Contact us at: sooddram@gmail.com

 

தோழர் பத்தமநாபா

குறும் தமிழ் தேசியவாத்திற்கும், பெரும் தேசியவாதத்திற்கும் அடிபணியாத போராளி

(தோழர் ஜேம்ஸ்)

தமிழ் பேசும் மக்கள் ஒரு பலமான தலைமை இன்றி தவிக்கின்றனர் என்பது தற்போது பலரது குரலாக ஒலிக்கும் விடையம். கடந்து வந்த ஆயுதப் போராட்ட காலத்தில் புலிகள் தமது இயக்கத்திற்குள்ளும், இயக்கத்திற்கு வெளியேயும் பிரபாகரன் என்றொரு தனி நபரைத் தவிர்த்து ஏனைய தலைமை சக்திகளை அழித்தொழிப்பதில் தமது கடமையை சரிவரச் செய்துவந்தனர், இதில் புலிகள் வெற்றி கண்டனர். தமிழ் மக்கள் தோற்றுப் போயினர் என்பதுவும் வரலாற்று உண்மை. புலிகளின் இக்கடமையில் பலியான பலம் மிக்க தீர்க்தரிசனம் மிக்க தலைவர் அது பத்தமநாபா என்றால் மிகையாகாது.

ஈழவிடுதலைப் போராட்டம் என்பது ஆயுதப் போராட்ட வடிவத்திலிருந்து சர்வதேசஅங்கீகாரம், அனுசரணை, ஆதரவு, ஒத்துழைப்புடன் நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு, பரிந்துரை அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படலாம். அவ்வாறு தீர்கப்பட வேண்டிய உலக அரசியல் சூழலே தற்போதுள்ளது என்பதை உணரந்து கொண்டார் தோழர் பத்தமநாபா. இது தனது முழவடிவத்தை ஒரு process ஊடாகவே அடைய முடியும். முழுமையான தீர்வை ஒரே நாளில், ஒரு தரத்தில் அடைவது என்பது நடைமுறைச்சாத்தியமற்றது. இது இயங்கியலுக்கு மறுப்பான விடயமும் ஆகும் என்பதை மிக்ச்சரியாக புரிந்திருந்தார் தோழர் நாபா. எனவேதான் வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஆரம்பித்து எமது தீர்வுத்திட்ட பயணத்தை ஆரம்பித்தார். இதில் உறுதியாக இருந்தார். இச் செயற்பாடு தொடர்ந்து இருந்தால் மாவிலாறு நிகழ்வுகளும் இல்லை, முள்ளிவாய்கால் நிகழ்வுகளும் இல்லை. ஏன் ஸ்ரீபெரம்பத்தூர் நிகழ்வுகளும் இல்லை என்று அடுக்கின் கொண்டே போலாம்.

பிரபாகரன், பிரேமதாச, கருணாநிதி போன்றவற்களின் கூட்டுச் செயற்பாட்டால் போட்டு உடைக்கப்பட்டதுதான் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற செயற்பாடும் அதன் தொடர்ச்சிகளும். இதனை தடுத்து நிறுத்துவதில் தோழர் பத்தமநாபா கடுமையான உழைப்புக்களை செலுத்தினார். வடக்கு கிழக்கு மாகாணசபை ஆளும் பொறுப்பைக் கூட புலிகளின் பிரபாகரனிடம் கையளித்து சபை கலைக்கப்படுவதை தவிர்க்க கருணாநிதி மூலம் முயன்றார். இறுதியில் தன்னுயிரையும் அதற்காகவே அர்பணித்தார்.

தோற்றுப்போன புலிகளினால் வலிந்து தத்தெடுக்கப்பட்ட 30 வருடகால ஆயுதப்போராட்டம் அவர்கள் மே 2009 இல் அடைந்த இறுதி நிலமையைதான் அடையும் என்றும் கூறி வந்தார். ஆனால் புலிகளும் அவர்களின் துதிபாடிகளும் நாம் வெல்வோம் என்று கொக்கரித்து இறுதியில் இரவல் கோவணத்துடன் மல்லாக்காக படுத்த அவமானத்தை மட்டும் அவர்கள் தங்களுடன் இணைத்துக் கொண்டு அழிந்து போயினர்.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட அரசியல் செயற்பாடுகள் பற்றி அருணாசலம் காலம் தொட்டு இன்று வரை ஆராந்து பார்த்தால் ஒன்று தெளிவாக புரியும். தமிழ் தலைமைகளிடம்; இரண்டு விதமான போக்கும் அதன் அடிப்படையில் மக்கள் அணிதிரளுவதையும் அவதானிக்க முடியும். ஒன்று தமிழ் குறும் தேசியவாதம் மற்றது பெரும் தேசியவாதத்திற்கு நிபந்தனையற்ற ஆமாம் போடும் போக்குகளும் ஆகும். இந்த இரண்டு குறும் தேசியவாதம், பேரினவாதத்திற்குள் விழாமல் சமரசம் செய்யாமல் செயற்படும் செயற்பாடுகளை தமிழ் மக்கள் மத்தியில் இருந்த இடதுசாரிகள் அவ்வப் போது முன்னெடுத்து வந்தாலும் அவர்களால் நீண்ட காலத்திற்கு ஒரு பலமான அமைப்புச் செயற்பாடுகளை செய்ய முடியவில்லை. பலம் மிக்க அணியாக வளரவிடாமல் தடுப்பதில் தமிழ் குறும் தேசியவாதம் தனது முதன்மையான செயற்பாட்டடைக் கொண்டிருந்தது. மக்களின் வாக்குகளைப் பெற்று 'கதிரை' அரசியலில் ஈடுபடுவதற்கு குறும் தேசியவாதத்ததையும், பெரும்பான்மை அரசில் இணைந்து சலுகைகளை, உரிமைகளை மட்டும் பெறுதல் என்று ஆரம்பித்து பின்பு பெரும் தேசியவாத்திற்கு சேவகம் செய்து வந்ததும் வருவதும்தான் தமிழ் தலைவர்களின் அரசியலாக இருந்து வருகின்றது அருணாசலம் காம் தொடங்கி இன்று வரை.

துமிழ் தலைமைகளால் சரியான கருத்தியலின் அடிபடையில் இவ் இரு இனவாத்திற்குள்ளும் விழாமல் அரசியலைக் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் அது மிகையாகாது. ஆனால் இதற்கு விதிவிலக்காக அமைந்தவர்தான் தோழர் பத்தமநாபா. இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையேயான இலங்கை - இந்திய ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையினையும் எடுத்து நோக்கினால் இது தெளிவாக புரியும். வடக்கு கிழக்கில் வாழும் மூவின மக்களின் ஐக்கியத்துடன் அவரவருக்கு சம உரிமை வழங்குதல் என்ற செயற்பாட்டின் அடிப்படையில் அமைந்ததுதான் வடக்கு கிழக்கு மாகாண சபை. இதில் தமிழ், முஸ்லீம், சிங்களவர் என மூவின மக்களின் பிரநிதித்துவத்தை உறுதி செய்து அமைக்கப்பட்ட அமைச்சர் அவையும் அதன் குறுகிய கால செயற்பாடுகளும் அவ்வாறே அமைந்தன. தமிழ் மக்களை குறும் தமிழ் தேசியவாத்தினால் உசுப்பி வாக்கு பெறும் எந்த செயற்பாட்டையும் தோழர் பத்மநாபா முன்னிறுத்வில்லை. மாறாக பேரினவாத அரசுடன் நிபந்தனையற்ற சமரசத்திற்கு செல்லவில்லை. சரியான கருத்தியலின் அடிப்படையில் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஒரு தலைவர் தமிழ் மக்கள் மத்தியில் இருந்தார் என்றால் அது பத்மநாபாதான். வரால் உருவாக்கப்பட்ட பல தோழர்கள்தான்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 1986 டிசம்பரில் வலிந்து தத்ததெடுத்த புலிகள் 2009 இல் முள்ளிவாய்காலில் தான் பெற்றெடுக்காத பிள்ளையை பலி கொடுத்த நிகழ்வுடன் முற்றுப் பெற வைத்தனர். இதன் பின்பு மகிந்த குழாமை பழிவாங்கும் செயற்பாடுகளுக்காக மட்டும் தமது அரசியலை புலம் பெயர  ேசங்களில் நடாத்தி வருகின்றனர். மற்றயபடி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி யாருக்கும் கவலை இல்லை. இதனால்தான் உலகத்தின் பொலிஸ்காரன் அமெரிக்காவிடம் மட்டும் தஞ்சம் புகும் செயற்பாட்டை மட்டும் இவர்கள் செய்திருக்கின்றார்கள்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை சமாதான பிராந்தியமாக நிலை நிறுத்தும் வரைக்கும் இந்தியா எமது நண்பன் ன்பதில் பத்தமநாபா தெளிவாகவே இருந்தார். இந்தியா இப்பிராந்தியத்தில் தனது நலன்களின் அடிப்படையில்தான் செயற்படும். இது சரியா தவறா என்பதை உலக அரசியல் சதுரங்கத்தில் ஆய்வு செய்து முடிவுக்கு வருதல் சற்று கடினம். ங்கள் நாட்டின் நலன்கள் எங்கள் நாட்டின் நலன்களை விழுங்கால் இருக்கும் வரைக்கும் நாம் இதனை அனுமதிக்கலாம். கூடவே இரு நாடுகளின் நலன்களும் சமாந்தரமாக பயணிக்கும் வரைக்கும் இதனை ஏற்றுக் கொள்ளலாம் ஏன்பதில் தோழர் தெளிவாக இருந்தார். தனது தோழர்களையும் இப் பாதையில் பயணிக்க செய்திருக்கின்றார் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இன்று குறும் தேசியவாதமே தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள உதவும் என்று புதிதாக புறப்பட தயாராகும் பலருக்கும் தோழர் பத்தநாபா பயணித்து வந்த பாதைகள் பாடங்களாக அமையட்டும். SWRD பண்டாரநாயக்கா ஐ.தே.கட்சியின் ஏகாதிபத்திய சார்பு நிலைபாட்டை எதிர்த்து அவர்களை வெல்வதற்காக தற்காலிகமாக கையில் எடுத்த 'சிங்களம் மட்டும்' என்ற 'தந்திரோபாய' பெரும் தேசியவாத சுலோகம் இறுதியில் அவரையும் காவுகொண்டதை யாரும் மறந்து விடலாகாது. ஐ.தே கட்சியினால் முதலில் முன் மொழியப்பட்ட 'சிங்களம் மட்டும்' பாதாகை இறுதியல் இன்றுவரை SWRD பண்டாரநாயக்கா இனால் ஆரம்பிக்கப்பட்டது என்ற பழியிலிரந்து அவரை மீட் முடியாமல் போய்விட்டது என்ற உண்மையையும ;மாக்ஸிசம் பேசும்' தமிழ் குறும் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இது சுரெஷுக்கும் பொருந்தும் அவர் வழியில் பயணிக்க துடிப்பவர்களுக்கும் பொருந்தும். ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் குளிர்காய நினைக்கும் யாபேருக்கும் பொருந்தும்.

SWRD பண்டாரநாயக்கா இனால் கொண்டு வரப்பட்ட 'சிங்களம் மட்டும்' என்ற வெற்றி பெறுவதற்கான சுலோகம் அவரின் தேர்தல் வெற்றிக்கு பின்னர் அவரை பலகாலம் வாழ வைத்து ஆள விட்டிருந்தால் இலங்கையில் ரு சமாத சக வாழ்விற்காபயணத்தை அவரால் ஆரம்பித்து நிறைவேற்றியிருக்க வாய்ப்புகள் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு. பதமநாபா இது போன்ற வெற்றிகான தேசியவாதத்தை தந்திரோப ரீதியாகவும் தமது ஆயுதப் போராட்ட காலத்திலும் அதனைத் தொடர்ந்த அரசியல் செயற்பாட்டுக் காலத்திலும் வடக்கு கிழக்கு மாகாய சமை காலத்திலும் எடுக்கிவில்லை. எழுந்த சில காளான்களையும் முளையிலேயே கிள்p எறிந்தவர் என்பது அவர் அருகில் இருந்த பலரும் அறிந்துணர்ந்த ஒன்று.

 ஒட்டுமொத்த இலங்கையையும் நாசப்படுத்தியதற்க  என்றால் மிகையாகாது. அதுபோலவே வெல்வதற்கு மட்டும் தாம் குறும் தேசியவாதத்தை கையில் எடுக்pன்றோம் வென்ற பின்பு நல் வழி நடப்போம் என்ற செயற்பாடு இறுதியல் பல முள்ளிவாய்கால்களையும் கோவணத்துடன் மல்லாக்காக படுக்கும் பிரபாகரன்களையும் எதிர்காலத்தில் உருவாக்க வழி வகுக்கும். இலங்கை முழுவது எல்லோருக்கும் சொந்தம் என்பது சாராம்சத்தில் சிங்களம் பேசும் மக்களுக் மட்டும் பொருந்தும் என்ற செயற்பாட்டன் செயற்படும் இலங்கை அரசை எதிர் கொள்ள நாம் எடுக்கும் குறம் தேசியவாம் எம்மை மேலும் படு குழியில் அல்ல பாதாளத்தில் தள்ளும் என்பதை 60 வருடகால வரலாற்றில் நாம் அறிந்து கொண்டுள்ளோம்.

எனவே தோழர் பத்தமநாபாவின் நாமத்தின் மேல் அவரின் கொள்கைவழி நின்று உறுதியெடுப்போம் இலங்கையில் உள்ள சகல முற்போக்கு ஜனநாய சக்திகளுடன் ஐக்கியத்தை ஏற்படுத்தி தொடர்ந்தும் உழைப்போம் சகல பிற்போக்கு குறும், பெரும் தேசியவாத சக்திகளையும் நிராகரிப்போம். லமான பரந்துபட்ட ஐக்கிய முனனணிக்கிக தொடர்ந்தும் உழைப்போம். இன்று இல்லாவிட்டாலும் பிறிதொரு சந்தர்பத்திலாவது நாம் வெல்வோம் வரலாற்றில் சரியானவற்றையே நாம் செய்தோம் செய்வோம் என்பதை உறுதியெடுப்போம்.

(தோழர் ஜேம்ஸ், ஜுலை 08, 2012)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com