிணைப்பு களை ஏற்படுத்தினாலோ அல்லது அவை ஒன்றிணைக்கப்படுமானாலோ உலகத்தரம் வாய்ந்த ஒரு அறிவியல் நிறுவனத்தை உருவாக்க முடியும்.

அமெரிக்காவின் மோனான் பல் கலைக்கழகப் பேராசிரியர் பிலிப்.ஜி. ஆல்பக் மற்றும் கேரள உயர்கல்வித் துறைக் குழுவைச்சேர்ந்த ஆராய்ச் சித்துறை அதிகாரியான எல்தோ மாத் தியுசும் இணைந்து எழுதி 2-09-2010 நாளிட்ட இந்து நாளிதழில் வெளி யிடப்பட்ட கட்டுரையில் இடம் பெற்ற கருத்துக்களே மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

கேரள கல்வித்துறை பற்றிய ஒரு விரிவான சித்திரத்தை அளிக்கும் அக் கட்டுரையில் வேறு சில தகவல்க ளும் இடம் பெற்றுள்ளன. உயர்கல்விப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்யவும், அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கவும், உயர்கல்வி குறித்த ஒரு விவாத மேடையாக செயல்படவும் கேரள மாநில உயர்கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பி டும் அவர்கள் பின்வரும் முக்கிய கருத் தையும் தெரிவித்துள்ளனர். இந்திய தரத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தரமான உயர் கல்வியை தனது மக்கள் தொகையின் குறிப்பிடத்தக்க பெரிய பிரிவினருக்கு கேரளமாநிலம் ஆர்ப்பாட்டமற்ற முறை யில் வழங்கியுள்ளது. அரசாங்கமும், பரவலான பகுதி மக்களும் அக்கறை எடுத்துக்கொண்டுள்ள பிரச்சனை யாக உயர்கல்வி இருந்து வருகிறது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

கேரளமாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், இடது ஜனநாயக முன்னணி யும் மாறிமாறி ஆட்சியில் இருந்து வந் துள்ளன என்ற போதிலும், உலகமயக் கொள்கையினை கண்மூடித்தன மான முறையில் ஆதரித்துவரும் காங் கிரசின் தலைமையிலான ஐக்கிய ஜன நாயக முன்னணி கல்வியை வணிக மயமாக்கும் விதத்திலேயே செயல்பட் டுள்ளது. ஆனால் சமத்துவக்கொள் கையில் நாட்டமும், ஏழை எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் தனிக்கவனமும் செலுத்தி வரும் கேரளமாநிலம், உயர்கல்வித்துறை யில் எட்டியுள்ள சாதனைகளில் இடதுஜனநாயக முன்னணியின் பங் களிப்பே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com