Contact us at: sooddram@gmail.com

 

தற்கொலைக் களங்கள்!  

- சி.சரவணன்

உலக அளவில் ஆண்டு தோறும் செப்டம்பர் 10-ம் தேதி 'உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்' (World Suicide Prevention Day) ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட இரண்டு மடங்கு ஆண்கள்தான் தற்கொலை செய்கிறார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேரும், தமிழ்நாட்டில் சுமார் 10,000 பேரும், சென்னையில் 1300 பேரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். ஆண்டு தோறும் சுமார் 2 கோடி பேர் தற்கொலை முயற்சியிலிருந்து தப்புகிறார்கள்.

ஏன் தற்கொலை?


தற்கொலை என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்.

பொதுவாக, தற்கொலை என்பது இயற்கைக்கு எதிரானச் செயலாக கருதப்படுகிறது. இந்தியாவில் உடன்கட்டை ஏறும் பழக்கத்தில் கணவனை இழந்த பெண்கள், கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது. பகுத்தறிவின் பலனாக அது காலப்போக்கில் மறைந்துவிட்டது.

அதிக உடல் வேதனை, காயங்கள் - விபத்துக் காரணமாக இயங்க முடியாத நிலை போன்ற நிலைமைகளில் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்யும் வழக்கம் உள்ளது.

தான் மட்டுமே தோல்வியை சந்தித்து வருவதாகவும், தான் எதற்கும் லாயக்கு இல்லாதவன், குடும்பமே என்னை வெறுக்கிறது, எல்லா பிரச்னைகளுக்கும் நான்தான் காரணம் என்பது போன்ற எண்ணங்களே தற்கொலைக்கு முக்கிய மூலமாக இருக்கின்றன.

காரணங்கள்..!

* காதல் தோல்வி மற்றும் திருமண முறிவு
* மிகவும் சோர்வான நிலை
* தீராத பிரச்னைகள் - நோய்கள் (புற்றுநோய், பக்கவாதம்)
* பாலியல் பலாத்காரம்
* தேர்வில் தோல்வி
* தாம்பத்திய உறவில் சந்தேகம்
* குழந்தை இல்லாமை
* போதை - மது பழக்கம் அடிமை
* திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம்
* கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்
* கடன் - சொத்து பிரச்னை
* வேலையின்மை அல்லது வேலை இழப்பு
* வியாபாரம்/தொழிலில் பிரச்னை

எப்போது நடக்கிறது?

பொதுவாக தனிமையில் இருக்கும் போது இரவு 12 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் அல்லது பகல் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) தான் தற்கொலைகள் நடக்கின்றன.

உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென் இந்தியாவில்தான் அதிகம்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நாட்டின் மொத்த எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் சென்னையில் தற்கொலை செய்து கொள்வோர் மற்றும் முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை 11 சதவிகிதம் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது காவல் நிலையங்களில் பதிவான வழங்குகளின் அடிப்படையிலான விவரம். பதிவு செய்யப்படாதவை இவற்றை விட 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். 

மருத்துவத் தீர்வு..!

உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மூலம் தற்கொலை எண்ணங்களை தவிர்க்க முடியும். மனச்சிதைவு நோயால் ஒருவருக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை போக்க குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் முக்கியமாக தேவை.

சிநேகா தற்கொலை தடுப்பு மையம் (பெசன்ட் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14, 044 - 2835 2345) பொன்றவை தற்கொலைக்கு முயன்றவர்களை தடுத்து அவர்கள் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடாதவாறு செய்து வருகிறார்கள்.

உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மீண்ட(ம்) வாழ்கிறோம் என்ற தலைப்பில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்பிழைத்தவர்கள் மனம் திறந்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் இந்தத் தினத்தில் நடக்கிறது.

தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்னை அல்ல. தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள், இரட்டை மனநிலையில் இருக்கிறார்கள். அதவாது, ஒரு புறம் வாழத் துடிக்கிறார்கள். அது முடியாத போதுதான் தற்கொலைக்கு வருகிறார்கள். அது ஒரு சமூதாயத்தின் பிரச்னை என்பதை அனைவரும் புரிந்து செயல்பட்டால் நாட்டில் தற்கொலைகளை தடுக்க முடியும் என்பதே நிதர்சன உண்மை.

சமூக நோக்கத்துக்காக..!


பெரும்பாலான தற்கொலை தனக்காக நடக்கும் நிலையில் உலகில் அத்திப்பூத்தாற் சில தற்கொலைகள் சமூக நோக்கிற்காக நடக்கவும் செய்கிறது. முத்துக்குமார், செங்கொடி முதல் துனீசியாவின் முகமது புவாஸிஸி (Mohamed Bouazizi) வரை பலரை உதாரணமாகக் குறிப்பிடலாம். ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி தன்னையை தீக்கு இரையாகினார், முத்துக்குமார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்டார், செங்கொடி.

துனிசீயாவைச் சேர்ந்த முகமது புவாஸிஸி என்ற 26 வயது இளைஞனின் தற்கொலை, அந்த நாட்டில் அரசியல் புரட்சிக்கு வித்திட்டது. முகமது வேலைக்காக ராணுவத்தில் சேர முயற்சி எடுத்தார். லஞ்ச ஊழல நிறைந்திருந்த அந்த நாட்டில் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. பல வேலைகளுக்கு முயற்சி செய்து முடியாமல் போகவே, தெருக்களில் காய்கறி விற்று பிழைப்பு நடத்தினர். அதற்கும் மாமூல் கேட்டு அதிகாரிகள் அராஜகம் செய்தனர். ஒரு கட்டத்தில் பெண் போலீஸ் ஒருவர் முகமதுவை அடித்துவிட, மனம் வெறுத்த அவர், இது போன்ற பிரச்னை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று தனக்கு தானே நெருப்பு வைத்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் கடந்த 2010, டிசம்பர் 17-ம் தேதி நடந்தது. உயிருக்கு போராடிய முகமது 2011, ஜனவரி 4-ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் துனீசியா நாட்டு மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. போராட்டத்தை தூண்டியது. விளைவு.. 23 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிபர் பென் அலி பதவி இழந்தார். இந்தப் புரட்சி, இதர அரபு நாடுகளுக்கும் பரவியது.

மக்கள் பிரச்னைகளில் நல்வழி காட்டும் நம்பத்தகுந்த அரசியல் தலைமைகள், சமூகப் போராளிகளின் முயற்சிகளுடன், பிறர் நலம் பேணும் மனோபாவத்துடன் மக்களும் நியாயத்துக்காக போராட முன்வருவது மட்டுமே சமூக நோக்கத்துக்காக தன்னுயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுப்பதற்கான வழி!

சிவரமணி, தயாவர்சினி போன்ற பெண்நிலைவாதிகளும், ஈழப் போராளிகளும் புலிகளின் சித்திரைவதை, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றினால் ஏற்பட்ட மன  அழுத்தம், மரணப்பயம் போன்றவற்றிலிருந்து தம்மை காத்துக் கொள்ள முடியாமல் புலிகளின் துப்பாக்கி சனியனுக்கு ஊமைகளாக அடிமைகள் ஆக்கப்பட்ட யாழ்பாண சமூகத்தில் வாழமுடியாமல் தற் கொலை செய்து கொண்டனர் என்பதையும் இவ்விடத்தில் நினைவு கூறவேண்டும். கூடவே புலிகளின் ஆரம்ப உறுப்பினர் பற்குணம் தனது காதலியுடன் சேர்ந்து பிரபாகரன் கோஷ்டியினரால் நிர்பந்த தற்கொலைக்கு தள்ளப்பட்டு கொல்லப்பட்டதும் வரலாறு. அவர்கள் செய்த குற்றம் இயகத்திற்குள் தமது காதலையும், வாழ்வையும் நேசித்ததே. ஈரம்பத்தில் காதலுக்கு மரண தண்டனை கொடுத்த பிரபாகரன் தனக்கு காதல் வந்ததும் கட்டுப்பாட்டடை காற்றில் கலக்கவிட்டு காந்தர்வ மணம் புரிந்தது சந்தர்பவாதம் (இதிலும் இன்னொரு காதலை தற்கொலை செய்தது இரகசிய வரலாறு) பற்குணம்; புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர். மேலும் தியாகி திலீபன் கூட 'தம்பி நீ முன்னால் செல் நான் பின்னால் வருகின்றேன்' என்று புலிப் பிரபாகரனால் உண்ணாவிரதத்திற்கு அனுப்பிவிட்டு தலைவர் ஒழித்து, ஒதுங்க திலீபன் உண்ணாவிரதத்ததை முடிக்க விரும்பி எழுந்த போதெல்லாம் உதவிக்கு இருந்த புலிகளின் உதவியாளர்களால் எழும்ப விடாமல் அமர்தப்படடு வன்புறுத்திய தற்கொலையே திலீபனின் தியாகம். சந்தேகம் என்pல் அவரின் காதலி புலிகளின் பெண் போராளி சாந்தியை கேட்டுப்பாருங்கள். இந்த வற்புறுத்திய உண்ணாவிரதத் தற்கொலைக்கு சாட்சிகள் தற்போது உலகெங்கும் உள்ளனர். உண்ணாவிரதத்திற்கு உதவி செய்த யாழ் மருத்துவ பீட மாணவர்கள் (தற்போதைய டாக்ரர்களை உலகின் பலபாகங்களிலும் வாழுகின்றனர். ஆவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும்.) கட்டுரையாளர் சரவணணன் அவர்களே இவற்றையும் உங்கள் கட்டுரையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இன்னும் நிறையவே எம்மிடம் உள்ளன. தேவையாயின் தொடர்பு கொள்ளவும். சாகரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com