Contact us at: sooddram@gmail.com

 

ஏகாதிபத்தியமும் அதன் முட்டாள்தனங்களும்!

(பேரா.பிரபாத் பட்நாயக்)

சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க் கப்பட்ட உடனே நடைபெற்ற அமெரிக்க உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கண்டோலிசா ரைஸ் அதிரடியாக ஒரு கேள்வியை எழுப்பி னார்: “இந்த பயங்கரமான துயரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம்?” அவருடைய கவலை என்பது இந்த பயங்கர தாக்குதலைப் பற்றியதாக வோ அல்லது குற்றம் செய்தவர்களை நீதிக் குட்படுத்துவது தொடர்பாகவோ இல்லை. மேலும் அந்தக்கூட்டத்திலேயே, இந்த சந் தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இராக் மீது ஒரு போரினைத் தொடுத்து அதன் மூலம் நல்ல பலனை அடையலாம் என்ற விவாத மும் எழுப்பப்பட்டது. அல்கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு உள்ள பகைமை குறித்து நன்றாக அறிந்திருந்த போதும் இந்தப்போருக்கான விவாதம் எழுப்பப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

பளிச்செனத் தெரிந்த உள்நோக்கம்

இராக்பேரழிவு ஆயுதங்களைதயாரித்து வைத்துள்ளது என்பது போன்ற பொய்களை அதிவேகமாகப் பரப்பியதே, இராக் மீதான படையெடுப்பிற்கான காரணத்தை உருவாக்கத்தான் என்று நாம் அறிய முடியும். ஐக்கிய நாடுகள் சபை இதற்கான எந்தவொரு ஆணையும் வழங்கியிராத சூழலில், அமெரிக் காவின் நட்பு நாடுகளான பிரான்ஸ் போன்ற நாடுகள் இப்படி ஆணை எதுவும் இல்லையே என்பதை வலியுறுத்திய பிறகும்கூட, இராக் மீது ஆக்கிரமிப்புப்போர் நடத்தப்பட்டது.

இராக்கின் எண்ணெய் வளத்தைக் கைய கப்படுத்துவது ஒன்றுதான் இந்த படையெடுப் பின் பிரதான நோக்கம். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன், தனது சுயசரிதையில் இதை மிகத்தெளிவாகவும், வெளிப்படையாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் வள நாடு இராக். கிட்டத் தட்ட 143 பில்லியன் பேரல்கள் எண்ணெய் இருப்பதாகக் கூறப்படுகிறது. புவியியல் அமைப்பு மற்றும் பூகம்பவியல் ஆய்வுகளின் படி, 350 பில்லியன் பேரல்கள் எண்ணெய் வளம் இராக்கில் உள்ளது என்று கூறப்படு கிறது. இதனடிப்படையில் பார்த்தோமானால், உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு இராக். அமெரிக்கா, இந்த மிகப் பெரும் எண்ணெய் வளத்தைத்தான் கைப் பற்றத் துடிக்கிறது. இதன்மூலம் அமெரிக் காவின் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்பது மட்டுமல்ல, அமெரிக்காவின் நாணயமான டாலரை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மிக நுட்பமான தந்திரமும் அடங்கியுள்ளது.

டாலரும் பெட்ரோலும்

அமெரிக்காவின் டாலர் உலகச் செல்வ வளங்களை சேமிப்பதற்கான ஒரு நிலையான சாதனமாக தொடர்ந்து நீடிக்க வேண்டுமென் றால், எண்ணெயினுடைய டாலர் மதிப்பு (சில ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும்) அதிவேக மாக உயரக்கூடாது. டாலர் என்பதுதான் கை யிருப்பு நாணயமாக இருக்க வேண்டும் என் பது அமெரிக்காவிற்கும் சரி, உலகின் ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பிற்கும் சரி மிக முக்கியமானது. ஏனெனில், உலக நாடு களுடன் அமெரிக்கா வைத்துள்ள ஒட்டு மொத்த பொருளாதார பரிவர்த்தனைகளும் டாலர் மதிப்பிலேயே அமைந்துள்ளது. உலக முதலாளித்துவ அமைப்பைப் பொறுத்தவரை யில், உலகெங்கிலும் உள்ள செல்வ வளங்க ளின் சொந்தக்காரர்களுக்கு, அவர்களுடைய செல்வங்களை சேமித்து வைக்க ஒரு நம்பக மான சாதனமாக அமெரிக்க டாலர் உள்ளது. எனவே எண்ணெய்யின் டாலர் மதிப்பு அதி வேகமாக உயரக்கூடாது என்பதே இதற்கு ஆதாரமாக அமைய முடியும்.

உலகின் எண்ணெய் வளத்தின் மீது அமெ ரிக்கா வைத்துள்ள கட்டுப்பாடுதான் உலக செல்வ வளங்களின் சொந்தக்காரர்களது மன தில் டாலர் என்பது சேமிப்பிற்கான ஒரு நிலையான சாதனமாக தொடரும் என்ற எண் ணத்தினை, நம்பிக்கையினை மிக ஆழமாக பதியச் செய்துள்ளது. அதன் காரணமாக டாலர் என்பதுதங்கம் போன்று நல்லதுஎன்று நம்பு கின்றனர். அந்த நம்பிக்கையுடன் தங்கள் சேமிப்பினை டாலரில் தொடர்வதையே விரும்புகின்றனர். எனவே, உலகின் எண் ணெய் வளத்தின் மீது அமெரிக்கா தனது கட் டுப்பாட்டினை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இரண்டு காரணங்களில் இருந்து வருகிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய அளவிலான உள்நாட்டு நுகர்வுக்கு என்று மட்டுமல்லாது, டாலரை, அதாவது டாலரின் மதிப்பினை தாங்கி தூக்கி நிறுத்த வேண்டிய அவசியத்தில் இருந்தும் எழுகிறது.

அடுக்கடுக்கான அறிவீனங்கள்

ஆனால், இந்த எண்ணத்தோடு நடத்தப் பட்ட இராக்கின் மீதான அமெரிக்கப் படை யெடுப்பு என்பது, அமெ ரிக்கா எதிர்பார்த்ததில் இருந்து முற்றிலும் வேறானதாக மாறிவிட்டது. சதாமின் ஆட்சி மிக எளிதாக வீழ்த்தப்பட்டு விட்ட போதிலும், இந்தப்போரானது உள்நாட் டின் எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிரானதாக இழுத்துச்செல்லப்பட்டுவிட்டது. தற்போது நாடே துண்டாடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெ ரிக்கா தனது கைப்பாவையாக நிர்மாணித்த அரசாங்கமே கூட மக்களின் நம்பகத்தன்மை யை சிறிதளவாவது பெற வேண்டும் என்ப தற்காக, படையெடுப்பின் போது போடப்பட்ட திட்டத்திலிருந்து சிறிது மாறி செயல்பட வேண்டியதாகிவிட்டது. இதன் விளைவாக இராக்கின் எண்ணெய் வளங்களை அந்நியக் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதற்கான சட் டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டது. எண்ணெய் வளம் என்பது அரசின் சொத்தாகவே தொடரும் என்று அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்நிய எண்ணெய் கம்பெனிகள், அரசாங்கம் ஒரு பேரலுக்கு எவ்வளவு என்று நிர்ணயித்த தொகையை கொடுத்துவிட்டு எண்ணெய்யை இறைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள் ளன. அந்தக் கம்பெனிகள் கூட ஏல முறை யின் அடிப்படையில் போட்டிக்கு விடப்பட்டு தீர்மானிக்கப்பட்டன. மேலும் குர்து இன மக்களுக்கும், பாக்தாத் அரசிற்கும் இடையி லான கடுமையான முரண்பாடுகளின் கார ணமாக எழுந்த நிச்சயமின்மை காரணமாக வும், சீன மற்றும் ரஷ்ய கம்பெனிகள் மிகக் குறைந்த விலையில் ஏலத் தொகையை கேட்டிருந்ததன் காரணமாகவும், இராக்கின் எண்ணெய் வளத்தினைப் பெறுவதில் அதிக அளவில் லாபம் பெறும் அறிகுறிகள் இல் லாத காரணத்தால் அமெரிக்கக் கம்பெனிகள் இந்த ஏல முறையில் பங்கெடுக்காமல் தள்ளியே நின்றன.

அமெரிக்க அரசாங்கத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த போர் மிகப்பெரிய லாபத்தினை கொணர்ந்துள்ளது என்பது உண்மையே. அதேநேரத்தில், இந்த காலகட் டத்தில் ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய திட்டம் கிட்டத்தட்ட ஒரு கடுமையான அடியைச் சந்தித்துள்ளது என்றே கூறலாம். தனது சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், லத்தீன் அமெரிக்க நாடு களில் தலையீடு செய்யும் சக்தியை இழந்த தன் காரணமாகவும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் திட்டம் தோல்வியை சந்தித்துள்ளது எனலாம்.

லிபியா

இருந்தபோதும், ஏகாதிபத்தியத்தின் அறி வீனமான செய்கைகளில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால், இத்தனை பாதிப் பிற்குப் பிறகும் திரும்ப திரும்ப அதையே செய் வது என்பதுதான். இராக்கில் செய்த அதே முட்டாள்தனத்தை தற்போது லிபியாவிலும் அரங்கேற்றுகிறது. இங்கேயும் கூட ஐக்கிய நாடுகள் சபையின் உண்மையான தீர்மானம் எதற்காக என்றால், கடாபியின் படைகளால் கலகக்காரர்களின் இடங்கள் அடித்து நொறுக் கப்பட்டதன் காரணமாக நிகழும் படுகொலை கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய வற்றைத் தடுப்பது என்பதுதான். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் இதனை லிபியாவின் எண்ணெய் வளத்தினை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்த்தன. லிபியா, எண்ணெய் வளத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்காவி லேயே மிகப்பெரிய நாடு. உலகளவில் ஒன் பதாவது இடம் வகிக்கும் நாடு. சுத்திகரிப்பு செலவு மிகக்குறைவு (ஒரு பேரலுக்கு ஒரு டாலர் தான் ஆகும் என்ற அளவிற்குக் குறைவு) என்பதும் ஏகாதிபத்தியத்தைக் கவர்ந்திழுக் கும் அம்சமாக அமைந்தது. எனவே, அமெரிக் காவும் அதன் கூட்டாளிகளும் ஐ.நாவின் தீர் மானத்தை மீறி, அதன் எல்லையைத் தாண்டி, சர்வதேச சட்ட விதிகளையும் மீறி, ‘ஜனநாய கத்திற்குக்கட்டியங்கூறுகிறோம் என்ற பெயரில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொணர்ந்து, அதனை நாம் எதிர்பார்த்த மாதிரியே நியாயப் படுத்துகின்றன.

லிபியாவில் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு ஆட்சியை நிறுவி, அதன்மூலம் தம் முடைய திருப்திக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் வரும் ஆண்டுகளில்அமைதி யாகஒரு ஆட்சியை நடத்திக் கொள்ளலாம் என்ற கனவும், அந்த ஆட்சியின் மூலம் லிபி யாவின் அபரிமிதமான எண்ணெய் வளத் தைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற கன வும் இராக்கைப் போன்றே இங்கும் சுக்கு நூறாகப்போகிறது.

ஒசாமா பின்லேடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியது என்னவெனில், “அமெரிக்காவினை இஸ்லாமிய உலகில் இருந்து விரட்டியடிக்க ஒரே வழி, அமெரிக்கா வின் பிரதிநிதிகளான ஆட்சியாளர்களைத் தோற்கடிக்க ஒரே வழி, அமெரிக்கர்களை அதிக செலவிழுத்துவிடும் வகையில் சிறு சிறு போர்களுக்கு வரிசையாக இழுத்துவிடு வதன் மூலம் அவர்களை திவாலாகச் செய் வதுதான்என்பதே. இந்த நோக்கத்தை நிறை வேற்ற ஒசாமாவின் எந்த ஒரு அமைப்பும் தேவையில்லை. எண்ணெய் வளங்களின் மீதான அமெரிக்காவின் தீராத வேட்கையே போதுமானது. ஆப்கானிஸ்தான், இராக், தற் போது லிபியா- என எவற்றிலிருந்தும் அமெ ரிக்கா தன்னை விடுவித்துக் கொள்ள முடிய வில்லை. இன்னும் ஏகாதிபத்தியத்தின் அறி வீனமான செயல்கள் அடுக்கடுக்காகத் தொடர்கின்றன.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, செப். 5, 2011)

தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம், திருநெல்வேலி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com