Contact us at: sooddram@gmail.com

 

தேர்தல் முறமைக்கான அரசியலமைப்பு திருத்தம் 

அரசுக்கான ஆதரவு பாராளுமன்றத்தில் பெருகி வருகின்றது

(சாகரன்)

ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். இன்று காலை ஐக்கிய தேசியக்கட்சியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ள் நாணயக்காரவும் ஐதேக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்இ ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி செயலாளர் லக்ஷ்மன் செனவிரத்னவும் அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்சி அரசியலுக்கு அப்பால் இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்கள் ஜனாதிபதிக்கும் தாம் ஆதரவளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் சிலர் பகிரங்கமாகவும் சிலர் இரகசியமாகவும் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிய முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிகள் சிலரும் இரகசியமாக ஆதரவளிக்க தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.

 

இலங்கையின் அபிவிருத்திக்கு பாதகமாக இருந்த பயங்கரவாதம்இ ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில்இ நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டின் ஜனாதிபதி பதவிமுறை குறித்துஇ அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிகப்போவதாக ஐதே கட்சி தீர்மானித்துள்ள நிலையில் ஐதே கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு முடிவெடுத்திருப்பது அரசைப் பலப்படுத்தும் அதே வேளை ஐதே கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் நிகழ்வாக அமைகின்றது என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இலங்கையின் இடதுசாரிகள் அரசின் தற்போதைய அரசியல் திருத்தச் சட்டத்தில் அவ்வளவாக திருத்தியடையவில்லை என அறிய முடிகின்றது. சிறப்பாக 18 வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தை வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாக  எதிர்பதாக கருத்து தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக ஐனாதிபதிக்கான பதவிக்காலம் இரண்டு தடவைக்கு மேல் அமைவதை இவர்கள் விரும்பவில்லை. ரஷ்யாவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்சியாக இரண்டு தடவைக்கு மேல் அமைவதை அந் நாட்டுச்சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால் தொடர்சியற்ற முறையில் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக ஒருவர் பதவி வகிக்கலாம். ஜனாதிபதியை தெரிவு செய்வது பொது மக்களே எனவே ஜனநாய மரபுப்படி மக்கள் தமது விருப்பின் அடிப்படையில் ஒருவரை எத்தனை தடவை ஜனாதிபதியாக்கலாம் என்பதற்கான பொறிமுறைகள் நியாயமாக தேர்தல் நடைமுறையில் இருக்கின்றன என்பதுவம் இங்கு கவனிக்கதக்கது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இவ் ஜனநாயக நடைமுறைகள் எவ்வளவு தூரம் சீரிய முறையில் கடைப்பிடிக்கப்படும் என்ற பயங்களுக்கு நியாயங்கள் இல்லாமலும் இல்லை.

ஜேஆர் ஜெயவர்தன தனது இரண்டாவது ஆட்சிக்கால முடிவில் இன்னும் ஒருதடவை தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான சட்ட ஆலோசனைகளை நடாத்தியது இங்கு கவனத்தில் எடுகப்பட வேண்டும். இன்று அவரின் வாரிசு மருமகன் ரணில் இதனை எதிர்ப்பது அரசியல் காரணங்களுக்காகவே மற்றபடி மக்கள் நலம் ஜனநாயக விழுமியங்களை காப்பாற்ற என்பது எல்லாம் எதிர்ப்பு அரசியலுக்காகவே. தாழ்ந்து கொண்டிருக்கும் தனது தலைமத்துவத்தை தூக்கிப்பிடிக்க இது உதவும் என்று பகல் கனவு காண்கின்றார்.

ஜனாதிபதி முறமையை ஒளித்தல் என்ற பெரு வீச்சுடன் ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் வெற்றியின் பின்பு காற்றில் பறக்க விட்டு மேலும் பதவியில் நீடித்தல் என்ற விருப்பிற்கு மகிந்தாவை தள்ளியிருப்பது கேள்விகளை எழுப்பாமலும் இல்லை. இன்னொரு புறத்தில் சந்திரிகா போன்றோருக்கு இன்னொரு முறை முயற்சித்தால் என்ன என்று எண்ணவும் வைத்திருக்கின்றது அமையவிருக்கும் புதிய தேர்தல் முறமைச்சட்டம். எதிர் கட்சிகளும் மகிந்தாவை தோற்கடிக்க பண்டாரநாயக்கா குடும்பத்தை முன்னிறுத்த முயற்சிகலாம் என்ற பார்வைகளையும் புறம் தள்ள முடியவில்லை. எது எப்படி இருப்பினும் ரணிலின் ஜனாதிபதிக் கனவு என்றுறென்றும் கானல் நீர்தான்.

மறுபக்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கான அரசியமைப்பு திருத்தம் முதன்மையாக இருக்கும் போது அதனைப் புறம் தள்ளிவிட்டு தேர்தல் முறமையில் கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கும் ஜனநாக சக்திகளுக்கும் நம்பிக்கையீனத்தை வலுப்படுத்தவே செய்கின்றது. சிங்கள கடும் கோட்பாளர்களை பரீட்சித்து பார்க்க முதலில் தேர்தல் முறமையில் மூன்றில் இரண்டை பரீட்சிப்பது பின்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் இதனை உபயோகித்தல் என்ற வகையில் மகிந்தாவின் தந்திரோபாயம் அமையுமாயின் இது வரவேற்கப்பட வேண்டியதே. எல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்க்கும் பலவீனமான நிலையில் தமிழ் மக்கள் தரப்பை புலிகள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று இருக்கின்றார்கள் என்பதே யதார்த்த நிலை.

(செய்திகளின் அடிப்படையில் ஆக்கம்: சாகரன்) (புரட்டாதி 04, 2010) (Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com