Contact us at: sooddram@gmail.com

 

ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்

இலங்கையின் நான்கு பிரதான பல்கலைக்கழங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் இப்போது மேற்கொண்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் எங்கள் நாட்டின் கொழும்பு பல்கலைக்கழகமும், பேரா தனை பல்கலைக்கழகமும் கல்வித்துறையில் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்று புகழ் உச்சியில் இருந்தன. இலங்கையின் ஆங்கில மொழியறிவு அன்று அதியுன்னத நிலையில் இருந்தமைக்கு பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறை களில் கலாநிதி மற்றும் பட்டமுதுமாணி சிறப்பு பட்டங்கள் பெற்ற வர்கள் இவ்விரு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருந்த காரணத்தினால் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு சர்வ தேச ரீதியில் பெருமையும், அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது.

இலங்கையில் எம்.பி.பி.எஸ் வைத்தியத்துறை பட்டம் பெற்றவர்கள் பிரிட்டனிலும் மற்றெல்லா நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டு, அந் நாடுகளில் வைத்தியர்களாக பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் எம்.பி.பி.எஸ் பட்டங்கள் வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்படுவ தில்லை. இந்த நாடுகளில் எம்.பி.ப.எஸ் பட்டம் பெற்றவர்கள் வெளிநாடுகளில் தொழில்புரிய விரும்பினால், அந்தந்த நாடுகளின் எம்.பி.பி. எஸ் பரீட்சைக்கு தோற்றி, அவற்றில் சித்தியடைய வேண்டும்.

இதனால், நாம் மேலே குறிப்பிட்ட வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள் இலங்கையில் வைத்தியர்களாக பணிபுரிய விரும்பினாலும், அவர்களும் இலங்கையில் எம். பி.பி.எஸ் பரீட் சைக்கு தோற்றி சித்தியடைய வேண்டும் என்ற நடைமுறை இப் போதும் இருந்து வருகிறது.

1956 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் பல்வேறு பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது, எமது பல்கலைக்கழகங்களில் சித்தியடைந்தவர்களுக்கு முன்னர் இருந்து வந்த வரவேற்பும், முக்கி யத்துவமும், வெளிநாடுகளில் எதிர்பார்த்தளவுக்கு கிடைக்கவில்லை.

இத்தகைய காரணங்களினால் அரசாங்கம் எமது நாட்டின் ஆறு பல் கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான தீர்மான த்தை அடுத்த சில வருடங்களில் 600 மில்லியன் ரூபாவை செல விட்டு அதனை நடைமுறைப்படுத்துவது என்று முடிவெடுத்துள்ளது.

உயர்கல்வி அமைச்சின் செயலாளர் டாக்டர் சுனில் ஜெயந்த நவரத்ன இத்திட்டத்தின் கீழ் கொழும்பு, பேராதெனிய, ஸ்ரீ ஜெயவர்தனபுர, மொறட்டுவ, களனி மற்றும் றுகுணு பல்கலைக்கழகங்களின் தரம் உயர்த்தப்படும் என்று கூறினார். உலகில் முன்னணியிலுள்ள ஆயி ரம் பல்கலைக்கழகங்களின் தரத்திற்கு எமது நாட்டின் இந்த ஆறு பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் குறிக் கோளாகும் என்றும் அவர் கூறினார்.

இன்று, எங்கள் நாட்டின் இந்த ஆறு பல்கலைக்கழகங்களும் உலகின் பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயத்தில் 3500 முதல் 5000 வரை யிலான ஸ்தானங்களை பெற வேண்டிய பின்னடைவு ஏற்பட்டுள் ளது வேதனையளிப்பதாக இருக்கின்றது.

எமது பல்கலைக்கழகங்களை உலகின் முன்னணி ஆயிரம் பல்கலைக் கழகங்களின் தரத்திற்கு உயர்த்த வேண்டுமாயின், எமது பல் கலைக்கழகங்கள் உலக தரத்திலான கல்வித் தொடர்புடைய பிர சுரங்களை வெளியிட வேண்டும். அடுத்த படியாக வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்வதுடன், வெளிநாட்டு கல்விமான்களை ஆசிரிய பீடத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக உலக நாடுகளில் பணிபுரியக் கூடிய தகுதியும், திறமைமிக்க பட்ட தாரிகளை எமது பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளையும், தகுதிகளையும் எமது பல்கலைக்கழகங்கள் பூர்த்தி செய்தால் மாத்திரமே அவற்றிற்கு சர்வதேச ரீதியில் முன் னணி பல்கலைக்கழகங்களாக உயர்ச்சி பெற முடியும். இன்று உல கப் பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயத்தில் பேராதனை பல் கலைக்கழகம் 2220 ஆம் ஸ்தானத்திலும், கொழும்பு பல்கலைக் கழகம் 2240 ஆம் ஸ்தானத்திலும், மொறட்டுவ பல்கலைக்கழகம் 2573 ஆம் ஸ்தானத்திலும், றுகுணு பல்கலைக்கழகம் 3514 ஆம் ஸ்தானத்திலும், திறந்த பல்கலைக்கழகம் 5988 ஆம் ஸ்தானத்திலும், ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழகம் 6382 ஆம் ஸ்தானத்திலும், களனி பல்கலைக்கழகம் 6594 ஆம் ஸ்தானத்திலும் இருக்கின்றன.

இது இவ்விதம் இருக்க தெற்காசிய நாடுகளின் பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயத்தில் பேராதனை பல்கலைக்கழகம் 20 ஆம் ஸ்தானத் திலும், கொழும்பு பல்கலைக்கழகம் 23 ஆம் ஸ்தானத்திலும், மொறட்டுவ பல்கலைக்கழகம் 31 ஆம் ஸ்தானத்திலும் இருப்பது ஓரளவு மன நிறைவை அளிக்கின்றது.

எமது பல்கலைக்கழகங்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பூர் வாங்க நடவடிக்கையாக பல்கலைக்கழக ஆணைக்குழுவின் பிரதி நிதிகளும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களும், ஒரு உயர் மட்ட கூட்டத்தை நடத்தி, ஆலோசனைகளை நடத்துவார்கள். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எமது பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு உதவியாக அமையும் என்று நாம் அசையாத நம்பிக்கை வைத்திருக்கலாம். இந்த தீர்மானங்கள் மீண்டும் எமது நாட்டின் பல்கலைக்கழகங்களை முன்பு இருந்த நிலைக்கு உயர்த்தி, இலங்கை கல்வித்துறையில் அடைந்துள்ள உயர் நிலையை வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com