Contact us at: sooddram@gmail.com

 

வாக்களர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய

TNA யினரால் முன்வைக்கப்படும் பொய்மைகளும், அவைபற்றிய மெய்மைகளும்.

(அபிமன்யு)

பொய்மை 1

TNA யினரைத் தவிர்ந்த மற்றைய கட்சி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வது:

தமிழ்த்தேசியம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி, ஆகியவற்றை கோராத தலைவர்களைத் தமிழர்கள் தெரிவுசெய்து விட்டார்கள் என்று கொள்ளப்பட்டு, தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை மழுங்கடிப்பதாக ஆகி விடும்.

மெய்மை  

இதுதானே காலங்காலமாக அனைத்துத் தேர்தல்களிலும் இவர்கள் முன்வைக்கும் வாதங்கள்.

தனிநபர் அல்லது குழுக்கள் பற்றிய கண்மூடித்தனமான சார்பு நிலையை விலக்கி TNAயில் அங்கம் வகிக்கும் தலைவர்களதும், அவர்களால் முன்னிறுத்தப்படும் வேட்பாளர்களதும் உண்மையான கடந்த கால யோக்கியதைகளையும், நிலைப்பாடுகளையும் நாம் சிறிதளவாவது அறிவுபூர்வமாகப் பார்ப்போமானால்:

தமிழ்த்தேசியம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தமிழர்களின் ஆட்சி என்ற இவர்களது வெற்றுக் கோஷங்களெல்லாம் மக்களை உசுப்பேத்தி, உணர்ச்சிவசப்படுத்தி, தேர்தல்களை வெல்லுவதற்காக, தம் பதவிகளைத் தக்கவைப்பதற்காக, அரசியல் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக, சமயங்கள் வரும்போது அவ்வப்போது அவர்கள் உபயோகிக்கும் தந்திரங்களேயன்றி, சொல் அலங்காரங்களேயன்றி, வேறொன்றும் இல்லை.

உண்மையில், இவர்கள் கூறும் அரசியல் தீர்வு  எப்படியான, எத்தகைய ஆட்சி அமைப்புகளைக் கொண்டிருக்கும், அதனை அடைவதற்கான வழிமுறைகள் என்ன என்பவற்றை என்றாவது தெளிவாக வரையறுத்து, தீர்க்கமாகக் கூறியிருக்கிறார்களா?.

சிங்களப் பேரினவாதம் அதைச் செய்கிறது, இதைச் செய்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் எதுவுமே சொல்கிறார்கள் இல்லை

தேர்தலுக்கு இன்னும் பத்தொன்பது நாட்களே உள்ளன. தேர்தல் விஞாபனம் கூட இதுவரை வெளியிடவில்லை.

சில சமயம் தனித்தமிழீழத் தாயகம் என்பார்கள்.

வேறு சமயம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு-கிழக்கு இணைந்த  பிராந்திய அமைப்பு என்பார்கள்.

சில சமயம்,  பிரிக்கப்பட்ட வடக்கு –கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் அர்த்தமில்லை, போட்டியிமாட்டோம் என்பார்கள்,

பின்னர், போட்டியிடுவார்கள்.

13ம் திருத்தச் சட்டம் செல்லாக்காசு என நிராகரிப்பார்கள்,

இருபத்தைந்து வருடங்களின் பின்னர் 13வது திருத்தத்தில் காணி போலீஸ் அதிகாரம் எல்லாம் இருக்கிறது என்றும் ஒரு உயர் நீதியரசர் ஊடாக இது பற்றி கதைப்போம் என்பார்கள்.

அரசாங்கத்துடன் பேசிப் பயனில்லை என்பார்கள்,

ஆனாலும் பின்கதவால் அரசாங்கத்துடன் சமரசங்கள் பல செய்து கொள்வார்கள்.  

தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை அடைய, வாழ்வாதாரங்களை வளம்படுத்த  என்ன வழிமுறைகள் என்று கேட்டால் காத்திரமான பதில் எதுவும் இல்லாது, தேர்தலில் தம்மை வெல்ல வைப்பதுதான் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு, ஒரே வழி என்பார்கள்.

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்கள் இவர்கள்?

இவர்கள் ஏமாற்றுவது இவர்களை நம்பி வாக்குப் போட்டவர்களைத்தான்.

இவர்களின் அரசியல் வங்குரோத்தையும், கையாலாகத்தனத்தையும், பொதுநலன்களை மேவிய சுயநலங்களையும், உண்மைச் சொரூபங்களையும், சில்லறைத்தனமான பம்மாத்துக்களையும் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் சிங்கள அரசாங்கங்கள் இவர்களைக் கணக்கில் எடுப்பதில்லை.

அரசியல் நாற்காலிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வைக்கோல் பட்டடை நாய்கள் போல் தாங்களும் நல்லது செய்யமாட்டார்கள், மற்றவர்களையும் நல்லது செய்ய விடமாட்டார்கள்.

பொய்மை 2

சிங்களப் பெரும்பான்மை அரசியல்வாதிகள் ஒருவரையும் நம்ப முடியாது- நம்பக் கூடாது. சிங்களப் பேரினவாதத்தில் அவர்கள் மூழ்கி இருக்கிறார்கள்.

மெய்மை

தமிழ்ப் பெரும்பான்மை அரசியல்வாதிகள் மட்டும் என்ன?  தேர்தல்களில் இனவாதம் மாத்திரம் தானே பேசுகிறார்கள்.

இவர்கள் என்றாவது சிங்கள அரசியல்வாதிகளின் முற்போக்கான கூறுகள் எவற்றையாவது அங்கீகரித்திருக்கிறாரகளா?.  

அடித்தட்டு  மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைக்கான எந்த முற்போக்குக் கொள்கைகளிலோ, வழிமுறைகளிலோ, நடவடிக்கைகளிலோ, எவற்றிற்காவது பக்கபலமாகக் கைகொடுத்தார்களா?

தமிழ்த் தேசியத்தை தாம் ஏதோ தனிக்குத்தகை எடுத்தவர்கள் போல் பெயரளவில் தமிழ்த் தேசியத்தை வைத்துக் கொண்டு, தமிழ் தேசிய வாதம் என்ற போர்வையில் குறுந்தமிழ்தேசியத்தை முன்னெடுத்து தமிழ் இன வாதத்தை வளர்த்தவர்கள் அல்லவா?

இன்னமும் தொடர்ந்து அதே பாணியில் தேர்தல்களில் போட்டியிட்டு  வெல்வதைத் தவிர, பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவது தவிர, அவர்களது அனைத்து நகர்வுகளும் உண்மையில் தமிழர்களின் தேசிய நலனக்கு ஒத்திசைவானதல்ல-- மாறாக விரோதமானவையே.

இவர்களை வைத்தே சிங்களப் பேரினவாதிகள், சிங்கள, தமிழ் முற்போக்கு அரசியல் மற்றும் சமூக அக்கறையுள்ளோர்களின் குரல்களை ஓரங்கட்டி, TNA யினர் மூலமாகவே நாசூக்காக தமிழினத்தின் வாழ்வை நசித்து  வருகின்றனர் என்பதுதான்  சரித்திரம் எமக்குத் தரும் பாடம்.   

பொய்மை - 3

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அதிக எண்ணிக்கையான பிரதிநிதிகளைப் பெற்றால்தான், அதன் மூலம் கிடைக்கும் பலத்துடன் தமிழர்களின் பிரச்னைகளைத் TNA தீர்த்து வைக்க முடியும். 

மெய்மை

இப்பொழுது கூட இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளில் அதிக எண்ணிக்கையானோர் TNAயினரே. அந்தப் பலத்துடன் தமிழர்களின் பிரச்னைகள் எதனையாவது அவர்கள் தீர்த்து வைத்திருக்கிறார்களா?

மாறாக, அரசியல் அபிலாஷைகள் மட்டுமல்ல, தமிழர்களின் வாழ்வாதாரம் முழுவதுமல்லவா சீர்கெட்டுச் சிதைந்து போய்விட்டது.

தமிழ்ப் பிராந்தியங்களின் நகர சபைகளிலும் அதிக எண்ணிக்கையான பிரதிநிதிகள் TNAயினரே.

அந்தப் பலத்தினால் அவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ் வாக்காளர்களுக்கு எதுவித நன்மையும் கிட்டியிருக்கிறதா?. அவற்றின் நிர்வாகங்கள் எதுவித ஆக்கபூர்வமான செயல்களையும் மேற்கொள்ளாது  நைந்து நாறிக் கிடக்கின்றனவே!.

அதெப்படி வடமாகாண சபைத் தேர்தலில் மட்டும் அதிக எண்ணிக்கையைப் பெறும் பலம், நலன் தரும்?.

கேட்கிறவன் கேணையனாக இருந்தால், எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓடும் என்று சொல்வார்களே—அப்படியானால் தமிழர்கள் கேணையர்கள் என்பது தானே TNA யினரின் அனுமானம்

எதிர் வரும் 21ம் திகதி கூட்டமைப்பிற்க்கு வாக்களித்து எருமை மாடு என்றோ ஒருநாள் எரோப்பிளேன் ஓட்டும் என்ற தமது நம்பிக்கையை தமிழர்கள் மீண்டும் காட்டுவார்களா? என்பதே பொதுஅறிவு உள்ளவர்களின் கேள்வியாகும்.                 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com