Contact us at: sooddram@gmail.com

 

வட்டுக்கோட்டையில் இருந்து ஒரு நல்ல தகவல் வந்துள்ளது

வடபகுதியின் பிரதான நகரங்களில் ஒன்றான வட்டுக்கோட்டைக் கும் நாட்டின் இனப்பிரச்சினைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. 1976ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதியன்று தமிழரசுக்கட்சி என்று தன்னை ஆரம்பம் முதல் அழைத்து வந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான அரசியல் கட்சி தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற புதுப் பெயரில் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மக்கள் ஆதரவை பெருக்கிக் கொள்ளும் எண்ணத்துடன் நாம் பதவிக்கு வந்தால் சுதந்திர தமிbழம் ஒன்றை உருவாக்குவோம் என்ற வட் டுக்கோட்டை பிரகடனத்தை விடுத்தது.

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் இந்த போலி வாக்குறுதியை நம்பி தமிழ் மக்கள் அக்கட்சிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்ததனால் 1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜய வர்தனவின் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்க காலத்தில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்க்கட்சியாகி அதன் பாராளு மன்றத் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகி இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் புதிய சாதனை யொன்றை ஏற்படுத்தினார்.

1976ம் ஆண்டின் வட்டுக்கோட்டை பிரகடனமே இலங்கையில் பிரி வினைவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் ஆரம்ப அடித்தளமாக அமைந்தது. அதனை மையமாக வைத்தே தமிழ் இளைஞர்கள் பிரபாகரன், உமா மகேஸ்வரன், சிறி சபாரட்ணம், பாலகுமார், பத்ம நாபா போன்றவர்கள் தலைமையில் போராளிக்குழுக்களை உரு வாக்கி பின்னர் அது இலங்கையின் சுதந்திரத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில் விஸ்வரூபம் எடுத்தமை குறிப்பிடத் தக்கது.

இது போன்றே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக் கோட்டையில் வைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நான் வடக்கின் வசந்தம் அபிவிருத்திப் பணி களை புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் வடமாகாணசபையிடம் ஒப்படைப்பேன் என்ற இன்னுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக் கோட்டை பிரகடனத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டார்.

வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதென்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமோ, தமிழ்த் தேசியக்கூட்டமைப்போ எடுக்க வில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்ற தீர்மானத்தை எடுத்தார்.

அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுள்ள வடபகுதி மக்கள் தங்களைத் தாங்களே ஜனநாயக அடிப்படையில் நல்லாட்சி செய்து வடமாகா ணத்தை அபிவிருத்தி செய்வதற்கான தங்கள் பிரதிநிதிகளை எதிர்வரும் 21ம் திகதியன்று தெரிவு செய்து வடமாகாண சபையை பதவியில் அமர்த்த வேண்டும்.

தான் முன்னெடுத்துச் சென்ற வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டப் பணிகளை நிறுத்தி, அந்தப் பொறுப்பை வடபகுதி மக்களிடம் நான் 22ம் திகதியன்று ஒப்படைப்பேன் என பொருளாதார அபி விருத்தி அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ வட்டுக்கோட்டையில் தெரி வித்தார்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டப் பணிகளை தான் செப்டம்பர் மாதம் 21ம் திகதிக்கு பின்னர் முன்னெடுத்துச் செல்லமாட்டேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை தொகுதியின் வலிகாமம் மேற்கு பகுதியில் இருக் கும் சித்தன்கேணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களை ஆதரித்து நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரை நிகழ்த்திய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, “வட்டுக்கோட்டை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். இங்கு அரசியல் வரலாற்று முக்கியத்துவம் வாய் ந்த பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருந்து நான் இம்மாதம் 22ம் திகதிக்கு பின்னர் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டப் பணிகளை நிறுத்தப் போகிறேன் என்று அறிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவமாக விளங்குவது மக்களுக்காக மக்களே தங்களை ஆள வேண்டும் என்பதாகும் என்று தெரி வித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுதந்திர இலங்கையில் வட பகுதி மக்கள் முதல் தடவையாக தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்து மக்களின் விருப்பத்துடன் மக்களுக்கு பணியாற் றும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என்று கூறினார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தங்களை அதிகாரபீடத்தில் அமர்த்தி னால் வடமாகாணத்தை வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் நிதியையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகள் கொடுக்கும் பணத்தையும் பயன்படுத்தி வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வோம் என்று உறுதியளித்தார்கள். ஆனால், இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப் பினர் எதையும் செய்வதற்கு பணமில்லாத நிலையில் இருக்கிறார் கள் என்று கூறினார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு பணி செய்வதற்காக தங்க ளுக்கு அதிகாரத்தை தாருங்கள் என்று கேட்கவில்லை. உள்ளூ ராட்சி மன்ற, மாகாணசபை மட்டத்தில் அரசாங்க இயந்திரம் தமிழர் பிரச்சினைக்கு எவ்வித தீர்வினையும் ஏற்படுத்தவில்லை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காகவே தங்களுக்கு ஆத ரவளிக்குமாறு மக்களிடம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கேட்கிறது என்றார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரின் இந்த அபிலாசை நடைமுறையில் சாத்தியமானால் வடபகுதி மக்கள் மனித உரிமைகளில் ஒன்றான பொருளாதார சுதந்திரத்தை இழந்துவிடுவார்கள் என்றும் கூறினார்.

எனவே, வடமாகாண மக்கள் மதிநுட்பத்துடன் சிந்தித்து செப்டம்பர் மாதம் 21ம் திகதி தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளுக்கு வாக்க ளித்து அவர்களை அதிகாரத்தில் அமர்த்தி அதன் மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com