Contact us at: sooddram@gmail.com

 

சைவப் பூனையின் விரதம்

(சீத்தாராம் யெச்சூரி எம்.பி.)

நூற்றுக்கணக்கான எலிகளை விழுங் கிவிட்ட ஒரு பூனை தனது பாவங்களைக் கழுவும் பிராயச்சித்தமாக புனிதப்பயணம் புறப்பட்டதாம். அந்த சைவப் பூனையின் கதைதான் மோடியின் கதையும். பிராயச்சித்தம் என்பது எல்லா மதங்களி லும் கலாச்சாரங்களிலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்ற ஒன்றேயாகும். யூத மதத்தினர் (தங் களது ஆண்டு முதல் மாதம் பத்தாவது நாளான) ‘யோம் கிப்புர்தினத்தன்று பாவங் களுக்கு பிராயச்சித்தமாக உண்ணாவிரதம் இருப்பார்கள். கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும், முஸ்லிம்கள் ரம்ஜான் மாதம் என்றும் இவ்வாறு உண்ணா நோன்பு மேற்கொள்வது வழக்கம். உனக்கு நன்மை செய்யும் என்று உணர்ந்து நீ நோன்பு இருந்தால்தான், அது உனக்கு நன்மை செய்யும்என திருக்குரான் கூறுகிறது. நமது நாட்டின் கலாச்சாரத்திலும் இதே போன்று பிராயச்சித்தமாகவும், புனிதப் படுத்திக் கொள்வதற்காகவும் நோன்புகள் பல வற்றை இந்து மதமும் ஜைன மதமும் கூறு கின்றன. மகாத்மா காந்தி, விடுதலைப் இயக்கத்தில், உண்ணா நோன்பினை ஒரு ஆன்மீக போராட்டக் கருவி என்ற நிலைக்கு உயர்த்தினார்.

கேலிக்கூத்து!

மோடியின் உண்ணா நோன்பு, இத்தகைய உயர்ந்த இலட்சியங்களை கேலிக் கூத்தாக் கியிருக்கிறது. 2002 குஜராத் மதவெறிப் படுகொலை, அனைத்து அரசியல் சாசனம் சார் அமைப்புகளின் கண்டனத்திற்கும் ஆளாகியிருக்கிறது. தேசிய மனித உரிமைக் கமிஷன், தேர்தல் கமிஷன், சமூக ஆர்வலர் அமைப்புக்கள் என அனைவரும் அதை கண்டித்திருக்கின்றனர். படுகொலைகள், மிகக் கொடூரமான கற்பழிப்புகள், உடல் உறுப் புக்களை வெட்டியெறிதல் என பல்லாயிரக் கணக்கானோர் அன்று சித்ரவதைக்கு ஆளானார்கள். இன்று, ஒன்பது ஆண்டுகள் ஆகிய பின்னரும் கூட, 21,448 பேர் தங்களது பழைய இடங்களுக்கு திரும்ப முடியாமல், 11 மாவட்டங்களில் உள்ள 45 முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இது பற்றியெல்லாம் எவ்வித வருத்தமும் தெரிவிக் காத மோடி, “வளர்ச்சி என்ற மந்திரத்தின் மூலம், அவர்களது காயத்தினை குணப்படுத்தி விட்டதாககூறுகிறார். ஆனால், அப்படியும் ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை. ஆழ மான வறுமையும், கடுமையான வருமான ஏற் றத்தாழ்வுகளும் குஜராத்தில் நீடிக்கின்றன என பிரபலமான பொருளியல் அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பொருளாதார ஆய்வுகளும் அத னையே உறுதி செய்கின்றன. அம்மாநிலத்தில் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் முஸ்லிம்கள்தான். இந்த மாநி லத்தில் உருது மொழியில் ஒரு நாளிதழ் கூட வெளிவருவதில்லை என ஆய்வுகள் தெரி வித்திருக்கின்றன.

வளர்ச்சியின் பயன்கள் சாதி -மதங் களைக் கடந்து அனைவரையும் சென்றடைந் திருக்கிறது என்ற வாதத்தின் பொய்மையினை இந்த ஆய்வுகள் வெளிக்கொண்டு வந்திருக் கின்றன.

திசை திருப்ப...

இந்த நேரத்தில் ஏன் இந்த உண்ணா நோன்பு என்பது குறித்து, பல வகை காரணங் கள் கூறப்படுகின்றன.
மத வெறி அரக்கன்என்ற வார்ப்படத்திலிருந்து வெளிவரவேண் டும் என்பது ஒரு தெளிவான காரணமாகத் தோன்றுகிறது. அண்மையில் உச்சநீதிமன்றம் வெளி யிட்ட ஒரு முடிவினை தவறாகப் புரிந்து கொண்டதிலிருந்து இது தொடங்குகிறது.

குஜராத் கலவரங்களுக்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என உச்ச நீதிமன்றம் நற் சான்றிதழ் வழங்கி விட்டது போன்று ஒரு தோற்றத்தினை பிஜேபி ஏற்படுத்தி வருகி றது. ஆனால், உச்சநீதிமன்றம் கூறியிருப்பதே வேறு. குல்பர்கா சொசைட்டி தீவைப்பு கொலை வழக்கில் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து, நடுநிலையாளர்  மற் றும் சிறப்புப் புலனாய்வுத் துறையின் ஆவ ணங்கள் என தனது கையிலிருந்த ஆவணங் கள் அனைத்தையும் விசாரணை நீதிமன்றத் திற்கு அனுப்பியிருக்கும் உச்ச நீதிமன்றம், அவற்றை சாட்சியமாக கொண்டு விசாரணை யினை விரைவு படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது. இது மோடியின் மீது முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்வது என்ற கட்டத்தினையும் தாண்டிய நிலைமை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பதே அதன் பொருள். குஜராத்தில் அண்மையில் அமைக்கப் பட்டிருக்கும் லோக் அயுக்தா, தன் மீது பெரு மளவில் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து விடும் என்ற அச்சத்தில் அதிலிருந்து மக் களின் கவனத்தைத் திசை திருப்புவதற் காகவும் இது நடைபெறுவதாகக் கொள்ளலாம்.

பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்ற திசையில், தனது தேசிய அரசியல் பிரவேசத் திற்கு கட்டியம் கூறுவதே இதில் மோடியின் பிரதான நோக்கம். கூட்டுத் தலைமைஎன்ற அடிப்படையிலேயே 2014 தேர்தலை எதிர்கொள்வோம் என அண்மையில் பி.ஜே.பி தலைவர் அறிவித்திருக்கிறார். பிற அம்சங் களில் மாற்றம் இல்லாத போது, ஒரு குறிப் பிட்ட அம்சத்தினை மட்டும் அதிகரித்தால் உற்பத்தி கூடிவிடும் என்று சொல்ல முடி யாது; சில வேளை அது உற்பத்திக் குறை விற்கும் இட்டுச்செல்லும் என்பது ஒரு பொரு ளாதார விதி . இந்த விதி இன்று அத்வானிக்கு நன்றாகவே பொருந்தும். இருப்பினும், அதையும் மீறி தனது ஆறாவது ரத யாத்திரையினை தொடங்குவது என அத்வானி முடிவு செய்திருக்கிறார்.

இரத்தக் களறியாக ...

ராமர் கோவிலை கட்டியே தீருவோம்என்ற முழக்கத்துடன் 1990ல் அவர் சென்ற முதல் யாத்திரை, நவீன, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியக் குடியரசின் வரலாற்றில் கறைபடிந்த இருண்ட பக்கங்கள் என அனைவராலும் கருதப்படுகிறது. யாத்திரை கடந்து சென்ற ஒவ்வொரு இடமும் இரத்தக்களறியாக மாறியது. இரண்டு மாதங்களுக்குள், அதாவது டிசம்பர் மாதம் வாக்கில் கலவரங்களில் ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

பிரடரிக் ஹெகெல் என்ற அறிஞர், “வர லாறு மீண்டும் திரும்பும்என்று கூறினார். அது குறித்து கார்ல் மார்க்ஸ் கூறும்போது, “முதல் முறை துயரமாக வரும் வரலாற , மறுமுறை வரும்போது கேலிக்கூத்தாக மாறும்என்றார். அவ்வகையில், அத்வானி யின் இந்த ஆறாவது யாத்திரை கேலிக்கூத் தானதே யாகும்.

இந்த நிலைமையில், பி.ஜே.பி தலைவர் நிதின் கட்காரி தனது உடல் பருமனைக் குறைப்பதற்காக, அண்மையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். அவரது உடல் நிலை பரிவுடன் நோக்கப்பட வேண் டிய தொன்றேயாகும். ஆனாலும், அவர் கூட களத்தில் இறங்குவதற்காகவே இதைச் செய்திருப்பதாக சில பார்வையும் உள்ளது.

எந்த நிலைமைக்கும் தன்னை உடல் ரீதியாக தயார் நிலையில் வைத்துக்கொள்வது என்ற முடிவில் அவர் இருப்பதாகவும் கூறப் படுகிறது. இது தவிர, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பி.ஜே.பி தலைவர்களுமே, எதிர்காலப் பிரதமர் நாற்காலிப் போட்டியில் உள்ளார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

தேவை ஆத்ம பரிசோதனை!

மீண்டும் அத்வானியின் யாத்திரைக்கு வருவோம். இம்முறை அது ஊழலுக்கு எதி ரான யாத்திரை என அவர் அறிவித்திருக் கிறார். ஊழலுக்கு எதிரான மக்களின் கோபத் தினை அண்ணா ஹசாரேயின் உண்ணா விரதம் ஒன்று திரட்டியிருக்கிறது. அதை அப் படியே தனக்கு கைமாற்றிக்கொள்ள முடியும் என அத்வானி நம்புகிறார். அத்வானியும், பி.ஜே.பியும் சற்று ஆத்ம பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சத்தீஸ்கர் மாநிலத்தில் பி.ஜே.பி கட்சியின் ராமன் சிங் தலைமையில் நடைபெறும் ஆட்சி குறித்து அந்த மாநில லோக் அயுக்தா மிகப்பெரும் ஊழல் குற்றச் சாட்டினைக் கூறியிருக்கிறது. அனைத்துத் துறைகளும் ஊழல் முடை நாற்றம், “குளத்தி லுள்ள தண்ணீரை அதிகமாகக் குடித்துக் குடித்தே இறந்துவிடும் மீன்களைப் போன்ற அதிகாரிகள்”. இதுவெல்லாம், ஊழல் ஆட்சி குறித்த லோக் அயுக்தாவின் வர்ணனை. பி.ஜே.பி ஆட்சி குறித்து கர்நாடக மாநில லோக் அயுக்தாவின் கடுமையான குற்றச்சாட் டிற்குப் பின்னர் சத்தீஸ்கர் ஆட்சி குறித்த குற் றச்சாட்டு. பி.ஜே.பி, மிகவும் தயக்கத்துடன் வேறு வழியில்லாமல்தான், முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் ராஜினாமாவினைக் கோரிப்பெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மா நிலத்தின் மாஜி அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், சட்ட விரோத சுரங்க நடவடிக் கைகளுக்காக கைது செய்யப்பட்டனர். உத்தர்காண்ட் மாநிலத்திலும் ஊழல் குற்றச் சாட்டுக்கள் அம்மாநில பி.ஜே.பி அரசினை காவு கொள்ளவிருந்த நிலையில், அதை தவிர்ப்பதற்காக, முதல்வரின் ராஜினாமா அவசர அவசரமாகப் பெறப்பட்டது. இதுதான் ஊழல் திசையில் பி.ஜே.பியின் இன்றைய சாதனை வரலாறு.

யாரை பிரதமர் பதவிக்கு முன்நிறுத்துவது என்பதில் ஆர்எஸ்எஸ்ஸூக்குள் நடைபெறும் சச்சரவுகள், அவர்களது உள் விவகாரம். ஆனால், இதில் நமக்கு ஒரு தெலுங்கு பழ மொழி நினைவுக்கு வருகிறது. கல்யாணமும் ஆகவில்லை, குடியிருக்க வீடுமில்லை. ஆனால், பிள்ளைக்கு பெயர் மட்டும் சோம லிங்கம் என்றானாம்என்பதே அப்பழமொழி. தேர்தலும் வரவில்லை. பி.ஜே.பிக்கு ஆதரவும் குவிந்து விடவில்லை. எனினும், எலிப் பந்த யம் என்னவோ தொடங்கி விட்டது.

“1992 இந்தியா”வும், “2011 இந்தியா”வும் ஒன்றல்ல எனக் கூறுபவர்கள் இருக்கிறார் கள். அவர்களுக்கு ஒன்றை மட்டும் நினைவு படுத்த வேண்டும். இன்றைக்கும் மதக் கலவரங்கள் நடைபெறுகின்றன; அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் பன்னிரண்டு உயிர்கள் இவ்வகை யில் பறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மேல் இதில் ஒன்றும் கூறத் தேவையில்லை.

தமிழில : இ.எம். ஜோசப்

நன்றி :ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ - 20.9.2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com