Contact us at: sooddram@gmail.com

 

சட்டம், தர்மம், நியாயம்!

(துக்ளக்)

‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இறுதியாக சுப்ரீம் கோர்ட்டில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் மூவர் (ஒருவருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது), செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள்’ என்ற செய்தி வெளியானதிலிருந்து, அந்த மூவரைக் காப்பாற்ற பல முயற்சிகள், பல தரப்புகளில் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த மூவரே கூட, தங்களுடைய கருணை மனு ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்ட பிறகு, சென்னை ஹைகோர்ட்டை அணுகி, தூக்கு தண்டனைக்குத் தடை உத்திரவைப் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் – புலி ஆதரவாளர்கள்; சட்ட வல்லுனர்கள்; இவ்விஷயத்தில் மென்மை காட்டுவது ஓட்டைப் பெற்றுத் தரும் என்று நினைப்பவர்கள்; விளம்பரப் பிரியர்கள்; மனிதாபிமானிகள்; பத்திரிகையாளர்கள்; அறிவுஜீவிகள்; மரண தண்டனையை எதிர்ப்பவர்கள்... என்று பலர், பல்வேறு வகைகளில், இந்த மூவருக்காக வாதாடி வருகின்றனர்.

இப்படி இந்த மூவர் சார்பாக கூறப்படுகிற வாதங்களை, கேள்விகள் உருவில் இங்கு பார்ப்போம். மூவர் தரப்பு வாதங்களின் மையக் கருத்துக்களைக் கேள்விகளாக்கி – நமது கருத்தை பதில்களாகத் தருகிறோம
் :

  • மூவர் தரப்பு கேள்வி: இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதில், ஜனாதிபதி (மத்திய அரசு) நிகழ்த்தியுள்ள தாமதம், முறைதானா?

நமது பதில் : நிச்சயமாக இந்தத் தாமதம், கண்டனத்திற்குரியது. ‘கருணை மனுக்களைப் பரிசீலனை செய்து முடிவை அறிவிப்பதில், ஏற்க முடியாத தாமதம் இருக்கக் கூடாது’ என்று சுப்ரீம் கோர்ட்டே கூட, முன்பு ஒரு வழக்கில் கூறியிருக்கிறது. ஆனால், ‘ஏற்க முடியாத தாமதம்’ எது – அல்லது எந்தக் கால அளவு – என்பதை நீதிமன்றம் விளக்கவில்லை. அரசியல் சட்டமோ, ஜனாதிபதி அல்லது கவர்னர், இவ்விஷயத்தில் முடிவு எடுக்க, எந்தக் காலவரையறையையும் விதிக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் காரணங்களுக்காகவும், முடிவு எடுக்கிற தெளிவின்மை காரணமாகவும், கருணை மனுக்கள் அப்படியே கிடப்பில் போடப்படுவது வழக்கமாகி விட்டது. இது மிகவும் தவறு. ஆனால், இந்த மூவர் விவகாரத்தில் நிகழ்ந்த தாமதத்திற்கு, அவர்களும் கூடக் காரணமாகி இருக்கிறார்கள். முதலில் விசேஷ கோர்ட் அளித்த தண்டனைகள், சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனைக்குள்ளாகியது; இது சட்ட நிர்பந்தம்.

விசேஷ கோர்ட், 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது; சுப்ரீம் கோர்ட், இதில் 19 பேர் செய்த குற்றத்திற்கு, அதுவரை அனுபவித்த சிறைவாசமே போதுமான தண்டனை என்றும், மூவருக்கு ஆயுள் தண்டனை என்றும் கூறி, நால்வருக்கு விசேஷ கோர்ட் விதித்த மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்த நால்வர், சுப்ரீம் கோர்ட்டில் மறு பரிசீலனை மனு தாக்கல் செய்தனர்; வழக்கத்திற்கு விரோதமாக இதன் மீது வாதங்கள் அனுமதிக்கப்பட்டன. தோல்வி. மரண தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

பின்னர், தமிழக கவர்னர் முன், இவர்கள் கருணை மனுக்களை சமர்ப்பித்தனர். அதை கவர்னர் நிராகரித்தார் என்று கூறி, மீண்டும் ஹைகோர்ட்டை இவர்கள் அணுக, ‘அமைச்சரவையின் ஆலோசனை பெற்று, முடிவைச் சொல்லவும்’ என்று கூறி, நீதிமன்றம் அந்த மனுக்களை கவர்னருக்கு அனுப்பி வைத்தது.

மந்திரி சபை, ‘ஒருவருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைப்பு; மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு’ என்று ஆலோசனை வழங்கியது. அவ்வாறே கவர்னர் முடிவு எடுத்தார்.

இதுவரை நடந்ததிலேயே, சுப்ரீம் கோர்ட்டில் மறு பரிசீலனை கோரிக்கை, கவர்னரின் முதல் முடிவு மீது நீதிமன்ற வழக்கு – ஆகிய தாமதங்களுக்கு, அந்த மூவரே காரணம்.

கவர்னரின் நிராகரிப்புடன் இந்த விவகாரம் முடிந்திருக்க வேண்டும். அப்படி முடியாமல், ஜனாதிபதியிடம் சென்று, இந்த விஷயம் நீண்டு கொண்டே போனதற்கு, அந்த மூவரே முதற்காரணம்.

கவர்னரின் முடிவிற்குப் பிறகு, இந்தக் கருணை மனுக்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது முறையே அல்ல. கவர்னரும், ஜனாதிபதியும் மாறி மாறி இவ்விஷயத்தில் முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்க முடியாது; அம்மாதிரி செய்வது அரசியல் சட்டத்தைக் கேலி செய்வது போல இருக்கும்.

ஜனாதிபதி (மத்திய அரசு) இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது தவறு; அதன் மீது ஒரு முடிவை அறிவிக்க இத்தனை நீண்ட காலம் எடுத்துக் கொண்டது, அதைவிடப் பெரிய தவறு. இந்த இரு தவறுகளின் பலனை, தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கு அளிப்பது, எல்லாவற்றையும் விடப் பெரிய தவறாக இருக்கும். (அடுத்த கேள்வி – பதிலில், விளக்கம் வருகிறது).

  • மூவர் தரப்பு கேள்வி: இந்த மூவரும் இருபது வருடங்கள் சிறையில் இருந்ததால், மரண தண்டனையை அனுபவிப்பது எந்த வகையில் நியாயம்?

நமது பதில் : அவர்களுடைய குற்றத்தின் தன்மை மிகக் கொடூரமானது என்ற வகையில், இது நியாயமே! ‘மரண தண்டனை விதிக்கக் கூடிய அளவு கொடுமையானது என்று ஒரு கொலை எப்போது கருதப்படுகிறது?’ என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வாதம் நிகழ்ந்தது; அதில் கூறப்பட்ட கருத்தை நீதிமன்றம் ஏற்றது. ‘முனைந்து திட்டமிட்ட செயல்; அல்லது கொலை செய்த விதம் கொடூரமானது; அல்லது கொலை செய்யப்பட்டவர், ட்யூட்டியில் இருக்கிற ராணுவ வீரர் அல்லது போலீஸ்காரர் அல்லது பொது ஊழியர். இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால், அப்போது அந்தக் கொலை, மரண தண்டனைக்குரியதாகக் கருதப்படும் என்பதே அது. – இந்த அம்சங்களில் ஒன்று அல்ல; மூன்றுமே ராஜீவ் கொலையில் உள்ளன. நீண்ட, முனைப்புடன் கூடிய திட்டம்;

தற்கொலை செய்ய முன்வந்த ஒரு பெண்ணின் மூலமாக, குறி வைக்கப்பட்ட நபர் மட்டுமல்லாமல் கூட்டத்தில் பலர் உயிர் இழப்பார்கள் என்று தெரிந்தே செய்யப்பட்ட கொடூரத்தனம்;

ட்யூட்டியில் இருந்த ஒரு டெபுடி சூப்பரின் டென்டெண்ட்; இரண்டு இன்ஸ்பெக்டர்கள்; ஒரு சப்-இன்ஸ்பெக்டர்; நாலு கான்ஸ்டபிள்கள்; ஒரு பெண் கான்ஸ்டபிள் – ஆகிய ஒன்பது பேர் கொலையுண்டனர்.

இப்படி சுப்ரீம் கோர்ட் கூறிய கருத்தின்படி, (அது உத்திரவு அல்ல) ராஜீவ் கொலை வழக்கில், குற்றவாளிகள், மரண தண்டனைக்குரியவர்களே.

அப்படிப்பட்ட குற்றத்தை செய்து விட்டு, தாங்களும் கருணை மனு தாமதத்திற்குக் காரணமாக இருந்து விட்டு, இப்போது தாமதத்தைக் காரணம் காட்டி, கருணை கோருவது ஏற்கக் கூடியது அல்ல.

  • மூவர் தரப்பு கேள்வி: தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருக்கிற மூவரும், தாங்கள் நிரபராதிகள் என்று கூறியிருக்கிறார்களே? அதை கவனத்தில் கொள்ள வேண்டாமா?

நமது பதில் : தாங்கள் நிரபராதிகள் என்று அவர்கள் கூறியது, நீதிமன்றங்களினால் மூன்று முறைகள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. விசேஷ நீதிமன்றம் முதல் முறை; சுப்ரீம் கோர்ட் இரண்டாவது முறை; இவர்கள் மனுச் செய்ததின் காரணமாக மீண்டும் ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது, மூன்றாவது முறை நிராகரிப்பு. இப்படி மீண்டும் மீண்டும் நீதிபதிகள் இந்த விஷயத்தைப் பரிசீலித்து, இவர்கள் நிரபராதிகள் அல்ல என்று தீர்ப்பளித்தனர். விசேஷ நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனைகள் சில, சுப்ரீம் கோர்ட்டினால் மாற்றப்பட்டன. ஆனால், இந்த மூவருக்கும் விசேஷ நீதிமன்றம் விதித்த தண்டனையை சுப்ரீம் கோர்ட் இரண்டு முறை உறுதி செய்தது.

இவர்களுடைய விடுதலைப் புலிகள், தாங்களாகவே குற்றம் சுமத்தி, தாங்களாகவே விசாரித்து, தாங்களாகவே தீர்ப்பு வழங்கி, தாங்களாகவே பல அப்பாவித் தமிழர்களை, துரோகிகள் என்று பட்டம் கட்டி, விளக்குக் கம்பங்களில் தூக்கிலிட்டு வந்தார்களே - அது போன்றதல்ல நமது நாட்டு நீதி நிர்வாகம். முறையான விசாரணை; முறையான வழக்கு; முறையான தீர்ப்பு; அந்தத் தீர்ப்பு மீண்டும் இரண்டு முறை பரிசீலனை... என்ற கட்டங்கள் கடக்கப்பட்டன. அதில் எந்த ஒரு கட்டத்திலும் இவர்கள் நிரபராதிகள் என்று நிரூபணம் ஆகவில்லை. நீதிமன்றத்தின் முன்னால் நிரபராதிகள் என்று நிரூபிக்க முடியாத இவர்கள், வெளியே வந்து தாங்கள் நிரபராதிகள் என்று சொல்வதை யார் ஏற்க வேண்டும்? எப்படி ஏற்க வேண்டும்? மீண்டும் சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்குமா? அல்லது ஜனாதிபதியே விசாரித்து, இவர்களை நிரபராதிகள் என்று அறிவித்து விடுவாரா? இனிமேலும் இவர்களை நிரபராதிகள் என்று சட்டபூர்வமாக முடிவு செய்ய நம் நாட்டில் யாருக்கும் அதிகாரமில்லை.

இவர்கள் தங்களை நிரபராதிகள் என்று சொல்வதை நீதிமுறை ஏற்க வேண்டும் என்று சொன்னால் - இனிமேல் கிரிமினல் வழக்குகளை மிகச் சுலபமாக முடித்து விடலாம். விசாரணை நடந்து, வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்து நீதிபதி, ‘நீ குற்றவாளிதான் என்று தீர்மானிக்கிறேன்’ என்று கூற, குற்றவாளி ‘நீங்கள் சொல்வது தவறு; நான் நிரபராதி!’ என்று கூற; உடனே நீதிபதி ‘அப்படியா? சரி! நான்தான் தவறாக ஏதோ சொல்லி விட்டேன். நீயே சொன்ன பிறகு அதற்கு அப்பீல் ஏது? நீ நிரபராதி! வீட்டிற்குப் போய் சுகமாக இருப்பாயாக!’ என்று கூற, வழக்கு வெகு விரைவில் முடிந்து விடும்!

இந்த மூவருடைய ஆதரவாளர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் போலிருக்கிறது. கட்டப் பஞ்சாயத்து நடத்த வேண்டியவர்கள், நீதி நிர்வாகம் செய்யத் தொடங்கினால்தான் இது நடக்கும்.

  • மூவர் தரப்பு கேள்வி: கொலை செய்தவர்களுக்கு அளிக்கிற தண்டனையை, அந்தக் கொலைக்கு உதவியவர்களுக்கும் அளிக்க முடியுமா?

நமது பதில் : ‘முடியுமா?’ என்பது அல்ல – அதே தண்டனையை அளிக்க வேண்டும். ஏனென்றால், ஒரு கொடூரமான சதியில் பங்கு பெற்று, அந்தக் கொலை நடக்க பலவித உதவிகளைச் செய்தவர்களும், கொலைக் குற்றம் செய்தவர்களே – என்று சட்டம் கூறுகிறது. இது பகுத்தறிவுக்கும் – வேண்டாம், அது வேறு சமாச்சாரமாகிவிடும் – சாதாரண அறிவுக்கும் எட்டுகிற விஷயமே.

நம்மைத் தாக்க, சிலர் திட்டம் தீட்ட; அந்த சதியில் ஈடுபடுபவர்களில் சிலர் ஆயுதம் தருகிற பொறுப்பை ஏற்க; ஒருவர் வந்து நம்மை அந்த ஆயுதம் கொண்டு தாக்கினால் – அவர் மட்டுமே குற்றவாளி என்று நாம் கூறுவோமா? சதியில் பங்கு பெற்றவர்களும், ஆயுதம் கொண்டு வந்தவர்களும், பல உதவிகளைப் புரிந்தவர்களும் ‘அப்பாவிகள்’ என்று நாம் கூறுவோமா? மாட்டோம். சட்டமும் அதே அணுகுமுறையைத்தான் இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் கடைப்பிடிக்கிறது. சதியில் பங்கு பெற்று, கொலைக்குப் பல உதவிகளைப் புரிபவர்களுக்கும், கொலைக்கான தண்டனைதான்.

  • மூவர் தரப்பு கேள்வி: சட்டசபையே தீர்மானம் இயற்றி விட்ட பிறகு, அதை ஏற்று, அந்த மூவர் மீதான தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைப்பதுதானே ஜனாதிபதியின் கடமை?

நமது பதில் : கிடையாது. சட்டசபைத் தீர்மானத்திற்கு எந்த விளைவும் இருக்க முடியாது. இது அரசியல் நடவடிக்கை. இதற்கும், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க முடியாது. அப்படி இது ஒரு சரியான வழிமுறை என்றால், இனி எந்த மரண தண்டனை விஷயத்திலும், ஏதாவது ஒரு மாநில சட்டசபை இப்படி தீர்மானம் போடலாம். அப்புறம் கவர்னர் மன்னிப்பு, ஜனாதிபதி மன்னிப்பு எல்லாம் ஏன்? தண்டனை பெற்றவர் பேசாமல் மாநில சட்டசபையின் மன்னிப்பைக் கோர வேண்டியதுதானே! இது சட்டமும் அல்ல; மரபும் அல்ல; அரசியல்.

மரண தண்டனை மட்டுமல்ல; வேறு தண்டனைகளையும் ஜனாதிபதி அல்லது கவர்னரால் குறைக்க முடியும், அப்படி அவர்கள் எடுக்கிற முடிவுகளை, மாற்ற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானங்கள் போடலாமா?

அது மட்டுமல்ல, மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் போட்டு, தண்டனையை மாற்றுகிற உரிமை சட்டசபைக்கு உண்டு என்றால் – ‘மரண தண்டனை வேண்டும்; ஜனாதிபதி கருணை மனுவை ஏற்றது தவறு; மரண தண்டனையை நிறைவேற்ற இந்தச் சபை வற்புறுத்துகிறது’ என்றும் வேறு ஒரு வழக்கில், ஒரு சட்டசபை தீர்மானம் போடலாமே! அசல் கூத்துக்கு அல்லவா இது வழி வகுக்கும்!

தமிழக சட்டசபை இப்படிச் செய்ததால், ஓமர் அப்துல்லா ‘இதே மாதிரி, அஃப்ஸல் குருவை மன்னிக்கக் கோரி, ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், பரவாயில்லையா?’ என்று கேட்டிருக்கிறார். நியாயமான கேள்வி.

முன்னாள் பிரதமர் மற்றும் 16 பேரை கொலை செய்தவர்களை மன்னிக்கலாம் என்றால் – பாராளுமன்றத் தாக்குதல் குற்றவாளியை ஏன் மன்னிக்கக் கூடாது? ‘ராஜீவ் மற்றும் 16 பேர் கொலை சாதா குற்றம்; பாராளுமன்றத் தாக்குதல் மசாலா போட்ட குற்றம்’ என்று வாதிட முடியுமா?

வ்வொரு மாநிலத்திலும், அந்த மாநில மொழி பேசுகிற ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் – உடனே அந்த மாநில சட்டசபை, மன்னிப்பை வற்புறுத்துகிற தீர்மானத்தை நிறைவேற்றலாமே!

இது பற்றி, தமிழக முதல்வர் முதல் தினம் அளித்த விளக்கம் சட்டபூர்வமானது; தெளிவானது. ஆனால், அதற்கடுத்த தினம் தமிழக சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம், ஒரு தவறான முன்னோடி.

  • மூவர் தரப்பு கேள்வி: மரண தண்டனையை விட ஆயுள் முழுவதும் சிறையில் வருந்தி வாடுவதுதான் கொடிய தண்டனை. தூக்கு தண்டனையால் பயன் ஒன்றுமில்லை அல்லவா?

நமது பதில் : ‘மரண தண்டனையே கொடியது, அது கூடாது’ என்பவர்கள், அதைவிட கொடியது என்று அவர்களே வர்ணிக்கிற ஆயுள் தண்டனையை வரவேற்பது எப்படி? ‘ஒருவனை வாழ்நாள் முழுவதும் சிறையில் வருந்தி வாடச் செய்வது, மனிதாபிமானம்; பயனுடையது. ஆனால் மரண தண்டனை பயனற்றது’ என்பது என்ன வாதம்? உண்மையில், வாழ்நாள் முழுவதும் சிறையில் வாடுவது – ஏன் கோரப்படுகிறது? பிறகு மற்றுமொரு கருணை மனு போடலாம்; பல மனிதாபிமானிகள், தமிழபிமானிகள், ஈழ அபிமானிகள், விளம்பர அபிமானிகள் எல்லோருமாகச் சேர்ந்து, அந்த வாழ்நாள் வாடுதலை, விரைவில் சில நாள் வாடுதலாகக் குறைத்து விடலாம் என்று நம்புகிறார்களா?

  • மூவர் தரப்பு கேள்வி: கலைஞர் சொல்கிற மாதிரி, ராஜீவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால், இந்த மூவரை மன்னித்திருப்பாரே! அப்படியிருக்க, இப்போது கவர்னர் மன்னிக்கக் கூடாதா?

நமது பதில் : கலைஞர் பகுத்தறிவாளர். அதனால் இறந்து போன ராஜீவ் காந்தி, இறந்து போகாமல் இருந்திருந்தால் – அதாவது, கொலையுண்ட ராஜீவ் காந்தி, கொலையுண்ட பிறகு, உயிருடன் இருந்திருந்தால் – தன்னைக் கொலை செய்தவர்களை மன்னித்திருப்பார் என்று அவர் கூறுகிறார்.

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால், கொலையே இல்லை; அப்புறம் மரண தண்டனை ஏன்? மன்னிப்பு ஏன்? இந்தப் பகுத்தறிவு உபன்யாசம், சாதா அறிவு படைத்த நம்மைப் போன்றவர்களுக்கு எட்டாதது; இதைப் புரிந்து கொள்ள சாதாரண பகுத்தறிவு கூடப் போதாது; இதற்கு தமிழ் இனமான உணர்வு உள்ள பகுத்தறிவு வேண்டும். அப்போதுதான், உயிரை விட மானமே பெரிது என்று எண்ணுகிற தமிழ் வீரர்களின் உயிர்களுக்கு, இன, மொழி, மானத் தலைவர்கள் மன்றாடுவதிலிருந்து – இறந்தவர் எழுந்து வந்து மன்னித்துவிட்டுத் திரும்பிப் போவது வரை, எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும்.

சரி, ராஜீவ் காந்தி எழுந்து வந்து மன்னித்து விட்டு திரும்பிப் போகிறார் – என்றே வைத்துக் கொள்வோம். மற்ற 16 பேர் கொலையானார்களே! அவர்களும் வந்து மன்னிப்பார்களா? அல்லது அவர்கள் கொலையுண்டது ஒரு பெரிய விஷயமே இல்லையா? அந்த உயிரெல்லாம் தமிழர் உயிர் இல்லையா? – ராஜீவ் மற்றும் அவரது உதவியாளர் குப்தா தவிர, அன்று கொல்லப்பட்ட அனைவரும் தமிழர்கள்தானே? அவர்களின் உயிர்கள் மண்ணுக்குச் சமானம் – அவர்களைக் கொன்ற மூவரின் உயிர் மட்டும் உன்னதமானவையா? கலைஞர் பிதற்றியிருக்கிறார்.

  • மூவர் தரப்பு கேள்வி: உலகில் பெரும்பான்மையான நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டபோது, இந்தியா மட்டும் அதை வைத்திருப்பானேன்?

நமது பதில் : உலகில் பெரும்பாலான நாடுகள், மரண தண்டனையை ஒழித்து விட்டன என்பது சரியல்ல. 49 சதவிகித நாடுகள் மரண தண்டனையை விட்டு விட்டன; 51 சதவிகித நாடுகள் – அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், தாய்வான், தாய்லாந்து, இந்தியா... போன்ற நாடுகள் உட்பட – மரண தண்டனையைக் கைவிடவில்லை.

அதிகமாக மரண தண்டனையை நிறைவேற்றுகிற நாடு, மிகவும் முன்னேறிய நாடான அமெரிக்காதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • மூவர் தரப்பு கேள்வி: மரண தண்டனை என்பது மிகக் கொடியது அல்லவா? மனிதாபிமானமற்ற தண்டனையும், திருத்த முடியாத தண்டனையும் ஆகிய இதை, இன்னமும் சட்டமாக வைத்திருப்பது மனிதத் தன்மைக்கே விரோதம் அல்லவா?

நமது பதில் : இந்தக் கேள்வி, எப்போதுமே, குறிப்பிட்ட சில வகைக் குற்றவாளிகள் மரண தண்டனை பெறுகிறபோது மட்டுமே எழுப்பப்படுகிற கேள்வி. உதாரணத்திற்கு ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டபோது, அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு, ‘அநியாயம்! மனிதாபிமானமற்ற செயல்! தூக்கு தண்டனை கூடாது! தண்டனையை நிறுத்தியே ஆக வேண்டும்’ என்று கோஷம் எழுப்பவில்லை; மனுக்களை அனுப்பவில்லை; பத்திரிகைகள் மரண தண்டனை நிறுத்தப்படுவதற்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஏன்? ஆட்டோ சங்கர் மனிதர் இல்லையா? தமிழர் இல்லையா? அவர் உயிர் மட்டும், போனால் திரும்பி வந்து விடுமா?

அது மட்டுமல்ல. ‘கற்பழிப்புக் குற்றத்திற்கு மரண தண்டனை தரப்பட்டே ஆக வேண்டும்’ என்று பல முற்போக்குவாதிகள் கோருகிறார்களே? அப்போது மட்டும் மரண தண்டனை பரவாயில்லையா?

சரி. மரண தண்டனை மனிதாபிமானமற்றது என்றால் – ஒருவனை பல வருடங்கள் சிறையில் வைப்பது, ரொம்பவும் மனிதாபிமானமுள்ள காரியமா? இரண்டு வருடங்களோ, ஏழு வருடங்களோ, பதினான்கு வருடங்களோ ஒருவன் சிறையில் இருந்தால் – அவன் மனநிலை ரொம்ப ஜோராக இருக்குமா?

அவனுடைய மானம், மரியாதை எல்லாம் என்ன ஆவது? மானத்தைக் குலைப்பது, மனிதாபிமானம்தானா? ‘ஒருவனுடைய உயிரை எடுப்பது கொடூரம்; மானம், மரியாதையை அழிப்பது மனிதாபிமானம்’ என்ற நிலை, சரியானதுதானா?

ஒரு நாள் சிறையில் இருந்தால் கூட, ஒருவனுக்கு மனம் ஒடிந்து போகக் கூடும்; மானமே போனதாக அவன் நிலைகுலைந்து போகக் கூடும். ஒரு தவறும் செய்யாத அவனுடைய குடும்பத்தினர் பொருளாதார ரீதியாகச் சிரமப்படுவது மட்டுமல்லாமல், ஏளனத்திற்கும், கண்டனத்திற்கும், இழிவிற்கு

இவ்வாறு, எல்லா தண்டனைகளிலுமே, கடுமை இருக்கத்தான் செய்கிறது என்பதால் – எல்லா தண்டனைகளையுமே ரத்து செய்துவிட வேண்டியதுதானா? ஒருவன் கொலைக் குற்றம் செய்தாலும் சரி, மற்ற குற்றங்கள் செய்தாலும் சரி, அவனைப் பார்த்து நீதிபதி ‘அப்பா, மகனே! நீயும் மனுஷன்; நானும் மனுஷன். செத்தவர் மட்டும் மனிதரல்ல அவர் உயிர் போகட்டும்; உன்னை தூக்கில் போட்டாலும், அந்த உயிர் திரும்பி வராது; உனக்கு ஒருநாள் சிறைத் தண்டனை கொடுத்தாலும் அந்த உயிர் திரும்பி வராது; ஆகையால், உனக்குத் தண்டனை இல்லை. நீ நல்லவனாகத் திருந்தி வாழ்வாயாக! நீ நல்ல பிள்ளை அல்லவா? சமர்த்து அல்லவா நீ! வாழ்க நீ! சென்று வா, மகனே! படுகொலையைச் செய்து விட்ட உனக்கு, இந்த உபதேசம்தான் நான் செய்வேன். அதுதான் சட்டம். சென்று வா! கொன்று வா!’ என்று சொல்ல வேண்டியதுதானா?

ஆம். தண்டனை என்பதே கொடூரம்தான். ஆனால், கடும் தண்டனைகளை நீக்கினால், குற்றங்கள் பெருகும். ஆகையால்தான் கிரிமினல் சட்டங்கள் கடுமையான தண்டனைகளை அளிக்கின்றன.

மரண தண்டனையை வழங்கும் நீதிமன்றங்கள், மிகவும் யோசித்து, மிகச் சில வழக்குகளில்தான் அதைப் பிரயோகம் செய்கின்றன. ராஜீவ் காந்தி மற்றும் 16 பேர் கொலை என்பது, மிக மிகக் கொடூரமான செயல் என்பதால், அதில் ஈடுபட்ட மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதான் சட்டம், இதுதான் தர்மம், இதுதான் நியாயம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com