Contact us at: sooddram@gmail.com

 

கழுகுக் கண்களில் கோழிக் குஞ்சு

(ஆர்.எஸ்.துரைராஜ்)

சமீபத்தில் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் நடந்த ஜி-20 நாடுகள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க ஜனாதிபதி யும் சந்தித்து பேசியபோது, பராக் ஒபாமா இந்திய இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்துவதில் இன்னும் தாமதம் ஏன்? என்று கேட்டதாகவும், அதற்கு பிரதமர் மன்மோகன் சிங், வெகுவிரைவில் ஆவன செய்வதாகக் கூறியதாகவும் சொல் லப்படுகிறது. அந்த வேகத்தில்தான் ஜி-20 மாநாடு முடிந்து இந்தியா திரும்பும்போது விமானத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இந்திய இன்சூ ரன்ஸ் துறையில் வெளிநாட்டு நேரடி முத லீடு வெகுவிரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

2010 நவம்பர் 7ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வரும்போது இந்திய இன்சூரன்ஸ் துறையை தாரை வார்ப்பதற்கான முஸ்தீபுகளை மன்மோகன் அரசு செய்து வருகிறது.

தத்தளிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் சராசரியாக மாதம் 10 வங்கிகள் திவாலாகி வருகின்றன.
வேலை இல்லாத அமெரிக்க இளைஞர்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தன் நாட்டு மக்களின் வேலைகளை பாது காக்க வேண்டி இந்தியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்குக் கொடுக்கும் வேலைகளை (அவுட்சோர்சிங் முறையில்) நிறுத்தச் சொல்லி ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் மீது தாக்குதல்கள் தொடர்கிறது. இராக் மக்களின் வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளான அமெரிக்க ராணுவம் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் பின்லே டனை தேடிக் கொண்டே இருக்கிறது அமெ ரிக்க ராணுவம். இன்னும் கிடைத்தபா டில்லை.

சர்வதேசச் சந்தையில் டாலரின் வீழ்ச்சி தொடர்கிறது. வலுக்கட்டாயமாக அதன் மதிப் பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறதே தவிர, டாலரின் உண்மை மதிப்பு வீழ்ந்து கொண்டே இருக்கிறது. இன்னும் பல பிரச் சனைகளில் வரலாறு காணாத அளவு தத்த ளித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதி பரின் கண்களில் இந்திய இன்சூரன்ஸ் துறை குறியாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

நாய் செத்தாலும் அதன் கண் கோழியின் மீதுஎன்பது போல அமெரிக்கக் கழுகின் கண்கள் இந்திய கோழிக் குஞ்சு மீது உள்ளது.

வளர்ச்சியின் உச்சத்தில் பொதுத்துறை எல்ஐசி

கடந்த ஜூன் 2010 வரை உள்ள காலாண் டில் இந்திய நாட்டில் மொத்தம் பெறப்பட்ட இன்சூரன்ஸ் வணிகத்தில் பொதுத்துறை எல்ஐசியின் பங்கு 74 சதவீதமாகும். இந்தி யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இன்சூரன்ஸ் சேமிப்பின் பங்கு 4.51 சதவீதம். இது ஐரோப்பிய நாடுகளின் இன்சூரன்ஸ் சேமிப்பான 3.57 சதவீதத்தை விட அதிகம், இந்தியாவில்இன்சூரன்ஸ் என்றால் எல்ஐசிஎன்ற மக்களின் நம்பிக்கைதான் இந்த வளர்ச்சிக்கான முக்கியமான காரணம்.

கடந்த ஆண்டு மட்டும் ரூ.1.84.000 கோடி பிரிமியத்தை பொது மக்களிடமிருந்து பெற்றுள்ளது.

27 கோடி பாலிசிதாரர்கள்.

11 லட்சத்து 52 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை 1 கோடி புதிய பாலிசிகள்.

ரூ.5 கோடி முதல் போட்ட இந்திய அர சிற்கு கடந்த ஆண்டு கொடுத்த பங்கா தாயம் மட்டும் ரூ. 1029 கோடி.

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்காக ரூ.5,30,000 கோடி களுக்கு மேல் ஒதுக்கியுள்ளது எல்ஐசி.

99.87 சதவீதம் உரிமத் தொகையை வழங்கியுள்ளது.

நமது நாட்டின் ஐந்தாண்டு திட்டங்க ளுக்கு எத்தனை கோடி ரூபாயானாலும் தரத் தயாராக உள்ள ஒரு மக்கள் நிறு வனம்.

நாடு முழுவதும் 2048 கிளைகளை மட் டுமே கொண்ட ஒரு பொதுத் துறை நிறுவனத் திற்கு இந்த வளர்ச்சி என்பது ஒரு சாதனை.

சாதகமான இந்திய இன்சூரன்ஸ் சந்தை

ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை ஒப்பிடுகையில்.
இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 60 சதமானத்திற்கு மேல் 25 வயதிற்குட்பட்டவர்கள், இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ள சந்தை இந்திய இன்சூரன்ஸ் சந்தை. அது மட்டுமல்லாமல் இந்தியர்களின் சேமிக்கும் பழக்கமும் அவர்களைக் கவரக் கூடிய வகை யில் உள்ளது. இந்திய நாட்டு மக்களின் சேமிப்பு மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 35 முதல் 37 சதவீத இடத்தைப் பெறு கிறது. எனவே, அவர்களுடைய இன்சூரன்ஸ் பொருட்களை அதிக அளவிற்கு விற்க முடியும். இதுவும் ஏகாதிபத்தியத்தின் கழுகுக் கண்களை உறுத்துகிறது.

தாக்குதல்கள்

எல்ஐசி சட்டத் திருத்த மசோதாவில் பாலிசிதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் போனஸ் தொகையை 95 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய எல்ஐசி முகவர் சங்கம். (டுஐஊஹடீஐ) உள்ளிட்ட சங்கங்களின் தொடர்ச்சி யான பிரச்சாரமும். நிதி அமைச்சகத்திற்கான நிலைக் குழுவில் தலைவர்கள் எடுத்தியம் பிய கருத்துக்களும், அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கம் எம்.பி.க்களை சந்தித் துத் திரட்டிய ஆதரவும் நிலைக்குழுவினை பாலிசிதாரர்களின் போனஸ் தொகை 95 சதவீதமாக தொடரப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கச் செய்துள்ளது. நிலைக்குழு வின் இது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் மத்திய அரசு எதிர்பார்த்த அளவிற்கு அமைய வில்லை.

இன்று அந்த அறிக்கையை அளித்த நிலைக்குழுவின் தலைவராக இருந்த பாஜக வைச் சார்ந்த முரளி மனோகர் ஜோஷி மாற்றப் பட்டு, “தனியார் மயம் தான் தீர்வுஎன்று உறுதி யான கருத்து கொண்ட யஷ்வந்த் சின்கா அதன் தலைவராக மாற்றப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏகாதிபத்தியத்தின் அதிகாரம் இந்திய ஆளும் கட்சியின் மீது மட்டுமல்ல, எதிர்க்கட் சியின் மீதும் செல்லும் என்பது தெளிவாகி றது. எல்ஐசியைப் பொறுத்தவரையில் 97 சத வீதம் வணிகம் முகவர்கள் மூலமே வருகிறது. எனவே இதனை சீர் குலைக்கவும், முகவர் களுக்கான குறைந்த பட்ச வணிக இலக் கினை அதிகரிப்பது, முகவாண்மை தொடர வேண்டுமானால் புதிய புதிய கட்டுப்பாடுகள். ஸ்வரூப் கமிட்டி பரிந்துரைகளை அமலாக்க முயற்சி என முகவர்கள் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் பொதுத்துறை எல்ஐசியை சீர்குலைப்பதும், இந்திய மக்க ளின் சேமிப்பை வெளிநாட்டு முதலாளிக ளின் கையில் கொடுப்பதற்குமான நடவடிக் கைகளே அன்றி வேறில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, இந்திய நாட்டு வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கியது தன் மாமியார் இந்திரா காந்தி என்று சொல்லிச் சொல்லி வாக்குகளை வாங்கிய திருமதி சோனியா காந்தியும் சரி, இந்திரா காந்தியின் வாரிசுக ளாக தங்களை அறிவித்துக் கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்களும் சரி, அதே பொதுத் துறை வங்கிகளையும், இன்சூரன்ஸ் துறையையும் சீர்குலைப்பது ஏன்? மக்கள் சொத்தை பாதுகாக்க மக்கள் திரள வேண்டும். எதிர்ப்புகள் வலுப்பட வேண்டும். மனசாட் சியைத் தொலைத்த மத்திய அரசை தட்டி எழுப்பும் வண்ணம் இது மக்கள் எழுச்சியாக மாற வேண்டும்.

கட்டுரையாளர்
, துணைத்தலைவர், நெல்லை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்.

(நன்றி: தினக்கதிர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com