Contact us at: sooddram@gmail.com

 

ஏகாதிபத்தியத்தின் எண்ணெய் அரசியல்

(கி. இலக்குவன்)

அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் மற் றும் எண்ணெய் நுகர்வோருக்கான உலக எண்ணெய் வளப்பாதுகாப்பு அமைப்பாக அமெரிக்க ராணுவம் உருமாற்ற மடைந்து விட்டது. இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளவர் யார் தெரியுமா-பேராசிரியர் மைக்கேல் கிளேர் என்ற ஒரு அமெரிக்கரே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். உலக எண்ணெய் அரசிய லில் ஒரு நிபுணராக இவர் அறியப்படுகிறார். பெட்ரோலிய எண்ணெய் வளம் நிரம்பிய பகுதி களை தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருப் பது என்ற ஒரு கொள்கையை அமெரிக்க அரசு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடித்து வருகிறது.

1973ம் ஆண்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், ஓபெக் என்ற அமைப்பை ஏற்படுத்தி எண்ணெய் விலையைத் தாங்களே நிர்ணயிப்போம் என்று அறிவித்தன. இதனால் ஏறிய தாறுமா றான விலையேற்றக்காலம் எண்ணெய் அதிர்ச்சிக்காலமாக அழைக்கப்படுகிறது. எண்ணெய் வளப்பிராந்தியம் எப்போதுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்கா அப்போதே வகுத்துவிட்டது. வேறு அந்நிய நாடு எதுவும் வளைகுடாப் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முய லுமானால் அது அமெரிக்காவின் முக்கிய நலன்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குத லாகக் கருதப்படும். இதனை எதிர் கொள்வ தற்கு ராணுவபலத்தைப் பயன்படுத்தவும் அமெரிக்கா தயங்காது என்று அன்றைய அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர் ஒரு கொள்கைப் பிரகடனத்தையே வெளியிட்டார். தனது மண்ணில் பெட்ரோலிய எண்ணெய் யை சுமந்திருக்கும் எந்தவொரு நாட்டிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ராணுவ பலத்தை பயன்படுத்தியோ, அவ்வாறின் றியோ குறுக்கிடும் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது. இராக்போர் தொடங்கி இன்றைய லிபிய யுத்தம் ஈறாக அனைத்து போர்களும் எண்ணெய் வளத்தை தனது கட் டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அமெரிக்கா வும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் நடத்தி யுள்ள யுத்தங்களே.

சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற சில நாடுகளின் பிற்போக்குத்தனமான மன் னராட்சிகளுக்கு முட்டுக்கொடுத்து, ராணுவ உதவி போன்றவற்றை வழங்குவதன் மூலம் அவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் அமெ ரிக்கா வைத்துள்ளது. ஆனால் எண்ணெய் வளத்தை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகளின் சூறையாடலுக்கு அனுமதிக்காத நாடுகளில் ஆட்சிமாற்றத் தைக்கொண்டுவருவதையே தனது லட்சிய மாகக்கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வரு கிறது. 1953ல் ஈரான் நாட்டு அதிபரான முகமது மொசாதே தனது நாட்டின் எண்ணெய்த் தொழி லை தேசியமயமாக்கினார் என்பதற்காக சிஐஏவினால் பின்னாலிருந்து இயக்கப்பட்ட அதிரடிப்புரட்சி மூலம் அகற்றப்பட்டார்.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண் ணெய் வளநாடான இராக்கில் நடந்தது என்ன என்பதை உலகம் அறியும். பேரழிவு ஆயுதங் களை இராக் குவித்துள்ளது என்ற அப்பட்ட மான பொய்யைப்பரப்பி சதாம் உசேனின் ஆட்சி அகற்றப்பட்டது. தனது எண்ணெய் வளத்தின் பலன்களை தனது நாட்டு மக்களே அனுபவிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததே அவர் இழைத்த குற்றம். அதற்காக இராக்கின் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான இராக்கியர் கள் கொல்லப்பட்டனர்; சதாம் உசேனின் ஆட்சி அகற்றப்பட்டது.

உலகின் இரண்டாவது எண்ணெய் வள நாடான ஈரானின் மீது கடுமையான வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. தனது மண் ணில் புதைந்து கிடக்கும் கச்சா எண்ணெய் யை வெளியே எடுத்து சுத்திகரிப்பதற்கான உதவிகளை மற்ற நாடுகளிலிருந்து பெற முடியாத நிலையில், இந்தியா போன்ற நாடு களிலிருந்து அது இறக்குமதி செய்ய வேண் டியநிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனது நாட்டின் எண்ணெய்த் தொழிலை மேம் படுத்துவதற்கு அதற்கு 20,000 கோடி டாலர் தேவைப்படுகிறது. வர்த்தகத் தடைகள் காரணமாக அதற்குத்தேவைப்படும் நிதி கிடைக்கவில்லை. ஈரான்/பாகிஸ்தான்/இந்தியா எரிவாயுக்குழாய்திட்டத்துக்கும் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது. அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு பயந்து இந்திய அரசும் இந்த அநீதிக்குத் துணை போகிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடான் நாட்டின் தென்பகுதி எண்ணெய் வளம் நிரம்பிய பகுதியாகும். அமெரிக்கத் தலையீட்டின் விளைவாக இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தெற்கு சூடான் தனி நாடாகிவிட்டது. இங்கே இனி மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகள் புகுந்து விளையாட லாம்.

லிபியாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காகவே கடாபி அரசுக்கு எதிரான வர்த்தகத்தடைகளை அமெரிக்கா விதித்து வந்தது. 2004 ம் ஆண்டில் அமெரிக் காவுடன் சமரசம் செய்து கொள்வதற்காகவே மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்கள் லிபியா வில் காலூன்றுவதற்கு கடாபி அனுமதித்தார். ஆனால் 2006ம் ஆண்டு முதல் கடாபி வேறு விதமாகப் பேசத்தொடங்கியதை அமெரிக்கா கண்டது. அந்நிய எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோலியத் தொழிலில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வருகின்றன. இது லிபியா வுக்கே கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண் டும் என்று 2006-ம் ஆண்டில் கடாபி பேசி னார். அந்நியக் கம்பெனிகளில் மேலாளர் பதவி களில் லிபியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும் கடாபி பேசினார். எண் ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுக ளும் தங்களுடைய பெட்ரோலியத் தொழிலை தேசியமயமாக்கவேண்டும் என்று கடாபி பேசினார். இவ்வாறு எரிசக்தித் துறையில் தனது தேசிய நலன்களை பாதுகாக்கும் கொள் கையை கடாபி வலியுறுத்தி வருவதை அமெ ரிக்கத் தூதர்கள் தங்கள் அரசுக்கு தெரிவித்து வந்துள்ளதை விக்கி லீக்ஸ் இணையதளச் செய்திகள் அம்பலப்படுத்தியுள்ளன.

இந்நிலையில்தான் லிபியாவின் எண் ணெய் வளப்பகுதிகளில் கடாபிக்கு எதிரான கலகம் வளரத்தொடங்கியது. லிபிய மக்க ளைக் காப்பாற்றுவது என்ற பெயரில் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் விமானப்படை கள் லிபியா மீது குண்டுமழை பொழிந்தன. லிபிய கலகக்காரர்களுக்கு நிதி உதவியையும் ஆயுத உதவியையும் வழங்கி வந்தன. கடாபி யின் ஆட்சி அகற்றப்பட்டவுடன் மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகள் லிபியாவில் பாது காப்புடன் செயல்பட அனுமதிக்கப்படுவர் என்ற உறுதி மொழி கலகக்காரர்களால் வழங் கப்பட்டது. லிபியத் தலைநகரான திரிபோலி கலகக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்ட நிலையில், பிரான்ஸ் அதிபர் சர்கோசி போன்றோரின் பேச்சுக்கள் எண்ணெய் வளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக நேட்டோ படை தலையிட் டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளன.

தென் அமெரிக்காவின் எண்ணெய் வள நாடான வெனிசுலாவின் தேசபக்தரான சாவே ஸின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா 2002ம் ஆண்டில் மேற்கொண்ட முயற்சி விழிப்புணர்வுமிக்க வெனிசுலா மக்களால் முறியடிக்கப்பட்டது. மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற் றும் அணுஆயுதப்பரவல் தடையைக் காரண மாகக் கூறி அமெரிக்கா நடத்திவரும் யுத்தங் கள் உலகின் எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற் கான ஏகாதிபத்திய அரசியல் என்பது தொடர் ந்து அம்பலமாகி வருகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com