Contact us at: sooddram@gmail.com

 

மேற்குலக - ஐரோப்பிய நாடுகள் விழித்துக் கொள்ளுமா...?

புலம் பெயர் தேசங்களில் மீண்டும் துளிர்விடும் புலிகளின் வன்முறை

(சாகரன்)

1980 களின் நடுப்பகுதியில் ஆரம்பித்து 1989 மே மாதம் வரை புலம் பெயர் தேசங்கள் எங்கும் மிரட்டல், கப்பம் வாங்குதல், கொலை செய்தல், வீடு, வியாபார ஸ்தலம் போன்ற இடங்களின் கண்டாடிகளை உடைத்தல் புலிகளின் கருத்து செயற்பாடுகளுடன் உடன்படாத தனி நபர்கள் அமைப்புகள், பத்திரிகைகள், வானொலிகள் போன்றவற்றை அடித்து உடைத்து நொருக்குதல் போன்ற வன்முறைகளில் புலிகள் அல்லது அவர்களின் துணை அமைப்புக்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்கு நமக்கு ஏன் ஜோலி என்று புலம் பெயர் தேசங்களில் பல தமிழ் மக்கள் ஒதுங்கி பயந்து இருந்தனர். 1989ம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப் பட்டதும் பொது மக்களிடம் சேகரித்த பணத்துடன் பலரும் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்து விட்டனர். தற்போது அந்தப் பணமும் தேய்ந்து போன நிலையில் உழைத்து சாப்பிட முடியாமல் சோம்பல் வருத்தத்தில் உள்ள இவர்கள் மீண்டும் புலம் பெயர் தேசத்து தமிழ்மக்களிடம் பணம் வசூலிக்கும் விடயங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

முன்பு போல் கண்ணை மூடிக்கொண்டு பணம் கொடுக்கும் நிலையில் தற்போது மக்கள் இல்லை. அதனால் ஏதாவது செய்து பணம் புரட்ட இவர்கள் முயன்று வருகின்றனர். இதற்காக போர் குற்றம், மனித உரிமை மீறல். நாடுகடந்த தமிழ் ஈழம் இன்னும் பல கோஷங்களை எழுப்பிய வண்ணம  ுறப்பட்ட இவர்களுக்கு இலங்கை அரசின் மேற்கத்தியஐரொப்பிய சார்பு அற்ற நிலைப்பாடு வசதியாக அமைந்து விட்டது. ஆமாம் மேற்கத்தியஐரொப்பிய நாடுகள் புலிகள் மீது தடை விதித்திருந்தாலும் தற்போது எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றின் மூலம் இலங்கை அரசிற்கு நெருக்கடி கொடுத்தல் என்ற விடயத்தின் அடிப்படையில் புலம் பெயர் தேசங்களில் இலங்கை அரச பிரதிநிதிகள் வரும்போது அல்லது தூதரங்கங்களால் நடாத்தப்படும் நிகழ்வுகளை குழப்புதல் போன்ற நடவடிக்கைகளுக்கு 'ஜனநாயகம்' என்ற போர்வையில் புலியினருக்கு அனுமதி கொடுத்து வருகின்றனர்;. இதனால் குஷி அடைந்த புலித் தோன்றல்கள் மீண்டும் புலம் பெயர் தேசங்களின் இலங்கை அரசை (மேற்குலக)வழிக்கு கொண்டு வருதல் என்ற  செயற்பாட்டின் ஒரு அங்கமாக செயற்படத் தொடங்கியிருக்கின்றனர்.

இவற்றின ஒரு வடிவம்தான் பொது நலவாய நாடுகளில் கலந்து கொண்ட மகிந்தாவிற்கு வழக்கு போடுதல். கனடாவில் நடைபெற்ற தீபாவளிப் பண்டிகையை குழப்புதல(இதற்கு அமைதி வழிப் போராட்டம் என்ற விளம்பரம் வேறு) என்பன அரங்கேறி இருக்கின்றன. கனடாவில் நடைபெற்ற தீபாவளிப் பண்டிகை வழமைபோல் இலங்கை தூதரகத்தின் ஒழுங்கமைப்பால் தமிழ் சிங்கள் மூஸ்லீம் மக்கள் என யாபேரும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக கடந்த மூன்று வருடங்கள் ரொறன்ரோவில் நடைபெற்று வருகின்றது. இவ் விழாவிற்கு கலந்து கொள்ளச் சென்றவர்களை மண்டப வாசலில் தூஷண வார்த்தைகளால் திட்டுதல், பாதையை வழி மறித்தல், பயணம் செய்த வாகனத்தை சேதப்படுத்த முனைதல், புகைப்படம் எடுத்தல(வா வெளியலை பிறகு பார்த்துக் கொள்ளுறன் என்பதுபோல்) போன்ற விடயங்களால் அமைதி வழிப் போராட்டக்காரர் தமது 'போராட்டத்தை' நடாத்தினர.;

மேலும் விழா மண்டபத்திற்குள் அத்துமீறி அநாகரிகமாக புகுந்த புலியவர்கள் சமய நிகழ்வுகள் நடைபெறும் போது சத்தம் செய்தும் கலாட்டா செய்தும் உள்ளனர். மண்டப பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தன்மையாக வேண்டியும் தமது அடாவடித்தனத்தை இவர்கள் நிறுத்தவில்லை மாறாக அவர்களை அவர்களின் சேட்டடை பிடித்து இழுத்து தாக்க முற்பட்டனர். இதனால் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் புலியினரை வலுக் கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி மண்டபத்தை விட்டு வெளியே கொண்டு சென்றனர். இந்த அல்லோகல்லத்தை அறிந்த மண்டபத்திற்கு வெளியே நின்ற புலியினர் கொடிகளையும் போட்டுவிட்டு பிச்சை வேண்டாம் நாயைப் படி என்று ஓடி மறைந்;தனர. புலிகளின் வன்முறையை பயன்படுத்தி இலங்கை அரசை தனது வழியிற்கு கொண்டு வர முயலும் மேற்குலகஐரொப்பிய நாடுகள் இதனை மேலும் ஊக்கிவித்து தொடரவிட்டால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்தை அனுபவித்து தீரவேண்டி நிலையை தவிர்க்க முடியாமல் போய்விடும்.

இந்த விழாவில் இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மட்டும் அல்ல கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர். கூடவே பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டும் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

(Saakaran) (Nov 07, 2011)  

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com