Contact us at: sooddram@gmail.com

 

நன்மை தருமா நவி பிள்ளை வருகை?

(டி.அருள் எழிலன்)

இனப் படுகொலைப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு வந்திருக்கிறார் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை. நவி பிள்ளையின் வருகை முடிவானதுமே, இறுதிப் போர் நடந்த பகுதிகளைக் கழுவித் துடைத்து எஞ்சிய தடயங்களையும் அழித்து அலங்கரித்தது இலங்கை ராணுவம். மக்கள் வாழ்விடங்களை ஆக்ரமித்து நின்ற ராணுவத்தினர், மிகத் தற்காலிகமாக முகாம்களுக்குள் போனார்கள். ஏராளமான ராணுவத்தினர் மஃப்டி உடைகளில் நவி பிள்ளை வருவதற்கு முன்பும், வந்து சென்ற பின்னரும் மக்களை மிரட்டினார்கள். நவி பிள்ளையை, 'புலிப் பிள்ளைஎன்றும், 'பிரபாகரனின் சகோதரிஎன்றும் சிங்கள ஊடகங்கள் சில எழுதின. இன்னொரு பக்கம், இலங்கையின் 'ரவுடிஅமைச்சர் மேர்வின் சில்வா, 'சிங்கள விஜயன், வேட்டுவப்பெண்ணான குவேனியைத் திருமணம் செய்துகொண்டது போல, நான் நவநீதம் பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்என்று சொன்னது வக்கிரத்தின் உச்சம். இதெல்லாம் நவி பிள்ளையை மனரீதியாகச் சோர்வுறச் செய்யும் சிங்களவர்களின் அரசியல்.

''நான் இந்தியப் பாரம்பரியத்திலிருந்து வந்திருந்தாலும்கூட, தென் ஆப்ரிக்கக் குடிமகள் என்று சொல்வதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். என் மீது 'புலிகளின் பிரதிநிதிஎன்றும், 'பணத்துக்காகச் செயல்படுபவள்என்றும் இழிவான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது மிக மோசமான தாக்குதல்'' என்று சிங்களவர்களைக் கண்டித்த நவி பிள்ளை, 'பல்லாயிரம் உயிர்களைக் கொன்றொழித்த இரக்கமற்ற அமைப்புஎன்று விடுதலைப் புலிகளையும் விமர்சிக்கத் தவறவில்லை.

நவி பிள்ளையிடம் ராணுவத்தினர் தாங்கள் புதிதாக வேய்ந்த சாலைகளையும், சில கட்டடங்களையும் தயார்படுத்தி வைத்திருந்த ரெடிமேட் முகாம்களையும் காட்டினர். சமீபத்தில் கட்டிய 'யாழ்வைத்தியசாலையை நவி பிள்ளையிடம் காட்டியபோது கடுப்பானவர்,  ''உங்கள் அரசுத் திட்டங்களின் அபிவிருத்திகளைக் காணவோ, அதன் அருமை பெருமைகளைக் கேட்கவோ நான் வரவில்லை. நான் மக்களைச் சந்திக்க வேண்டும். என்னை சுதந்திரமாக அனுமதியுங்கள். ஐ.நா-வால் எனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளே எனக்குப் போதும். உங்களுடைய ராணுவப் பாதுகாப்பு தேவையில்லை'' என்று காட்டம் காட்டினார். அதன் பின்னரே ஈழ மக்கள் நவி பிள்ளையிடம் தங்களின் மனக்குறைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.

''சாலை, ரயில் பாதைகள், கோயில் கட்டடங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆனால், மீனவர்களும் விவசாயிகளும் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகள் இருக்கின்றன. ஆனால், அதில் வாழ முடியாத அளவுக்கு ராணுவக் கண்காணிப்பு இறுகியிருக்கிறது!'' - சிங்களர்கள் அனுமதித்த இடங்களைப் பார்வையிட்ட பிறகு, நவி பிள்ளை சொன்ன வார்த்தைகள் இவை.

யாழ்ப்பாணத்தில் நவி பிள்ளையைச் சந்தித்த புலிகளின் தளபதி எழிலனின் மனைவி அனந்தியின் அனுபவம் இது... ''இறுதிப் போரின் பின்னர் ஃப்ரான்சிஸ் ஜோசப் அடிகளாரின் தலைமையில் என் கணவர் எழிலனும், பல நூறு போராளிகளும் ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற என் கேள்விக்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை என்று நவி பிள்ளையிடம் சொன்னேன். என்னைப் போல பல நூறு பெண்கள் தங்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக மனுக்களைக் கையளித்தனர்.  எங்கள் குறைகளைக் கனிவோடு கேட்டார். உரிய முறையில் தீர்வு காண்பதாகவும் சொன்னார். நவி பிள்ளை யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, இலங்கை அரசு தற்காலிகமாக ராணுவத்தை அகற்றி  இருக்கிறது. அவர் திரும்பிச் சென்றதும் மறுபடியும் ராணுவம் வந்துவிடும். ஆனால், இதை எல்லாம் நவி பிள்ளையிடம் சொல்வதற்கான கால அவகாசமோ, சூழலோ இல்லை!'' என்கிறார்.

உலகெங்கிலும் நடைபெறும் போரில் உயிரிழப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது நவி பிள்ளை கடைப்பிடித்து வரும் பண்பு. வன்னிப் போரில் கொல்லப்பட்ட ராணுவத்தினர், புலிகள், பொதுமக்களுக்கு நந்திக் கடலில் அவர் அஞ்சலி செலுத்த விரும்பினார். இதை முன்கூட்டியே அறிந்துகொண்ட சிங்கள ராணுவத்தினர், ஐ.நா. அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, 'அப்படிச் செய்தால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம்என்று பயமுறுத்தி முல்லைத் தீவுக்குள் நவி பிள்ளையை அனுமதிக்க முடியாது என்று அச்சுறுத்தினார்கள். நவி பிள்ளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்தது அவரது வருகையில் குறிப்பிடத்தக்க அம்சம்.

இது பற்றி வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளரான விக்னேஸ்வரனிடம் பேசியபோது, ''தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நவி பிள்ளையிடம் மக்களின் பல்வேறு பிரச்னைகளையும், சிவில் உரிமைகள் தொடர்பாகவும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்' என்றார் நம்பிக்கையும் ஆதங்கமும் கலந்த குரலில்.  

ஏழு நாள் இலங்கைப் பயணத்தில் எட்டு தரப்பினரைச் சந்தித்த நவி பிள்ளை, இலங்கை மண்ணில் இருந்தபடியே கூறிய கருத்துகள் முக்கியமானவை. ''இதற்கு முன்னர் இப்படி ஒரு விசும்பலையும் கண்ணீரையும் நான் காணவில்லை. அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட என்னால் முடியவில்லை. பெரும்பாலான பெண்கள், வீட்டில் கணவரையோ, மகனையோ இழந்திருக்கிறார்கள். என்னுடன் உரையாடிய பொதுமக்களையும் சில மனித உரிமை ஆர்வலர்களையும் அதற்குப் பின் ராணுவம் அச்சுறுத்தி துன்புறுத்தியிருக்கிறது. இது இலங்கையில் நிலவும் ஏதேச்சதிகாரப் போக்கையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்தக் கண்காணிப்பையும் துன்புறுத்தலையும் பார்க்கும்போது இங்கு ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. ஐ.நா. அமைப்புகளும் அமெரிக்காவும் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி இறுதிப் போரில் மக்கள் கொல்லப்பட்டதுகுறித்து இலங்கை நம்பகமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டிவரும்!'' என்று எச்சரித்தார்.

இப்படிப் பல நம்பிக்கைகளை நவி பிள்ளையின் வருகை விதைத்தாலும், அவரது சில வார்த்தைகளே அந்த நம்பிக்கையிலும் நச்சு பாய்ச்சுகிறது!

''இனப்படுகொலை என்று தமிழர்கள் சொல்கிறார்கள். நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா?'' என்ற கேள்விக்கு, ''இனப்படுகொலை என்ற வார்த்தையை என்னிடம் யாரும் பயன்படுத்தவில்லை. அதிகாரிகளோ, பொதுமக்களோ, ஊடகங்களோ சொல்லவில்லை. 'இனப்படுகொலைஎன்ற வார்த்தை சட்டப்பூர்வமான வார்த்தை. ஒரு மக்கள் கூட்டத்தை இனரீதியாக ஒதுக்கி கொலை செய்திருந்தால் அதை நிரூபிக்க ஆதாரங்கள் வேண்டும். ருவாண்டாவில் இனப் படுகொலைக்கான மிகத் தெளிவான ஆதாரங்கள் இருந்தது. இலங்கையில் நிகழ்ந்தவை இனப் படுகொலையா என்பது பற்றி முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்'' என்று நழுவினார்.

''நீங்கள் சென்ற பிறகு மக்களை ராணுவம் அச்சுறுத்தினால் ஐ.நா-வோ நீங்களோ  ாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பீர்களா?'' என்று கேட்டதற்கு, ''நான் எப்படி பாதுகாக்க முடியும்.  இது சிக்கலான விஷயம். அவர்களைப் பாதுகாப்பது கடினம்தான். என் வேலை இங்குள்ள சூழலைக் கணித்து அறிக்கை தாக்கல்செய்வது மட்டுமே!'' என்றார்.

தனது வருகை சம்பிரதாய சடங்காக மாறிவிடக் கூடாது என்ற பொறுப்பு, நவி பிள்ளைக்குத்தான் இருக்கிறது!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com