Contact us at: sooddram@gmail.com

 

இடதுசாரி ஆட்சிகளை பாதுகாப்போம்!

(தே. இலட்சுமணன்)

இந்தியாவில் மூன்று மாநிலங்களில் திரிபுரா, கேரளா, மேற்கு வங்காளம் - இடது சாரிகள் பலம் பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சிகள் நடைபெற்று வருகின்றன. இடதுசாரி ஆட் சிகள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அரசாங்கங்களாக நடைபெற்று வருகின்றன. மாநிலங்களுக்குள்ள குறைந்தபட்ச அதிகாரங் களைக் கொண்டு பல புரட்சிகரமான மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இடது அரசுகளின் சாதனைகள்

இந்தியாவில் முதன் முதலாக நிலச் சீர்திருத்தம் கொண்டு வந்து, மிராசுதாரர்களிட மிருந்து நிலங்களை எடுத்து 13 லட்சம் ஏக்கர் நிலங்களை மிக மிக சாமானிய, அன்றாடங் காய்ச்சிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்துள்ளதை யாராலும் மறுக்க இயலாது. இதை வேறு வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமென்றால் ரூ. 13,000 கோடி மதிப்புள்ள சொத்தை நிலச்சுவான்தாரர்களிட மிருந்து பிடுங்கி மேல்சட்டை இல்லாமல் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு மாற்றித் தந்தது இடதுசாரி ஆட்சிதான். 11 லட்சம் குத் தகைதாரர்களை நிலத்திலிருந்து வெளியேற்ற முடியாத சட்டத்தை நிறைவேற்றி அவர் களின் நிரந்தர பிழைப்புக்கு வழி வகுத்ததும் மேற்கு வங்க இடதுசாரி ஆட்சி தான். கேர ளாவிலும் தோழர் இ.எம்.எஸ். அவர்கள் முதல மைச்சராக இருந்த காலத்திலேயே நில விநியோக சாதனையை அவர் செய்து முடித்து விட்டார். திரிபுராவும் இந்த விவகாரத் தில் வெற்றிக்கொடி நாட்டியது.

மேற்கு வங்கத்தில் நில விநியோகத்தின் வெற்றி, அங்கு அரிசி உற்பத்தி மற்ற மாநிலங் களை விட அதிகம். தனிநபர் உற்பத்தி வரு மானமும் அதிகம் என்று நாம் சொல்லி வைப்ப தில் தயங்க வேண்டிய அவசியமே இல்லை.

இந்திய நிர்வாகத்தில் மிக அடித்தளமான கிராமப் பஞ்சாயத்து நிர்வாகத்தை ஜனநாயகப் படுத்தி போதிய அதிகாரங்கள் வழங்கி, மாநில வருமானத்தில் 50 சதவிகிதம் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு ஒதுக்கி, அவர்களுக்கு வேண் டிய கிராம திட்டங்களை அவர்களே உருவாக் கிக் கொள்ள வழி வகுத்து சாதனை படைத்த மாநிலம் மேற்குவங்கம்தான்.

கேரளாவிலும், திரிபுராவிலும் கூட பஞ் சாயத்து மட்ட அளவில் அதிகாரங்கள் பிரித் துக் கொடுக்கப்பட்டு ஜனநாயகப்படுத்தப்பட் டுள்ளது. பஞ்சாயத்துகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பொது விநியோக முறை (ரேசன் கடைகள்) சீராகவும் சிறப்பாகவும் நடைபெறுகின்றன; அதோடு நியாய விலைக் கடைகள் என்று தனியாக உருவாக்கப்பட்டு, அதன் மூலம் 13 வகையான அடிப்படை உணவு பொருட்களை மிக ஒழுங்காக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருவதை யார் மறுக்க முடியும்? கேரளாவின் பொது விநி யோக முறையின் கீர்த்தியை மற்ற எந்த மாநில அரசும் ஈடுகொடுக்க இயலாது.

தோழர் இ.எம்.எஸ். வீட்டு வசதித் திட்டம் வெற்றிகரமாக அமலாகி வருகிறது. கேரளா வில் வீடு இல்லாதவர்கள் யாரும் இல்லை என்ற உலக சாதனையைப் படைக்க கேரள மாநிலம் முந்தி வருகிறது.

அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத தொழி லாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பேறு காலத்துக்கு முன்பே ஒரு மாதம் விடுப்பும் உத்தர வாதப் படுத்தப்பட்டுள்ளது.

மிக அடக்கத்தோடு கூற வேண்டுமென்றால், மக்கள் நலத் திட்டங்களில் பல அம்சங் களில் கேரளாவும், மேற்கு வங்காளமும் குறியீட்டு அட்டவணையில் உச்சியை எட்டியுள்ளன. கேரள மாநிலத்தில் கல்வி விகிதாச் சாரம் (ஆண் - பெண் இருபாலரும்) எட்டியுள்ள உயர்நிலையை மற்ற மாநிலங்கள் எட்டவில்லை. மேற்கத்திய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளும்.

மேற்கு வங்கத்தில் ஆலை மூடல்களால் வேலையின்றி தவிக்கும் தொழிலாளிகளுக்கு உதவித் தொகை ரூ.1500 வழங்கப்படுகிறது. அவ்வாறே தேயிலை தோட்டத் தொழிலாளர் களும் வேலை இழந்து வாடுவதால் அவர் களுக்கும் ரூ. 1500 தரப்படுகிறது.

விதவைகளுக்கு, கைத்தறி தொழிலாளர் களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, முதி யோர்களுக்கு, வேலை செய்ய முடியாத மீன வர்களுக்கு, பண்ணைத் தொழிலாளர்களுக்கு என ரூ. 1000 வீதம் உதவித் தொகையாக தரப் படுகிறது. ரூ. 17 லட்சம் அணி சேரா தொழி லாளர்கள்பிராவிடென்ட் ஃபண்ட்திட்டத் தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார்கள். மேற்கு வங்க அரசின் முயற்சியால் சிறு தொழில் யூனிட்டுகள் 27 லட்சம் செயல்படு கின்றன, 58 லட்சம் தொழிலாளர்கள் அதில் பணியாற்றுகிறார்கள். மேற்குவங்க அரசு அக்கறையோடு செய்த பணி இது.

இந்தியாவிலேயே மேற்கு வங்க அரசுதான் வறுமையைக் குறைக்கும் முயற்சியில் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளதாக உலக வங்கி சொல்லுகிறது. கேரளாவும் வறுமையைக் குறைப்பதில், நல்வாழ்வுத் திட்டங்களை அமல்படுத்துவதில், அவர்களின் வாழ்வுத் தரத்தை உயர்த்துவதில் முன்னணியில் நிற்கிறது.

குழந்தை இறப்பில் 2006ஆம் ஆண்டின் படி மேற்கு வங்கத்தில் பிறக்கும் 1000 குழந் தைகளில் 38 குழந்தைகளும், கேரளாவில் 1000 குழந்தைகளில் 15 குழந்தைகளும் இறந்து போகின்றன. அகில இந்திய சராசரி படி பிறக்கும் 1000 குழந்தைகளில் 57 குழந்தைகள் இறந்து போகின்றன.

மனிதர்களின் ஆயுட் காலக் கணக்குப்படி மேற்கு வங்கத்தில் சராசரி ஆண்கள் 65.4 வயது வரையிலும், பெண்கள் 67.2 வயது வரை யிலும், கேரளாவில் ஆண்கள் 70.7 வயது வரையிலும், பெண்கள் 75 வயது வரையிலும் வாழ்கிறார்கள். இந்தியாவில் ஒட்டு மொத்த சராசரி ஆண்களில் 61 வயது வரையிலும், பெண் கள் 62.5 வயது வரை தான் வாழ்கிறார்கள்.

கல்வித் தகுதியில் மேற்குவங்கத்தில் 72 சதவிகிதம் படித்தவர்கள், கேரளாவில் 99.9 சதவீதம் படித்தவர்கள். இந்திய சராசரி கல்வித்தகுதி 63.4 சதவிகிதம் தான்.

மேற்கு வங்கத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 100 சதவிகிதம் (ஆண் குழந்தை கள், பெண் குழந்தைகள்) பள்ளியில் சேர்ந்து விடுகின்றன. கேரளாவில் பத்தாம் வகுப்பில் தகுதியுள்ள (ஆண், பெண்) மாணவர்கள் 89 சதவிகிதம் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள். பள்ளிப் படிப்பை இடையில் விடுதல் என்பது இல்லையென்றே சொல்லலாம்.

புதிய பொருளாதார கொள்கையினால் எல்லா மாநிலங்களிலும் மக்கள் படும் பாட்டில், கேரளா, மேற்கு வங்க ஆட்சியில் மக்கள் வாழ்வில் ஓரளவு மாற்றம் காணும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் கொள்கைக்கு மாறாக கேரளாவில் ஓர் அற்புதம் நடந்தது. நலிந்து போன பொதுத்துறை தொழிற்சாலையை அப்படியே விட்டு விடாமல் மீண்டும் அதைத் திறந்து புதுப்பித்து நடத்தியதில் ஏற்கனவே ரூ. 96 கோடி நஷ்டத்தில் ஓடிய தொழிற் சாலை இப்போது ரூ. 240 கோடி லாபத்தில் ஓடுவதோடு, அந்த லாபத் தொகையை மேலும் அந்தச் தொழிற்சாலை விருத்தி அடையச் செலவிடப்படுகிறது.

இப்படிப்பட்ட அரசுகளைத்தான் இந்திய ஆளும் வர்க்கம் வீழ்த்த விரும்புகிறது. இந்த மாநிலங்களில் போராடி பாடுபட்டு பெற்ற ஜனநாயக உரிமைகளை, வாய்ப்புகளை, வசதிகளைப் பறித்து அழித்து, மீண்டும் பழைய சுரண்டும் நிலைக்குப் போக முயற்சிக் கிறது. ஜமீன்தார்களிடமிருந்து பறித்து விநி யோகம் செய்யப்பட்ட நிலங்களையெல்லாம், அவர்களிடமிருந்து தட்டிப் பறித்து மீண்டும் பழைய நிலச்சுவான்தாரர்களுக்கு விநியோ கிக்க முயற்சிக்கிறது. பெற்ற தொழிற்சங்க உரி மைகளை, மக்கள் அனுபவிக்கும் நல்வாழ்வுத் திட்டங்களை நிறுத்த விரும்புகிறது.

கேரளாவில் ஐக்கிய ஜனநாயக அணி (காங்கிரஸ் தலைமை) மத வகுப்புவாத அமைப்புகளை, சாதிய சக்திகளைத் திரட்டுகிறது. சர்ச்சுகள் வெளிப்படையாக வீதிகளில் இறங்கி கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன. ஒரு பக்கம் இஸ்லாம் பெயரில் செய்யப்படும் தீவிரவாதமும், இன்னொரு பக்கம் இந்துமதம் பெயரில் செய்யப்படும் தீவிரவாதமும் கேரளாவில் மத அமைதியைக் கெடுத்து கலகம் நடத்தி மக்களை இரு கூறாகப் பிரிக்க முயற்சிகள் எடுக்கின்றன? பத்திரிகைகளும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன. இவ்வளவுக்கும் இடையிலும் கேரளாவில் மத நல்லிணக்கம் சீர்குலையாமல் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கி இந்த சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி வருகின்றது.

மேற்கு வங்கத்திலும், திரிணாமுல் காங் கிரசும், மாவோயிஸ்டுகளும் எல்லா வலது சாரி சக்திகளும், வெளிநாட்டு பணம் பெற்று செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும், வகுப்புவாத, மத அடிப்படை வாத பிரிவுகளும், கார்ப்பரேட் பத்திரிகைகளும் ஒன்று கூடி செயல்பட ஆரம்பித்துள்ளன. இந் தியாவில் உள்ள சில அறிவு ஜீவிகளும் இந்தக் கலகக்கூட்டை ஆதரிக்கிறார்கள். அராஜகத்தை நடத்தியாவது, பலாத்காரத்தில் ஈடுபட்டாவது மார்க்சிஸ்டுகளை, இடது சாரிகளை வீழ்த்தி விட்டு ஆட்சியைப் பிடிக்க கனவு காணுகிறார்கள்.

மதச்சார்பற்ற கொள்கையை கட்டிக் காப்பதில் திரிபுராவுக்கு, கேரளாவுக்கு, மேற்கு வங்கத்துக்கு நிகராக வேறு எந்த மாநிலமும் இல்லை. தொழிற்சங்க உரிமைகளைக் கட்டிக் காப்பதில், மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் இந்த மூன்று மாநிலமும் முன்னணியில் நிற்கின்றன. சாதிக் கலவரம் என்பதோ, தீண்டாமை அனுஷ்டிக்கப்படுகிறது என்பதோ இந்த மூன்று மாநிலங்களிலும் கேள்விப்படாத செய்திகள்! இடதுசாரி சக்திகள் பலமாக இருக்கிற மாநிலங்களில் தான் இப்படிப்பட்ட வேண்டாத தீய சமூக நோய்கள் நொடிந்து போக வாய்ப்பு உண்டு.

மதச்சிறுபான்மையோருக்கு பாதுகாப்பாக இடதுசாரிகளை விட, இடதுசாரி ஆட்சி களை விட வேறு யார் இருக்க முடியும்?

மத்திய அரசு ஒவ்வொரு முறையும் மக்க ளுக்கு எதிராக கொள்கை எடுக்கிற போதெல் லாம், அது விலைவாசி உயர்வு என்றாலும், பொதுத்துறையை தனியாருக்கு விற்பது என்றாலும், தொழிலாளர்கள், விவசாயிகளின் நலன் பறிக்கப்படுகிற சட்டம் கொண்டு வந்தா லும் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, வெளியே வீதி மன்றத்தில் மட்டுமல்ல, இந்த மூன்று மாநிலங்களிலும் இடதுசாரி தலை மையிலான அரசுகள் மக்களுக்கு அறை கூவல் விட அங்கு மூன்று மாநிலங்களிலும் முழு அளவில் மக்கள் இயக்கங்களில் பங்கு பெற்று மாநிலங்களே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட அரசியல் போராட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணங்களாக, முன்னோடியாகத் திகழ் கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி யில் மீண்டும் நீடிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இந்தியாவில் அனைத்து மக்களுக்குமான சமத்துவ பொருளாதார அமைப்பை உருவாக் கிடும் லட்சியத்தை எதிர்காலத்தில் உருவாக் கிட அணையா கலங்கரை விளக்காக விளங் கிடும் இந்த இடதுசாரி ஆட்சிகளைக் காப்பாற்றியாக வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com