Contact us at: sooddram@gmail.com

 

போர்க் குற்றம் புரிந்தது அரச தரப்பு மட்டுமா?

புலிகள் சார்பில் கூண்டில் நிறுத்தப்படப் போவது யார்? யார்?

நாடு கடந்த தமிழீழக்காரர்களா, உலகத் தமிழர் பேரவைக் குழுவா? அல்லது புலிச் சொத்துக்களின் பினாமிகளா?

(சமரன்)

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனப்படுகொலையினை மேற்கொண்டதாக புலிகளின் ஊடகங்களும், புலிப் பினாமிகளும் சர்வதேச அளவில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். கடந்த 2009 ம் ஆண்டு, இலங்கையின் வடக்கு பகுதிகளில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை அரச படைகள் திட்டமிட்டு கொலை செய்தன என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை இதுவெனவும் புலிப் பினாமிகளின் தரப்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற புலிகளின் சுலோகம் போல 'செத்தது பத்தாது' என்பதுவும் புலிகளின் உத்தியோகப்பற்றற்ற சுலோகம் தான். தங்களது போராட்டத்தின் பால் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்குப் பொதுசனங்கள் இறப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருக்க வேண்டும் என்பது புலிகளின் பெருவிருப்பாக இருந்து வந்தது.

மனித உரிமைகள் அமைப்புக்கள்,சுயாதீன அமைப்புக்கள், சர்வதேச நாடுகள் பல மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன அரச தரப்பும் விடுதலை புலிகளும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதுடன் யுத்த கால குற்றங்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இறுதி இருவாரங்களில் 7 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பகுதி அமைப்புகளினால் கூறப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக புலிகள் சார்பு ஊடங்களினால் கூறப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி லட்சக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டதாக தமிழகத்தினை சேர்ந்த கோமாளிகள் சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் குறித்து கவலை கொள்வதினை காட்டிலும் அதனை வைத்து அரசியல் செய்யும் ஆர்வமே இங்கு அதிகமாக இருப்பதினை பார்க்கலாம். அரசியலை பற்றி சிந்திக்காத ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறுதி கட்ட யுத்தத்தின் போது இரு பகுதியினருக்கும் இடையில் சிக்குண்டு மாண்டு போனார்கள். நூற்றுக்கணக்காணோர் உடலின் அங்கங்களை இழந்தவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும், எஞ்சிருக்கும் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதினை காட்டிலும் இந்த மக்களின் அவலங்களில் அரசியல் பிழைப்பு நடத்தும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சில கோமாளிகளுக்கு இந்திய அரசியல் செய்ய முடியாத வங்குரோத்து நிலவுவதால், பிழைப்பு நடத்துவதற்காக எமது பிரச்சனைக்குள் மூக்கை நுழைக்கிறார்கள். சீமான், வையாபுரி கோபால்சாமி, நெடுமாறன் போன்ற கோமாளிகளால  ஈழத் தமிழ் பெண்களின் கற்புகள் களங்கப்படுத்தப்படுகின்றன. முகாம்களில் இருந்த தமிழ் பெண்களில் ஆயிரக்கணக்காணோர் சிங்கள இரானுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு கர்பமாக இருக்கின்றார்கள் என்றும், அவர்களின் கருக்களை கலைப்பதற்கு சிங்கள படையினரால் தடைவிதிக்கப்படுவதாகவும் முகாம்களில் இருந்த ஆண்களுக்கு இனவிருத்தித் தடை சிகிசிச்சை செய்யப்படுவதாகவும் தமிழகத்தில  ிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புலிகளின் தலைவரும், அந்த அமைப்பும் இருக்கின்ற வரையில் சகோதர படுகொலைகளை மேற்கொண்டு தமிழ் தரப்பினை பலவீனப்படுத்தி இருந்தார்கள், தற்பொழுது அவர்களின் பெயரை சொல்லியவாறு ஒரு கூட்டம் இலங்கைத் தமிழ் இனத்தினை இழிவு படுத்தி வருகின்றது. எமக்கு ஆதரவாகத்தானே குரல் கொடுக்கின்றார்கள் ஆகையினால் எதையும் கூறட்டுமே என்று இலங்கைத் தமிழ் அனுதாபிகள் நினைத்து கொள்ள கூடும். இவர்கள் இப்படியாக கோமாளித்தனமாக பேசுவதினால் தமிழகத்தில் இருந்து உண்மையாக கொடுக்கப்படும் குரல்களும் கோமாளித் தனமாகத் தோன்றக் கூடிய நிலை ஏற்படும் என்பதினை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்த இனப்படுகொலை செய்ததாகக் கூறி வரும் தமிழகக் கோமாளிகள் மறுபுறத்தே எமது தமிழ் பெண்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசி வருகின்றார்கள்.

பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட சகோதர படுகொலைகளும், சிங்களப் பொது மக்களுக்கெதிரான தாக்குதல்களும் எவ்வண்ணம் சிங்கள இனவாதிகளுக்கு பெரிதும் உதவியது என்பது அனைவரும் அறிந்ததே. சிங்கள இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதின் மூலம் தமிழ் தேசிய போராட்டத்தினை முன்னெடுக்க முடியும் என்று பிரபாகரனும் அவருடன் சேர்ந்தவர்களும் எப்படி விளங்கி கொண்டார்களோ அவ்வாறே, தமிழர்களை அடக்கி ஆளுவதன் மூலமும், அவர்களை எந்த பகுதியிலும் பெரும்பான்மையாக இல்லாதவர்கள் ஆக்குவதன் மூலமும் தமிழர்களின் அரசியல் அங்கீகாரம் என்ற கோசத்தினை ஒழித்துவிட முடியும் என்று தென்பகுதிப் பேரினவாதிகள  நம்புகின்றார்கள்.

மஹிந்தாவை மகுடம் தரிக்க வைக்கப் பிரபாகரன் பெற்றுக்கொண்ட பணம் எத்தனை கோடி ரூபா என்பதில் வேறுபாடுகள் இருந்தாலும், பணப் பரிமாற்றம் நடந்தது என்பதில் எவருக்குமே சந்தேகம் இருந்ததில்லை. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தனது கொந்துராத்து வேலையாக எடுத்துக் கொண்ட பிரபாகரன், அந்த உரிமைப் போராட்டத்தை மஹிந்தாவிடம் அடகு வைத்துப் பணம் பெற்றுக்கொண்ட கேவலத்தை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளத் தவறியிருந்தார்கள். மஹிந்தாவை இலங்கையின் சக்கரவர்த்தியாக்கிய புலித்தலைவன், மாவிலாற்றைப் பூட்டி முரண்டு பண்ணி, தனது குறுநில ஆட்சியையும் பறிகொடுத்ததோடு, தனது வம்சமே இல்லாத  அழிந்துபோய்விட்டார். பிரபாகரன் தமிழ் தலைவர்கள் பலரையும், சகோதர இயக்க தோழர்கள் ஆயிரக்கணக்கணோரையும், தனது இயக்க இரண்டாம் மட்டத் தலைவர்கள் பலரையும் கொலை செய்தமை அவருக்கு இருந்த தலைமை வெறியும், இயல்பாகவே அவரிடம் குடிகொண்டிருந்த கொலை வெறிபிடித்த மனநோயும் தான் காரணம்.

சமாதான காலகட்டத்தில் மாற்று இயக்க உறுப்பினர்கள், அல்லது பொதுமக்கள் எவரையாவது கொல்லாவிட்டால் உறங்கவோ அல்லது உண்ணவோ முடியாத நோய்க்கு பிரபாகரன் உள்ளாக்கப்பட்டு இருந்தார் என்று பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தனது சக பாதிரிக்குக் கூறியிருந்தார். அந்த காலகட்டதில் புலிகள் கொலைகளை செய்யாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு சகோதர இயக்க உறுப்பினர்கள் தினமும் கொல்லப்பட்டார்கள். கொலை செய்வதில் திருப்தி காணும் நோயின் பாதிப்பிற்கு பிரபாகரன் உள்ளாகியிருந்தார்.

கொலை செய்வதில் அவருக்கு இருந்த ஈடுபாடும், கொலை செய்யாது அவரினால் இருக்க முடியாது என்பதற்கும் அவரது முன்னாள் ஆரம்பகால சகா ஐயர் எழுதும் தொடரையும் படித்துப் பார்க்கலாம். கொலைதான் அவரது அரசியலுக்கு அடித்தளம்.

தனது ஆளுமை குறித்த அவநம்பிக்கை பிரபாகரனுக்கு அதிகமாக இருந்தது. மாற்று கருத்துக்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் பொறுமையும் அவரிடம் இல்லாமையினால் அவர்களை கொலை செய்வதுதான் தன்னை தக்க வைத்துக் கொள்ளும் ஒரே வழி என்று அவர் நம்பி இருந்தார்.

இவை எல்லாவற்றை காட்டிலும் சுலபமாக யாராலும் பாவிக்க கூடியவராக பிரபாகரன் இருந்து வந்தார். பணத்துக்காக எதுவும் செய்யக் கூடிய மலிந்துபட்ட வியாபாரியாகவே தனது வாழ்நாள் பூராவும் இருந்து வந்துள்ளார். இதனை நம்புவது கடினமாக இருக்கும், ஆனால் அவரின் கடந்த கால நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்ந்தால் அது புலப்படும்.

கோத்தாபய, சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்வதற்கு கரும்புலிகளை அனுப்பி தாக்குதலை மேற்கொண்டு விட்டு, யுத்தத்தில் தோல்வியடைந்ததும் இறுதி நேரத்தில் அவர்களிடமே பிரபாகரன் சரண் அடைந்திருந்தார். அவர்களை கொலை செய்வதற்கு கரும்புலிகளை அனுப்பிய நான் அவர்களிடம் சரணடைந்தால் அவர்கள் என்னை சும்மா விடுவார்களா என்று பிரபாகரன் சிந்திக்கவில்லை. மாறாக எதிரியின் கருணை மீது பெரிதும் நம்பிக்கை வைத்து விட்டார்.

அன்னிய புலானாய்வு துறையினரின் தூண்டுதலில் கொக்கிளாய், நாயாறு கிராமங்களுக்குள் புகுந்து சிங்கள அப்பாவி மக்களை கொன்றார்களே. அன்றே தமிழ் ஈழ விடுதலை போராளிகள் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொலை செய்யும் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தினால் முத்திரை குத்தப்பட்டார்கள்.

இந்திய இலங்கை உடபடிக்கைக்கு எதிராக புலிகள் இந்திய படையினருடன் மோதலில் இடம் பெற்ற வேளை, அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவிடம் பெருந் தொகையான ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளைப் புலிகள் பெற்றுக் கொண்டார்கள்.. மேலும் அண்ணன் தம்பி கதை சொல்லி இந்தியாவுக்கு எரிச்சலூட்டிக் கொண்டார்கள். அத்துடன் இந்திய படையினை வெளியேறுமாறும் கோரிய புலிகள், வட கிழக்கு இணைந்த மாகாண ஆட்சியை நடத்துவதற்கு எதிராக பேரினவாதிகளுடன் இணைந்து தடை ஏற்படுத்தினார்கள்.

சிங்கள இனவாத தலைமையின் தூண்டுதலில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரான அமிர்தலிங்கம் அவர்களைப் பிரபாகரன் கொலை செய்தார.;  தமிழ் அமைப்புக்களின் தலைவர்களை மட்டும் அல்லாது அமைப்புக்களின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுப்பினர்களென ஆயிரக்கணக்கான சகோதர படுகொலைகளை பிரபாகரன் புரிந்ததோடு தனது அமைப்புக்குள்ளே இருந்த இரண்டாம் கட்ட தலைவர்களான மாத்தையா போன்றோரையும் கொண்றொழித்தார்.

சகோதர யுத்தத்தில் நாம் வன்னிக்குள் மோதுண்டு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை இழந்தோம், அதற்கு நானும் உடந்தையாக இருந்தேன் என்று கருணா புலிகளில் இருந்து பிரிந்த போது கூறியிருந்தார்.

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்மக்கள் படுகொலையினை காட்டிலும் பிரபாகரன் மேற்கொண்ட சகோதர படுகொலைகளே இலங்கைத  தமிழினத்தை அதிகமாக பலவீனப்படுத்தியது. அரச படைகளினால் கொல்லப்பட்ட மாற்று இயக்க போராளிகளைக் காட்டிலும் புலிகளினால் கொல்லப்பட்ட மாற்று இயக்க போராளிகளும் தலைவர்களுமே அதிகமாகும். 1990 ம் வருடத்தில  ுணுக்காயில் அமைந்திருந்த புலிகளின் வதைமுகாமில் மட்டும் 3000 மேற்பட்ட தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் பிரபாகரனால் அறிவிக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு என்ற உத்தரவாதத்தில் புலிகளிடம் சரணடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் போர் குற்றம்தான்.

அரசாங்கம் மேற்கொண்ட யுத்தம், குற்றச் செயலாக கருதப்பட முடியாதென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பதில் பிரதிநிதி கய் பெட்டன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நன்மையை கருத்திற் கொண்டே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த காலத்தில் போராட்டத்திற்கு தயாராவதாக யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவின  தலைவர் சுட்டிக்காட்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த நிறுத்த காலப்பகுதியில் வெளிநாட்டினரைக் கொண்ட யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட 5000 க்கு மேற்பட்ட யுத்தநிறுத்த மீறல்கள் பதிவு செய்யப்பட்டன.

கிளிநொச்சியை இலங்கை இராணுவம் நெருங்கியதும் யாழ்ப்பாணம் கத்தோலிக்க மேற்றாணியார் (பிஷப்) தோமஸ் சௌந்திரநாயகம் அவர்கள் புலிகளிடம் ஒரு அவசியமான அவசரமான வேண்டுகொள் விடுத்திருந்தார். அதாவது யுத்தத்துக்குள் சிக்குண்டுள்ள மக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் வேண்டிக் கொண்டார். ஆனல் அந்த அப்பாவி மக்களை புலிகள் தமக்கான மனிதக் கேடயங்களாகப் பாவித்து கொன்று போட்டு விட்டார்கள். இதுதான் மிகப் பெரிய போர்க் குற்றம்.

முல்லைத்தீவில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் புலிகளிடம் இருந்து தப்பிவந்த போது துப்பாக்கி முனையில் தடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் படம் பிடிக்கப்பட்டு சர்வதேசத்திடமும் இலங்கை அரசிடமும் இருக்கிறது. புலிகளின் போர்க் குற்றத்துக்கு இதுவும் மிகப் பெரிய சாட்சியாகும்.

புலிகளால் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் அங்கிருந்து தப்பி வந்த போது, புலிகளால் சுட்டக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பல பதிவு செய்யப் பட்டிருக்கிறது  

புலிகளிடம் இருந்து தப்பிவந்து இராணுவத்திடம் சரணடைந்த மக்கள்,  இராணுவத்தினரின் முன்னணி அரங்கில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தவேளையில் கரும்புலிகளைக் கொண்டு தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில்  பச்சிளங்குழந்தைகள், பெண்கள் உட்பட பல மக்கள் கொல்லப்பட்டார்கள். பொருளாதார மையங்களின் மீதும், பொதுமக்கள் மீதும  தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தியது யுத்த குற்றம் ஆகாதா,பலாத்காரமாகக் கூட்டிச் சென்ற பாடசாலைச் சிறுவர் சிறுமியர  (போதிய பயிற்சியுமின்றி) யுத்தத்தில் ஈடுபடுத்தியது மிகப் பெரிய யுத்தக் குற்றமாகும்.

அவ்வப்போது அரசாங்கம் அறிவித்த யுத்த சூனியப் பிரதேசங்களுக்கு மக்களைச் செல்ல விடாது புலிகள் தடுத்தனர். இதுவும் போர்க் குற்றத்துக்குள் தான் அடங்கும். அதையும் மீறி மக்கள் யுத்த சூனியப் பகுதிக்குள் சென்று விட்டால் தாமும் தமது ஆயுதங்களுடன் மக்களுடன் மக்களாகக் கலந்து இருந்து கொண்டு இராணுவத்தின் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர்.

இப்படியாகப் புலிகள் செய்த போர்க் குற்றங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆனாலும் புலிகள் செய்த எண்ணுக்கணக்கற்ற போர்க் குற்றங்களுக்காக யார் மீது விசாரணை நடத்துவது என்பது தற்போது எழுந்துள்ள கேள்வியாகும். ஏனெனில் புலித்தலைவன் பிரபாகரன் உட்பட, புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் எல்லோரும் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள். எஞ்சி இருப்பது யார்?

புலிகள் சார்பாக பல மட்டங்களில், பல கட்டங்களில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட உருத்திரகுமாரன் இருக்கிறார்.

புலிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியவர்கள், அவர்களுக்காகப் பல மட்டங்களிலும் பிரச்சாரம் செய்தவர்கள், சுவாமி வேடம் போட்ட ஆசாமிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் இருக்கிறார்கள்.

புலித்தலைவருக்கு விசுவாசமாக உழைப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்து, புலிகளின் பிரதிநிதிகளாகத் தேர்தல்களில் போட்டியிட்ட சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கிறார்கள்.

புலிகளின் யுத்தத்துக்காக நிதி சேகரித்த உலகத் தமிழர் இயக்கம் மற்றும் அது போன்ற புலிகளின் பினாமி அமைப்புக்களும் அவற்றின் நிர்வாகிகளும் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். ஆனையிறவு இராணுவ முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டவுடன், யுத்தத்தைத் தொடர்வதற்காகப் புலிகளால் நிதி வசூலிக்கப்பட்டது. இந்த நிதி சேகரிப்பில் ஈடுபட்ட அமைப்புக்கள் மீது புலகள் செய்த யுத்தகாலக் குற்றச் செயல்களுக்காக வழக்குத் தொடரலாம்.

குற்றம் செய்தவனிலும் பார்க்க, குற்றம் செய்யத் தூண்டியவனுக்கும், குற்றம் செய்ய உடந்தையாக இருந்தவனுக்கும் தான் தண்டனை அதிகம். 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com