Contact us at: sooddram@gmail.com

 

ஜேவிபியின் தலைவர்

புதிய குமார என்னதான் செய்யப் போகின்றார்.....?

(சாகரன்)

ஏப்ரல் 27 ம் திகதி புலம் பெயர் தேசம் ஒன்றில் நடைபெற்ற ஜே.வி.பி. இன் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஜே.வி.பி. இன் புதிய தலைவராக அண்மையில் அனுர குமார திசநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். ரோகண விஜய வீர, பிரேமதாச அரசாங்கத்தினால் கொல்லப்பட அப்போதைய மத்திய குழுவில் அங்கம் வகித்தவர்களில் உயிர் தப்பியவர் சோமவன்ச அமரசிங்  ாத்திரமே. இவர் அன்றைய காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிக செல்வாக்குடன் விளங்கிய ஐ.தே கட்சியின் சிறீசென குரே யின் ஆசீர்வாதத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றார். பின்பு இவர் நாடு திரும்பாமலே ஜனநாயக நீரோடையில் இணைந்த ஜேவிபி யின் தலைவராக 1995 இல் தெரிவு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் கூட ஜேவிபி வளரச்சியடையாது மட்டும் அல்லாது இறங்கு முகமாகவே அதன் வளர்ச்சி இருந்து வந்திருக்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் கால் ஊன்றுவதற்கான பல சாத்தியப்பாடுகள் இவரின் காலத்தில் இருந்தும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் சரியான செயற்பாடுகள் இல்லாமை காரணமாக ஜே.வி.பி இன் தோற்றம் தொடக்கம் இன்று வரை வேர் ஊன்ற முடியவில்லை. கூடவே அவ்வப்போது தமிழ் பேசும் மக்களின் அரசியல் உணர்வுகளில் எதிர் மறையான செயற்பாடுகளை கொண்டிருந்தமையினால் இவர்களின் இடது சாரிச் சாயமும் வெளுத்து போய் வந்திருக்கின்றது என்பதே யதார்த்தம்.

இவர்களின் மூன்று முக்கியமான செயற்பாடுகளை இவ்விடத்தில் குறிப்பிடுவது நலம் என்று நினைக்கின்றேன். முதலாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒட்டிய வடக்கு கிழக்கு மாகாண சபையை நிபந்தனையற்று எதிர்த்தது. இதில் பிரேமதாஸ, புலி ஆகியோருடன் எழுதப்படாத ஒப்பந்த அடிப்படையில் செயற்பட்டது ஜே.வி.பி. மற்றையது இவர்களின் பிரசித்தி பெற்ற 5 வகுப்புகளில் ஒன்று இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிரானவர்கள் தாங்கள் எனக் கூறப்படடிருந்தாலும் அடிப்படையில் இது மலையக தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே இதனை இவர்கள் முன்னெடுத்தனர். மூன்றாவது இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை வழக்கு போட்டு பிரித்த விடயமானது தமிழ் மக்கள் இவர்களை தங்கள் எதிரியாக அதிகம் பார்க்க வைத்திருக்கின்றது. இந்த பிழையான முரண்பாடான தமது கொள்கைகளை இவர்கள் இன்றுவரை உணர்ந்து கொண்டார்களா என்பது கேள்விக்குறியே?

சுனாமி கால கட்டத்திலும் சிறப்பாக கிழக்கில் தமிழ் மக்களுக்கான நிவாரணங்களை நிறையவே செய்தாலும் வடக்குகிழக்கு பிரிப்பினால் தமிழ் மக்கள் மத்தியல் ஏற்பட்ட நம்பிக்கையீனத்தை இவர்களால் இன்று வரை கழுவ முடியவில்லை. கூடவே கொழும்பில் 2011 நடுப்பகுதியில் புலிகளால் தொடர்ச்சியாக ஒரு மாதத்தில் பயணிகள் பேருந்தில் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் மூன்றிற்கு இற்கு மேற்பட்ட பேருந்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களில் 90 சதவீதத்திற்கு மேலானவர்கள் சிங்கள அப்பாவி மக்களாக இருந்தனர். இதன் தொடர்சியாக காலி துறைமுகத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதலும் காலியில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள் காடையர்களால் ஏவப்பட இருந்த கொலை வெறியாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த நல்ல செயற்பாட்டின் பின்புலத்தில் ஜேவிபி இருந்தாலும் இதுவும் தமிழ் மக்கள் ஜே.வி.பி மீது நம்பிக்கையை வைக்க போதுமானதாக இருக்கவில்லை.

காரணம் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வில் ஜே.வி.பி. இற்கு இருந்து வருகின்ற பிழையான அல்லது தெளிவற்ற ஏன் இதுவரைக்கும் வரைவுகள் இல்லாத நிலையானவை இவர்கள் மீதி தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைக்க தயங்குவதற்கான காரணமாக அமைகின்றது. முழு இலங்கை மக்களும் இவர்கள் மீது நம்பிக்கையை இழந்ததற்கான அண்மைய காலத்து செயற்பாடுகளில் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தி ஆதரித்து செயற்பட்டதில் இவர்களும் ஐதே கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாக செயற்பட்ட செயற்பாடு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். இவ் நிகழ்வு தமிழ் மக்கள் மத்தியிலிருந்த முற்போக்கு சக்திகள் இவர்களுடன் பேசுவதைக் கூட தவிர்க்கும் அளவிற்கு விலக வைத்தது என்பது வருத்தமான விடயமாகும்.

இவ்வாறான தவறான செயற்பாடுகளில் சோமசன்ச அமரசிங்காவின் ஆளுமை கணிசமான செல்வாக்கை செலுத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை. இன்று புதிய தலைவராக பொறுப்பெடுத்திருக்கும் அனுர குமார திசநாயக்க இந்த நிலமைகளை கவனத்தில் கொண்டு செயற்படுவாரானால் தென் இலங்கையின் ஒரு சக்தியாக? உருவெடுக்கும் ஜே.வி.பி. வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் மத்தியில் கணிசமான நம்பிக்கையை எதிர்காலத்தில் பெற முடியும். இதற்கு ஜே.வி.பி. பயணிக்க வேண்டிய தூரம் மிக மிக அதிகம்.

இதற்கான சாத்தியப்பாடுகள் ஏதாவது உருவாகுமா என்பதன் அடிப்படையிலேயே பொதுத் தளம் ஒன்றில் ஸ்கைபில் வந்த அவருடன் நான் ஒரு கேள்வியை மட்டும் முன் வைத்தேன். அது 'எல்லாத்தரப்பிலும் பலத்த இழப்புகளின் மத்தியில் முடிவுற்ற இந்த போருக்கு பின்பு ஐக்கிய இலங்கைகுள் வாழும் சகல இனத்தவரும் சம உரிமையுடன் வாழ்வதற்கு நம்பிகையூட்டும் செயற்பாட்டுடைய என்ன செயற்திட்டங்களை, வேலைத்திட்டங்களை வைத்திருக்கின்றீர்கள்' என்று. இதற்கு அவர் அளித்த பதிலில  ஆட்சி மாற்றத்தை அல்ல அதிகாரமாற்றத்தை நோக்கி வேலைத்திட்டமாக சகல அரசியல் பொது ஸ்தானங்களுடனும் பேசிவருவதாகவும் தற்போது இலங்கையில் சிங்கள் பௌத்த  இனமே இலங்கையில் மேலாண்மையான முதன்மையான இனமாக இருக்கின்றது. இது ஏற்புடையது அல்ல. ஆனால் எதிர்காலத்தில் இலங்கையில் யாரும் முதன்மையானவர்கள் இரண்டாம் பட்சமானவர்கள் என்ற நிலையை இல்லாமல் யாவரும் சமம் என்ற நிலமைகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப் போவதாக கூறினார்.

சாரம்சத்தில் நம்பிக்கையூட்டும் பதிலாக இருந்தாலும் இதனை எவ்வாறு எவ்வளவு தீவிரமாக என்ன கால வரையறைக்குள்; செயற்படுதப் போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்பு ஜே.வி.பி யின் முக்கியஸ்தர் சந்திரசேகரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கான வரைபு உங்களிடம் உள்ளதா என்று கேட்டபோது இல்லை என்பதை பகீரப் பிரயத்தனத்தின் பின்பே அவர் வாயால் ஒப்புக் கொள்ள வைக்க முடிந்தது. ஆனால் தாம் அவ் வரைதலில் தற்போது ஈடுபடுவதாக கூறியிருந்தார். 5 வருடங்கள் கழிந்தும் இன்று வரை அவர்களால் பூர்த்தி செய்யப்படாதது, இலங்கைத் தீவில் முதன்மையாக காணப்படும் பிரச்சனையை தள்ளிவைப்பது இவர்களின் பொறுப்பற்ற தன்மையே காட்டு நிற்கின்றது. சரி பொறுத்திருந்துதான் பார்ப்போமே புதிய 'குமார' என்னதான் செய்யப் போகின்றார் என்று.

(Saakaran) (ஏப்ரல் 30, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com