Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை வெளிப்படையாகப் பாராட்டினார் நவிபிள்ளை

இரக்கமற்ற முறையில் கொலைகள் பல புரிந்த புலிகளுக்கு ஐ.நா.வில் ஒருபோதும் இடமில்லை

யுத்தத்தின் நிறைவானது இலங்கையில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சூழலை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன் எனக் குறிப்பிட்ட மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, யுத்தம் முடிந்துவிட்ட போதிலும் மக்களின் கஷ்டங்கள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பதையும் உணர முடிந்ததாகத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த நவநீதம்பிள்ளை கடந்த சனிக்கிழமை 31.08.2013 அன்று கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.

அரசாங்கம் விடுத்த அழைப்புக்காகவும் வழங்கிய சிறந்த ஒத்துழைப்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் விரும்பும் எந்த இடத்திற்கும் செல்லலாம், நான் விரும்பும் எதனையும் பார்க்கலாம் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது. அவ்வாறே அனைத்து விடயங்களும் மிகவும் மதிப்புக்குரியதாக அமைந்திருந்தது.

விடுதலைப் புலிகள் என்பது பல்வேறு உயிர்களை இரக்கமற்ற முறையில் அழித்த கொலைகார அமைப்பாகும். உண்மையில் 1999 ஆம் ஆண்டு ஜுலை மாதம் விடுதலைப் புலிகளால் தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சமாதான செயற்பாட்டாளரும் நீலன் திருச்செல்வத்தின் நினைவு நிகழ்வுக்காக மட்டுமே நான் இதற்கு முன்னதாக ஒரே ஒரு தடவை இலங்கைக்கு வந்துள்ளேன். விடுதலைப் புலிகளைப் போன்ற இரக்கமற்ற அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையில் எந்த அங்கீகாரமும் இல்லை என்பதை இன்னும் விடுதலைப் புலிகளை போற்றிக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தோர் தெரிந்துகொள்ள வேண்டும்.

யுத்தகளத்திலும் பஸ்களிலும் வீதிகளிலும் அல்லது தடுப்பு காவலிலும் இருந்தபோதும் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் நினைவுகளால் வருந்திக் கொண்டிருப்போரின் உணர்வுகளுக்கு சகலரும் மதிப்பளிக்க வேண்டும்.

வடமாகாண தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் நான் வரவேற்கிறேன். இந்த தேர்தலானது அமைதியான சூழலில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலாக நடத்தப்பட வேண்டும் என்பதுடன் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைக்கு இது முக்கியமானதொரு புதிய நிலையாக இருக்கும்.

நான் தனி நாடொன்றுக்கு செய்த விஜயம் செய்ததில் இலங்கைக்கான இந்த விஜயமே மிகவும் நீண்டதாகும். இந்த விஜயம் பற்றி நான் செப்டெம்பர் மாதத்தில் ஜெனீவாவில் வாய்மூல அறிக்கையொன்றை விடுவிக்கவுள்ளதுடன், அடுத்த வருடம் மார்ச் மாதம் முழுமையான எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

சில ஊடகங்களும், பொறுப்பு வாய்ந்த பதவிகளிலுள்ள ஒரு சிலரும் கடந்த சில வருடங்களாகவே எனது தமிழ் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு என்னை விடுதலைப் புலிகளின் ஆயுதமாக விமர்சித்து வந்தனர். ஐ.நா விலுள்ள விடுதலைப் புலிகளினால் எனக்கு சம்பளம் வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது மிகவும் தவறானது என்பது மட்டுமல்லாது மிகவும் வருத்தத்திற் குரியதுமாகும். முதலில் நான் ஒரு தென்னாபிரிக்கர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதில் நான் பெருமை கொள்கிறேன். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரான குறுகிய காலப்பகுதியில் மீள்குடியேற்ற, புனர்நிர்மாண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் காணப்பட்டிருக்கும் முன்னேற்றங்களை நான் நேரடியாகக் கண்டு கொண்டேன். உதவி வழங்கும் நாடுகள், ஐ.நா முகவரமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றின் உதவிகளுடன் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் உட்கட்டமைப்பு பணிகளானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். 4 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களில் அதிக பெரும்பான்மையானவர்கள் தற்போது சொந்த இடத்திற்கு திரும்பிவிட்டனர். இதுவும் வரவேற்கத்தக்கதொரு விடயம். இவையனைத்தும் முக்கியமான சாதனைகள்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கத்தின் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பாக எனது அலுவலகம் மிகவும் உன்னிப்பாக அவதானம் செலுத்தும். ஏதேனும் நேர்மையான முன்னேற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மனித உரிமைகள் பேரவைக்கான எனது அறிக்கையில் இது குறிப்பிடப்படும்.

கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பது பற்றி நான் எனது விஜயத்தின்போது கரிசனை எழுப்பினேன். பெரும் எண்ணிக்கையான படையினரைக் கொண்ட இராணுவத்தை ஒரே நாள் இரவில் கலைப்பது என்பது சாத்தியப்படாத விடயம் என்ற பாதுகாப்புச் செயலாளரின் நிலைபாட்டை நான் புரிந்துகொள்கிறேன். அது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம்.

நான் பாதிக்கப்பட்ட சகல தரப்பினரையும் சந்தித்து பேசினேன். மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் என்ற வகையில் பாதிக்கப்பட்ட வர்களை யார் கொன்றது என்று நான் வித்தியாசம் பார்க்கவில்லை. அவர்கள் உயிரிழக்க நேர்ந்தது மனித உரிமைகள் மீறலாகும். நாம் சந்தித்த அனைத்து தரப்பினரதும் விடயங்கள் கணக்கில் கொள்ளப்படும்.

ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கைக்கு இணங்க பார்க்கும் போது கொலைகள் பரவலாக இடம்பெற்றிருப்பதாகவும் அவை பற்றி முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். எனினும், நம்பகத்தன்மை கொண்ட முறையான விசாரணைகள் நடத்தப்படாமல் பாரிய குற்றங்கள் இழைக்கப்பட்டமை பற்றி யாராலும் சொல்ல முடியாது. இதைத்தான் நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.

உள்நாட்டில் மனித உரிமைகள் ஆணைக்குழுவொன்று இருக்கும் நிலையில் இந்த விடயத்தில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்வதானது நாட்டின் இறைமைக்கு சவாலாக அமையக்கூடும் என்று நாட்டு மக்களும் அரசாங்கமும் நம்புவதுதான் தற்போதைய நிலைபாடாக உள்ளதை என்னால் அவதானிக்க முடிந்தது. உண்மைதான். ஆனாலும் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணையொன்றின் மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அதனால் இவ்விசாரணைகள் அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சாட்டுவதாக ஒருபோதும் அமைந்துவிடாது. விடுதலைப் புலிகளும் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதை பலரது வாக்குமூலங்களிலிருந்து நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இவ்வாறான பிரச்சினைகள் நிலவும் 60இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கிறேன். இந்த சகல இடங்களிலும் நான் இதைத்தான் வலியுறுத்தியிருக்கிறேன்.

2009 ஆம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதி, ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு அளித்த உறுதிமொழியின் பிரகாரம் உள்நாட்டு பொறிமுறையொன்றின் ஊடாக பொறுப்புக் கூறும் விடயங்களை நிறைவேற்றும் என்பதே எனது முதலாவது நம்பிக்கையாக இருந்தது. அதன் பின்னர் விசாரணைகளை பூர்த்தி செய்வதற்கான இன்னுமொரு பொறிமுறையாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அது எம் அனைவரினாலும் வரவேற்கப்பட்டது. அதேபோல், இராணுவத்தினால் விசாரணை தீர்ப்பாயம் ஒன்றும் நியமிக்கப்பட்டது. தற்போது அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பாக ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது. இது வரவேற்கப்படக்கூடிய விடயம். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்ற வகையில் நாம் அனைத்து படுகொலைகள், உயிரிழப்புகள் மற்றும் காணாமல்போதல்கள் பற்றியும் தான் விசாரணைகளை கோரியிருக்கிறோம். எம்மிடம் பக்கச்சார்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. குற்றவாளிகள் எங்கிருந்தாலும் விசாரணைகளை ஆரம்பிக்கும் அதிகாரம் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டது. குற்றவாளிகள் நாட்டைவிட்டு வெளியில் இருப்பார்களாயின் அது சட்ட அமுலாக்கத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். நாட்டைவிட்டு வெளியிலுள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நம்பகத்தன்மை கொண்ட நடவடிக்கையொன்றை ஆரம்பிக்குமெனில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே எனக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணை. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அர்த்தபுஷ்டியான அதிகாரப்பகிர்வை ஊக்குவிக்கிறது. நீண்ட நல்லிணக்கத்துக்கு இந்த விடயங்கள் முக்கியமானவை என்று நல்லிணக்க ஆணைக் குழுவும் பரிந்துரை செய்துள்ளது. முக்கிய விவகாரமான 13ஆவது திருத்தம் தொடர்பிலான பேச்சுகளில் அனைத்து கட்சிகளும் பங்கு கொள்ளும் என்று நான் நம்புகி றேன். இந்த விடயம் தொடர்பில் வட மாகாண சபைத் தேர்தலும் முக்கியமான சோதனை நடவடிக்கையாகும்.

இந்த தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்படும் என்று நான் நம்புகிறேன். வேட்பாளர்கள் பற்றி நான் எதுவும் கூற முடியாது. அது வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய விடயம்.

(க.குமாரசாமி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com