Contact us at: sooddram@gmail.com

 

ஒவ்வொரு இலங்கை குடிமகனுக்கும் யார் இந்த கிறிஸ்பூதம் என்பது தெரிய வேண்டும்!

(படுவான்கரையான்)

முப்பது வருடங்கள் பதட்டமும் பயமும் கொண்ட தினசரி வாழ்வில் நடந்த கொலைகள் ஆயிரம் ஆயிரம். 'தமிழ் ஈழம்' என்ற வியாபாரக் குறியீட்டில் தொடங்கிய தமிழ் மக்களுக்கான தன்னாட்சி, சுயஉரிமை, தேசியம் போன்ற கோசங்கள் புலிப்பயங்கரவாதத்தால் முன்னெடுக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது உலகம் அறிந்த உண்மை. நடந்தேறிய  மகா பயங்கரவாதப் போரில் ஒவ்வொரு தடவைகளும் அதன் ஆரம்பம் கிழக்கு மாகாணமாகத்தான் இருந்தது. அதே போல போரின் பின்னும் சகல நிகழ்வுகளும் வழமைபோல கிழக்கு மாகாணத்திலேயே ஆரம்பிக்கப்படுகின்றன. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கற்பழிப்பு, சிறவர்கள் கடத்தல், பணப்பறிப்பு போன்ற யாவும் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு சிறிது சிறிதாக வடமாகாணத்துக்கு சென்று அங்கு அது விஸ்ரூபம் எடுப்பது நம்காலத்திலே நம் கண்முன்னாலேயே காண்கின்றோம்.

வடமாகாணத்திற்கு அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் வரும்வரை தமிழதேசியக் கூட்டமைப்பினர் எந்தவிதத்திலும் அச்சம்பவத்தைக் கண்டு கொள்வதும் இல்லை அலட்டிக் கொள்வதுமில்லை. அது எப்போது தங்கள் படலைக்குள் வருகின்றதோ அப்போதுதான் ஒட்டுமொத்த தமிழினத்தையும் இழுத்துக்கொண்டு தங்களை காப்பாற்றுமாறு ஒப்பாரி வைக்கத் தொடங்கி விடுவார்கள்.

அதனைத் தொடர்ந்து புலம் பெயர்ந்த புலிவால்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்றெல்லாம் 'குறளிவித்தை' காட்டத் தொடங்குவார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டிலுள்ள சில கோமாளிகள் தங்கள் தொப்பிள் கொடி உறவுபற்றி பிதற்றத் தொடங்கி எங்கோ ஒரு அப்பாவியை தீ மூட்டிக் கொலை செய்து விடுவார்கள். அதன் பின்னர் குளித்தி, பாடி, கும்பம் சொரிந்து விடுவார்கள்.

அந்தவகையில் தற்போது கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கிழக்கிலே தொடங்கிய கிறிஸ் பூதம் தற்போது பூதாகரமாக யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ளதால் சுரேஸ், சுமந்திரன் போன்றோர் துள்ளிக் குதிக்கின்றனர்.  அதில் என்ன வேடிக்கையென்றால் தலைவர் சம்பந்தன் எதுவிதவித சம்பந்தோ சம்பந்தமும் இல்லாமல் இன்னமும் மௌனியாக இருப்பதுதான். எது எப்படியிருந்த போதிலும் கடந்த இரண்டுமாதங்களாக குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் இயல்புவாழ்வினை சீர்குலைத்து ஒரு இருண்ட பயப்பீதியுள்ள அன்றாட வாழ்க்கைக்கு தமிழ், முஸ்லீம் மக்களை வைத்திருக்கும் அந்த கிறிஸ் பூதம் தான் யார்???

கிறிஸ் மனிதன் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒவ்வொரு சம்பவங்களும் கட்டுக்கதைகளில்லாமல் ஒவ்வொன்றும் ஒரேமாதிரியாக நடைபெற்றிருப்பது மறுக்கமுடியாத மிகவும் சிந்திக்க வேண்டிய ஓன்றாகும். தமிழ், முஸ்லீம் மக்கள் இந்த கிறிஸ் மனிதனின் பாதிப்பிற்குள்ளானபோது அவன் பற்றி விபரித்திருக்கும் விதம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது. அவன் அணிந்திருந்த உடை முகத்தை மறைத்திருந்த முகமூடி ஒவ்வொரு அப்பாவி பெண்ணுக்கும் காயங்களை ஏற்படுத்திய விதம் எல்லாமே அச்சொட்டாக ஒரே பாணியில் நடந்தேறியிருக்கின்றன.

அன்று புலிகள் தாங்கள் கொடுக்கும் மரணதண்டனையுட்பட அவர்களின் தாக்குதல்கள் யாவும் ஒரு தனி ரகம். அவர்களைப்போல வேறு யாரும் அப்படிச் செய்வதில்லை. அதனால் அப்போது நடந்து முடிந்த சம்பவம் பற்றி யாரைக் கேட்டாலும் அது புலிதான் என அவர்களின் சுட்டு விரல் எந்தவித தடங்கலுமின்றி மனதிற்குள் மௌனித்து மடங்கிக்கொள்ளும். அதேபோல இந்த கிறிஸ்மனித பயங்கரவாதமும் ஒரே ரகமாக அமைந்திருப்பதே என்னை எழுதத் தூண்டியது.

கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற பதினேழுக்கு மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட சம்பவங்களும் ஒரேமாதிரியாக நடைபெற்ற போது ஊரவர்களால் துரத்திச் செல்லப்பட்ட அந்த மாயாவி ஓடிச்சென்று தஞ்சமடைந்த இடம் பொலிஸ் அல்லது இராணுவ முகாம். அப்படியாயின் சட்டம் என்ன செய்ய வேண்டும் சட்டத்திடம் சரணடைந்த குற்றவாளி சட்டத்தின் முன்தான் நிறுத்தப்பட வேண்டும். அதுவே உலக வழக்கு. ஆனால் இங்கு நிலமை முற்றிலும் வேறு. குற்றவாளி சட்டத்திடம் தஞ்சமடைய குற்றவாளியால் பாதிக்கப்பட்வர்களோ நையப்புடையப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அப்படியாயின் அந்த குற்றவாளி யார்? சட்டத்தின் காவலனா? அந்த கிறிஸ் மனிதன் யார்? பொதுமக்களின் பாதுகாவலனா? யார் அந்த மாயாவி? இராணுவத்தின் பாதுகாவலனா? யார் இந்தப் பூதம்? சமாதானத் தூதுவனா?

புரளி கட்டுக்கதை வதந்தி கற்பனை என பலவித வடிவங்களில் மக்கள் செயல்படுகின்றார்கள் என பாதுகாப்பு படையினரும் குறிப்பாக பாதுகாப்புச் செயலரும் சொல்லியிருப்பதைப் பார்த்தால் ஒட்டு மொத்த இலங்கை மக்கள் எல்லாரும் இப்படிப்பட்டவர்கள்தானா? என எண்ணத் தோன்றுகின்றது. அதாவது படிப்பறிவற்ற மூடர்கள் சொந்தப் புத்தியில்லாதவர்கள் என்றெல்லவா ஊகிக்க முடிகிறது. அப்படியாயின் தாங்கள் வாக்களித்து தெரிவு செய்த அரசாங்கம் தங்களை பாதுகாப்பதை விடுத்து வதந்தி பரப்புவர்கள் இராணுவத்தினருக்கு எதிரானவர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்.

இந்த மக்களின் ஒத்தாசையும் உதவியுடன்தானே உலகின் மிகப் பயங்கர வாதிகளான புலிப்படையினரை வடக்கு கிழக்கு தமிழ்ப் பகுதிகளிலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்தீர்கள். பொதுமக்களின் துணையில்லாமல் இவ்வெற்றியை நீங்கள் எடடிப்பார்த்திருக்க முடிந்திருக்குமா? அப்படியானால் ஏன் எதற்காக இந்த அப்பாவிகளை இன்னமும் கொடுமைப்படுத்துகின்றீர்கள்? அவர்களது எஞ்சியுள்ள மனோநிலையயையும் ஏன் துவம்சம் செய்கின்றீர்கள்?

ஒவ்வொரு இலங்கை குடிமகனுக்கும் யார் இந்த கிறிஸ்பூதம் என்பதற்கான கேள்விக்கு விடை தெரிய வேண்டும்! இது ஐக்கிய நாடுகள் சபைக்கோ சர்வதேச நீதிமன்றத்திற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ தெரிய வேண்டியதில்லை. எனக்கும், உனக்கும், அவனுக்கும் ஆம் இலங்கைத்தமிழனுக்கும், இலங்கைசிங்களவனுக்கும், இலங்கைமுஸ்லீமிற்கும் இந்த இலங்கைகிறிஸ் பூதம் யார் எனத் தெரிய வேண்டும்.

தமிழ் ஈழம் வேண்டாம்! பதின் மூன்றாவது சரத்தும் வேண்டாம்!! மாகாண சபைக்கு பொலிசும் வேண்டாம்!!! சிங்கள மக்களை தமிழ்பகுதியில் குடியேற்றுவதும் கமக் நே!!!!! தமிழர் பகுதியில் மீனபிடிப்பதற்கு சிங்களவருக்கு தாரை வார்த்து கொடுப்பதும் பிரச்சனையல்ல!!!!! சனல் நான்கு பற்றியும் நோ புறப்பிளம்!!!!!! ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்த கிறிஸ்பூதம்ந்தான் யார் என்பதும் ஏன் என்பதும் ஒட்டுமொத்த இலங்கை குடிமக்களின் மனதிலுள்ள கேள்வி!

கடந்த கால்நூற்றாண்டிற்கும் மேலாக  சொல்லொண்ணா துனபத்திலிருந்த இலங்கைத் திருமாதாவின் மக்களை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்த சகல வல்லமை கொண்ட அதி உத்தம ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ அவர்களால் மட்டும்தான் இதற்கான பதிலை அவரது குடிமக்களுக்கு தடங்கலின்றி ஒளிவு மறைவு இன்றி அப்பட்டமாகச் தாமதியாதுசொல்ல முடியம். எந்த பாராளுமன்ற உறுப்பினருக்குமோ அமைச்சருக்கோ அல்லது அரச உயர் அதிகாரிகளுக்கோ அன்றி பாதுகாப்பு படைத் தளபதிகளுக்கோ இல்லாத சகல வல்லமையும் அதிகாரமும் தங்களுக்கு உண்டு என்பதையம் தொடர்ந்தும் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் பாதுகாவலானாக நீங்கள் இருப்பீர்கள் என்பதையும் நாம் திடமாக நம்புகின்றோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com