Contact us at: sooddram@gmail.com

 

கெஞ்சிக் கேட்கின்றேன்

வாழ்வதற்காக விடுதலை செய்வீர்

(சாகரன்)

போர் முடிவுக்கு வந்து 450 நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஜனாதிபதித் தேர்தல்இ பாராளுமன்றத் தேர்தல் என இரு பெரும் தேர்தல்களும் நடைபெற்று முடிந்து விட்டன. கூடவே மாநகர தேர்தல்களும் நடைபெற்று விட்டன. போரினால் இடம் பெயர்ந்து வன்னியில் முள்ளுக் கம்பிகளுக்கு பின்னால் சென்றவர்களையும் படிப்படியாக தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றி இயல்பு வாழ்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. வடக்கிலிருந்து தெற்கிற்கும்இ தெற்கிலிருந்து வடக்கிற்கும் சுயாதீனமாக மக்கள் நகர்ந்து செல்லும் இயல்பு நிலமைகளும் வந்து விட்டன. வடக்குஇ கிழக்கு எங்கும் தொடர்ந்து இராணுவ முகாம்கள் வியாபித்திருக்கும் சூழலிலும் நாடு அமைதியான சூழலுக்குள் புகுந்து விட்டது.

இராணுவ முகாங்களுக்கு மத்தியில் சமாதானமாக வாழும் சூழல்களில் வாழ் மக்கள் தம்மை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். புலிகள்இ புலிகளுடன் விரும்பியோ விரும்பாமலோ இணைந்து ஆயுத் தூக்கியவர்கள் பல ஆயிரம் பேர் நலன்புரி முகாங்களிலிருந்து நல்வழி நடத்தலின் பின்பு தமது பெற்றோரிடம் அல்லது சுயாதினமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு தொழில் பயற்சி வழங்கி தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டும் விட்டனர். மனத்தால் இணைந்த பலரை மணத்தால் இணைத்து வாழவும் வாழ்த்தப்பட்டும் விட்டனர்.

ஜோர்ஜ் மாஸ்டரும்இ தயா மாஸ்டரும் வட மராட்சியில் சுயாதீனமாக நடமாடி தமது வாழ்வைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேபி பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புனருத்தாரணம்இ புனர்நிர்மாணம்இ மீள் குடியேற்றம் என்றும்இ அபிவிருத்தி என்றும் என்ஜீஓ (Nபுழு) களை அமைத்து செயற்பட  அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்சியாக நலன்புரி முகாங்களில் மக்களை நேரடியாக சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூடவே தமது முன்னாள் வெளிநாட்டு சகாக்களை ஊருக்கு செங்கம்பள வரவேற்புடன் அழைத்து 5 நட்சத்திர விடுதிகளில் தங்க வைத்து அரசுத் தலைவர்களையும்இ ஏனையவர்களையும் சந்தித்து தமது மேதாவிலாசங்களை நிரூபிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புலிகளின் பிரசன்ன காலத்தில் (சிறப்பாக வன்னியில்) புலிகளில் கொந்தராத்துகளை எடுத்து நடத்தியவர்கள் 6 மாதம் பதுங்கி இருந்து விட்டு மீண்டும் தற்போது அரசின் ஆதரவுடன் தமிழ் பிரதேசங்கள் எங்கும் கொந்தராத்துகளை எடுத்து தமது வியாபார நடவடிக்கைகளை விருத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டில் தெற்கு சீனாவிற்குஇ வடக்கு இந்தியாவிற்கு என அபிவிருத்தியை முன்னெடுக்க அனுமதிகளும் வழங்கியாகி விட்டது.

மிக நீண்டகாலம் இலங்கையில் வாழ்ந்த 80 சீனர்களுக்கு இலங்கையில் நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு இலங்கை அரசு முடிவு செய்து விட்டாகிவிட்டது. இன்னமும் மலையகத்தில் அல்லது தமிழ் நாட்டில் இலங்கையை வளமாக்கிய பல ஆயிரம் மலையகத்தவர்கள் எந்த நாட்டிற்கும் சொந்தமாவர்கள் அல்ல என்ற நிலையில் கூலிகளாக வாழ்கின்றனர் என்பது வேறு விடயம்.

தமிழ் செல்வனுக்கு இரங்கல்பா எழுதிய கட்சியின் தலைவரின் மகள்இ அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கனினொழிஇ பிரபாகரனை இன்றுவரை தலைவராக ஏற்றுள்ள திருமாவளவன் போன்றவர்கள் இராஜதந்திர கடவுச்சீட்டுடன்இ செங்கம்பளம் இட்டு வரவேற்று அரச பாதுகாப்புடன் தமிழ் மக்கள் பிரதேசம் எங்கும் மீட்போராக காட்சியளிக்க அனுமதிச்சாச்சு. ஆனால்...... ஆனால்.....

மக்களின் விடிவிற்கு குரல் கொடுத்தார்கள்இ போராடினார்கள்இ போராட்டத்தை ஆதரித்தார்கள் என்பதற்காக 10 வருடங்களுக்கு மேல் எம் நாட்டு சிறைகளில் எப்போது விடுதலை என்பதை தெரியாமல் அடைபட்டிருக்கும் அந்த சிறைக்கைதிகள் விடயத்தில் மட்டும் ஏன் ஐயா பாகுபாடு. மகிந்த ஐயாவே! வாய் திறவுங்கள். கருணை காட்டுங்கள் ஐயா. கடந்த காலங்களில் இவர்களில் சிலர் என்னைக் கொல்லக் கூட துப்பாக்கியுடன் அலைந்திருக்கலாம். ஏன் என்னைப் போன்றவர்களை கூட கொன்றிருக்கலாம். ஆனால் இவர்கள் ஒன்றும் கேபியை விட கூடாதவர்கள் அல்ல. பயங்கரமானவர்கள் அல்ல.

பத்திரிகைச் செய்தி:

வுனியா, பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பான நிகழ்வின் போது எடுத்தபடம். பிரதியமைச்சர் விஜயமுனி சொய்ஸாஇ வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இவர்களில் பரீட்சை எழுதிய 246 மாணவர்கள்இ 50 தம்பதிகளும் அடங்கும்.

கீழே உள்ள கைதிகளின் வேண்டுகோள் கடிதத்திற்கு நானும் சாட்சிக் கையெழுத்து, ஏன் வேண்டும் என்றால் பிணைக் கையெழுத்து இடுகின்றேன் அவர்களை விடுவிக்க ஆவன செய்யுங்கள். தமது இனிய வாழ்வின் அரைப்பகுதியை கூட்டுக்குள் செலவழித்தது போதும் ஐயா! கெஞ்சிக் கேட்கின்றேன். முறைப்படி விடுதலை செய்ய ஆவன செய்யுங்கள்.......? 

கைதிகளின் கடிதம்:

விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்

மகஸின் சிறைச்சாலையில் 5 தொடக்கம் 17 வருடங்களாகச் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாங்கள் எங்கள் விடுதலை தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்தும் இதுவரையில் அதுபற்றிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 'ஐயா இத்தனை வருட காலமாக துன்பங்களையும் துயரங்களையும் மனதில் அடக்கிக் கொண்டு மன உளைச்சலுடன் வாழ்ந்து வரும் எங்களை அனைவரையும் சந்தித்து கலந்துரையாடி சென்றனர்.

மனதில் ஓரளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஜனாதிபதி நீங்கள் எங்களை சந்திக்கவில்லை என்ற கவலை தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்கள் அனைவர் மனதிலும் உண்டு. ஆனால் எதிர்வரும் சிறைச்சாலைகள் தினத்தில் சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை பார்வையிடப் போவதாக ஊடகங்களில் தகவல் தெரிவித்திருப்பதானது கைதிகளாகிய எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான எங்களை நீங்கள் ஒரு முறையாவது வந்து பார்த்து எங்கள் கஷ்ட நிலைவரங்களை கேட்டறிந்தால் அனைவரது குடும்ப நிலைவரங்கள் மட்டுமின்றி எங்கள் துயரங்களையும் மன வேதனைகளையும் அறிந்து கொள்ள முடியும். சந்தேகத்தின் பெயரில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நாங்கள் கண்ணீருடன் பல கடிதங்களை ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தும் எவரும் எமக்கு உதவ முன்வரவில்லை. இந்நாட்டின் பிரஜைகளாகிய நாங்கள் அனைவரும் வாழ்நாளின் அரைவாசி காலத்தினை சிறைக் கூடத்திலேயே கழித்து விட்டோம். இனியாவது வெளியுலகத்தில் வாழ வழியேற்படுத்தி தாருங்கள்.

ஐயா, எங்களை விடுதலை செய்யுமாறு கெஞ்சி கேட்கிறோம். நாங்கள் தவறு செய்திருந்தாலும் மன்னிப்பு கிடையாதா? நாங்கள் வாழ்வதற்கு அருகதையற்றவர்களா? உங்கள் ஒருவரால் தான் எங்களுக்கு விடிவைத் தேடித் தர முடியும். அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கம்பிக் கூண்டுக்குள் இத்தனை வருடங்களாக இருக்கும் எங்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள். ஐயாஇ இந்நாட்டின் பிரஜைகளாகிய நாங்கள் உங்கள் பிள்ளைகள். எங்களுக்கு புது வாழ்வளிப்பீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.

நன்றி

இப்படிக்கு

தமிழ் அரசியல் கைதிகள்

(கட்டுரை ஆக்கம்: சாகரன்)(புரட்டாதி 06இ 2010) (Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com